'காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ' - எல்லாமே அவன் தான் அப்டிங்கறதை இதை
விடவும் தெளிவா நிஷ்கர்ஷை (explain - detailing - giving clarity) பண்ண முடியுமா வேறொன்னால? இந்த ஒசத்தியான அறிவு ப்ரஹ்லாதனுக்கு இருந்ததுனால தானே, எல்லாமே ஸ்ரீமன் நாராயணன் தான் அப்டிங்கறதுல அவன் த்ருடமா நின்னான் - கர்பவாசத்துலேர்ந்து ந்ருஸிம்ஹன் அவதரிக்கற வரை. அவனோட மனசுல ஸ்ரீமன் நாராயணன் தான் பரதேவதை அப்டிங்கறதுல ஒரு க்ஷணார்த்தம் துளியளவு கூட சம்சயம் வரலையே. இது தானே மஹாவிஷ்வாசம். இது தானே சரணாகதி.
'மேலையார் செய்வனகள் வேண்டுவன' அப்படிங்கற ஸ்ரீ ஆண்டாளோட
திருவாக்கின் படி, நம்மளோட பெரியவா காட்டின வழிலே நடந்துக்கறது தானே சிஷ்யாளோட தர்மம். தடம் மாறிப் போனோம்னா, இவ்ளோ ஒசத்தியான ஆழ்வார் ஆசார்யாள் திருவடிகள்னு நம்மளை நாமளே சொல்லிக்கறதுலே ஏதாவது அர்த்தம் இருக்கா? அவன் தானே.. அவன் மட்டும் தானே நமக்கு புகல். அப்படி இருக்கறது மட்டும் தான் நம்மளோட ஸ்வரூபத்துக்கு (basic identity) அழகு.
பரிபூர்ண சரணாகதி அப்படிங்கறது ஏற்படறப்போ, பெருமாள் மேல ஈடுபாடு
எவ்ளோ ஒசந்த நிலையை எட்டிடறதுன்னு புரிஞ்சிக்கனும்னா, ஆழ்வார்களோட பாசுரங்களை சேவிக்கணும்.
நாமெல்லாம் பெருமாள் கோயில்களுக்குப் போறோம். நம்மள்ல பல பேர்
கோவில்களுக்கு போறது நல்ல பழக்கம்னு போறோம். தப்பில்லே. சரி தான். இன்னும் சில பேர் ஒரு குறிப்பிட்ட கோவில், அங்கே ஏள்ளிருக்க பெருமாள் மேல பரம அபிமானத்தோட இருப்பா. வேறெந்த கோவில் எம்பெருமானோட திருமுகமும் விஷயங்களும் அவாளுக்கு ருசிக்காது. நம்மள்ல மூணாவது வகையறா, மனசுல நெறய்ய பாரத்தோட, நம்மளோட பிரச்சனைகளுக்கு ஏதாவது தீர்வு கிடைக்காதா அப்படின்னு கோவில்கள்ள பண்ணிண்ட பிரார்த்தனைகளை நிறைவேத்தப் போறோம். இன்னும் பல பேர் இவ்ளோ திவ்யதேச எம்பெருமான்களை சேவிச்சிருக்கோம் அப்படிங்கற கணக்கை நேர்படுத்தப் போறோம். பெருமாளை அனுபவிச்சு சேவிக்கறவா பலர் பெருமாளோட திருமுக மண்டலம் திருவடிகள்னு ரசிச்சு சேவிக்கறோம்.
இவ்ளோ விதமான சேவிப்புகள் எல்லாத்தயும் தாண்டி, ஆழ்வார் சேவிக்கற
அச்சோ அழகிய வா?!.... அச்சோ அழகிய வா?!.... எவ்ளோ ரசிக்கறார். அச்சோ...
அச்சோ.. இந்த வார்த்தை பிரயோகம். 'ஐயோ' அப்படிங்கற தமிழ் வார்த்தைக்கு இணையா எடுத்துண்டா, அந்த உருக்கத்தோட அளவு இன்னும் நன்னா புரியறதே. எவ்ளோ உருகறார். அப்போ அந்தப் பெருமாளண்ட அவருக்கு மனசு எவ்ளோ லயிச்சிருக்கணும். அந்தப் பரமன் மேல இருந்த மஹாவிஷ்வாசம்... நாயகி பாவத்துலே அவனோட அழகை ஒவ்வொரு துளியும் அனுபவிக்கப் பண்றது.
சேவிச்சுண்டே மனசார நெனைச்சுக்கணுமாம் - இந்தத் திருவடிகள் தானே நம்மளை கரை சேர்க்கப் போறதுன்னு. நெனைச்சுக்கற மாத்திரத்திலே கண்ணுலே ஜலம் அருவியாய் பெருகறதே. அது தானே ஆத்மார்த்தம். நம்மள்ட்டேர்ந்து அத மட்டும் தானே அவன் எதிர்பாக்கறான். அப்பிடி நெனைச்சுக்கற மாத்திரத்திலே ஜீவாத்மாக்களாகிய நாமெல்லாம் அசக்தர்கள். கர்மபத்தர்கள். அவன் பரமாத்மன். சக்திமான். கர்மாதீதன் அப்படின்னு நம்மளோட மனசு உணர்ந்ததுக்கான அடையாளமாயிடறதே. இந்தப் பக்குவம் வந்துட்டா த்ருடம் வந்துடும். அவன் பேர்லே மாறாத விஷ்வாசம் வந்துடும். வேறெந்த தேவதாந்த்ரங்களையும் நாடிப் போமாட்டோம். இது தான் நிஜமான சரணாகதி.
ப்ரஹ்லாதனுக்கு உண்டான விஷ்வாசம். அவன் அவனோட அம்மாவின்
கர்பத்துலே வாசம் பண்ணின காலத்துலேர்ந்தே வேறாரயாவது ஸ்துதி பண்ணினானா? ஸ்ரீமன் நாராயணன் ஒருத்தன் தான் பரதேவதை அப்படின்னு த்ருடமா இருந்தானே. அதுலே அவனுக்கு கடுகளவும் சந்தேகமே வரல்ல. அந்த த்ருடம் தானே அவனை கரை சேர்த்தது. அவன் கேட்டது கேக்காததுன்னு எல்லா ஒசத்தியானதையும் அனுக்கிரஹம் பண்ணித்து. ந்ருஸிம்ஹனோட சேவை ஆப்ட்டுதே அவனுக்கு. அதுக்கு மேல வேறென்ன வேணும். ந்ருஸிம்ஹா... ந்ருஸிம்ஹா... நாடினேன்; நாடி நான் கண்டு கொண்டேன்.. உன்தன்னோடுறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது...
உன் தாள் கண்டு கொண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன்...