Professional Documents
Culture Documents
உப்பைக் காசு கொடுத்து வாங்கு
உப்பைக் காசு கொடுத்து வாங்கு
சு.பொ.அகத்தியலிங்கம்
கவிதை மட்டுமல்ல கவிதை நடை யில் சில குட்டிக் கதைகளும் இடம் பெற்
றுள்ளன. அவை வெறும் கதையல்ல, மானுடத்தின் மனச்சாட்சியை சவுக்கால்
அடித்து தட்டியெழுப்பும் . எடுத்துக்காட் டாக சா அதியின் பாரசீகக் குட்டிக்கதை
ஒன்றை பார்ப்போம். தலைப்பு: அடிச்சுவட் டில் “ வேட்டையாடிய
மிருகங்களையும், பறவைகளையும் / சமைக்க உப்பு தேவைப்பட்டது. / பக்கத்து
கிராமத் திற்குச் சென்று / உப்பு வாங்கி வரச் சொன்னான் அரசன். / உப்பு வாங்கச்
செல்பவனிடம் / அரசன் முன்னெச்சரிக் கையுடன் சொன்னான்:/ ‘உப்பிற்கான
காசைக் கொடுத்து விடு. / இல்லை, அதுவே பழக்கமாகி விடும்.’ / அரச னுடன்
இருந்தவர்கள் கேட்டார்கள்: / ‘இது அற்பமான விஷயம் / இதற்கு இவ் வளவு
எச்சரிக்கை தேவையா?’ / அரசன் சொன்னான் / ‘உலகில் கொடுமைகள் சிறிய
அளவிலேயே / இருந்தன துவக் கத்தில். / பின்னால் வந்த ஒவ்வொருவ ரும்
தான்/ அவற்றை இந்த அளவிற்கு / வளர்த்து விட்டதற்குப் பொறுப்பாவர். /
அரசன் இலவசமாக ஒரு ஆப்பிளை எடுத்தால், / அவனது ஆட்கள் / ஒரு மரத்
தையே சாய்த்து விடுவார்கள்... ” சரிதானே !
கவிதைகள் என்பது , “ என் கவிதை கள்... / எனது உயிர்; எனது கண்ண ீர்; / எனது
ரத்தம்; எனது மூச்சு; / எனது நம்பிக்கைகள்; எனது அச்சங்கள்.” - இது
ஜப்பானியர்களுக்கு மட்டுமானதா? தமிழர்களுக்கும் தானே பொருந்தும்.