வேற்று உருவத்தோடு; வந்து தோன்றினர் ஆம் என்று ஒளி வச; ீ - (உலகங்களைப் படைக்கக்) கருவியான பிரமன் வேள்வியிலே; தோற்றுவித்ததும்; போரில் சுட்டிய; தேவேந்திரன் அளித்த; பொற்கவசமும் அணிந்தான். 2. மேகக் கூட்டத்தின் உறையும்; மேலான இடிகள் எல்லாவற்றையும் வாரி; செவ்விய முறையில் தொகுத்தமைத்தது போன்ற; வாளையும் உடையையும், மணியையும் கட்டி; குகையில் உறங்கும் வலிய சிங்கக் கூட்டம்; முழங்குவதைப் போன்றன; - மிகுகின்ற மின்னல் போன்ற ஒளியுடைய பொன்மலர் போன்ற சதங்கைகளையும் அணிந்து. 3. இடி இடித்த போழுது; பாம்பு அடைந்த கலக்கம்; - விண் உலகிலும் பெரிய பூமியிலும்; எந்த உலகத்திலும்; யாவரும் அடையுமாறு ஒலிக்கும்; பொற்கழல்களை விளங்கும் வகையில் அணிந்து; சரிந்த உடையில் சுடர் வழ்வதால் ீ உண்டாகும் அழகு; மேலும் விளங்க அணிந்து. 4. இருபது கைகளில்; பெரிய தலையையுடைய அனந்தனின்; நஞ்சு தங்கிய கழுத்தில் அரிய கறை கிடந்தது போல; விளங்குகின்ற; அழகுமிக்க நீண்ட தோற்கட்டும்; விரற்புட்டிலும் கட்டி; நீண்ட நாவுடைய பாம்பு போல; கங்கணத்தை அணிந்து; 5. பாற்கடலில் அமுதத்தோடு பிறந்தனவும்; சூரியன் குதிரைகளின் மரபில் தோன்றியவும்; பரவிய நீர் எங்கும் பரவியுள்ள வடவாமுகாக்னி வயிற்றிலே; கொடிய காற்றுக் கடவுளாம் வாயு தேவனுக்குத் தோன்றியனவுமாகிய; ஆயிரம் குதிரைகள் அழகாக கட்டப்பட்டது. 6. நிலத்தில் செல்வது போலவே; வானிலே செல்வது; பரப்பமைந்த நீரிலே செல்வது; தீயிலும் செல்வது; - தன்னிகரின்றி போரிலே செல்வது; பொன்னால் அமைந்த வானில்; பிரமன் ஊரிலும் செல்வது; ஓரிமை நொடிக்குள் எந்த உலகத்திலும் செல்வது. 7. அப்படிப்பட்ட தேரை; போற்றித் துதிப்பதை முறையாகச் செய்து; இவ்வளவு பேர் என்ற ஒரு கணக்கு இல்லாத; வேதியவர் எவர்க்கும்; அளிக்க வேண்டியவாறு நல்ல பொருள் முதலியவற்றை அளப்பதற்கு முடியாத; செல்வங்களை; நினைக்க முடியாதவாறு; மிக்க ஒப்பற்ற பெரிய செல்வத்தை அளிப்பதாக; அரிய கடமையைச் செய்து நிறைவேற்றினான். 8. (அந்தத் தேரை இராவணன்) வணங்கி ஏறினான்; இந்திரன் முதலான தேவர்களும் அறிவு சோர்ந்து; மயங்கினராய் திகைப்படைந்தனர்; வேறாகச் செய்கின்ற செயல் இல்லாமையால் - உடலிலுள்ள ஐந்து புலன்களும்; - அடங்கப் பெற்ற முனிவர்களும்; உலகங்கள் எல்லாம் வருந்த பயப்பட்டனர். 9. கடல்கள் எல்லாம்; கல்வடிவான மலைக் கூட்டங்களும்; மேகமும்; வலிமை மிகுந்த மேருமலையும்; வானத்தில் செல்வனவற்றை ஒத்திருக்க; வலிமை கொண்ட அரக்கர் படையும்; இராவணனும்; தேரும் வந்து ஒலிக்கும்; - கடல் போல ஒலிக்கின்ற பேரொலி அது என்பதையும் அறிந்தார்.