Professional Documents
Culture Documents
சமூகநீதி ஆட்சி நடத்தும் தமிழ்நாடு கடந்துவந்த பாதை
சமூகநீதி ஆட்சி நடத்தும் தமிழ்நாடு கடந்துவந்த பாதை
இரு நூல்கள்
1893 ஆம் ஆண்டில் Fair Play என்ற பெயரை நூலாசிரியர் பெயர் என்று அச்சிடப்பட்ட
இரண்டு புத்தகங்கள் "1.பிராமணர் அல்லாதார் இனங்களும் இந்திய அரசுப்
பணியும்" (The Non – Brahmin Races and Indian Public Service) - "2.பிராமணர்
அல்லாதார் இனங்கள் தெளிவு பெறுவதற்கான வழிவகைகள்" (The Ways and Means
for the Amelioration of Non – Brahmin Races) வெளியாகின. உண்மையில் "பிராமணர்
அல்லாத இனங்கள்" என இனங்களின் அடையாளங்களை சுட்டிக்காட்டி வந்த
இவ்விரு நூல்களில் முதல் நூல் பிராமணர் அல்லாதார் இன மக்களின்
பிரச்னைகளை விளக்கும் வகையிலும் இரண்டாம் நூல் அவற்றுக்கான
தீர்வுகளைச் சொல்லும் வகையிலும் அமைந்திருந்தன.
###########################
###########################
Communal GO Ms No.1021
1926 ஆம் ஆண்டில் மீ ண்டும் ஆட்சியில் அமரும் வாய்ப்பை இழந்தது. நீதிக்கட்சி
இந்த முறை ஆட்சியை கைப்பற்றிய சுயராஜ்யக்கட்சி மீ ண்டும் நீதிக்கட்சி ஆட்சியை
அமைக்கும் வாய்ப்பை தந்துவிடக்கூடாது என கருதி நீதிக்கட்சியின் பி.சுப்பராயன்
கவுண்டர் மட்டும் அழைத்து சுயேட்சை அமைச்சரவை அமைக்க செய்தனர்.
இருந்தாலும் எதிர்கட்சியான நீதிக்கட்சியின் தலைவர் பனகல் அரசர்
ஆலோசனையிலேயே இந்த ஆட்சியையும் தொடர்ந்தார் கடலூர் பி.சுப்பராயலு
ரெட்டியார். இதன் காரணமாக பின்னர் ஜனவரி 1928 அன்று சுயராஜ்யக்கட்சி எதிர்த்து
வந்த சைமன் கமிஷனை எதிர்க்க மறுத்த பி.சுப்பராயன் கவுண்டர்
அமைச்சரவையில் இருந்து சுயராஜ்யக்கட்சி பின்வாங்க மீ ண்டும் நீதிக்கட்சியே
முழுமையாக ஆளும் கட்சியாக நின்றுவிட்டது. சமூகநீதி இயக்கத்தின் தளபதி
சௌந்தரபாண்டியன் அவர்கள் ஆதரவில் எஸ்.முத்தையா முதலியாரின்
முயற்சியால் முதல் இடஒதுக்கீ ட்டுச் சட்டம் 13.9.1928 அன்று வகுப்புரிமை
ஆணையாக - communal GO Ms No.1021 அன்று வெளியிட்டப்பட்டு அவ்வாணையை
முழுமையாக செயல்படுத்தி, அரசுப் பணிகளில் பார்ப்பனர் - பிறசாதியினர்
-தாழ்த்தப்பட்டோர் - முஸ்லிம்கள் - ஆங்கிலோ_இந்தியர் உள்ளிட்ட அனைத்து
சமுதாயத்தினரும் இடம் பெற வழி வகுத்தார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு
1951 முதல் சட்டத் திருத்தம் வந்த போதே, அதில் Socially and educationally (சமூக
ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்) பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற
சொல்லைச் சேர்த்தனர். விவாதத்தில் Socially and educationally என்பதோடு Economically
(‘பொருளாதாரத்திலும்’) எனவும் சேர்க்க வேண்டும் என தற்பொழுதைய BJP-யின்
தாய் அமைப்பான ஜனசங் கட்சியை தொடங்கியவரான எஸ்.பி.முகர்ஜீ
வலியுறுத்த, அதற்கான ஆதாரப்பூர்வ மறுப்பை டாக்டர் அம்பேத்கார் அவர்கள் கூற
பின்னர் பெரும்பான்மையான உறுப்பினர்களும், நேருவும் அவ்வாறு Economically என்ற
பதத்தை இணைக்க மறுத்தனர். திருத்தம் அரசியல் நிர்ணயசபையில்
வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட Economically (‘பொருளாதாரத்திலும்’)
என்பதை சேர்க்கக் கூடாது என 234 பேரும் வாக்களித்தனர்.
1955 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல்
மண்டபத்தில், நடைபெற்ற சென்னை மாகாண தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்
மாநாட்டில் கல்வித்துறை இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள்
ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் பள்ளிக்கூடத்தில் மாலை நேரத்தில்
இலவச மதிய உணவு வழங்குவது பற்றி அப்பொழுதைய முதல்வர்
காமராஜரிடம் ஆலோசிக்க அதுவே தமிழ்நாட்டின் கல்விச் சூழலை
விரிவுப்படுத்திய மேம்படுத்திய மதிய உணவுத் திட்டமாக மாறியது.
உலகளாவிய புதுமை திட்டமான மாணவர்களுக்கு வழங்க
அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவு திட்டமானது சமூகநீதியின் ஒரு
பகுதியாக தமிழ்நாட்டில் கல்வியறிவு பெற்ற இளம் பெண்களின்
விகிதமானது உயர்ந்ததற்கான ஒரு காரணமாக இருந்தது என்கிறது சமீ பத்திய
thewire நடத்திய ஆய்வு (https://sempiyanwritings.blogspot.com/2018/08/blog-
post_27.html)
என பரிந்துரைத்தது.
கல்வித்துறையில்...
1. பார்ப்பனப்பட்டு ரங்கநாதன்
2. சித்தணி ஏழுமலை
3. ஒரத்தூர் செகநாதன்
4. முண்டியம்பாக்கம் சிங்காரவேலு
5. கயத்தூர் முனியன்
6. கயத்தூர் முத்து
7. கொழப்பலூர் முனுசாமி
8. கோலியனூர் விநாயகம்
9. கோலியனூர் கோவிந்தன்
10. தொடர்ந்தனூர் வேலு
11. சிறுதொண்டமாதேவி தேசிங்குராஜன்
12. பேரங்கியூர் அண்ணாமலை
13. மேச்சேரி அமரத்தானூர் மயில்சாமி
14. வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன்
15. சிவதாபுரம் குப்புசாமி
16. முரசவாக்கம் கோவிந்தசாமி
17. குருவிமலை முனுசாமி
18. காயிரம்பேடு மருதசாமி
19. நத்தமேடு சுப்பிரமணி
20. விளம்பூர் பன்ன ீர்செல்வம்
21. பாப்பனம்பட்டு வரப்பன்
ீ
22. பாப்பனம்பட்டு பரமசிவம்
23. கயத்தூர் தாண்டவராயன்
எதிர்க்கட்சிகள் மௌனம்
இட ஒதுக்கீ ட்டிற்காக போராடிய மக்கள் மீ து இத்தகைய
அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படும் பொழுதும் சமூக நீதி கோரி
போராட்டம் நடத்தியதற்காக 20,461 பேர் கைது செய்யப்பட்டு பல
நாட்கள் சிறையில் வாடிய பொழுதும் எதிர்க்கட்சியாக இருந்த
திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளோ எதிர்ப்புகளை சடங்குத்தனமகவே
தெரிவித்ததாக மரு ராமதாஸ் அவர்களே எழுதியுள்ளார்.
ஊடகங்கள்
போராடிய மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அடக்குமுறைகள்
குறித்து அப்போது வெளிவந்த தராசு, பல்லவராயர் போன்ற வார
இதழ்கள் தான் சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிட்டன.
தினந்தந்தி, மாலைமலர் போன்ற நாளிதழ்கள் ஓரளவு செய்திகளை
வெளியிட்டன. மற்ற ஊடகங்கள் இந்த அடக்குமுறைகள் குறித்து
வாய் திறக்கவில்லை. ஆனால், அமெரிக்காவிலிருந்து வெளியாகும்
நியூயார்க் டைம்ஸ் இதழ் இந்த போராட்டம் குறித்து போராட்டக்களம்
குறித்து படத்துடன் கால் பக்கம் அளவுக்கு செய்தி வெளியிட்டது.
இந்த அரசானது 1990 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதியன்று, சமூகம் & கல்வி
ரீதியில் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசுப் பணிகள்
மற்றும் பொது நிறுவனங்களில் 27 % இடஒதுக்கீ டு அளிப்பதாக அறிவித்தது.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி அரசாங்க ஆணை வெளியிட்டிருந்த போதும், வி.பி.சிங்
அவர்கள், அந்த அறிக்கையை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்துதலை இரண்டு
நாட்கள் கழித்து அவரது சுதந்திர தின உரையில் அறிவித்தார்.
(மண்டல் வழக்கு )
நாகராஜ் வழக்கு !
69 சதவத
ீ இட ஒதுக்கீ ட்டுக்கு எதிராக தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள்
தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போதும் இன்னொரு மனுவை தாக்கல்
செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில்
கொள்ள வேண்டும் - சமூக நீதிக்கு எதிராக, குறிப்பாக நடைமுறையில் உள்ள 69 %
இட ஒதுக்கீ ட்டுக்கு எதிராக பின்னப்பட்டு வரும் சதி வலைகளை அறுத்து எறியும்
வகையில் தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, இட ஒதுக்கீ டு என
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
உதவியவை :
Politics and Social Conflict in South India The Non-Brahmin Movement and Tanie Seperation
(Berkeley: University of California Press, 1969) - Sundravadivelu.
Great Britain parliamentary papers, Vol XXI (Reports from Commissioners etc. Vol XI).