Professional Documents
Culture Documents
மொழி 1
மொழி 1
ஆகையால், மொழியை ஒரு கருவி மட்டுமே என்று கருதுதல் கூடாது. அது புரிதல்
திறனோடு இயற்கையாக இணைந்து பிரிக்க முடியாத அங்கமாகும். மனித மனத்தின்
செயலாற்றலாகவும் உள்ளுணர்வாகவும் சக்தியாகவும், ஒருவரின் மனச்
சாட்சியாகவும் மொழி இருக்கிறது. அப்படியென்றால், மொழி மனித மனத்தின் ஒட்டு
மொத்த அறிதல் என்றாகிறது. அறிதல் வளர வளர, மொழியும் வளருகிறது.
அறிதலுக்குத் தடங்கல் ஏற்படும் பொழுது, மொழியின் வளர்ச்சியும் தடைப்படுகிறது.
இந்த முடிவான கருத்து, தொடகக் கல்விக்கு மிக முக்கியமான அம்சமாகும்.
பேச்சு மொழி என்பது ஒலிக் குறியீடுகளாகும். அதைப் போல், எழுத்து மொழி என்பது
பார்க்கும் அளவில் உள்ள உருவக் குறியீடுகள் அல்லது வரிவடிவங்களாகும். இங்கு
வரிவடிவங்கள் என்றால், எழுத்துக்களைக் குறிக்கும். அகரநிரலில் உள்ள எழுத்துக்கள்
அல்லது கூட்டு எழுத்துக்கள் ஒலிகளைக் குறிக்கின்றன. எழுத்துக்களின்
வரிவடிவங்களை ஒலிகளுடன் தொடர்ப்பு கொள்ளும் முறையும் தன்னிச்சையான -
ஆனால், உலகெங்கும் ஒப்புக்கொள்ளப் பட்ட ஒன்றாகும். எழுத்து மொழியை நாம்
எப்பொழுதும் மனத்திற்குள் பேசும் மொழியாக மொழிபெயர்ப்பு செய்து, பிறகு அதன்
மூலம் அர்த்தத்தை அறிந்து கொள்கிறோம். ஆகையால், ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது,
பேச்சு மொழியைக் காட்டிலும், எழுத்து மொழியின் அர்த்த்த்தை அறிய பல வழிகள்
உண்டு.