Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

லலிதாம்பிகை மந்திரம் 

ஓம் லலிதாம்பிகாய் நமஹ 

பார்வதியின் அம்சமான ஸ்ரீ லலிதாம்பிகை தேவியை போற்றும் எளிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 108 முறை உரு ஜெபிப்பது
நல்லது. வெள்ளிக்கிழமை மற்றும் அஷ்டமி திதிகளில் அருகில் இருக்கும் அம்பிகை கோவிலுக்கு சென்று, அம்மனுக்கு தீபமேற்றி இம்மந்திரத்தை 108 அல்லது 1008 உரு
ஜெபிப்பதால் உங்களை பீடித்திருக்கும் தரித்திரம் படிப்படியாக நீங்கும்.

தொழில் மற்றும் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும். மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். செல்வ சேர்க்கை மற்றும்
புகழ் உண்டாகும்.

அனைத்து தோஷங்களும் விலக செவ்வாய் காயத்ரி மந்திரம் 

நவக்கிரகத்தில் செவ்வாய் என்று அழைக்கப்படுபவர், ‘அங்காரகன்.’ இவருடைய அதிதேவதையாக முருகப்பெருமான் இருக்கிறார். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய்
உச்சம் பெற்றிருந்தாலோ அல்லது நீச்சம் பெற்றிருந்தாலோ செவ்வாய்க்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் நற்பலன் கிடைக்கும்.

மேலும் செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள், 9-ம் எண்ணை கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள், மிருகசீரிஷம் , சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில்
பிறந்தவர்கள் ஆகியோரும் செவ்வாய்க்கான காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபாடு செய்தால், அனைத்து தோஷங்களும் விலகி அற்புத பலன் கைகூடும். 

‘வீரத்வாஜய வித்மஹே

விக்நஹஸ்தாய தீமஹி

தந்நோ பவும: ப்ரசோதயாத்’

மேற்கண்ட செவ்வாய்க்குரிய காயத்ரி மந்திரத்தை, செவ்வாய்க்கிழமை ராகு கால வேளையில், தெற்கு நோக்கி அமர்ந்தபடி கடுகு எண்ணெய் தீபமேற்றி, துவரை சுண்டல்
நைவேத்தியமாக படைத்து, செண்பக மலர்களால் 108 முறை ஜெபிக்க வேண்டும். இந்த காயத்ரி மந்திரம் மிகுந்த சக்தி கொண்டது.

தொழிலில் வளர்ச்சி தரும் சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் 

ஓம் பைரவாய வித்மஹே


ஹரிஹர ப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்”

என்ற சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரத்தை, தினமும் 108 முறை பாராயணம் செய்தால், தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

் ம் ஸ்ரீ ஹரித்ரா கணபதி மூல மந்திரம் 


பொருளாதார நிலையை உயர்தது

புதிதாக ஒரு காரியத்தை தொடங்க இருப்பவர்கள் கணபதியை வழிபட்ட பிறகு தொடங்கும் அக்காரியங்கள் சிறப்பான பலன்களை கொடுக்கும் என்பது அனுபவ உண்மை.
அதிலும் வல்லமைகள் அனைத்தையும் தன்னிடம் கொண்டிருக்கும் ஸ்ரீ ஹரித்ரா கணபதி மூல மந்திரம் துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து
கொள்ளலாம்.

ஓம் ஹும் க்லௌம் ஹரித்ரா கணபதயே 

வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் 


ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா

கணேசன் எனப்படும் ஹரித்ரா கணபதியை போற்றி இயற்றப்பட்ட இந்த மூல மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் கூறி வழிபடலாம். சிறப்பான இந்த மூல மந்திரத்தை
தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்த பின்பு விநாயகரின் படத்திற்கு முன்பு நின்று, விளக்கெண்ணெய் ஊற்றி தீபமேற்றி, பத்திகள் கொளுத்தி வைத்து, இந்த
மந்திரத்தை 108 முதல் 1008 முறை மனமொன்றி துதிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர நீங்கள் புதிதாக தொடங்கும் ஜன வசியம் ஏற்பட்டு நீங்கள் ஈடுபடும்
எத்தகைய காரியங்களும் தடை, தாமதங்களின்றி சுலபமாக வெற்றியடையும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் அமைதி ஏற்படும்.
பொருளாதார நிலை உயரும்.

You might also like