அதாவது, அதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன் என்று அர்த்தம்.
ஜடாகலாப சோபிதம் ஸமஸ்தபாப நாஸனம்
ஸ்வபக்த பீதி பஜ்ஜனம் பஜேஹராம மத்வயம்
அதாவது அழகான திருமுடியினை உடையவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவரும், தன் பக்தர்களின்
பயத்தைப் போக்குகின்றவருமான இணையற்ற ஸ்ரீராமனை துதிக்கிறேன் என்று அர்த்தம்.
நிஜ ஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்
ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹ ராமமத்வயம் அதாவது, ஆன்மாவின் வடிவை உணர்த்தி உபதேசிப்பவரும், கருணைக்கடலும், பிறப்பு இறப்பு என்ற பயத்தைப் போக்குபவரும், எங்கும் எப்போதும் ஒரே சம நிலையிலிருப்பவரும், மங்கலத்தைச் செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமபிரானை வணங்குகிறேன்.
ஸப்ரபஞ்ச கல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்
நிராக்ருதிம் நிராமயம் பஜேஹ ராமமத்வயம்
அதாவது, உலகத்தையே காப்பவரும் நாமரூப மற்றவரும், எப்பொழுதுமுள்ளவரும், உருவமற்றவரும், அழிவற்றவரும்,
இணையற்றவருமான ஸ்ரீராமபிரானை நமஸ்கரிக்கிறேன்.
நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்
சிதேகரூப ஸந்ததம் பஜேஹ ராமமத்வயம்
அதாவது, பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும்,
அதாவது, வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தந்தருளக் கூடியதுமான
ராமாஷ்டகத்தைப் படிக்கிறவார்களும், கேட்கிறவர்களும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சகல ஐஸ்வரியங்களும் பெறலாம். குடும்பத்தில் நிம்மதி தவழும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியும் ஒன்று சேருவார்கள் என்கிறார் ராமகிருஷ்ண பட்டாச்சார்யர்.