தொழு உரம் இடாத பயிர் வளமாக இராது. இயற்கை உரம் இட்ட பயிர் நன்கு வளரும்.
ஆடுகளை நிலத்தில் கிடைபோட்டு உழவினை செய்ததால் மண்வளமாக
இருந்தது. வேதியியல் உரங்களை இடுவதால் மண்ணின் உயிர்ச்சூழல் சிதைக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுவதாக வேளாண்மை அறிஞர்கள் அறிவித்துள்ள நிலையில் இயற்கை உரங்களைக் குறிக்கும் பழமொழிகள் முதலிடம் பெறுகின்றன.