கர்மவினை

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

கர்மவினை

வியாசர் கூறினார் தான் அறிந்தவற்றை;


விசனப்படும் மன்னன் ஜனமேஜயனுக்கு.

“வலிமை கொண்டது கர்மவினைகளின் பயன்;


பொலிவுறும் பிரம்மாண்டம் முக்குணங்களால்!

கட்டு படுத்தும் பிரம்மாண்டத்தை முக்குணங்கள்;


உட்படுத்தும் உயிரினங்களைக் கர்மவிதி நியதிக்கு.

கர்ம விதியினை அறிய இயலாது நம்மால் !


கர்ம விதியினை ஆராய இயலாது நம்மால்!

ஜீவன்கள் ஆதியந்தம் அற்றவைகள் – அந்த


ஜீவன்களின் உடல் கர்ம வினைப் பட்டவை.

உடல் எடுக்கின்றன பல யோனிகளில் பிறந்து!


உடல் எடுக்கின்றன பல யோக போகங்களுடன்!

இல்லை கர்ம வினைபயன்கள் என்றால் – அப்போது


இல்லை கர்ம வினைகளால் உண்டாகும் உடல்கள்!

நல்வினை தீவினை கலந்த புண்ணிய பாவங்கள்


சொல்லப்படும் மூன்று வகைப் பட்டவை என்று.

சஞ்சிதம், ஆகாமியம், பிராரப்தம் என்று


மிஞ்சிடும் பிறக்கும் உடல்களில் இவை.

தேவர்களும் உட்பட்டவர்கள் கர்ம வினைக்கு


தேவர்களுக்கும் உண்டு இன்ப, துன்பங்கள்
எந்த யோனியில் சென்று பிறந்தாலும் – உண்டு
அந்த யோனியில் உண்டாகும் குண விகாரங்கள்.

வலம் வருகின்றான் சூரியன் உலகினை;


வளர்ந்து தேய்கின்றான் சந்திரன் வானில்.

கர்மமும், மாயையும் நித்தியமானவைகள்;


கர்ம, மாயை வசப்பட்ட உலகம் அநித்தியம்.

கர்ம வினைகள் காரணம் ஆகும் உலகுக்கு;


கர்ம வினைகளின் காரியம் உலக உற்பத்தி!”

You might also like