Anjanai Maindha Anjaneya

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 8

ஶ்ரீ ராம ஆஞ்சநேயர் பாமாலை

அஞ்சனை மைந்தா!

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா


ஆஞ்சநேயா
காத்தருள்புரிந்திடு ஹனுமானே தேற்றிடு ஏற்றிடு
மாருதியே

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா


ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே சின்னத்திருவடியே மாருதியே

சுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் உள்நாடு


வெளிநாட்டில்
பேரருள் புரியும் ஹனுமானே தேவைகள் நிறைவேற
அருள்வாயே

சுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள்


கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

துளசிமாலை போடுகிறோம் வெண்ணை சாத்தி வணங்குகிறோம்


அலங்கார அழகில் மகிழ்கிறோம் அனுதினம் உன்னை பூஜிக்கிறோம்

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

வாராவாரம் சனிக்கிழமை வணங்கிமகிழும் பக்தர்களை


திருவருள் புரிந்து காக்கின்றாய் வேண்டுதல் யாவும் தீர்க்கின்றாய்

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

சஞ்சீவி மூலிகை கொண்டுவந்தே லக்ஷ்மணர் உயிரை மீட்டெடுத்தாய்


ராமர் வருகை தெரிவித்தே பரதனின் உயிரை காப்பாற்றினாய்

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

சீதையைத் தேடிச்சென்றாயே அசோகவனத்தில் கண்டாயே


ஸ்ரீ ராம் ராம் என ஜெபித்தாயே சீதையின் தற்கொலை தடுத்தாயே
2

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

வாலைச் சுருட்டி அந்தரத்திலே ஆசனமமைத்து அமர்நத


் ாயே
ராவணனுக்கு அறிவுரை சொன்னாயே ஸ்ரல ீ ங்காவை எரித்தாயே

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

போர்க்களத்தில் தோள்மீதே ராமர் லக்ஷ்மணரை சுமந்தாய்


வானர சேனை உயிர்பித்தாய் வெற்றி நமதென முழக்கமிட்டாய்

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

வானவர் பூஜிக்கும் வானரமே வாழ்வாங்கு வாழும் சிரஞ்சீவியே


அஞ்சனை மைந்தா ஆரத்தரிப்பாய் எந்தனைக் காத்து ரக்ஷிப்பாய்

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

அர்ஜுனர்கக
் ொடியினில் நீயமர்நதே
் பாரதப்போரில் வெற்றித்தந்தாய்
பீமனின் அண்ணனே ஆஞ்சநேயா எமக்கும் வெற்றித்தருவாயே

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவனைபூஜிக்க விரும்பியதும்


சிவனிடம் லிங்கம் வாங்கிவர சென்றநீ தாமதமாய் வந்தாய்

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

சீதா தேவியும் மண்குவித்தே லிங்கம் ஒன்றை செய்துவிட்டார்


நீ கொண்டுவந்திட்ட லிங்கத்திற்கே முதலில் பூஜை நடக்குதய்யா
3

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

எழரை சனியின் அஷ்டம சனியின் கண்ட சனியின் தோஷமெல்லாம்


உன்னைக் கண்டால் போய்விடுமே எம்மைக் காத்திடு ஆஞ்சநேயா

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

தூபம் தீபம் காட்டினோமே துளசித் தீர்தத


் ம் கிடுத்தோமே
குங்குமம் நெற்றியில் வைத்தோமே மங்கள வாழ்வை வேண்டினோமே

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

அஷ்டமா சித்திகள் பெற்ற சித்தரே விஸ்வரூபம் எடுத்தவரே


காற்றில் மிதந்து சென்றவர் நீரினில் மூழ்காது நடந்தவரே

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

சிவனும் தேரேறி வந்தாரே சிரிப்பால் முப்புரம் எரித்தாரே


சிவனார் அம்சம்நீ அனுமாரே வாலால் இலங்கையை எரித்தாயே

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

அஞ்சலை ஹஸ்தம் ஆஞ்சநேயா அஞ்சலை செய்தோம் அருள்வாயே


பக்தவீரயோக ஆஞ்சநேயா பக்தர் எம்மைக் காப்பாயே

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

வரதஹஸ்தம் ஆஞ்சநேயா வலிமை வளமை அருள்வாயே


ஸ்ரீமத் சஞ்சவ
ீ ி ஆஞ்சநேயா சிந்தித்து செய்யப்பட செய்வாயே
4

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

சீதா ராமர் லக்ஷ்மணரை சேவித்து மகிழும் ஆஞ்சநேயா


ராம கதாகாலஷேபம் கேட்டு மகிழும் ஆஞ்சநேயா

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

சூரியனை குருவாய் ஏற்றாயே தேரின் பின்விரைந்தது நடந்தாயே


வேத சாஸ்திரங்கள் கற்றாயே கற்றதற்கேற்ப நின்றாயே

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

சீதை மட்டுமே கட்டித்தழுவும் ராமரை நீகட்டித்தழுவினாய்


சீதையை அன்னை என்றாயே சீதை அம்மை அப்பன் என்றாரே

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

சீதை ஈன்ற முத்து மாலையை உடைத்து உடைத்து பார்தத ் ாயே


குரங்கு புத்தி போகலையென கூடியிருந்தோர் பேசினரே

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

எதிலும் இருக்கும் ராமபிரான் முத்தில் ஏன் இல்லையென்றாய்


நெஞ்சைப்பிளந்து காண்பித்தாய் ராமபக்தியை நிரூபித்தாய்

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

ராமர் லக்ஷ்மணர் சீதையிடம் அரக்கர்கூட்டம் ராவணனிடம்


பரதன் பாண்டவ பீமனிடம் விஸ்வரூபம் எடுத்தாயே
5

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

பிரம்மச்சரியம் கடைபிடித்தாய் சின்னத் திருவடியெனவே பேரெடுத்தாய்


உன்திருவடியை போற்றுகிறோம் உன்னதவாழ்வினை வேண்டுகிறோம்

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

வடைமாலைகளை சாற்றுகிறோம் வாயார உன்புகழ் பாடுகிறோம்


தடைகள் யாவும் தகர்த்திடுவாய் பீடைகள் எல்லாம் போக்கிடுவாய்

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

உன்பெயர் எழுதிய மாலையை ஒவ்வொரு நாளும் சாற்றுகிறோம்


வாழ்வில் ஒவ்வொரு முன்னேற்றமும் உன்திருவடியில் சமர்பிப்போம்

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

சொல்லின் செல்வரே ஆஞ்சநேயா சொல்லிமாளாது உம் புகழை


அறிவிற்சிறந்த அனுமானே சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியே

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

அரியணை தாங்கிய அனுமானே அறிவினை வழங்கும் மாருதியே


அஞ்சாமை தந்திடு ஆஞ்சநேயா கெஞ்சிடவிடாமல் அருளிடய்யா

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

குற்றம் பொறுத்த நாதரையே தலைஞாயிறில் வழிபட்டாயே


திருகுறக்காவல் என்னும் ஊரினிலேமூர்த்தி தீரத
் ்தம் அமைத்தாயே
6

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

சிவனை நிந்தித்த தோஷத்தையே நிவர்தத ் ி செய்திட வழிபாட்டாய்


குரக்குக்காவின் சிவத்தலத்தில் குரங்குகள் இன்றும் வழிபடுதே

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

மந்திரி பதவிவகித்த மந்தியே உம்மைத்தொழுவோம் அந்திசந்தியே


சஞ்சீவி பர்வதம் கையிலேந்தியே காற்றோடு காற்றாய் மிதந்துவந்தியே

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

அபயம் புகுந்த விபீஷணனை அண்ணலிடமேற்கச் சொன்னாயே


அபயம் புகுந்தோம் நாங்களுமே அபயம் அபயம் ஆஞ்சநேயா

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

சீதை என்னும் ஜீவாத்மாவை பிறவியென்னும் சிறையிலிருந்து


ராமனாகிய பரமாத்மாவிடம் சேர்தத
் சர்குரு ஆஞ்சநேயா

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

விலங்காய் பிறந்து தெய்வமானாய் விதியை மதியால் வென்றாயே


ஆலோசனை சொன்னாய் ராமருக்கே ஆறுதல் சொல்வாய் பக்தருக்கே

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

மேனிமுழுதும் கேசமய்யா நெற்றிமுழுதும் திருமண்ணய்யா


நெஞ்சமுழுதும் சீதாராமர் சிந்தனை முழுதும் ஸ்ரீராம் ஜெயராம்
7

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

வாலில் குட்டிட்டு வணங்குகிறோம் வலம்வந்து வரம்பல வேண்டுகிறோம்


வாகனம் நிறுத்தி பூஜை செய்கிறோம் சாலைவிபத்தை தடுத்திடுவாய்

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

காலைசூரியனை பழமென்று பறித்து தின்ன பாய்ந்தாயே


தடுத்த ராகுவை வென்றாயே ராகுதோஷம் களைவாயே

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!

சதுர்புஜ பஞ்சமுக ஆஞ்சநேயா சத்ருவை வாலால் சுழட்டிடுவாய்


பில்லி சூனியம் எடுத்திடுவாய் பகைமையெல்லாம் ஓட்டிடுவாய்

அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே


சின்னத்திருவடியே மாருதியே

பதினெட்டடி உயர சிலைவடித்தே பக்தியுடன் உன்னை பூஜிக்கிறோம்


சொத்து சுகம் யோகம் அருளிடய்யா முக்திப்பேரருள் அனுமானே

சுசீநத
் ிரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும்
சுந்தரனே வானவர் போற்றும் வானரனே!
சுபம்!

எழுதியவர் - ரவி ரங்கசுவாமி


8

You might also like