Professional Documents
Culture Documents
தமிழ்மொழி
தமிழ்மொழி
அ. விளக்கம்.
நெஞ்சினின்று எழும் காற்றானது வாய் அறையின் (oral cavity) உள் புகும்போது அங்குள்ள நா, இதழ்
முதலான உறுப்புகள் அதிர்ந்து, அக்காற்றை அடைத்தோ, அதிரச்செய்தோ வெளிவிடுவதால் பிறக்கும்
ஒலிகள் மெய் ஒலிகள் எனப்படும்.
ஆ. தமிழ் இலக்கண நூலார் பாகுபாடு.
தமிழ் இலக்கண நூலார் மெய் ஒலிகளை மூன்று வகையாகப் பிரித்துக் கையாளுகின்றனர். அவை:
1. வல்லினம்- க, ச, ட, த, ப, ற
2. மெல்லினம்.- ங, ஞ, ண, ந, ம, ன
3. இடையினம்- ய, ர, ல, வ, ழ, ள
வல்லின ஒலிகள் மார்பினை இடமாகக் கொண்டும், மெல்லின ஒலிகள் மூக்கை இடமாகக் கொண்டும்,
இடையின ஒலிகள் மிடற்றினை (கழுத்து) இடமாகக் கொண்டும் பிறக்கின்றன என்றகிறார் நன்னூலார்.
இ. ஒலிப்புமுறைப் பாகுபாடு.
1. வெடிப்பொலிகள்: வாய் அறையின் (oral cavity) ஓர் இடத்தில் மூச்சுக்காற்று, குரல்வளை
மடலால் முழுவதும் தடை செய்யப்பட்டுத் திடீரென்று வெடிப்போடு வெளியேறினால் அதனை
வெடிப்பொலி அல்லது தடையொலி (Plosive or stop sound) என்பர் மொழியியலார். க், ச், ட், த்,
ப் என்பவை வெடிப்பொலிகள் ஆகும்.
வெடிப்பொலிகள் (Plosive sounds): க, ச, ட, த, ப
4. வருடொலிகள்: நாக்கின் நுனி (Apex) மேலே எழுந்து உள்நோக்கி வளைந்து பின் வேகமாகக்
கீழே வரும்போது அண்ணத்தில் மோதுவதால் எழுகின்ற ஒலிகளே வருடோலிகள் (Flap
sounds) ஆகும்.
வருடொலிகள் (Flap sounds): ர, ழ, ற
கூட்டொலிகள்
-ஆங்கில மொழி அறிஞரான நோயல் ஆர்ம்பீல்ட் (Noel Armfield) என்பவர், இதை டிப்தோங்
(dipthong) என குறிப்பிட்டுள்ளார்.
-காரணம் ‘ஐ’ என்னும் எழுத்து ‘அ’ மற்றும் ‘இ’ என்னும் இரண்டு உயிரொலிகள் இணையும்
பொழுது உருவகின்றது.
-‘ஔ’ என்னும் எழுத்து, ‘அ’ மற்றும் ‘உ’ என்னும் இரு உயிரொலிகள் இணையும் பொழுது
உருவகின்றது.
-ஆக, இரண்டு உயிர் ஒலிகள் இணைந்து ஒரே சமயதில் ஒலிக்கும் பொழுது உருவாகியதால்
‘ஐ’-யும் ‘ஔ’-உம் கூட்டொலிகளாக கருத்தப்படுகிறன.
உயிரொலி
இரண்டு உயிர் ஒலிகளை ஒன்று சேர்த்து ஒர் அசையில்/ஒரு முயற்சியில் ஒலிக்கும்போது
உருவாகின்ற ஒலி கூட்டொலி ஆகும். இரண்டு கூட்டொலிகள் உள்ளன. அதவது ஐ மற்றும் ஔ. இதை
2 வகையாக பிரித்துள்ளனர்.
முதல் வகை (உயிர் ஒலி + உயிர் ஒலி)
1. அ+இ=ஐ (அகரம்+இகரம்=ஐ)
2. அ+உ=ஔ (அகரம்+உகரம்=ஔ)
இரண்டாம் வகை (உயிர் ஒலி + மெய் ஒலி)
1. அ+ய்=அய் (அகர உயிர் ஒலி + யகர மெய் ஒலி = அய்)
2. அ+வ்=அவ் (அகர உயிர் ஒலி + வகர மெய் ஒலி = அவ்)