கண்கள் மூடியே வாழ்த்து பாடு கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு இன்னும் வாழனும் நூறு ஆண்டு எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்... கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு ஓ ஓ ஓஓஒ.....
பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிவிடுவோம் ஓஓஒ ஓஒ பரவசம் இந்த பரவசம் என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே
கடவுள் தந்த..
நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்தது ் பொழியாது கோடையில் இன்று இலையுதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால் குயில்களின் பாட்டு காற்றில் வரும் முடிவதும் பின்பு தொடர்வதும் இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி கடவுள் தந்த அழகிய வாழ்வு..