Professional Documents
Culture Documents
Assignment
Assignment
0 முன்னுரை
மனிதனின் கருத்தைப் புலப்படுத்தும் ஊடகமாகத் தோன்றியது மொழி. ஒரு மொழி பேசும் மனிதனின்
அறிவு அல்லது கருத்துநிலையை வளர்ச்சியைவத்துதான் அம்மொழியின் வளர்ச்சி காலப்போக்கில்
அமைந்தது. மொழியின் வளம் இலக்கியத் தோற்றத்திற்கு வித்திட்டது எனலாம். சங்க இலக்கியத்தின்
இலக்கியச் செழுமையையும், பண்பாட்டு வளத்தையும் நன்குணர்ந்த அறிஞர்கள் செவ்வியல் இலக்கியத்தின்
சிறப்பினை, மனிதவாழ்விற்கு வழிகாட்டும் வளமான சிந்தனைகளை உலகிற்கு உணர்த்தினர். செவ்விலக்கியம்
என்பது முன்மாதிரியாகவும், புனிதமான உன்னதமாகவும், நெறியாகவும், உச்சநிலை படைப்புகளாகவும்
விளங்குவதாகும். உணர்ச்சி, வடிவம், அறிவுக்கூறு, கற்பனை இவையாவும் செவ்வியல் சிறப்புகளாக
கருதப்படுகிறது. அறிவும், கற்பனையும் முதிர்ந்திடக் காப்பியம் கனியுமென்று கூறுவர். அவ்வகையில் கம்பன்
இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு சிறந்த காட்டாக அமைகிறது.
டாக்டர் சு. சிவகாமசுந்தரியின் (1988) புகழ்க் கம்பன் எனும் நூலில், தமிழ் காப்பியங்களின்
காலத்தை மூவகைப்படுத்துவர் என குறிப்பிட்டுள்ளார். இதில் கம்பராமாயணம் வடநூலாரால் இதிகாசம்
எனக் கருதப்பட்டாலும், தமிழின் பெருங்காப்பியமாக ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றியது என்பர்
இலக்கிய வரலாறு இயம்புநர். ‘கல்வியில் பெரியவன் ‘கம்பன்’ என்ற முதுமொழி காலத்தில் நின்று,
காலந்தாண்டி வளர்ந்து வரும் ஒரு பொது உண்மையாகும். வான்மீகத்தோடு கம்ப காதையை ஒப்பிட்டுக்
காணும்பொழுது கதைப் போக்கிலே பல மாற்றங்களைக் கம்பன் செய்துள்ளார். கம்பனின் இலக்கிய
நயத்தை மட்டும் எடுத்துக்காட்டாமல் மக்கள் எப்படி வாழவேண்டும், எப்படி வாழ்ந்தால் மனிதன்
மாமனிதனாக உயரலாம் என்ற வாழ்க்கை நெறிமுறைகளையும் வாழ்க்கை இலக்கணத்தையும்
இக்காப்பியத்தில் கம்பன் எடுத்து இயம்பியுள்ளார்.
கைகேயி பெருமழை பொழியும் கார்மேகம் போல விளங்கும் தன் நெடிய கூந்தலில் இருந்த
மலர்மாலைகளை, வானத்தில் உள்ள கார்மேகத்தில் உள்ள முழுநிலைவினை எடுத்துக் கீழே சொரிபவள்
போல வண்டுகள் அலரும்படி பிய்த்து எறிந்தாள். அதாவது, கூந்தலுக்குக் கார் காலத்து மேகம்
உவமையாகவும் மலர்களுக்கு முழு நிலவு உவமையாகவும் உவமையணி பயின்று வந்துள்ளது என்றால்
மிகையாகாது.
நாட்டு மக்களைத் தனது உயிரினும் மேலாக எண்ணுகின்ற அறிவாற்றல் பெற்று விளங்குகின்ற மன்னனை
உடைய மலர்தலை உலகம் அமையும் பொழுதுதான் அறிவுடைச் சமுதாயமாக விளங்கும். மிதிலையில்
இராமனும், சீதையும் கண்டு இதயம் மாறிப் புகுந்த செய்தியைக் கூறுவது பண்டைக் களவு மணநெறியைக்
காட்டுகிறது. இராவணன் சீதையை நிலத்தோடு பெயர்த்துச் சென்றதும் அச்செய்தியைப் பன் முறை சடாயு
அனுமன் உரை வாயிலாக காட்டுவதும், கற்பின் பெருமையும் பெண்ணைப் பிறர் தீண்டாப் பெற்றிமையும்
நிலை நாட்டப்படுகிறது. ஆக, இக்காப்பியத்தில் கூறப்படும் அறிவுக்கூறுகளானது இலக்கியம் படிபோறின்
வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும்.
செவ்விலக்கியத்தில் வடிவம் ஒரு கூறாக அமைகிறது. கம்பராமாயணம் பல வடிவங்களில்
அமைந்துள்ளன. அவை, உரைநடை வடிவம், உரையாடல் வடிவம், செய்யுள் வடிவம், கதை வடிவம் ஆகும்.
அதே வேளையில் சொல் நயம் கருத்து நயம் வடிவத்திற்கு மெருகு சேர்க்கிறது. ஒரு இலக்கியத்தின்
வடிவம் இலகுவாக இருப்பின் அதைப் படித்துப் புரிந்துக் கொள்ள எளிதாக இருக்கும். அவ்வகையில்
கம்பன் இயற்றப்பட்ட இக்காப்பியமும் படிப்போர் மனதில் பதியும் படி அமைந்துள்ளது. ஆக,
இவ்வனைத்து செவ்வியல் சிறப்புகளைக் கொண்டுள்ளதால் தான் கம்பராமாயணம் மிகச் சிறந்த இலக்கிய
காப்பியமாக கருதப்பட்டது.
3.1.1 விளைவு
இதன் விளைவாகக் கூனியின் சூழ்ச்சி நல்ல குணம் வாய்ந்த கைகேயின் மனத்தை மாற்றி
இராமனின் மீதுள்ள மதிப்பையும் பாசத்தையும் உடைத்துவிட்டது எனலாம். சூழ்ச்சியின் காரணமாக
கைகேயி தன் சுயபுத்தி இழந்து கொடுரமானவளாகினாள். இதன் விளைவாக தான் கைகேயி
மனமாற்றத்திற்குஆளாகி தன் கணவன் தயரதன் மனம் வருந்தும் நிலை ஏற்பட்டது. கூனியின் இச்சூழ்ச்சி
இறுதியில் இராமன் நாட்டை ஆள முடியாமல் போய்விட்ட்து அதே வேளை தான் நினைத்த்தைச்
சாதித்துவிட்டால் கூனி.
3.1.2 படிப்பினை
மானிடராய் பிறந்த நமக்கு பழிவாங்கும் எண்ணம் இருத்தல் கூடாது. ஒருவர் நமக்கு தீங்குச்
செய்தாலும் நாம் அவர்களுக்கு ஒரு போதும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கக்
கூடாது. முடிந்த மட்டில் அவர்களுக்கு நன்மையே செய்தல் வேண்டும். இல்லையேல் பிறர் செய்த தீமையை
மறந்து விட வேண்டும். இதைதான் பொய்யாமொழி புலவர் திருவள்ளுவர்,
என அழகாக வகுத்துள்ளார். ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்குப் பழத்தைத் தருகிறது.
ஆறறிவு உடைய நாம், நமக்கு துன்பம் செய்தவருக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும். இல்லையேல்
அவர்களுக்கு தீங்கு செய்தல் கூடாது.
தன் மகன் பரதன் தான் இந்நாட்டை ஆள வேண்டும் என்ற சுயநலத்துடன் இருக்கிறாள் கைகேயி.
3.2.1 விளைவு
இதன் விளைவாக தன் மீது பாசமும் நம்பிக்கையும் வைத்த கணவன் தயரதனின் மனம் வருந்தும்
நிலைக்குட்படுத்தியுள்ளாள் கைகேயி. கைகேயி தன் சுயநலத்தால் தன் கணவனை இழந்தால். பிறகு
இராமனின் மீதுள்ள பாசத்தையும் இழந்தால். தன் மனைவி இதுவரை இராமபிரான்பால் பேரன்பு காட்டி
தன்மகனாகவே எண்ணி வந்தவள், திடீரென்று இந்த வஞ்சனை எண்ணம் அவளுக்கு வந்ததை எண்ணி
மனம் வருந்தினார் தயரதன். பெண்ணுக்குரிய பண்பை அவ்விடத்தில் அவள் இழக்கிறாள். தன் கணவன்
முன் அலங்கோல நிலையில் நிற்கிறாள். இதன் விளைவாக தன் கணவன் தயரதன் மன வருத்தம்
கொண்டார். தன் உயிரான மகன் இராமனும் தன் நாட்டை விட்டு காட்டுக்குச் சொல்லும் நிலமை
ஏற்பட்டுள்ளது.
3.2.2 படிப்பினை
மற்றவறின் சொல் கேட்டு நடப்பினும் சற்று நாம் சிந்தித்து செயல்படல் வேண்டும். தன்நலத்துடன்
இருக்காது பொது நலத்துடனும் வாழ கற்று கொள்ள வேண்டும் என முன்னவர் பட்டாபிராமன் (2007)
கூறியுள்ளார். ஒரு சிறந்த ஒழுக்கமிக்க ஒற்றுமையான குடும்பத்தை உருவாக்குவதற்குக் குடும்ப தலைவனும்
தலைவியும் சுயநலத்தோடு இன்றி விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் நல்லதொருக் குடும்பம் பல்கலைக்கழகம் என்பது கேற்ப செழுமையான ஒரு
குடும்பத்தை உருவாக்க முடியும். இது ஒரு சிறந்த படிப்பினையாக கருதப்படுகிறது.
அதோடு, கைகேயி அலங்கோல நிலையில் தயரதனிடம் வரம் கேட்க வந்த போது ‘உன்மனம்
விரும்பியதை நான் நிச்சயம் செய்வேன் அதோடு எக்காரணம் கொண்டும் நீ விரும்பியதைக் கொடுக்காமல்
இருக்க மாட்டேன்; இது நின்மைந்தனாகிய மேலான இராமபிரானின் மீது ஆணை’ என கைகேயிடம்
கூறினான். சான்றாக,
3.3.1 விளைவு
இதன் விளைவாக தயரதன் தன் மகன் இராமன் காட்டுக்குப் போகும் சூழல் ஏற்பட்டது. அச்சமயம்
தயரதன் ஒரு வினாடி சிந்தித்து வாக்குறுதி தந்திருந்தால் இதுபோன்ற விளைவுகள் ஏற்பட்டிருக்காது.
இதனால், கைகேயி இதை பயன்படுத்தி காரியத்தைச் சாதித்துக் கொண்டாள். நாட்டு மக்கலையே கவலை
வெள்ளத்தில் அடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளன. அதோடு மக்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்
உடைக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
3.3.2 படிப்பினை
இருப்பினும், தன் தாயின் சொல் கேட்ட இராமன், மக்களின் மனக் குமுறலைக் கேட்க்கவில்லை.
தன் தம்பி பரதன் அரசாளுவதை மக்கள் விரும்பவில்லை. இதை அறிந்தும் இராமன் சிறிதும்
பொருட்ப்படுத்தாது தன் தாயின் கட்டளைக்குப் பணிந்து காடுக்குச் செல்வதை ஏற்றுக் கொண்டான்.
காட்டுக்குப் போவது அந்நாட்டு மக்களுக்கு விருப்பம் இல்லை என்று அவனுக்குத் தெரிந்தும் செல்ல
சம்மதித்தான் இராமன். நற்குணமும் பண்பும் மிக்க இராமன் இந்நாட்டை ஆள வேண்டும் என்ற
மக்களின் வேண்டுதலை அவன் மதிக்கவில்லை.
3.4.1 விளைவு
3.4.2 படிப்பினை
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் படிப்பினையானது, நாம் ஒரு முடிவை எடுக்கும் போது
தீர சிந்தித்தப் பின்னரே செயல்ப்பட வேண்டும். ஒரு தரப்பில் இருந்து சரி என்று நினைத்துவிட்டு
முடிவை எடுத்தல் கூடாது. அதுமட்டுமின்றி, மற்றவரின் மனம் புன்படும்படி நடந்துக் கொள்ளக்கூடாது.
நம் மேல் உயர்ந்த மதிப்பும் மரியாதையும் பண்பும் பாசமும் வைத்திருப்பவரிடம் நாமும் சற்று
அக்கறைக் கொள்ள வேண்டும்.
4.0 முடிவுரை