Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

உலக நீதி

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்

நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்

அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்

அடுத்தவரை ஒருநாளுங் கெடுக்க வேண்டாம்

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்

தனந்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்

தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்

சினந்தேடி அல்லலையுந் தேட வேண்டாம்

சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்.

குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்

கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்

--- உலக நாதர்.

பொருள் விளக்கம்
ஓதாமல் = படிக்காமல், பாடங் கற்காமல்

பொல்லாங்கு = கெட்டது, கெட்டசொல்

மாதா = தாய்

செய்வாரோடு இணங்க; இணங்கு = பழகு

போகாத = போகத்தகாத, போகக்கூடாத

புறம் = முதுகு; திரி = நட

புறஞ்சொல்லல் = ஆளில்லாத பொழுது பழித்தல்;

நல்லிணக்கம் இல்லாதவர் = நல்லவர்களின் தொடர்பு இல்லாதவரோடு

அடுத்தவர் = அண்டியிருப்பவர், நம்பி ஒட்டியிருப்பவர்

மாற்றான் = பகைவன், எதிரி; எதிரியை நண்பனாய் நம்பாதே

தனம் = செல்வம்; உண்ணாமல் = நுகராமல், புழங்காமல்;

புதை = மறை, ஒளித்துவை

தருமம் = நற்செய்கை

அல்லல் = துன்பம்

சினந்திருந்தார் = கோபக்காரர்;

சேறல் = செல்தல், செல்லுதல்

பாராட்டு = பெரிதாக நினை, நினைத்துக்கொண்டே இரு

களவு = திருட்டு, இணங்கு = பழகு

You might also like