Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

மக்தாப் சுல்தான் அபுபாக்கார் பள்ளிக் கிரிக்கெட் கழகப் போட்டி

மக்தாப் சுல்தான்
` அபுபாக்கார் பள்ளியில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இந்தப்
போட்டியில் கிரிக்கெட் கழகத்தால் நடத்தப்பட்டது.இப்போட்டி ஜூன் 16, 8
மணியிலிருந்து மாலை 4 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டி இரு
பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அவை படிவம் 1 இலிருந்து படிவம் 3 வரை மற்றும் படிவம்
நான்கில் இருந்து படிவம் ஆறு வரை ஆகும. கிரிக்கெட் கழகத்தில் உள்ள அனைவரும்
இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் அனைவருக்கும் விதிமுறைகள் விளக்கப்பட்டது. பிறகு திடல்


விளையாடுவதற்காக தயார் செய்யப்பட்டது. மாணவர்களுக்கு காலை உணவும்
வழங்கப்பட்டது. போட்டி ஆரம்பிப்பதற்கு முன் தலைமையாசிரியர் உரையாற்றினார். அவர்
தமது உரையில் கிரிக்கெட் போட்டி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த
நடத்தப்படுவதாகக் கூறினார் .

பள்ளியின் முதல்வர் திரு அமுதன் அண்ணாமலை திறப்புரை ஆற்றினார். அவர் தமது


உரையில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளைத்
தெரிவித்தார். தொடர்ந்து, போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து இரு குழுக்களாக போட்டிகள் ஆரம்பித்தது. மாணவர்கள் அனைவரும் தங்களின்


ஆற்றலை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றிப் பெற அனைவரும் கடுமையாக
உழைத்தனர். இறுதியில் வெற்றி பெற்று இரு குழுக்கள் இறுதி ஆட்டத்திற்கு வந்தனர்.
அந்தக் கடுமையான போட்டியில் சூப்பர் கிங்ஸ் என்ற குழு வெற்றி பெற்றது. பிறகு
அனைவருக்கும் அவர்களின் நிலைக்கு ஏற்ப பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இறுதியாக, மாலை 4 மணிக்குப் இப்போட்டி இனிதே நிறைவடைந்தது. அனைவரும் மன
நிறைவோடு விடைபெற்றனர்.

அறிக்கை தயாரித்தவர், 18 ஜூலை 2021


மனோஜ்
செயலாளர்,
கிரிக்கெட் கழகம்,
மக்தாப் சுல்தான் அபுபாக்கார், ஜோகூர்.

You might also like