நித்திய கல்யாணி செடியிலிருந்து தேவையான அளவு இலைகளை பறித்துக்கொள்ள
வேண்டும். அத்தோடு, தேவையான அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்கக ் வேண்டும். அதை தைலப்பதத்திற்கு வரும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். அதை ஆறவைத்தும் வடிகட்டியும் ஆறாத புண்கள் மேல் பூசலாம். இதைப் பூசினால், சீழ் பிடித்த, நாள்பட்ட, புரையோடிய, ரத்தம் கசியும் புண்கள் விரைவில் குணமாகும். எங்கு கிடைக்கும்: நித்திய கல்யாணி, பொதுவாக செழிப்பான இடங்களில் வளரும் செடியாகும். விவசாய நிலங்கள், மலைப்பாங்கான பகுதிகளில் இந்தச் செடிகள் நிரம்பக் காணப்படும்.