Professional Documents
Culture Documents
Sasikumar
Sasikumar
Sasikumar
5 வாலிபர்களுக்கு நடுவில் தாவணி பாவாடை அணிந்த ஒரு பெண் இருக்கும் பர்ஸ்ட் லுக்
வெளியான போது அந்த திரைப்படத்தின் மீது சிறு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது உண்மைதான்.
ஆனால் அந்த வாலிபர்கள் இடுகாட்டில் சாராயம் குடித்துவிட்டு ஆட்டம் போடுவது, கைகளில்
கத்தியை சுழற்றிக் கொண்டு அலப்பறை கொடுப்பதும் போன்ற ஒரு பாடல் வெளியான போது, இது
காமெடி படம் என்றே அனைவரும் நினைத்திருக்கக் கூடும். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, அது
தமிழ் சினிமாவின் தவிர்க்கவியலாத தலைசிறந்த படைப்பாக மாறும் என்று அந்த படத்தின்
இயக்குநரை தவிர வேறு யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.
சிறு பட்ஜெட் படங்களுகே உரிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 2008 ம் ஆண்டு ஜூலை 4 ம்
தேதி, 'சுப்ரமணியபுரம்' வெளியானது. ஆனால் அப்படம் ஏற்படுத்திய அதிர்வலை, தமிழ்
திரையுலகில் எக்காலத்துக்கும் நிலைத்திருக்குமாறு செய்துவிட்டது. ஹாலிவுட்டில் மட்டுமே
எடுக்கப்பட்டு வந்த ‘கல்ட் கிளாசிக்’ வகையை, சுப்ரமணியபுரம் படமே தமிழ் சினிமாவிற்கு
அறிமுகப்படுத்தியது. தனது முதல் படைப்பிலேயே இந்த பெருமைக்கு சொந்தக்காரரான சசிகுமார்,
இப்படத்தின் மூலம் வருங்கால தமிழ் இயக்குநர்களுக்கும் ஒரு புதிய வாசலை திறந்துவிட்டார் என்றால் மிகையல்ல.
இப்படத்தின் முதல் சீன், கொட்டும் மழையில் துரோகத்தின் கொடூரத்தை விவரிக்கத் தொடங்கும். இறுதி
சீன், விசுவாசத்தின் அடர்த்தியை விளக்குவதாக முடியும். ஒரு சிற்பி தான் செதுக்கும்
சிலையில், ஒரு மில்லி கிராம் கல்லை கூட தேவையில்லாமல் விட்டுவைக்க மாட்டான். அது போல ஒவ்வொரு
சீனையும் சசிகுமார் காட்சிப்படுத்திய விதத்தில் அவரது உழைப்பும் நேர்த்தியும்
வெளிப்படையாக தெரிந்தது.
சண்டை காட்சிகளில் சரளைக் கற்களை எறிந்து கொள்வது, சோடா பாட்டில்களை உடைத்து அடிப்பது,
பாத்திரங்களை எடுத்து சாத்துவது என இது படம் என்பதையும் தாண்டி, நமது ஊரில் நடக்கும்
சண்டையை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்த அனுபவத்தை தந்துவிடுகிறார் இயக்குநர்.
நட்பு, காதல், துரோகம் ஆகியவற்றை களமாக கொண்ட படங்கள் தமிழ் சினிமாவிற்கு ஒன்றும்
புதிதில்லை. ஆனால் அழகர்-பரமனின் நட்பும் விசுவாசமும், துளசி, கனகு, காசி ஆகியோரது
துரோகமும் ரொம்பவே புதியது.
பழக்கத்துக்காக கொலைகாரர்களாக மாறும் நண்பர்கள் இருவர், உயிருக்கு உயிராய் பழகிய காதலி
மூலமாகவும் நண்பன் மூலமாகவும் கொடூரமாக கொலை செய்யப்படுவது துரோகத்தின் உச்ச கட்டம்.
எந்தவொரு சிறந்த கலை படைப்பும் மற்றொரு சிறந்த படைப்புக்கு வழிவகுக்கும். அந்த வகையில்
`சுப்ரமணியபுரம் படத்தை இந்தியில் உருவாக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தால்
பெருமை’என்றும், ‘எனது கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்துக்கு அது தான் இன்ஸ்பிரேஷன்’என்றும் பாலிவுட்
இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியது சுப்ரமணியபுரம் ஆகச்சிறந்த படைப்பு என்பதற்கு மற்றுமொரு சாட்சி.
2
பரட்டை தலை, மழிக்கப்படாத தாடி, பெல் பாட்டம் பேன்ட், நீளமான காலர் வைத்த சட்டை
அணிந்த 5 வாலிபர்களுக்கு நடுவில் தாவணி பாவாடை அணிந்த ஒரு பெண். அடுத்த சீனில் அந்த
வாலிபர்கள் இடுகாட்டில் சாராயம் குடித்துவிட்டு ஆட்டம் போடுவது, கத்தியை சுழற்றி
அலப்பறை செய்வது போன்ற அப்படத்தின் ட்ரைய்லரை பார்த்தவர்கள் இது காமெடி படம் என்றே நினைத்திருக்
கூடும். ஆனால் அது தமிழ் சினிமாவின் தவிர்க்கவியலாத, தலைசிறந்த படைப்பாக மாறும் என்று
அப்படத்தின் இயக்குநரை தவிர வேறு யாரும் நினைத்து பார்க்கவில்லை.
(( breathe - சுப்ரமணியபுரம் ட்ரைலர்))
சிறு பட்ஜெட் படங்களுகே உரிய எந்த வரவேற்பும் இல்லாமல் 2008 ம் ஆண்டு ஜூலை 4 ம் தேதி,
'சுப்ரமணியபுரம்' வெளியானது. ஆனால் அப்படம் ஏற்படுத்திய அதிர்வலை, தமிழ் திரையுலகில்
எக்காலத்துக்கும் நிலைத்திருக்குமாறு செய்துவிட்டது.
(( breathe - முதல் ஷோ - ரசிகர்களின் கருத்து ))
ஹாலிவுட்டில் மட்டுமே எடுக்கப்பட்டு வந்த ‘கல்ட் கிளாசிக்’ வகையை, சுப்ரமணியபுரம் படமே
தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது. முதல் படைப்பிலேயே இந்த பெருமையை பெற்ற
சசிகுமார், இப்படத்தின் மூலம் வருங்கால தமிழ் இயக்குநர்களுக்கும் ஒரு புதிய வாசலையே திறந்துவிட்டார்
என்றால் மிகையல்ல.
இப்படத்தின் முதல் சீன், கொட்டும் மழையில் துரோகத்தின் கொடூரத்தை விவரிக்க தொடங்கும். இறுதி
சீன், விசுவாசத்தின் அடர்த்தியை விளக்குவதாக முடியும். ஒரு சிற்பி தான் செதுக்கும்
சிலையில், ஒரு மில்லி கிராம் கல்லை கூட தேவையில்லாமல் விட்டுவைக்க மாட்டான். அது போல இப்படத்தின்
ஒவ்வொரு சீனையும் சசி செதுக்கி இருப்பார். அதில் அவரது உழைப்பும் நேர்த்தியும்
வெளிப்படையாக தெரியும். அது தான் இந்த படைப்பின் தனித்தன்மை.