Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

சமரசப் பிரார்த்தனை

கருணையும் அன்பும் நிறைந்த இறைவா! எல்லா


உயிர்களிலும் ஊடுருவி எங்கும் நிறைந்து, சர்வ
வல்லமையும் பொருந்திய சர்வக்ஞான சச்சிதானந்தப்
பரம்பொருளாம் உம்மை வணங்கிப் பணிகின்றோம்.
மெய்ப்பொருள் காணும் உள்ளம், சமநோக்கு, நிலைபெற்ற
மனம், சிரத்தை, பக்தி, ஞானம் இவைகளை எங்களுக்கு
அருள்வீராக. ஆணவம், காமம், பேராசை, கோபம்,
வெறுப்பு, பொறாமை இவைகளிலிருந்து எங்களை
விடுவித்து, எங்கள்
உள்ளங்களில் தூய தெய்வீகக் குணங்களை நிரப்புவீராக
எல்லா உருவங்களிலும் பெயர்களிலும் உம்மையே
தரிசித்து, சேவை செய்வோமாக. எந்நேரமும் உம்மையே
சிந்திப்போமாக. என்றென்றும் உமது புகழைப்
பாடுவோமாக. எப்பொழுதும் எங்களது நாவினில் உமது
திருநாமம் விளங்குக. என்றென்றும் உம்முள்ளே
நிலைபெற்று விளங்குவோமா ஓம் தத்சத்.
- ஸ்ரீ சுவாமி சிவானந்த

You might also like