வேறுபடுத்துவது , பிரிப்பது . (நண்பர்கள் , கணவன் மனைவி , தாய் குழந்தையைப் பிரிப்பது போன்ற பாதகமான செயல்கள் நம்மை இம்மையிலும் , மறுமையிலும் தீராத பாபம் தரும்.) நம்முடைய அறியாமை, நோய், மற்றவர்களுக்கு உள்ள நோய் முதலியவைகளை வேறுபடுத்தவும், ஊரை மிரட்டும் கொள்ளையர்கள் போன்ற கூட்டத்தினரை பிரிக்கவும் பயன்படுத்தலாம். பேதனத்திற்கு உபயோகிக்கும் எட்டுவிதமான மூலிகைகள். 1. வட்டதுத்தி, 2. செம்பசலை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி, 7. சங்கன் வேர், 8. ஆகாயதாமரை என்பதாகும்.
இதில் பலவகையான பேதனங்கள் உண்டு .
நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க – வட்டதுத்தியும் , மனிதனின் தீய எண்ணத்தை பேதிக்க – செம் பசலையும், பூத, பிசாசுகளை பேதிக்க – மாவிலங்கு, பாதிரியும், துர்தேவதைகளை பேதிக்க – கோழி அவரைக்கொடியும், எதிரிகளை பேதிக்க – சீந்தில்கொடியும், பெண்களை பேதிக்க – சங்கன் வேரும், வியாதிகளை பேதிக்க – ஆகாயத் தாமரையும் பேதன மூலிகை எடுக்கும் முறை பேதன மூலிகைகள் எடுக்கும் முன் முறைபடி சாப நிவர்தத ் ி செய்து எடுத்து மீண்டும் உயிர் கொடுக்க வேண்டிய மூலிகைகளுக்கு உயிர் கொடுத்தும், வேரா இருந்தால் வடக்கே செல்லும் வேரை உரிய காலத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.