Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

உயர்திரு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் சமூகம் முன்பாக

மனுதாரர்
திருமதி. சகுந்தலா (வயது 57)
க/பெ.மனோகரன்,
கண்ணன்விளை,
கருங்கல் அஞ்சல்
கன்னியாகுமரி மாவட்டம்
செல். 7598891588
எதிர்மனுதாரர்கள்
1. C. ஆக்னஸ்,(வயது சுமார் 50)
க/பெ.வில்சன்,
புதுவல்விளை,
உத்திரங்கோடு அஞ்சல்,
கன்னியாகுமரி மாவட்டம்
செல்.8903411428

2. வில்சன் (வயது சுமார் 55)


புதுவல்விளை,
உத்திரங்கோடு அஞ்சல்,
கன்னியாகுமரி மாவட்டம்
மதிப்பிற்குரிய ஐயா,
நான் மேற்படி முகவரியில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். மேற்படி எதிர்மனுதாரர்கள்
இருவரும் கணவன்,மனைவி ஆவார்கள். 1- ஆம் எதிர்மனுதாரர் எனக்கு நன்கு தெரிந்த நபர் ஒருவரின்
மூலம் தான் Multi Level Marketing Business செய்து கொண்டிருப்பதாக கூறி சுமார் இரண்டு வருடங்களுக்கு
முன்பு அறிமுகம் ஆனார்.அதன் மூலம் 1 – ஆம் எதிர்மனுதாரர் எனக்கு நன்கு பழக்கமாக என்னை பார்க்க
பலமுறை எனது வீட்டிற்கு வருவதுண்டு.பின்பு என்னிடம் நெருங்கிய நண்பராக இருந்து வந்தார்.
இந்நிலையில் 1 – ஆம் எதிர்மனுதாரர் கடந்த 5.09.2018 அன்று எனது வீட்டிற்கு வந்து எனது சொந்த
தேவைக்காக பணம் ரூ.1,00,000/- தேவைப்படுவதாகவும், அதனை நான் ஒரு மாதத்திற்குள் திருப்பி
தருவதாகவும் கூறினார். நான் அதற்கு என்னிடம் அவ்வளவும் பணம் இல்லை எனக் கூறினேன்.

You might also like