Professional Documents
Culture Documents
New Microsoft Office Word Document
New Microsoft Office Word Document
New Microsoft Office Word Document
பொருள் :
யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின்
சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீரப் ்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப்
பணிகிறேன் என்பதாகும்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்து இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி
போற்றுகின் றேனே
1. தனலட்சுமி
ஸகல உயிர்களிடத்தும் நிறைவாக இருப்பவள் ஸ்ரீ தனலெட்சுமி. எனவே நாம் எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் இருக்க வேண்டும். போதும்
என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்து ஸ்ரீதனலெட்சுமியின் அருளை பரிபூர்ணமாகப் பெறலாம்.
எந்த தேவியானவள் சகலப் பிராணிகளிடமும் புஷ்டி (நிறைவு) உருவத்தில் இருக்கின்றாளோ அந்த ஐஸ்வர்ய லட்சுமியை நான்
வணங்குகிறேன்.
2. வித்யாலட்சுமி
எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்தவேண்டும். அன்பாகவும்,
இனிமையாகவும் பேச வேண்டும். யார்மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலெட்சுமியின் அனுகிரகத்தைப் பெறலாம்.
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் புத்தி உருவில் இருக்கின்றாளோ அந்த வித்யாலெட்சுமியை வணங்குகிறேன்.
3. தான்யலட்சுமி
ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் நாம், நம் பசியைத் தீர்த்துக் கொள்வதோடு நில்லாமல் பசியோடு, நம் வீட்டிற்கு
வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான்ய லட்சுமியின் அருளை
நிச்சயம் பெறலாம்.
யாதேவீ ஸர்வபூதேஷு க்ஷ ú தாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் பசி உருவில் இருக்கின்றாளோ அந்த தான்யலட்சுமியை வணங்குகின்றேன்.
4. வீரலட்சுமி
உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும், பாவங்களையும் தைரியமாக
ஒப்புக் கொள்ள வேண்டும். செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மண உறுதியுடன் ஸ்ரீவீரலட்சுமியை
வேண்டினால் நன்மை உண்டாகும்.
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தைரிய உருவில் இருக்கின்றாளோ அந்த வீரலட்சுமியை வணங்குகிறேன்.
5. சௌபாக்யலட்சுமி
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாளோ அந்த ஸெளபாக்கிய லட்சுமியை வணங்குகிறேன்.
6. சந்தானலட்சுமி
எல்லா உயிர்களிடத்தும் தாய் உருக் கொண்டிருக்கும் ஸ்ரீஸந்தானலட்சுமியின் அருளைப் பெற எல்லாக் குழந்தைகளையும் தன் குழந்தையாக
பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண்டும். தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பார்கள். தாயன்போடு ஸ்ரீஸந்தான
லட்சுமியைத் துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் இருக்கின்றாளோ அந்த ஸந்தான லட்சுமியை வணங்குகிறேன்.
7. காருண்யலட்சுமி
சகல ஜீவன்களிடத்தும் கருணையோடு பழகவேண்டும். உயிர்வதை கூடாது. மற்ற உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை. ஜீவ
காருண்யத்தோடு வாழ்ந்தால் ஸ்ரீகாருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தயை உருவில் இருக்கின்றாளோ அந்த காருண்ய லட்சுமியை வணங்குகிறேன்.
8. மகாலட்சுமி
நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். என்றுமே நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் ஸ்திரமாக
இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீமகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை
வழங்குவாள். இதை விடுத்து பிறரிடம் எதையாவது பெற வேண்டும். என்ற எண்ணத்துடனிருந்தால் மற்றவர்களிடம் கையேந்தும் நிலையில்
தான் நம் வாழ்க்கை அமையும். இரைக்கின்ற கிணறு சுரக்கும், கொடுத்தால் நிச்சயம் கிடைக்கும்.
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் செல்வ உருவில் இருக்கின்றாளோ அந்த வைபவ லட்சுமியை வணங்குகிறேன்.
9. சக்திலட்சுமி
ஸ்ரீ தேவியானவள் எல்லா உயிர்களுக்கும் தானே சக்தி வடிவமாக இருக்கிறாள். எனவே எந்த வேலையையும் என்னால் முடியாது என்று
சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.
எல்லா உயிரினங்களிடத்தும் எந்த தேவீ சக்தி வடிவில் இருக்கின்றாளோ, அந்த சக்தி லட்சுமியை வணங்குகிறேன்.
10. சாந்திலட்சுமி
நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம்
மனதை இருக்குமிடத்திலேயே நாமே சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லெட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் சாந்தி உருவில் இருக்கின்றாளோ அந்த சாந்தி லட்சுமியை வணங்குகிறேன்.
11. சாயாலட்சுமி
நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையைச் செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில்
சாய்த்து ஸ்ரீசச
் ாயா லட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் பிரதி பிம்ப வடிவில் இருக்கின்றாளோ அந்த சாயா லட்சுமியை வணங்குகிறேன்.
12. த்ருஷ்ணாலட்சுமி
எப்பொழுதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்கவேண்டும். பிறருக்கு உதவ வேண்டும். ஞானம் பெற வேண்டும். பிறவிப் பிணித் தீர வேண்டும்
என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணா லட்சுமியைத் துதித்து நலமடையலாம்.
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் ஆசை உருவில் இருக்கின்றாளோ அந்த த்ருஷ்ணா லட்சுமியை வணங்குகிறேன்.
13. சாந்தலட்சுமி
எல்லா உயிர்களிடத்தும் பொறுமை உருவில் இருக்கும் ஸ்ரீக்ஷ õ ந்த லட்சுமியை தியானிப்போம். பொறுமை கடலினும் பெரிது, பொறுத்தார்
பூமியை ஆள்வார், பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் பொறுமை வடிவில் இருக்கின்றாளோ அந்த சாந்த லட்சுமியை நமஸ்க்கரிக்கின்றேன்.
14. கீர்த்திலட்சுமி
நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி
லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் கீர்த்தி வடிவில் இருக்கின்றாளோ அந்த கீர்த்தி லட்சுமியை வணங்குகிறேன்.
15. விஜயலட்சுமி
விடாத முயற்சியும், உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜய லட்சுமி எப்பொழுதும்
நம்முடனிருப்பாள்.
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் வெற்றி வடிவில் இருக்கின்றாளோ அந்த விஜய லட்சுமியை வணங்குகிறேன்.
16. ஆரோக்கியலட்சுமி
நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது. உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கோபம், பொறாமை, காமம்,
பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்கி அவள் அருள் பெற்று
வளமுடன் வாழ்வோம்.
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் ஆரோக்கிய உருவில் உறைகின்றாளோ அந்த ஆரோக்கிய லட்சுமியை நமஸ்க்கரிக்கின்றேன்.
தேவர்களால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தில் அவரவர் விரும்பியதை 108 முறை சொன்னால் விரும்பியது விரைவில் கிடைக்கும்.
நமஸ்தேஸ்து என்று சொல்லும் போதெல்லாம் நமஸ்காரம் செய்த பலன் விரைவில் கிடைக்கும்.
1, தனலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
புஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
2, தான்யலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
சஷீதா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
3, வித்யாலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
4, வீரலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
த்ரூதி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
5, ஸெளபாக்யலட்சுமி..
யாதேவீ ஸர்வபூதேஷு
துஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
6, ஸந்தானலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
மாத்ரு ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
7, காருண்யலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
தயா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
8, மஹாலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
மஹா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
9, சாந்திலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
சாந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
10, கீர்த்திலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
கீர்த்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
11, சாயாலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
ச்சாயா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
12, ஆரோக்கியலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
காந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
13, த்ருஷ்ணாலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
த்ருஷ்ணா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
14, சாந்தலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
ஷாந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
15, விஜயலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
விஜய ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
16, சக்திலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
சக்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் திருவடிகளே சரணம்
நரசிம்மர் ஸ்லோகம்
நரசிம்மருக்கு உகந்த இந்த துதியை தினமும் காலை, மாலை இரு நேரமும் சாமி கும்பிடும்போது படித்து வந்தால்
நினைத்தது எல்லாம் கைகூடும்.
நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை
சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!
அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!
எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!
இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுலகத்திலும் நரசிம்மரே!
எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே!
நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை
அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.
வணக்கத்திற்கு உரியவளாகி சகலருடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில் செலுத்தும் மஹா மாயை ஆனவள். ஸ்ரீ பீடத்தில்
நிலைத்து வசிப்பவள். தேவர்களால் வழிபடப்படுபவளும் சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருப்பவளும்
ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.
கருடவாகனத்தில் ஆரோகணித்து வருபவள். கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவள். எல்லா
பாவங்களையும் அழிப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.
உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவள். அனைத்து வரங்களையும் அளிப்பவள். எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக
விளங்குபவளும் எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.
அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தும், தெய்வீக வெற்றியினை அருள்பவள். மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளும்
மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.
முதலும் முடிவும் அற்ற தேவியானவள். பிரபஞ்சத்தின் முதல் சக்தியான மகேஸ்வரியாக விளங்குபவள். யோக நிலையில்
தோன்றியவளும் யோக வடிவாகத் திகழ்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.
பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவள். எளிதில் உணரப்பட முடியாதவள். (பிழைகளைக் காணுங்கால்) எல்லையற்ற கோபம்
உடையவள். அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளும் பெரும் பாவங்களைத் தொலைப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன்.
பத்மாசனத்தில் அமர்ந்தவள். பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவள். பரமேஸ்வரி என விளங்குபவளும் அகில உயிர்களுக்கும் அன்னை
என ஆனவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே!.. உன்னை வணங்குகின்றேன்.
தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும். தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில்
தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும். தினமும் மூன்று முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை
எளிதாக வெல்வர். ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீ மஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள்
இந்த மகாலட்சுமி மந்திரத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால்
அனைத்து விதமான சாபமும் நிவர்த்தியாகும்.
இது பலிச்சக்ரவர்தத
் ியால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை ஆறு லட்சம் முறை ஜபிக்க சித்தியாகி லக்ஷ்மி
கடாக்ஷம் ஏற்படும். பொய் சொல்லாமை சாஸ்திரங்களில் ஒதுக்கியவற்றை நீக்கி, ஒழுக்கத்துடன்
இருப்போருக்கு விரைவில் பலனளிக்கும். இதற்கு சாப நிவர்த்தியாகவும், விரைவில் சித்தியாகவும் ஊருக்கு
வெளியே உள்ள கறும் எறும்பு (பிள்ளையார் எறும்பு) புற்றுக்கு அரிசி, நெய், சர்க்கரை கலந்து 48 தினங்கள்
போட்டு வரவும்.
1] AadhiLakshmi namasthe asthu Para Brahma swaroobini yaso dehi, dhanam dehi sarva kaamamsa dehime. 2] Santhana
Lakshmi namasthe asthu puthra pouthra Pradhayini. puthran dehi, dhanam dehi sarva kaamamsa dehime 3] Vidya
Lakshmi Namasthe asthu birumma vidya swaroobini vidyaam dehi, Kalaam dehi sarva kaamamsa dehime 4] Dhana
Lakshmi namasthe asthu sarva darithriya naasini Dhanam dehi, sriyam dehi sarva kaamamsa dehime 5] Dhaanya Lakshmi
namasthe asthu sarvabarana sobidhe dhanyam dehi, dhanam dehi sarva kaamamsa dehime 6] Medha Lakshmi namasthe
asthu kali kalmasha naasini pirangyaam dehi, sriyam dehi sarva kaamamsa dehime 7] Gaja Lakshmi namasthe asthu sarva
deva swaroobini asvaamsa gokulam dehi sarva kaamamsa dehime 8] Veera Lakshmi Namasthe asthu sarva kaarya
jayapradhe veeryam dehi, balam dehi sarva kaamamsa dehime 9] Jaya Lakshmi namasthe asthu parasakthi swaroobini
jayam dehi, subam dehi sarva kaamamsa dehi me 10] Bakya Lakshmi namasthe asthu soumangalya vivarthini bakyam
dehi sriyam dehi sarva kaamamsa dehime 11] Keerthi Lakshmi namasthe asthu Vishnu vakshas sthalasthidhe keerthim
dehi, sriyam dehi sarva kaamamsa dehime 12] Arokya Lakshmi namasthe asthu sarva roha nivarani ayur dehi, sriyam dehi
sarva kaamamsa dehime 13] Siddha Lakshmi namasthe asthu sarva sidhi pradaayini sidhim dehi, sriyam dehi sarva
kaamamsa dehime 14] Soundharya Lakshmi namasthe asthu sarvalangaara sobidhe roobam dehi, sriyam dehi sarva
kaamamsa dehime 15] Samrajya Lakshmi namasthe asthu bukthi, mukthi pradayini moksham dehi, sriyam dehi sarva
kaamamsa dehime 16] Mangale Mangaladhaare mangalye mangala pradhe mangalartham mangalesi mangalyam dehime
sadha 17] sarva mangala maangalye sive sarvartha saadhahe saranye thriyambage devi narayani namosthudhe 18] subam
bavadhu kalyani ayuraarokya sambadhaam mama chathru vinaasakaya deepajyothi namosthude.