Peperiksaan HBTL 3103

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 19

___________________________________________________________________________

HBTL 3103

PENGAYAAN BAHASA TAMIL I

SEMESTER MEI 2020

___________________________________________________________________________

NAMA : THULASI A/P R ANNAMUTHU

NO.MATRIKULASI : 890103595316001

NO.KAD PENGENALAN : 890103595316

NO.TELEFON : 0146256097

E-MEL : tuulasi6097@gmail.com

PUSAT PEMBELAJARAN : PPNS

PART A (SOALAN 1)
(அ) வரத்தில்
ீ விளைந்த காதல்

கதைச் சுருக்கம்

அரசிளங்குமரன் இளமாறன் வரத்


ீ துடிப்புமிக்கவன். சோழநாட்டின்

ஆதரவில் பாண்டிய நாட்டு ஆட்சி நடைபெறுவதை விரும்பாதவன்.

எனவே, சோழநாடு சென்று துப்பறிந்து அவர்களை வெல்லும்

வழிகளைக் காண விழைகிறான். அரசனின் அனுமதியின்றி

இளமாறன் அவைப்புலவரிடம் அறிவித்துவிட்டு சோழ நாடு

வருகிறான். அங்கு அந்நாட்டு குடிமகன் என்று கூறி மல்யுத்தத்தில்

கலந்து வெற்றி பெறுகிறான். அவனைச் சோழ நாட்டு இளவரசி

மாணிக்கவள்ளி காதலிக்கிறாள். இதனால், இளமாறன் சிறை

வைக்கப்படுகிறான். ஆயினும், சிறையிலிருந்து தப்பி

மானிக்கவள்ளியுடன் பாண்டிய நாட்டுக்கு வரும்பொழுது உயிர்

துறக்கிறான். மாணிக்கவள்ளி சோழ நாடு திரும்பாமல் பாண்டிய

நாட்டுக்கு அவன் உடலை எடுத்துச் செல்கிறாள். வரத்தில்


ீ பிறந்த

காதல் அங்கு முடிவுற்றது.

கரு

வரமும்
ீ துணிவும் காதல் விளையக் காரணமாக அமைந்துள்ளன.

காதல் வயப்பட்டவர்கள் தங்கள் காதல் வெற்றி பெற இறுதிவரைப்

போராடுவது காதலருக்குத் தருமம். எவ்வித எதிர்ப்புகளையும்

தாங்கும் இதயமும் வேண்டும். இதன் அடிப்படையில் அமைந்ததே

இந்நாடகத்தின் கருவாகும்.
கதைமாந்தர்

1) இளமாறன்

முதன்மைக் கதைமாந்தராகச் சித்தரிக்கப்படுகிறான். இவன்

வரமிக்கவனாகவும்
ீ பேச்சுத் திறமை உள்ளவனாகவும்

நாட்டுப்பற்று கொண்டவனாகவும் காட்டப்படுகிறான்.

சிங்கங்களின் குகைக்கே சென்று பாண்டிய நாட்டின்

கௌரவத்தை நிலை நாட்ட இவன் காரியம் ஆற்றியதிலிருந்து

இதனை அறிவோம். இறுதிவரைப் போராடும் குணம்

உள்ளவன். பேச்சுத்திறனும் சாதுரியமாகப் பேசுபவனாகவும்

சித்தரிக்கப்பட்டுள்ளான்.

2) மாணிக்கவள்ளி

இவள் சோழ நாட்டு இளவரசி. இளமாறனை தன் முதல்

பார்வையிலேயே காதலிக்கிறாள். காதலுக்கு இலக்கணமாக

அவனையே அடைய நினைக்கிறாள். போராட்டவாதியாக

மாறுகிறாள். போராட்டத்தில் காதலன் பிணமானாலும் அவன்

ஊரான பாண்டிய நாட்டுக்கு அவனுடைய பிணத்துடன்

செல்கிறாள். காதலுக்காக நாட்டையும் வட்டையும்


துறப்பவளாகப் படைக்கப்பட்டிருக்கிறாள்.

3) பாண்டிய நாட்டு அவைப் புலவர்


இவர் தமிழ்ப் புலமை பெற்றவர். இளமாறனின் வளர்ச்சியில்

அக்கறை உள்ளவர். அவனுக்கு ஆபத்து எதுவும் வரக்கூடாது

எனும் எண்ணம் உடையவர்.

4) படைத்தலைவர்

இவர் மிகவும் பொறுப்புள்ளவர். சோழ நாட்டுக்கு களங்கம்

ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்.

நாடகப் பலன்கள்

இந்நாடகத்துன் வழி காதலுக்காகப் போராடும் குணம்

இளைஞர்களிடையே ஏற்படும். அதோடுகூட தமிழரிடையே வரீ

உணர்ச்சியைத் தட்டி எழுப்பவும் கூடும். மேலும், தமிழர் பண்பாடு

மற்றும் கலாச்சாரத்தைப் போற்றிப் பேணுவர்.

(ஆ) சிவாஜி விஜயம்

கதைச்சுருக்கம்

இளஞ்சிங்கம் சிவாஜி வரர்கள்


ீ துணைகொண்டு சில சிறு

அரண்களைப் பற்றுகின்றார் என்ற செய்தியை அறிந்த தாதாஜி கண்ட

தேவர், சிவாஜியின் தாயான ஜிஜாபாயிடம் குறை கூற வருகிறார்.

அவரின் பெருங்குணங்களை அறிந்த ஜிஜாபாய் தன் மகனும்

அவரும் ஒத்துப் போகவேண்டும் என்று நினைக்கிறார். ஆயினும்,

இளைஞர மனம் ஒரு னழியிலும், முதிய தாதாஜி மனம் வேறு

வழியிலும் செல்வதை உணர்கின்றாள்.


கரு

‘சிவாஜி ஜெயம்’ என்ற பெயரில் உள்ள இந்நாகத்தில் அம்மன்னரின்

உண்மைக் குணமே இந்நாடகத்தின் கருவாக அமைந்துள்ளது.

கதைமாந்தர்

1) சிவாஜி

அவர் குழந்தையுள்ளம் கொண்டவர் என்பதை அவர் தாயார் “

குழந்தையுள்ளம் கொண்டாயாதலால் நமது நிலையை நீ நன்கு

அறியாய்” என்பதிலிருந்து தெரிகிறது. தந்தையார் முகத்தைக்

காணாதவர் என்பதை அவர் தாயார், “தந்தையார் முகத்தையும்

சிந்தை செய்யாய் ; அவர்தம் குணத்தையும் அறியாய் ஐய”

என்பதிலிருந்து தெரிகிறது. “தாயிற் சிறந்ததோர் கோயில் இல்”

என்று அவரே கூறும்போது அவர் தாயை மதிப்பவர் என்பது

தெரிகிறது. அவர் எதற்கும் அஞ்சாதவராகவும்

காட்டப்பட்டுள்ளார்.

2) தாய் ஜிஜாபாய்

மகனைக் கண்டிப்பவராக உள்ளார். பெரியவரோடு இணைந்து

போகச் சொல்கிறார்.

நாடகப்பலன்

இந்நாடகக் காட்சியின் வழி “தாய் தன் மகன் பெரியவரின்

குணத்தோடு ஒத்துப் போக வேண்டும்” என்பதில் குறியாக உள்ளார்.


எனவே, இக்காட்சியின் வழி சிறியோர் பெரியோருடன் இணைந்து

போவது நன்மையைத் தரும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

PART A (SOALAN 2)

சிறுகதை என்பது அரை மணி முதல் 2 மணி நேரத்திற்குள் படித்து

முடிக்கும் அளவில் எழுதிட வேண்டும் அன்று எட்கார் அன்பவர்

கூறியுள்ளார். தமிழ் நாட்டுப் பேராசிரியர்களுள் சிலர் தாளில் 5 அல்லது 6

பக்கத்தில் எழுதுவது சிறுகதை என்கிறார்கள். மேலும், சிலர்

இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் செற்களுக்குள் சிறுகதை இருக்க

வேண்டும் என்கிறார்கள்.

அவ்வகையில், புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர்களில், ஆசிரியர்

ஜெயகாந்தனும் ஒருவராவார். எழுத்தாளர் புதுமைப்பித்தனுக்குப் பிறகு,

சமுதாயத்தின் நலிந்த பகுதிகளை அப்படியே சிறுகதைகளாக

எழுதியவர்களில் ஆசிரியர் ஜெயகாந்தனும் ஒருவர் என்பது

குறிப்பிட்டத்தக்கது. அவரின் படைப்புகளெல்லாம் தம் சமுதாயத்தினரின்


உணர்ச்சிகள், நலிவுகள் மற்றும் இலட்சியங்கள் போன்றவற்றை

உள்ளடங்கியவைகளாகவே அமையப்பெற்றுள்ளன. அவற்றுள் அவர்

எழுதிய ‘அக்கினி பிரவேசம்’ எனும் சிறுகதையானது பல சமுதாயச்

சிந்தனைகளைக் கொண்டுள்ளது.

‘அக்கினி பிரவேசம்’ எனும் சிறுகதையில் ஒரு பள்ளி (ஹைஸ்கூல்)

மாணவி பள்ளி முடிந்து பேருந்துக்காகக் காத்திருக்கிறாள். அப்பொழுது,

கனத்த மழையும் பெய்துகொண்டிருக்கின்றது. நெடுநேரம் ஆகியும் அவள்

வடு
ீ செல்ல வேண்டிய பேருந்து வரவில்லை. அப்பொழுது, அவ்வழியே

ஓர் இளைஞன் மகிழுந்தில் வந்து, அவளை வட்டில்


ீ கொண்டுவிடுவதாகச்

சொலி அழைக்கிறான். அவளும் சற்றுச் தயங்கி பின் அவனுடன்

செல்கிறாள். பிறகு, மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த

இளைஞன் அம்மாணவியிடம் தவறான நோக்கத்தில் நெருங்குகிறான்.

அவளும் விரக தாபத்திற்கு இரையாகித் தன்னை இழக்கிறாள். இச்சூழலில்

எழுத்தாளர், முன் பின் தெரியாத அல்லது அறிமுகமில்லாத நபர்கள்

அழைத்தாலோ அல்லது தாமாகவே உதவ முன்வந்தாலோ அதனை

ஏற்றுக்கொண்டால் சில சமயங்களில் பல விளைவுகளைச் சந்திக்க

நேரிடும் என்பதை சமுதாயத்திற்கு எடுத்துரைத்துள்ளார். அம்மாணவி, முன்

பின் தெரியாத இளைஞனின் அழைப்பை ஏற்றுச் சென்றமையால் அவனது

போலியான அன்புக்கு இரையாகித் தன்னையை இழந்த துயரச்

சம்பவம்வழி, அறிமுகம் இல்லாதவர்களுடன் செல்லாக்கூடாது என்பதை

விவரிக்கின்றது.

தொடர்ந்து, பள்ளி மாணவி மழையில் நனைந்துகொண்டே வடு


திரும்புகிறாள். மகளின் அலங்கோல நிலையைக் கண்ட அவளின்

விதவைத் தாய் நடந்ததை அறிந்துகொள்கிறாள். கோபத்தில் தன் மகளை

திட்டி அடிக்கிறாள்; வேதனையில் துடிக்கிறாள். இதுபோன்ற சூழல்கள்


ஏற்படும்போது பல தாய்மார்கள் என்ன செய்வதென்று அறியாது அழுது

புலம்புவர். ஆனால், இச்சிறுகதையில் அப்பெண்ணின் தாய்

சாமர்த்தியமாகத் தன் மகளுக்கு நடந்த அசம்பாவிதத்தை விசாரிக்க வந்தப்

பக்கத்துவட்டு
ீ மாமியிடம் மறைத்துச் சமாளிக்கிறாள். அந்த மாமி

சென்றவுடன், அப்பெண்ணின் தாய் ஆர்ப்பாட்டத்தைக் குறைத்துகொண்டு

வட்டைத்
ீ தாழிடுகிறாள். அதன் பின், தன் மகளின் தலையில் குடம்

குடமாய் நீரை ஊற்றிக்கொண்டே அந்த இளைஞனைப் பற்றி

விசாரிக்கிறாள். அறியாப் பருவத்தில் தன்னையே இழந்த மகள் தன்

அம்மாவிடம் நடந்ததை மறைக்காமல் கூறுகிறாள். அத்தாயும் விஷயம்

அறிந்து, மகளுக்கு ஆறுதல் கூறுகிறாள். ஒரு தாயிற்குத்தான் தெரியும்

அவள் மகளின் மனம். தன் மகளின் மனதில் அழுக்கு இல்லை என்பதை

ஒரு தாய் அறிந்துகொண்டது போல் இவ்வுலகம் அறியாது. அதனால்,

நடந்த அசம்பாவிதத்தை யாரிடமும் சொல்லக்கூடாதென்று தன் மகளைச்

சத்தியம் செய்ய வைக்கிறாள். அவளும் அதற்கு இசைந்து, நிதானமாக

இப்பொழுது கல்லூரிக்குப் போய்க் கொண்டிருக்கிறாள். இவ்வாறு, ஒரு

தாய் செய்யாமால் மாறாக, நடந்ததை எப்பொழுதும் கூறிக்கொண்டே

இருந்திருந்தால் அப்பெண் மனதளவில் நிலைகுழைந்திருப்பாள்.

எழுத்தாளர் இச்சூழலின்வழி, நாம் நம் வாழ்க்கையில் நடந்த துயரச்

சம்பவங்களையே எண்ணி வாழ்க்கை முடிந்துவிட்டது என மனம்

வருந்தாமல் மாறாகத், தொடர்ந்து வாழ்க்கையில் பீடு நடைபோட

வேண்டும் என்பதை இந்தச் சமுதாயத்திற்கு மிகச் சிறப்பாக

உணர்த்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அவ்விதவைத் தாய் தனது அறியாப் பருவத்தில்

தன்னையே இழந்த மகளின் தலையில் குடம் குடமாய் நீரை ஊற்றுகிறாள்.

தனது மகள் உள்ளத்தால் மாசு படியவில்லை; உடலால்தான்


மாசுப்பட்டுள்ளாள் என்பதால் குடம் குடமாய் ஊற்றும் இந்த நீர்

நெருப்புக்குச் சமம் என்கிறாள். இந்த நெருப்பானது தன் மகளின் மேல்

படிந்திருக்கும் கறையை அகற்றி, அவளைப் பரிசுத்தப்படுத்திவிட்டதாகக்

கூறுகிறாள். இந்தச் சூழலில் ஒரு தாயே தன் மகளுக்கு நேர்ந்த

அசம்பாவிதத்தைத் துடைத்தொழிந்து, அவளைப் புனிதப்படுத்தும்

சம்பவம்வழி எழுத்தாளர் சமுதாயச் சிந்தனையை வெளிபடுத்தியுள்ளார்.

அதாவது, நம் வாழ்க்கையிலும் வட்டிலும்


ீ நடக்கும் பிரச்சனைகளுக்கு

நாமாகவேதான் தீர்க்க முன்வர வேண்டும். பிறர் எண்ண சொல்வார்கள்,

ஊர் என்ன பேசும், இந்த உலகம் என்ன கூறும் என்று எண்ணாமல்

உள்ளத்தாலன்றி உடலால் மாசுபடுவது கற்பை இழந்ததாகவே எடுத்துக்

கொள்ளமுடியாது என இக்கதையில் எழுத்தாளர் இவ்வாறு

நியாயப்படுத்துகிறார்.

தொடர்ந்து, இச்சிறுகதையின் முடிவானது நம் தமிழினத்தவர் புனிதமாகக்

கருதும் பெண்ணின் கற்புக்கு மாசு படிந்தாலும் அறிவுப் பூர்வமாக

ஆராய்ந்து பார்க்கையில், அவள் வாழத் தகுதியுடையவள் என்பதை

அப்பெண்ணின் தாயின் மூலம் இச்சமுதாயத்திற்கு உணர்த்துவதாக

அமையப்பெற்றுள்ளது. முன்பெல்லாம், கணவன்மார்களை இழந்தப்

பெண்கள் தாங்கள் பரிசுத்தமானவர்கள் என்பதை நிரூபிப்பதற்கு

உடன்கட்டை ஏறினர். அதுபோன்று, இன்று சந்தர்ப்ப சூழ்நிலையில் சிக்கித்

தங்களின் கற்பை இழக்கும் பெண்கள், தண்ண ீரை அக்கினியாகக் கருதி

தலைமுழுகி தங்களைப் புனிதப்படுத்திக்கொள்கிறார்கள். மேலும், நடந்த

சம்பவத்தை யாரிடமும் கூறாமலும் அதனால் தங்களின் எதிர்காலமே

அழிந்துவிட்டது என்று எண்ணாத மனப்பக்குவம் இருக்கவேண்டும்.

அதோடல்லாது, சந்தர்ப்ப சூழ்நிலையால் கற்பைப் பறிகொடுத்த தன்

மகளைத் தாயே புனிதப்படுத்தவதாக இக்கதையின் முடிவு


அமையப்பெற்றுள்ளது. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அறிந்தும்

அறியாமலும் செய்யும் காரியங்களினால் பல சோதனைகளையும்

சிக்கல்களை எதிர்நோக்குவர். அவ்வகையில், இச்சிறுகதையில் வரும்

பள்ளி மாணவி தமது அறியாப் பருவத்தில் ஓர் இளைஞனின் போலியான

அனுதாப அழைப்பை ஏற்றுத் தன் கற்பை இழந்துவிடுகிறாள். இதுபோன்ற,

சூழ்நிலைகளை ஒரு விபத்தாகக் கருதி ஆர்ப்பாட்டமின்றி அமைதியான

முறையில் நன்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும். இதுவே, அப்பெண்ணின்

தாய் நடந்த சம்பவத்தை ஆர்ப்பாட்டப்படுத்தி, விசாரிக்க வந்தப் பக்கத்து

வட்டு
ீ மாமியிடம் கூறியிருந்தால், அவள் அந்த அசம்பாவிதத்தைக்

காட்டுத் தீப்போல் பரவச் செய்திருப்பாள். ஆனால், அந்தப் பெண்ணின் தாய்

அவ்வாறு செய்யாது மாறாக, தன் மகளின் மானமும் குடும்ப மானமும்

காக்கப்பட வேண்டும் என்று கருதி மகளின் தலையில் நீரை ஊற்றிப்

புனிதமடையச் செய்கிறாள்; அவள் வாழத் தகுதியுடையவள் என்பதையும்

தாயின்வழி இக்கதையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கதையின் முடிவு

எதிர்பாராத திருப்பதை அமையப்பெற்றுள்ளது என்பதைவிட ஏற்புடைய

யதார்த்தமான முடிவைக் கொண்டுள்ளது.

ஆகவே, மனித வாழ்வில் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் ஏற்படும் சில

தவறுகளைப் பெரிதுப்படுத்தாமல் அதலிருந்து மீ ண்டு வந்து வாழ்க்கையில்

பிரகாசிக்க வேண்டும்.
PART B (SOALAN 1)

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தை வாளோடு முன் தோன்றிய மூத்த

குடிமக்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் இருந்துதான் நாகரீகமாக இருந்தாலும் சரி,

உணவுக் கலாச்சாரமாக இருந்தாலும் சரி உலகம் முழுக்க எடுத்துச்

சென்றதற்கான மிகப்பெரிய ஆதாரங்கள் உள்ளது. ஆக இந்த உணவு சார்ந்த

கலாச்சாரம் உணவையே மருந்தாக பயன்படுத்திய தன்மை, அதன் பாங்கு

எல்லாமே தமிழர்களுடைய வாழ்வியல் முறையில் தான் இருக்கிறது. அதற்கான

ஆதாரம், எட்டுத்தொகை படித்தாலும் சரி, பத்துப்பாட்டு, கலித்தொகை படித்தாலும்

சரி, உள்ளது. எல்லாவற்றிலும் பார்க்கும் பொழுது உணவு சார்ந்த மிகப்பெரிய

ஆய்வு தமிழர்களுடைய சங்ககால இலக்கியங்களில் இருக்கிறதை நாம் கண்

கூடாகப் பார்க்கலாம்.

ஆக தமிழர்கள், உணவே மருந்து, மருந்தே உணவு என்ற கொள்கையில்

முழுமையாக இருந்து வாழ்ந்தார்கள். தமிழகத்தில் தோன்றிய சித்த

மருத்துவத்தில், சித்தர்களால் வழங்கப்பட்ட சித்த மருத்துவத்தில்


கடைப்பிடிக்கப்பட்ட ஒரே ஒரு விடயம் என்னவென்றால், எது உனக்கு உணவாக

இருக்கிறதோ அதுவே மருந்தாக இருக்க வேண்டும், எது உனக்கு மருந்தாக

இருக்கிறதோ அதுவே உணவாக இருக்க வேண்டும் என்ற கொள்கை. சித்தர்கள்

“பதார்த்தகுண சிந்தாமணி” என்ற நூலை எழுதி அந்த நூலிலே நாம்

சாப்பிடக்கூடிய தண்ண ீருக்கு என்ன குணம்? பாலுக்கு என்ன குணம்? பருப்புக்கு

என்ன குணம்? அதே போல அரிசிக்கு என்ன குணம்? அரிசியில் எத்தனை வகை

இருக்கிறது? பாலில் எத்தனை வகை இருக்கிறது? வெள்ளாட்டுப் பாலுக்கு என்ன

குணம்? பசும்பாலுக்கு என்ன குணம்? காராம்பசு பாலுக்கு என்ன குணம்?

எருமைப்பாலுக்கு என்ன குணம்? என்று  ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி

முழுமையாக எழுதியிருக்கிறார்கள். அந்த உணவுப் பொருள்களுக்கான குணத்தை

வகுத்து, ஒரு மனிதன் தன்னுடைய உடல் கூறுக்குத் தகுந்த எந்த உணவை எந்தப்

பருவகாலத்தில் சாப்பிடவேண்டும்? என்ற முறைகள் எல்லாம் தமிழர்களுடைய

பழங்கால வாழ்வியல் முறைகளில் எல்லாமே எழுதப்பட்டுள்ளது.

அதன் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையை எட்டாத விஞ்ஞான மற்றும்

தொழில்நுட்ப முன்னேற்றங்களால் சூழப்பட்ட உலகில், நம் நாட்டில், குறிப்பாக

இளைஞர்களிடையே சீரான உனவுப் பழக்கவழக்கங்கள புறக்கணிக்கும் பிரச்சனை

சிறு வயதிலிருந்தே உடலின் ஆரோக்கியத்தைப் பாத்திக்கத் தொடங்கும் போது

நாம் அடிக்கடி அதிர்ச்சியடைகிறோம். ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும்,

நோய்களைத் தடுப்பதிலும் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. உலகில்

சுகாதார பிரச்சனைகள் தற்போது ஒரு புரட்சியை சந்தித்து வருகின்றன.

கடந்த காலங்களில் பெரும்பாலான மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும்

வைட்டமின்கள் குறைவுகளால் பாத்திக்கப்படிருந்தனர். ஆனால், அதிகப்படியான

உணவு உண்பதால் இளைஞர்கள் உடல் நலப் பிரச்சனைகளால்

பாதிக்கப்படுகின்றனர். மேலும் அதிகப்படியான கொழுப்பு, அதிகப்படியான உணவு

உட்கொள்வதால் மக்கள் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் அதிகப்படியான கொழுப்பு, அதிகப்படியான சர்க்கரை மற்றும் உடல்

பருமன் போன்றவற்றால் இன்று உண்மை மாறிவிட்டது.


உலகெங்கிலும் கிட்டத்தட்ட 350 மில்லியன் பெரியவர்களுக்கு நீரிழிவு நோய்

இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, தேசிய சுகாதார மற்றும் நோயற்ற

கணக்கெடுப்பின்படி (என்.எச்.எம்.எஸ்) கடந்த ஆன்டு சுமார்2.6 மில்லியன்

மலேசியர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாகக் காட்டியது. சுகாதார இயக்குனர்

ஜெனரல் டத்துக் செரி டாக்டர் ஹசன் அப்துல் ரஹ்மான் கருத்துப்படி,

மலேசியாவில் நீரிழிவு நோயாளிகள் ஐந்து ஆண்டுகளில் 31 சதவதம்


அதிகரித்துள்ளனர்.

இதற்கான காரணம் என்ன? மலேசிய மக்களிடையே நீரிழிவு நோயாளிகளின்

எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணிகளாக அதிக எடை, மரபியல்,

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களே ஆகும்.

இளைஞர்களின் சமநிலையற்ற உணவு பலவிதமான உடல்நலப் பிர்ரச்சனைகளை

ஏற்படுகின்றது.

இதைத் தவிர, நவன


ீ வாழ்க்கை முறையின் நடைமுறை இந்த சிக்கலுக்கு

அடித்தளமாக இருக்கும் காரணிகளில் ஒன்றாகும். இன்றைய இளைஞர்கள்

அனைவரும் தங்கள் சொந்த விவகாரங்கள் மற்றும் பணிகளில் மிகவும்

ஆர்வமாகவும் தீவிரமாகவும் இருக்கின்றார்கள். மேலும் அவர்கள் அன்றாட

வாழ்க்கையில் ஒரு சீரான உணவை சாப்பிடுவதை புறக்கணிக்கிறார்கள்.

அதுமட்டுமா, அவர்களின் உணவுகளில் உடனடி நூடல்ஸ், அல்கோஹொல்

பானங்கள், பர்கர் போன்ற அவசர மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை எடுக்க

அவர்கள் விரும்புகிறார்கள்.

இந்த உணவுகள் உடலின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யவில்லை

என்பதை உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்த்துள்ளனர். சரிவிகித

உணவு கூம்பகம் வழிகாட்டி ஒரு சீரான உணவைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.

முக்கிய ஊட்டச்சத்துகளின் மதிப்பின் அடிப்படையில் சரிவிகித உணவு கூம்பகம்

வெவ்வேறு நிலைகளில் வைக்கப்படுகிறது. அதிக ஊட்டச்சத்து சரிவிகித உணவு

கூம்பகம் அடிப்பகுதியில் வைக்கப்படுகின்றன.


அதே நேரத்தில் குறைந்த ஊட்டச்சத்து மதிப்புள்ள உணவுகள் சரிவிகித உணவு

கூம்பகம் உச்சியில் வைக்கப்படுகின்றன. அனுமத்திக்கப்பட்ட உணவில் அளவு

தனிநபர்களிடையே வேறுபடுகிறது. எனவே, உணவைத் தேர்வு சரிவிகித உணவு

கூம்பகம் வழிகாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளைப் பின்பற்ற வேண்டும்.

சரிவிகித உணவு கூம்பகம் வழியாக ஒவ்வொரு மட்டத்திலிருந்தும் உணவு

வகைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

எனவே, இளைஞர்களாகிய நாம் அன்றாட தேவைகளில் சரிவிகித உணவுகளை

உண்ண தயார்படுத்திக் கொள்ள வேன்டும். இளைஞர்களைத் தவிர, குடும்பங்கள்

மர்றும் குழந்தைகளுக்கு ஒரு சீரான உணவை வழங்குவதற்கும், வட்டிலிருந்து


குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவைப் பயிற்றுவிப்பதற்கும் பெற்றோருக்கு

முழு பங்கு இருக்கிறது என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

PART B ( SOALAN 2)

“வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்” என்பது நம்

முன்னோர்களின் பழமொழி. நவரசங்களில் ஒன்றான நகைச்சுவை

மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவற்றிலிருந்து மீ ண்டு

ஆரோக்கியமான மனநிலையைப் பெற உதவுகிறது. அதோடு


வாழ்க்கையை இனிமையாக மாற்றுவதற்கான எளிய வழி ஒருவர்

தனது நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ளுதலே.

இதனாலேயே வள்ளுவரும் “இடுக்கண் வருங்கால் நகுக” என்று

நகைச்சுவை உணர்வின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.

மனிதனின் மற்ற உணர்வுகளைக் காட்டிலும் அன்பினை

வெளிப்படுத்தும் தன்மை அதிகமாக இருப்பது நகைச்சுவை

உணர்வில் மட்டுமே. ஒருவரது நகைச்சுவை உணர்வே அவரது

உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும், தக்க வைத்துக் கொள்ளவும்

பேருதவி புரிகிறது.

“நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லையெனில், நான் என்றைக்கோ

தற்கொலை செய்துகொண்டிருப்பேன்” என்று தேசப்பிதா

காந்தியடிகள் சொன்னதையும் இங்கே நினைவுகூர்தல் அவசியம்.

இப்போதைய காலகட்டத்தில் வேலைப்பளு, குடும்பப் பிரச்சனை

பொருளாதாரச் சிக்கல் போன்ற தங்களுடைய மோசமான

சூழ்நிலையில் இருந்து தங்களின் மனதை மாற்றிக்கொள்ள

நகைச்சுவையை நாடுகிறார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு

கட்டத்திலும்  ஆரோக்கியமாகவும், உந்துதலாகவும் இருக்க

நகைச்சுவை பெரிதும் தேவை. இன்று நாம் அனைவரும் பரபரப்பான

சூழ்நிலையில் சிரிக்க மறந்து எதையோ தேடி ஓடிக்கொண்டு

இருக்கிறோம்.

கோபமும், மகிழ்ச்சியும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை. கோபம்

என்பதும், மகிழ்ச்சி என்பதும் ஒரு மனிதனின் உணர்வு. ஆனால்


கோபம் அதன் கட்டுப்பாட்டை இழக்கும் போது மிகப் பெரிய

விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது. அது உங்களின் தனிப்பட்ட

வாழ்க்கையில் நீங்கள் வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு

பிரச்சனைக்கு வழி வகுக்கிறது. அது மட்டுமல்ல உங்கள்

வாழ்க்கைத் தரத்தையே ஒட்டு மொத்தமாக மாற்றி விடுகிறது.

உங்களின் கோபம் தான் உங்கள் மன அழுத்தத்திற்கான முக்கிய

காரணமாக உள்ளது. எனவே இத்தகைய கொடுமையான

உணர்விலிருந்து  உங்களைக் காத்துக் கொள்ளவும், மன

அழுத்தத்தை குறைக்கவும் நகைச்சுவை முக்கியப் பங்களிப்பாக

உள்ளது.

 
நகைச்சுவை உணர்வு என்றால் என்ன என்பதைப் பற்றி ஒரு

தெளிவான புரிதல் இருப்பது முக்கியம். பிறரை கேலியும், கிண்டலும்

செய்வது(பல திரைப்படங்களில் வருவதுபோல்) நகைச்சுவையல்ல.

அதெல்லாம் திரைப்படங்களுக்குத்தான் ஒத்துவரும். நிஜ வாழ்வில்

நகைச்சுவை என்பது நமது எதிரியைக்கூட நண்பராக மாற்றுவதாய்

இருக்க வேண்டும்.

 
பிறரை ஏளனம் செய்வதற்கும், நகைச்சுவை உணர்வுக்கும்

சமயத்தில் வித்தியாசம் என்பது மிகவும் குறைவாக இருப்பதுபோல்

தோன்றும். ஆனாலும் அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது

முக்கியம். நகைச்சுவை உணர்வில் இன்னொரு சுவாரஸ்யமான

அம்சம் என்னவெனில், நமது குறைகளின் மீ து நாமே சிரித்துக்

கொள்வதாகும். நமது குறைகளை உணர்ந்து நாமே சிரித்துக்


கொள்வதன் மூலம் அது நாளடைவில் திருத்தப்படும். இதன்மூலம்

மற்றவர்கள் அதைப்பார்த்து சிரிப்பதை தவிர்க்கலாம்.

மாதிரி நகைச்சுவை துணுக்குகள் :

கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக்

கட்டியிருக்கலாம்.

மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே? 

ஏங்க அண்டா குண்டா பாத்திரங்களையெல்லாம் விக்கிறீங்க?

என்னோட பையன் பட்டணத்திலே சினிமாவில் சின்னச் சின்ன

பாத்திரத்திலே நடிக்கிறானாம். செலவுக்குப் பணம் அனுப்பச்

சொன்னான். 

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.

இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை

நம்புறதில்லைன்னு??????? 

அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?" 

மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்" 

அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே

என்னை அப்பானு கூப்பிடாதடா" 

மகன்: "சரிடா மச்சான், கையெழுத்து போடு" 


உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.

நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி

பெயில் ஆகும். 

உன் கணவரை எதுக்கு எடக்கு

மடக்கா திட்டினே ?

நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன்

செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் . 

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால்

இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.செல்போனில் பேலன்ஸ்

இல்லன்னா கால் பண்ண முடியாது. 

"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!"

"பெண் அவ்வளவு அழகா?" "இல்லடா... விஷயம் தெரிஞ்சு என்

மனைவியும் அங்கே

வந்துட்டா...!"  பாய்: இன்னிக்கு

நைட் நாம ஊர விட்டு ஓடிப் பொய் விடலாம்...

கேர்ள்: எனக்கு தனியா வர பயமா இருக்கு....

பாய்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா...

கேர்ள்: ?!?.... 
மேற்கண்ட நகைச்சுவை துணுக்குகளை வாசிக்க மிகவும் ஆனந்தமாகவும் மன அமைதியையும்
தருகின்றது. ஆகவே மானிடர்களாகிய நாம் நகைச்சுவைகளைப் பார்த்து அல்லது வாசித்து
இன்புறுவோம்.

You might also like