Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

தளை என்பது என்ன?

தளை என்றால் கட்டு, அடக்கு, தொடுப்பு, பிணைத்தல் என்று பொருட்படும். அதுவே செய்யுளில் தளை
என்பது அடுத்து வரும் இரு சீர்களின் தொடர்பு எனப் பொருட்படுகிறது. செய்யுளில் முந்தைய சீரீன்
அசையும் அடுத்து வரும் சீரின் அசை வகையையும் வந்து மாறிமாறிப் பொருந்தும் விதமே தளை
எனப்படும். சுருங்ககூறின், சீரும் சீரும் சேர்ந்து ஒலிக்கிற பொழுது தோன்றுவது தளை.
எத்தனை வகைப்படும்?
7 வகைப்படும். அதில் முதன்மை நான்கு தளைகளாக ஆசிரியர் தளை, வெண்டளை, கலித்தளை மற்றும்
வஞ்சி தளை ஆகும்.
தளைக்கும் ஓசைக்கும் பாக்களுக்கும் உள்ள தொடர்பைச் சிறுகுறிப்பாக விளக்குக.

ஒரு செய்யுளின் முந்தைய சீரின் அசையையும் அடுத்து வரும் சீரீன் அசையையும் பொருத்தே அதன்
ஓசை வேறுபடுகிறது. இவ்வாறு, மாறிமாறி பொருந்தும் விதமே தளை. அதோடு, ஒரு பாவைப் பார்க்கும்
போதே அதன் அடி அமைப்பும் ஓசையுடன் படிக்கும் போது அல்லது கேட்கும்போது அதன் ஒலி அமைப்பும்
முதலில் கவனத்தில் பதியும். சுருங்கக்கூறின், ஒரு பாவுக்கு அதன் தளை அமைப்பை மட்டுமே கொண்டு
ஓசை வேறுபடுகின்றன.

You might also like