Professional Documents
Culture Documents
Thottam Seihai
Thottam Seihai
Essay in Tamil
January 3, 2022 by radangfx
உணவே நஞ்சு
இன்றைய நாகரிக வாழ்வில் விவசாய நிலங்களும்
விவசாயிகளும் குறைந்து வருகின்றனர் ,இதன்
காரணமாக குறைந்த இடத்தில அதிக மகசூல் கொடுக்கும்
முறைகளை கையாள வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகி
உள்ளனர்.இதன் காரணமாக அதிக மகசூல் முறைகளான
செயற்கை உரமிடுதல் ,செயற்கை பூச்சி
கொல்லிமருந்துகள் பயன்படுத்துவது சாதாரணமாக
ஆகிவிட்டது.செயற்கை ரசாயனங்கள் தங்கள்
வேலைகளை செய்வதோடு உணவு
விளைபொருள்களிலும் இணைந்து நம்மை
வந்தடைகிறது.
மாடித்தோட்டம்
வீட்டு தோட்டம் அமைக்க இயலாளர்கள் மாடியில் தோட்டம்
அமைக்கும் முறை எப்போதோ தொடங்கி விட்டாலும்
,தற்போது இதன் நன்மைகளை அறிந்து அதிகமான
இல்லத்தரசிகள் மாடித்தோட்டம் அமைகின்றனர்.சுமாராக
ஆயிரம் ரூபாய் பணமதிப்பில் மாடித்தோட்டம் அமைத்தால்
வருடத்திற்கு பத்தாயிரம் வரை பயன்தரக்கூடிய
காய்கறிகள் நமக்கு கிடைக்கின்றன.சிறிய அளவில்
தோட்டமிடுவதால் பூச்சி பரவுதல் போன்ற நிகழ்வுகள்
நடைபெறும்போது மொத்தமாகவே செடிகளை
அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் நடவு செய்துகொள்ளலாம்
,இந்த வசதி விவசாயிகளுக்கு இல்லாத
காரணத்தினாலேயே அதிகம் பயிர் செய்த செடிகளை
அளித்து நஷ்டமடையாமல் இருக்க செயற்கை
இரசாயனங்களை நாடுகிண்டனர்.
இயற்கை உரங்கள்
செயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம்
ஏற்படும்போதும் இயற்கை உரங்களை பயன்படுத்த அரசு
ஆவண செய்துள்ளது .தமிழக அரசு வனத்துறை மற்றும்
விவசாய துறை அறிவியல் செய்திகளில் இயற்கை
உரங்களை வீட்டிலேயே தயாரிக்கும் முறைகளையும்
காணொளிகளையும் வெளியிட்டுள்ளது