Professional Documents
Culture Documents
அணிலும் குரங்கும்
அணிலும் குரங்கும்
அணிலும் குரங்கும்
ஓர் அடர்ந்த காட்டில் சுறுசுறுப்பான அணில் ஒன்று வாழ்ந்து வந்தது. அல்லும் பகலும், மழை
வெயில் பாராது காட்டிற்குச் சென்று பழங்களையும் காய்கறிகளையும் தேடி சேமிப்பதே அணிலின்
தலையாயக் கடமையாகும். சேகரித்த உணவுகளைத் தன் வசிப்பிடத்தில் சேமித்து வைக்கும். ஒரு நாள்
உணவை எடுத்துச் செல்கையில் எதிரே குரங்கு ஒன்றைச் சந்தித்தது. குரங்கு மிகவும் சோம்பேறித்
தனமாக ஒரே மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.
அணில் : ஹா.. ஹா.. நான் உணவு சேகரிக்கும் பொழுது நீ உல்லாசமாகச் சுற்றித் திரிந்தாய் ! இப்பொழுது
நீயே என்னிடம் வந்து உதவி கேட்கிறாய்.. நீயே சொந்தமாக உணவைத் தேடிக் கொள் !
குரங்கு மிகுந்த ஏமாற்றத்துடனும் அவமானத்துடனும் அணில் வீட்டிலிருந்து வெளியேறியது.
அணிலைத் தன் வழிகாட்டியாக எண்ணி நேரம் பாராமல் சிறுக சிறுக உணவைச் சேமிக்க
ஆயத்தமானது. ஒரே மாதத்தில் அதற்கும் அதன் குடும்பத்திற்கும் தேவையான உணவைச் சேகரித்தது.
அன்று இரவே, அணிலைத் தேடிச் சென்று நடந்தவற்றைக் கூறி தனக்கு நல்ல பழக்கத்தைக் கற்றுத்
தந்ததற்கு நன்றி கூறிவிட்டு தனக்கான உணவைச் சேகரிக்க சென்றது.