Professional Documents
Culture Documents
பசுமை வீடு காட்டும் பாதை
பசுமை வீடு காட்டும் பாதை
பசுமை வீடு காட்டும் பாதை
சராசரி வீடடி
் ன் இலக்கணங்களுக்கு வெளியில் நிற்கிறது ‘விஷ்வ
ஷ்யாமளம்’
மடிப்பாக்கத்தில் அந்த வீடடை
் க் கடப்பவர்கள் மலைத்து நிற்கிறார்கள். மொத்தம் 100
ஜன்னல்களுடன் காற்றோட்டமும் வெளிச்சமும் நிறைந்துவழியும் அந்த வீட்டின் பெயர் ‘விஷ்வ
ஷ்யாமளம்’. சூழலியல் ப்ளாட்டினம் தர வரிசை பரிசு பெற்ற அந்தப் பசுமை வீடடை
் உருவாக்கியவர்
கிருஷ்ண மோகன் ராவ்.
சிறப்புகள் என்னென்ன?
மூன்று தளங்கள் கொண்ட ‘விஷ்வ ஷ்யாமளம்’ வீட்டில், சுவருக்காக அடுக்கப்படும் செங்கற்களின்
நடுவே சிமெண்ட் பூச்சுப் பூசாமல் வெற்றிடத்தை உருவாக்கி அங்கு காற்று நிரப்பப்பட்டிருக்கிறது.
அதனால், வெப்பம் சுவர் வழியே உள்ளே நுழையும் முன் வெற்றிடத்தில் நிரம்பிவிடுவதால் வீட்டினுள்
அதிக வெப்பம் இருப்பதில்லை. அனைத்து இடங்களிலும் இரு ஜன்னல்கள் எதிரெதிரே
அமைந்துதிருப்பதுபோலவே அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜன்னலை ஒட்டிய ‘சன் ஷேடு’கள்
இரண்டு அடி அதிகம் நீளமாக அமைக்கப்பட்டிருப்பதால், வீட்டில் வெளிச்சம் அதிகம், வெப்பம்
குறைவு!
மழை நீர் சேமிப்பைக் கொண்டே ஒரு வீடு தன்னிறைவு அடைய முடியும் என்பதைச்
சாத்தியமாக்கியுள்ளார். 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீரத ் ்தேக்கத் தொட்டி இருந்தாலும்
அதில் பாதி அளவு நீரிலேயே இவரது குடும்பத்தினரின் நீரத ் ் தேவை நிறைவு பெற்றுவிடுகிறது.
மழைக்காலத்தில் சேமிக்கப்படும் நீரில் பெருமளவு நிலத்தடி நீராக மாறிவிடுகிறது. ஒரு சராசரி
மனிதரின் ஒரு நாளைய நீரத ் ் தேவை என்பது 135 லிட்டர். ஒரு துளி நீரைக்கூட வீணாக்காமல்,
அதை மறுசுழற்சிசெய்து தேவைக்கேற்பப் பயன்படுத்தும் வகையில் இந்த வீடடை ்
வடிவமைத்திருக்கிறார் கிருஷ்ண மோகன். வீட்டில் கழிவுநீராக எதுவும் வெளியேறுவதில்லை.
கூழாங்கல், மணல் வழியாக மூன்று முறை சுத்திகரிக்கப்பட்டு அருந்துவதற்கு சுத்தமான,
சுவையான நீர் கிடைக்கிறது. இத்தனை அம்சங்கள் கொண்ட வீட்டை ஓராண்டுக்குள்
கட்டிமுடித்திருக்கிறார்.
தொடர்புக்கு: lathaarun1989@gmail.com