Professional Documents
Culture Documents
கேள்வி 1
கேள்வி 1
தமிழ்ப் பள்ளி
தமிழ்பப் ள்ளி எனும் சொல் பிரித்தெழுதக் கூடாது. தமிழ்ப்பள்ளி எனும் சொல் இருபெயரொட்டுப்
பண்புத்தொகை, அதாவது பொதுப்பெயரும் சிறப்புப் பெயரும் ஒட்டி வருவது ஆகும். தமிழ் என்பது
சிறப்புப்பெயர், பள்ளி என்பது பொதுப்பெயர். ஆகையால் தமிழ்பப் ள்ளி என்று சேர்த்து எழுத
வேண்டும். அப்படி பிரித்து எழுதினால், இது தவறான கூற்றாகும்.
இரக்கம் மனம்
கவிதை எழுதினான்
மரம் ஏறினான்
மரம் ஏறினான் என்பதும் மேற்கண்ட விதிக்கு பொருத்த அமைகின்றது. இதில் இல் உருபு மட்டுமே
மறைந்த தொகையாகும். ஆகையால் மரத்தில் ஏறினான் என்று எழுத வேண்டும்.
இரவு பகல்
இரவு பகல் என்று பிரித்து எழுதுவது தவறாகும். காரணம், இதில் உம்மைத்தொகை மறைத்துக்
கிடைப்பதால், இத்தொடரை இரவுபகல் என்று சேர்த்துதான் எழுத வேண்டும். அப்படியே பிரித்தாலும்
இரவும் பகலும் என்றுதான் எழுத வேண்டும்.
வீடுச்சென்றார்கள்
அலை கடல்
அலை கடல் என்று எழுதுவது பிழையாகும். காரணம் அலை என்பது வினையடிச்சொல்லாகும். கடல்
என்பது பெயர்ச்சொல்லாகும். ஆகையால் வினைத்தொகையில் சேர்த்துதான் எழுத வேண்டும்.
அல்லி பூ
அல்லி பூ என்பதனை அல்லிப்பூ என்றுதான் எழுத வேண்டும். ‘ப்’ என்பது கண்டிபாக இருத்தல்
வேண்டும். காரணம் அல்லி என்பது சிறப்பு பெயர்: பூ என்பது பொதுப்பெயராகும். ஆகையால்
இவைகள் இணைந்து வரும்போது சொற்பிரிப்பு கூடாது.
நகை பெட்டி
நகை பெட்டி என்பதனை பிரித்து எழுதினால் பொருள் வேறுபடும். இவை நகைப்பெட்டி என்றுதான்
எழுத வேண்டும். காரணம் ‘நகையை வைக்கும் பெட்டி’ இதில் ஐ உருபும் வைக்கும் என்ற வினையும்
மறைந்திருப்பதால், கண்டிப்பாக பிரித்து எழுதக் கூடாது.