Professional Documents
Culture Documents
முன்னுரை
முன்னுரை
0 முன்னுரை
தமிழ் மொழியில் உயிர் எழுத்துகள் மெய் எழுத்துகள் மட்டும் அல்லாமல் வேறு சில வகை
எழுத்துகளும் உள்ளன. இவை முதல் எழுத்துகளின் அடிப்படையில், அவற்றின் கூட்டாக
அமைகின்றன. அதாவது முதல் எழுத்துகளைச் சார்ந்து (துணைஎழுத்தாக) நிற்கின்றன.
எனவே சார்பு எழுத்துகள் என அழைக்கப் படுகின்றன. உயிர்மெய், ஆய்தம் முதலிய
எழுத்துகள் சார்பு எழுத்துகள் ஆகும்.
"சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல் எனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்று" என்று
தொல்காப்பியர் இதனை விளக்குகிறார். (பிறப்பியல்)
……………………………………………………………………
“அவைதாம்
குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன” (தொல்.2)
………………………………………………………..
என்ற நூற்பாவில்
உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறு
க்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என பத்து வகையான
சார்பெழுத்துக்களை நன்னூலார் கூறுகின்றார். மேலும்,
உயிர்மெய் எழுத்து
உயிமெய் எழுத்து
ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய்
எழுத்து ஆகும்.
எ.கா:
'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய்
பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய்
எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
எ.கா:
க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ
ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ ,சௌ
மகரக்குறுக்கம்
ஔகாரக் குறுக்கம்
ஐகாரக் குறுக்கம்
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து
(எ.கா கு, சு, டு, து) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய்
எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ, ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை
அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.
இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல
எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும்
உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும்.
குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
குற்றியலுகரத்தின் வகைகள்
குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை
1. நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
4. வன்றொடர்க் குற்றியலுகரம்
5. மென்றொடர்க் குற்றியலுகரம்
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
இதில் நெடில் எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
எ.டு:-
'நா'கு, 'கா'சு, 'மா'டு, 'மா'து, 'பே'று, த'ரா'சு
மா | டு +அல்ல = மாடல்ல
ம் + ஆ | ட் + உ + 'அ' ல்ல = மா ட் + அ ல்ல ( நிலைமொழியின் உகரம் திரிந்தது)
'மாடு' என்ற சொல் 'அல்ல' என்ற சொல்லுடன் இணைந்து நெடில் தொடர் குற்றியலுகரம்
ஆயிற்று. அதாவது டு என்ற உகர எழுத்தானது 'மா' என்ற நெடிலுக்கு அடுத்து வந்ததாலும்
வரும் மொழியின் முதல் எழுத்தான 'அ' உடன் நிலைமொழியின் ஈற்றிலுள்ள உகரம்
திரிந்து ட் + உ= டு ஆனது ட் + அ= ட என்று குறுகியதால் நெடில் தொடர் குற்றியலுகரம்
ஆனது. அதாவது நெடிலைத்தொடர்ந்த குற்றியலுகரம்.
இங்கே நிலைமொழியில் '·' என்ற ஆய்த எழுத்தை அடுத்து 'து' வந்ததாலும் வருமொழி 'இ'
உடன் இணைந்ததால் உகரம் போய் அ·தில்லை என்று ஆனதாலும் ஆய்தத் தொடர்க்
குற்றியலுகரம் ஆனது.
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
இதில் உயிரெழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
எ.டு: வி'ற'கு, அ'ர'சு, கு'ற'டு, அ'ரி'து, ம'ர'பு, க'ளி'று, மி'ள'கு, வ'ர'கு, அ'ட'கு போன்றவை.
அரசு + ஆட்சி = அரசாட்சி
நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து ர்+அ என்பதில் 'அ' என்னும் உயிரெழுத்தை அடுத்து
'சு' என்ற உகரம் வந்ததால் உயிர்த் தொடர் உகரம் ஆயிற்று. இது 'ஆட்சி' எனும் வரும்
மொழியின் முதலெழுத்து 'ஆ' உடன் இணைந்து நிலைமொழியின் உகரத்தைத் திரித்து
அரசாட்சி என்று புணர்ந்ததால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாயிற்று.
வன்றொடர்க் குற்றியலுகரம்
இதில் வல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
எ.டு: சுக்கு, அச்சு, பட்டு, கழுத்து, உப்பு, கசப்பு.
பட்டு + ஆடை = பட்டாடை
இங்கே நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து 'ட்' என்ற வல்லின எழுத்தைத் தொடர்ந்து 'டு'
என்ற உகர எழுத்து வந்ததாலும், அது 'ஆடை' என்ற வரும்மொழியுடன் இணைந்து தனது
ட்+உ= டு விலுள்ள உகரத்தைத் திரிந்து ட்+ஆ= டா ஆனதாலும் வன் தொடர்க்
குற்றியலுகரமாயிற்று.
மென்றொடர்க் குற்றியலுகரம்
இதில் மெல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
எ.டு: சங்கு, பஞ்சு, நண்டு, பந்து, கம்பு, கன்று.
சங்கு + ஊதினான் = சங்கூதினான்
இங்கே 'ங்' என்கிற மெல்லின எழுத்தை அடுத்து 'கு' என்ற உகரம் வந்ததாலும்
வரும்மொழியுடன் இணைந்து நிலைமொழி 'உ'கரம் திரிந்து வரும்மொழி 'ஊ' உடன்
இணைந்து சங்கூதினான் என்று ஆனதாலும் மென் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
இதில் இடையின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
எ.டு: பெய்து, கொய்து, மல்கு, புல்கு, எள்கு, மாழ்கு
பெய்து + உடுத்தான் = பெய்துடுத்தான்.
இங்கே நிலைமொழியில் 'ய்' என்ற இடையின எழுத்தை அடுத்து 'து' என்ற உகரம்
வந்ததாலும் அது வரும்மொழி 'உ' உடன் இணைந்து நிலைமொழி உகரம்கெட்டு
பெய்துடுத்தான் என்று குறுகியதாலும் இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆயிற்று.
ஒற்றளபெடை
ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து
நீண்டொலிப்பதாகும்.
ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண்,
ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில்
குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும்.
ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்
அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை
மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ - நன்னூல்
எ.கா:
வெஃஃகு வார்க்கில்லை - குறிற்கீழ் இடை
கண்ண் கருவிளை - குறிற்கீழ் கடை
கலங்ங்கு நெஞ்ச்மிலை - குறிலிணைகீழ் இடை
மடங்ங் கலந்த மன்னே - குறிலிணைகீழ் கடை
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை காணலாம். ஒற்றெழுத்து
அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அதே எழுத்து எழுதப்படும்.
உயிரளபெடை
உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு
ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர்.
எ.கா:
சார்பெழுத்துக்களின் தன்மைகள்
தமிழ் எழுத்துக்களை முதலெழுத்துக்கள், சார்பெழுத்துக்கள் என்று
தொல்காப்பியத்திற்கும் பின் தோன்றிய இலக்கண நூல்கள் பகுத்துக் கூறுகின்றன.
சார்பெழுத்தானது உயிர் எழுத்துக்கள் போன்று தனித்தும், மெய்யெழுத்துக்கள்
போன்று உயிருடன் கூடியும் வராமல் ஒரு மொழியைச் சார்ந்து வருதலால் இது
சார்பெழுத்தாகும். இவ்வாறு தனித்து இயங்கும் தன்மையற்ற சார்பெழுத்துக்களை
தொல்காப்பியர்,
என்கிறார்.
சார்பெழுத்துக்களின் மாற்றங்கள்
தொல்காப்பியம்
தமிழ் இலக்கண, இலக்கியங்களில் மிகவும் தொன்மையானது
தொல்காப்பியம். இது தன்னிகரற்ற தமிழ் இலக்கண நூலாகவும் தாய்மை
இலக்கண நூலாகவும் விளங்குகிறது. “தொல்காப்பிய(ர்)ம் காலம் இன்றைக்கு
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டதென்பர். கி.மு.எழுநூறு என்பது
பலரது கொள்கை”2 இத்தொன்மையான தொல்காப்பியம்ஃ
“அவைதாம்
குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன” (தொல்.2)
நன்னூல்
என்ற நூற்பாவில்
உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம்,
ஐகாரக்குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என பத்து
வகையான சார்பெழுத்துக்களை நன்னூலார் கூறுகின்றார். மேலும்,
இலக்கண விளக்கம்
முத்துவரியம்
ீ
முடிவுரை