Professional Documents
Culture Documents
சங்ககாலம்
சங்ககாலம்
தமிழ்கூறு
நல்லுலகம் கண்ட ஈடிணையற்ற பல அரும் பெரும் தமிழ்ப்புலவர்களில் தனிச்சிறப்பு
வாய்ந்தவராவார். செம்மொழியாம் தமிழ்மொழியின் த தனிச்சிறப்பினை தரணியிலே
தழைத்தோங்க சங்கம்வளர்த்துக்காத்த தமிழ்புலவர்களின் வரிசையில்நீக்கமற நிறைந்தவர்
தமிழ் மூதாட்டி ஒளவை பிராட்டியாவார் என்றால் அது மிகையல்ல. இப்பெருமகள் சங்க
காலத்திலேயே ஆணாதிக்கத்தையும் மீறி தன் தேன் சொட்டும் தமிழ்ப்புலமையின் மூலம்
தனிமுத்திரை பதித்து, காலங்களை வென்று உலக மாந்தர் உய்ய சிறப்பான வாழ்க்கைத்
தத்துவங்களை தனது படைபிலக்கியங்களின் வழி வாரி வழங்கியுள்ளார். இவர் தமிழுலகு
போற்றும் வள்ளுவர், நக்கீரர், குடையானவர், கம்பர், செயங்கொண்டார், புகழேந்தி,
ஒட்டக்கூத்தர், சேக்கிழார் போன்ற மாபெரும் புலவர்களுக்கு ஈடானவர் என்பதை இவரது
படைப்புகளின் வழி அறிய முடிகிறது. சங்ககாலப்புலவர்களில் ஒருவராகப் போற்றப்படும்
ஒளவை பிராட்டியார் அற்புதமான படைப்பிலக்கியங்களை உலகோர் படித்துப் பயன்பெற
படைத்து தந்துள்ளார். அவையாவன எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு,
நற்றிணை, குறுந்தொகை ஆகும், மேற்குறிப்பிட்ட இந்த நூல்களில்மொத்தம்59 பாடல்களை
ஒளவை பிராட்டியார் பாடிச்சென்றுள்ளார்.
வாழ்க்கைக்கு நல்ல வழியைக் காட்டும் நூல் என்றதால் நல்வழி என்று பெயர் பெற்றது.
கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களையுடைய நூல் நல்வழியாகும்.
மனிதர் மதியீனம்
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
பதவுரை
பாடுபட்டு - வருந்தி
பணத்தைத்தேடி - பணத்தைச்சம்பாதித்து
புதைத்து வைத்து - (அதைப்பயன்படுத்தாமல்) மறைத்து வைத்து
கேடு கெட்ட - நஷ்டத்தால்வருந்திய
மானிடரே - மனிதரே
பாவிகாள் - பாவிகளே
கேளுங்கள் - நான்சொல்வதைக்கேட்டுக்கொள்ளுங்கள்
இங்கு - இவ்வுலகில்:
கூடுவிட்டு - (இந்த) உடலை விட்டு
ஆலி - உயிரானது
போயின பின்பு - போன பிறகு
அந்தப்பணம் - (நீங்கள்) புதைத்து வைத்த அந்தப்பொருளை
அனுபவிப்பார் - பயன்படுத்துபவர்
ஆர்-யார்? - (ஒருவருமில்லை)
பொருள்
பதவுரை
ஆன - தனக்குண்டான
முதலில் - ஆதாரமாய்உள்ள பொருளில்
அதிகம் - மிகுதியாக
செலவு ஆனால் - செலவு ஏற்பட்டால்
மானம்அழிந்து - பெருமை கெட்ட
மதி கெட்டு - அறிவு அழிந்து
போன திசை - (மறைந்து) சென்ற திசைகளிலும்
எல்லார்க்கும் - யாவர்க்கும்
கள்ளனாய் - திருடனாய்
ஏழு பிறப்பும் - ஏழு முறை பிறக்கும்மனிதப்பிறவியிலும்
தீயனாய் - கெட்டவனாகி
நல்லார்க்கும் - விருப்பமுள்ள பெண்களுக்கும்
பொல்லன்ஆம் - பொல்லாதவன்ஆவான்
நாடு - இதைத்தெரிந்து கொள்
பொருளுரை:
விளக்கம்
ஒருவன் தன் வருவாயை விட அதிகம் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன்
மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்படும், போகும் திசை
எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப் போல் பாவித்து அவனிடம் பேச தவிர்ப்பர், ஏழு
பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கு ஆகாதவனாய் மாறிவிடுவான். ஆதலால் வருவாய்க்கு
அதிகமாக செலவு செய்யக்கூடாது.
என்பது ஔவையாரின் வாக்கு.