Professional Documents
Culture Documents
தமிழின் சிறப்பு
தமிழின் சிறப்பு
தமிழர் திருநாள்
தை பொறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு
வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை. தை மாதத்தின் பிறப்பை அறுவடைத்
திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது.
தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகாவும் இந்த நாள் ஆரம்பத்தில்
கொண்டாடப்பட்டது. இடையில் சித்திரைக்கு மாறிப் போனது. இப்போது
மீண்டும் தை முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாக தமிழக அரசு
அறிவித்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு தை முதல் நாள் தமிழ்ப்
புத்தாண்டு தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
கல்வியே சிறந்தது
இன்றய உலகின் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும்.
எந்தவொரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது
இன்ரைய நவீன உலகில் மிகவும் அரிதாக காணப் படுகிறது. ஏனெனில்
கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள்ளன. இதனால் தான் இன்று
கல்வியானது மனிதனின் அத்தியவசிய தேவையாக இருக்கிறது.
கல்வியின் சிறப்பு பற்றி கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்க்குச்
சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப் படுகின்றான். இதற்க்கு காரணம்
அவன் கற்ற கல்வியே
ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனை செயல் வடிவில் தக்க வைத்துக்
கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்கு
கிடைக்கும். இல்லாவிடில் அவன் கற்ற கல்வியின் பயன் ஒன்றும் இல்லாமல்
போய்விடும். இதனையும் திருவள்ளுவர் தனது திருக்குறளின் கல்வி என்ற
அதிகாரத்தின் முதலாவது குறளில் தெளிவாக கூறுகின்றார்.
நீதி நூல்கள்:
ஒழுக்கக் கல்வி: