Professional Documents
Culture Documents
அபூர்வ ராமாயணம்
அபூர்வ ராமாயணம்
அபூர்வ ராமாயணம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
1.)உண்மையான கவிதார்க்கிக சிங்கம் யார் ?
2.)28 வியாசர்களா அல்லது ஸ்வாமி நம்மாழ்வாரா ?
3.)ஸ்வாமி மணவாள மாமுனிகளை வால்மீகிபகவானுடன் ஒப்பிடலாமா ?
4.)மாணிக்கவாசகருக்கு ரோல்மாடல் யார்?
5.)திருஞானசம்பந்தர் செய்த தோஷங்கள் யாவை ?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஸ்வாமி மணவாள மாமுனிகளின் மீது ஸ்ரீமத் ராமாயணத்தின் 24000 ஸ்லோகங்களை ஏற்றிப் பாராட்டி
புதுவிதமாக எழுதலாம்.
பெரிய ஜீயரையே சக்கரவர்த்தி திருமகனாக வைத்தும் எழுதலாம். அல்லது ஸ்வாமி நம்மாழ்வாரை
ஸ்ரீராமராக வைத்து பெரியஜீயரை வால்மீகி பகவானாக்கியும் பேசலாம்.
இரண்டாவது பட்சத்தை அடிப்படையாக வைத்து இக்கட்டுரையை எழுதுகிறேன். இதனை மிகைப்படுத்தல்
என்று நினைப்போர் உள்நோக்கம்-கொண்டோர் என்னலாம்.
2.)
அஞ்சிறைய புட்கள் தமை ஆழியானுக்கு என்னும் பாடலில் “மாறன் இங்கே நாயகனைத் தேடி” என்றபடி
ஆணான ஆழ்வார் பெருமாள் மீது மாலுற்று தலைவியாக ஆன நிலையினை படம் பிடிக்கிறார் பெரியஜீயர்.
இது 28 வியாசர்களுக்கும் ஏற்படாத நிலை. இதுவே “ஹஸிதம் பாஷிதம்”
3.)
”கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க” –“பொய்யாகப் பேசும் புறனுரைக்கு” என்றபடி
ஆழ்வார் தமக்கு எம்பெருமானிடம் நித்யமுக்தர்கள் அளவிற்கு மெய்யான காதல் இல்லை என்றும் தான் ஒரு
பொய்யன் என்றும் பாடுகிறார். இது 28 வியாசர்களும் ஒத்துக் கொள்ளாதது. இதனை படம் பிடிக்கிறார்
பெரியஜீயர். இதுவே “ஹஸிதம் பாஷிதம்”.
இதையே “ந தர்மநிஷ்டோஸ்மி ந ச ஆத்மவேதி, ந பக்திமான் த்வத் சரணாரவந்தே” என்றார் ஸ்வாமி
ஆளவந்தார். இதையே “நாடகத்தார் உன் அடியார் போல நடித்து” என்று பின்னாளில் ரோல்மாடலாக ஆழ்வார்
வழியில் பாடினார் மாணிக்கவாசகர்.
4.)
“மையார்கண் மாமார்பில் மன்னும் திருமாலை” என்னும் பாடலில் “மெய்யான காதலுடன் கூப்பிட்டுக்
கண்டுகந்த மாறன்” என்று ஆழ்வாருக்கு பக்தி மெய்யாக -அதாவது நித்யமுக்தர்கள் அளவிற்கு
பரிணமித்ததை கண்டு வியக்கிறார் பெரியஜீயர். இது 28 வியாசர்களும் ஒத்துக் கொள்ளாதது. இதனைப்
படம் பிடிக்கிறார் பெரியஜீயர். இதுவே “ஹஸிதம் பாஷிதம்”
5.)
”உயர்வே பரன்படியை உள்ளதெல்லாம் தான் கண்டு” என்ற பாடலில் “மனனக மலமற மலர்மிசை எழுதரும்
மனனுணர்வு அளவு இலன்” என்ற இடம் வரும். ஜீவன்-பரமனுக்கு இருக்கும் வேறுபாட்டினை விளக்கும்
இடமிது.
ஜீவாத்மாவும் அஷ்டாங்கயோகத்தால் ஸாக்ஷாத்கரிக்கலாம். பரமனான ஸ்ரீமந் நாராயணனையும்
ஸாக்ஷாத்கரிக்கலாம். ஜீவனை முழுமையாகவும் தான் விரும்பும் சமயத்தில் எல்லாம் ஸாக்ஷாத்கரிக்கலாம் .
ஆயினும் பரமனை அவர் விரும்பும் சமயத்தில் மட்டுமே, அதுவும் ஏதோ ஒரு அம்சம் மட்டுமே ஸாக்ஷாத்காரம்
ஆகும் என்பது 28 வியாசர்கள் தரும் நேரடிப் பொருள்.
இப்படி ஆயிரம் வேறுபாடு சொன்னாலும் ஒரு பெருங்குறை நேரிடும். திருஞானசம்பந்தர் பரமசிவனையும்
ஸ்ரீராமரையும் ஒப்பிடுகிறார். “செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடு
ஒரு கோஹினூர் ரத்னக்கல் இருக்கிறது என்று வையுங்கள். அதனுடன் ஒரு சாணி உருண்டையை
ஒப்பீடு சொல்லலாம். என்னதான் “பளபளப்பு, விலை, அருமை, நறுமணம், நிறம்” என்று ஆயிரம்
காரணங்கள் சொல்லி வைரக்கல்லே சிறந்தது என்று வாதிட்டாலும், இறுதியாக ஒரு தோஷம் தட்டும்.
“பூ!! இதென்ன ரத்னம் உலகில் இல்லாத ரத்னம்?” இந்த சாணி உருண்டையை பார்த்த அதேகண்ணால்
இந்த ரத்னமும் பார்க்கமுடிகிறதே” என்று ஒருவன் சொல்லிவிடலாம். இதனை தர்கத்தில் “ஏகேந்த்ரிய
க்ஞப்ய விஷயம்” என்பர்.
தான் பாடிய “ஒத்தார் மிக்காரை இலையான மாமாயன்”, ”தன்னொர்பப் ார் இல்லப்பன்” என்னும்
லக்ஷணங்களுக்கும் விரோதிக்காமல் ஆழ்வார் தர்க்கத்திலே இதுவரை 28 வியாசர்களும் தராத புதியதொரு
லக்ஷணம் அருளினார். [மனனுணர்வு அளவிலன் பொறியுணர்வு அவையிலன்]
இதைத்தான் பெரியஜீயரும் உள்ளபடியறிந்து –“உயர்வே பரன்படியை உள்ளதெல்லாம் தான் கண்டு” என்று
படம்பிடிக்கிறார். இதுவே “ஹஸிதம் பாஷிதம்”