செறிவுண்டென்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்குக் குறியுண்டு ஒன்றாகிலும்
குறையொன் றில்லோம் நிரையும் கருணையினால் வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழி பறிக்கப் பறியுண்டவர்எம் பழவினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே .
மேவரிய பெருந்தவம் யான் முன்பு விளைத் தன வென்னோ
யாவது மோர் பெருளல்லா என் மனத்து மன்றியே நாவலர் காவலர் பெருகு நதி கிழிய வழி நடந்த சேவடிப் போது எப்போது சென்னியினுள் மலர்ந்தனவால் .
செற்றார்தம் புரம்எரித்த சிலையார் செல்வத்
திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில் சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்ட தொகு நிதியின் பரப்பெல்லாம் சுமந்து கொண்டு முற்றாத முலைஉமையாள் பாகன் பூத முதற் கணமேயுடன் செல்ல முடியாப் பேறு பெற்றார்தங் கழல்பரவ அடியேன் முன்னைப் பிறவியினிற் செய்ததவம் பெரிய வாமே.