Professional Documents
Culture Documents
யாரோ ஒருவன்?
யாரோ ஒருவன்?
யாரோ ஒருவன்?
என்.கணேசன்
”தர்மோ ரக்
ஷதி ரக்
ஷித்” (தர்மம் காக்கப்படும் போது அதுவும் (நம்மைக்)
காக்கிறது).
நரேந்திரன் ஐபிஎஸ் என்ற அந்த இளம் அதிகாரி தங்க எழுத்துகளில் மின்னிய
அந்த வாசகத்தை ஒரு கணம் நின்று படித்தான். இந்திய உளவுத்துறையின்
உச்ச அமைப்பான ரா (Research and Analysis Wing) வின் குறிக்கோளும்
சித்தாந்தமுமாக இருந்த வாசகம் அது. ’ரா’வின் தலைமைச் செயலகத்தின்
சுவரில் பொறிக்கப்பட்டு இருந்த அந்த வாசகத்தைப் படித்து விட்டு உள்ளே
நுழைந்த போது அவன் மனம் இன்னதென்று குறிப்பாகச் சொல்ல
முடியாதபடி பல உணர்ச்சிகளின் கலவையாக கனத்தது. தர்மத்தை நாம்
காக்க மறக்கும் போது அதுவும் நம்மைக் காக்காமல் கைவிட்டு விடும் என்று
கறாராக அந்த வாசகம் தெரிவிப்பது போல் அவனுக்குப் பட்டது.
”வாங்க தம்பி… உள்ளே வாங்க” என்றார். மகன் இறந்த நாளில் அவன் நண்பன்
என்று சொல்லி வந்தவனை வெளியிலேயே நிறுத்திப் பேசுவது சரியல்ல
என்று அவருக்குத் தோன்றியது.