Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 3

கேள்வி 1 : நாளிதழ்களில் காணப்படும் சொற்பிரிப்புத் பிழைகளை அடையாளங்கண்டு குறிப்பிட்டு

அப்பிழைகளைக் களைவதற்கான விதிகளை இலக்கண அடிப்படையின் 750 சொற்களில்


பகுத்தாய்க.

இன்றைய காலகட்டத்தில் இன்னும் தமிழ் நாளிதழில் சொற்பிரிப்பு பிழைகளை இருந்த வண்ணம்


உள்ளன. இதற்கு மூலக்காரணமாக அமைவது எழுதிய கட்டுரைகள் மற்றும் படைப்புகளைத்
திருத்துவதும் கிடையாது. அப்படியும் முறையாகத் திருத்தினாலும் கவனக்குறைவின்
காரணத்தினால் இப்பிழைகள் எல்லாம் ஏற்படுகின்றது. இவற்றுள் பிழைகள் யாவும் பின்வருமாறு :

தமிழ்ப் பள்ளி

தமிழ்பப் ள்ளி எனும் சொல் பிரித்தெழுதக் கூடாது. தமிழ்ப்பள்ளி எனும் சொல் இருபெயரொட்டுப்
பண்புத்தொகை, அதாவது பொதுப்பெயரும் சிறப்புப் பெயரும் ஒட்டி வருவது ஆகும். தமிழ் என்பது
சிறப்புப்பெயர், பள்ளி என்பது பொதுப்பெயர். ஆகையால் தமிழ்பப் ள்ளி என்று சேர்த்து எழுத
வேண்டும். அப்படி பிரித்து எழுதினால், இது தவறான கூற்றாகும்.

இரக்கம் மனம்

இரக்கம் மனம் என்று எழுதுவது தவறாகும். இரக்க மனம் என்பது பண்புத்தொகையைக்


குறிக்கின்றது. இத்தொடர் பொதுப்பண்புத் தொகையாக இருக்கின்றது. ஆகையால், இதில்
மறைந்திருக்கும் ஆன, ஆகிய சொற்கள் போன்ற சொற்கள் பொருளின் தன்மையும் குணத்தையும்
குறிக்கின்றது. இரக்கம் என்பது குணத்தை குறிக்கின்றது. ஆகையால் எழுதும் போழுது இரக்க
மனம் என்று எழுதுவது சரியாகும்.
கை கால்

நாளிதழில் கை கால் என்று பிரித்து எழுதியிருப்பது


தவறாகும். காரணம் உம்மைத்தொகையின் உம் என்ற இடைச்சொல் மறைந்து வருவதால் பிரித்து
எழுத வேண்டிய அவசியம் இல்லை. அப்படி கை கால் பிரிக்கப்பட்டால், கையும் காலும் என்று பிரிக்க
வேண்டும்.

கவிதை எழுதினான்

கவிதை எழுதினான் என்பது உருபு மட்டும் மறைந்த தொகையாகும். இதில் ( கவிதை + ஐ +


எழுதினான்) ஆகும். இதில் இரண்டாம் வேற்றுமை உருபு மட்டும் மறைந்து கிடைக்கும்.

மரம் ஏறினான்

மரம் ஏறினான் என்பதும் மேற்கண்ட விதிக்கு பொருத்த அமைகின்றது. இதில் இல் உருபு மட்டுமே
மறைந்த தொகையாகும். ஆகையால் மரத்தில் ஏறினான் என்று எழுத வேண்டும்.

இரவு பகல்

இரவு பகல் என்று பிரித்து எழுதுவது தவறாகும். காரணம், இதில் உம்மைத்தொகை மறைத்துக்
கிடைப்பதால், இத்தொடரை இரவுபகல் என்று சேர்த்துதான் எழுத வேண்டும். அப்படியே பிரித்தாலும்
இரவும் பகலும் என்றுதான் எழுத வேண்டும்.
வீடுச்சென்றார்கள்

வீடுச்சென்றார்கள் என்பது வீட்டிற்குச் சென்றார்கள் என்றுதான் எழுத வேண்டும். இவைகள் கு


என்ற உருபு மறைந்துக் கிடப்பதால் சேர்த்து எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆகையால்,
வீட்டிற்குச் சென்றார்கள் என்பதுதான் மிகவும் சரியான விடையாகும்.

அலை கடல்

அலை கடல் என்று எழுதுவது பிழையாகும். காரணம் அலை என்பது வினையடிச்சொல்லாகும். கடல்
என்பது பெயர்ச்சொல்லாகும். ஆகையால் வினைத்தொகையில் சேர்த்துதான் எழுத வேண்டும்.

அல்லி பூ

அல்லி பூ என்பதனை அல்லிப்பூ என்றுதான் எழுத வேண்டும். ‘ப்’ என்பது கண்டிபாக இருத்தல்
வேண்டும். காரணம் அல்லி என்பது சிறப்பு பெயர்: பூ என்பது பொதுப்பெயராகும். ஆகையால்
இவைகள் இணைந்து வரும்போது சொற்பிரிப்பு கூடாது.

நகை பெட்டி

நகை பெட்டி என்பதனை பிரித்து எழுதினால் பொருள் வேறுபடும். இவை நகைப்பெட்டி என்றுதான்
எழுத வேண்டும். காரணம் ‘நகையை வைக்கும் பெட்டி’ இதில் ஐ உருபும் வைக்கும் என்ற வினையும்
மறைந்திருப்பதால், கண்டிப்பாக பிரித்து எழுதக் கூடாது.

You might also like