Professional Documents
Culture Documents
Kamakodi May 2022 Edition Digital
Kamakodi May 2022 Edition Digital
முற்றிலும் இலவசம்
ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாளின் திருக்கரங்களால்
துவக்கி வைக்கப்பட்ட காமக�ோடி தெய்வீக -
பண்பாடு - மாத இதழ், க�ொர�ோனா பேரிடர் மற்றும்
சில தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக
நிறுத்தி வைக்கப்பட்டு புத்தகமாக வெளிக் க�ொண்டு
வரமுடியாத நிலையிலிருக்கிறது.
இந்த இக்கட்டிலிருந்து விடுபட்டு, த�ொடர்ந்து
உங்கள் அனைவரையும் தடையின்றி சந்திக்க, 2021
ஆகஸ்ட் இதழிலிருந்து ‘டிஜிட்டல் (DIGITAL)’ வழியாக
உங்களின் இல்லம் தேடி வருகிற�ோம்.
www.giri.in என்ற இணைய தளத்தில்
இலவசமாக டவுன்லோடு (Download) செய்து
ப�ொறுமையாக படித்து மகிழலாம். மற்றவருக்கும்
‘Share’ செய்து அனுப்பலாம்.
வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள்,
வாடிக்கையாளர்கள் த�ொடர்ந்து தங்களது மேலான
ஆதரவை அளிக்கும்படி கேட்டுக் க�ொள்கிற�ோம்.
நன்றி !
மேலும் விபரங்களுக்கு : 7358608780
என்ற எண்ணில் த�ொடர்பு க�ொள்ளவும்.
தெய்வத்தின் குரல்
துறவி குறித்து ஆச்சார்யாள்
(ஸ்ரீஆதிசங்கரர்) விதி
ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவாள் அருள்வாக்கு
ஆச்சார்யாளும் (ஸ்ரீஆதிசங்கரரும்)
நாராயண நாமமும்
ஜகத் வ்யாபாரத்திற்குக் காரண சக்தி என்று
ச�ொன்னேனே, அதை ஆச்சார்யாள்(ஸ்ரீஆதிசங்கரர்)
தம்முடைய பாஷ்யப் புத்தகங்களில் ‘நாராயண’
என்ற பெயராலேயே குறி்ப்பிட்டிருப்பார். அதற்கு
அநேக காரணம். இப்போது அந்த ‘டிஸ்கஷனில்’
இறங்காமல் குறிப்பாக ஒன்றைச் ச�ொல்லி
நிறுத்திக் க�ொள்கிறேன்.
தத்துவங்களை அலசி அலசி முடிவு கண்டு
வேதாந்தம்,
மீமாம்ஸை,
ஸாங்க்யம், ந்யாயம்
என்றெல்லாம்
சாஸ்த்திரங்களைப்
படைத்த தேசம்
நம்முடைய இந்த
தேசம். முக்கியமாக
இந்த
சாஸ்திரங்களில்
ஈடுபட்டவர்களை
உத்தேசித்துதான்
ஆச்சார்யாள்
w மே 2022 18 KAMAKOTI w May 2022
பாஷ்யப் புத்தகங்களை எழுதினது. ஆனாலும்
கூட...
தத்துவ ஆராய்ச்சிக்கு இந்த தேசம் பெயர்
ப�ோனது என்றாலும் அதைவிட இதற்கு ஜாஸ்திப்
பெயர் – நல்ல பெயர், அவப்பெயர் இரண்டுந்தான்
– எதில் என்றால் Dry தத்துவமாக இல்லாமல்,
ஆனாலும் தத்துவ ரூபமாகவே இருக்கிற
ஜீவனுள்ள மூர்த்திகளாக ஏகப்பட்ட
தெய்வங்களைக் காட்டியிருப்பதற்குத்தான்.
ஆகையினால் ஆச்சார்யாள் தம்முடைய
பாஷ்யங்களில் ப்ரபஞ்ச காரண சக்தியான
பரமாத்மாவை அப்படிய�ொரு தத்துவமாகவே
முழுக்கச் ச�ொல்லிக் க�ொண்டு ப�ோய்விடாமல்,
மூர்த்தியாக பாவித்து உறவு க�ொண்டாடிப் பழகிப்
ப�ோன சமூகத்திற்கு ‘அப்பீலாகும்’படியான ஒரு
நாமத்திலேயும் அங்கங்கே குறிப்பிட
வேண்டுமென்று நினைத்திருக்கிறார். அப்போது
எந்த ஸ்வாமியின் நாமாவை ப�ோடுவது?
ஏகப்பட்ட ஸ்வாமிகள் இருந்தாலும்
ஆதியிலிருந்து இன்று வரை நம் ஜனங்களை
சைவர் – வைஷ்ணவர் என்ற இரண்டு ‘broad
division’களாக வைத்து விடலாம். இப்படி இரண்டு
பேர் சிவன், விஷ்ணு என்று இருப்பதில் எதைப்
ப�ோடுவது என்று ஆச்சார்யாள் பார்த்திருப்பார்.
ஆச்சார்யாள் (ஸ்ரீஆதிசங்கரர்) யார்?சிவ அவதாரம்
தானே? அதனால் தன் பெயரையே ப�ோட்டுக்
க�ொள்ளவாவது? என்று நினைத்திருப்பார். சிவனுக்கு
ர�ொம்பவும் ஆப்தம் மஹாவிஷ்ணு; அப்படியே மஹா
விஷ்ணுவுக்கும் சிவன். ஆனபடியாலேதான் ஜகத்
காரண சக்தி, பிரபஞ்ச மஹாசக்தி, ஸகுண
w மே 2022 19 KAMAKOTI w May 2022
ப்ரம்மம், ஈச்வரன் என்றெல்லாம் வேதாந்தத்திலே
ச�ொல்கிற பரமாத்மாவுக்கு ஒரு மூர்த்தி காட்டுகிற
இடத்திலெல்லாம் அவர் ‘நாராயணன்’ என்றே பேர்
ப�ோட்டு விட்டார்...
நடுவாந்தரத்தில் ‘ஈச்வரன்’ என்ற ஒரு
வார்த்தை ச�ொன்னேன். ‘ஈச்வரன்’ என்றாலே
சிவன் என்று ப�ொதுப்படை அபிப்ராயமாயிருந்தாலும்
வேதாந்த சாஸ்திரத்தில் ஸகுண ப்ரம்மத்துக்கே
அந்தப் பேர். ராமானுஜாச்சார்யார், மத்வாச்சார்யார்
எல்லாருங்கூட அந்த அர்த்தத்தில் அதே
பேரைத்தான் ப�ோட்டிருக்கிறார்கள்..
ஆச்சார்யாள் ‘சிவாநந்த லஹரி’ இன்னும்
அநேக சிவ ஸ்தோத்திரங்களெல்லாம்
பண்ணியிருக்கிறாரே, அங்கே மட்டும் எப்படித்
தன்னையே தான் ஸ்துதித்துக் க�ொண்டார்? என்று
கேட்டால், அதெல்லாம் பக்தி ஸ்துதிகள். பல்வேறு
ஸ்வாமிகளை இஷ்ட தெய்வமாகக் க�ொண்ட
பல்வேறு ஜன ஸமூகங்களுக்கும்
அவரவர்களுடைய இஷ்ட தெய்வத்திடம் மனசை
நிறுத்துவதற்கு சகாயமாக ஆச்சார்யாள், அத்தனை
ஸ்வாமிகளையும் பற்றிப் பாட வேண்டியிருந்தது.
அதிலே ப்ரதான தெய்வங்களில் சிவனை எப்படி
விட முடியும்?ஆகையினாலே சிவபரமான
ஸ்துதிகளும் பண்ணினார்.
ஆச்சார்யாள் தமக்கென்று எந்த ‘ஐடென்டிடி’யும்
இல்லாத ஆத்ம ஸ்வரூபமாக இருந்தவர்.
அதனாலேயே அவரால் எவரெவர்
மனப்பான்மையுடனும் ‘ஐடென்டிஃபை’ பண்ணிக்
க�ொண்ட மாதிரி இருந்து க�ொண்டு, அவரவரையும்
மேலே உசத்திக் க�ொண்டு ப�ோக வழி பண்ண
w மே 2022 20 KAMAKOTI w May 2022
முடிந்தது. ஒரு கலரும்
இல்லாத ஜலம் கரிசல்
பூமியில் பாய்கிறப�ோது
கறுப்பு மாதிரி,
செம்மண் பூமியில்
பாய்கிறப�ோது சிவப்பு
மாதிரி எல்லாம்
தெரிகிறத�ோல்லிய�ோ?
அப்படி! இப்படி
இருந்ததில் பக்தி
வழியில் ப�ோய்
விருத்தியாகக்
கூடியவர்களுக்காக
அவர் எல்லா ஸ்வாமிகளின் மேலேயும்
ஸ்தோத்திரங்கள் பண்ணும்போது அந்தந்த
ஸ்வாமிக்கும் பக்தராக ‘ஐடென்டிஃபை’ ஆன
மாதிரி இருந்தார். அந்த ரீதியிலே ஈச்வர பரமாக,
அதாவது சிவனைப் பற்றி ஸ்தோத்திரம்
பண்ணும்போதும் அவர் சிவாவதாரமாக
இல்லாமல் சிவ பக்தராகவே பாடிக் க�ொடுக்க
முடிந்தது.அவதாரமாயிருந்தால் தானே
தன்னையே தான் ஸ்தோத்ரம் பண்ணிக்
க�ொண்டதாகும்? அப்படியில்லாமல் சிவ பக்தராக
இருக்கும்போது தமக்கு பகவானை அந்த சிவனை
எத்தனை வேண்டுமானாலும்
ஸ்தோத்தரிக்கலாந்தானே?
தம்முடைய மடங்களிலே அவர் சந்த்ரமெளலீச்
வரர் என்று சிவனைத்தானே பிரதானமாக வைத்து
மற்ற ஸ்வாமிகளைப் பரிவாரமாக வைத்திருக்கிறார்?
எல்லா ஜனங்களுக்குமான மடத்தில் எல்லா
எனக்கு நிறைய
தெய்வ பக்தி உண்டு.
என் மாமியாரும்
என்னை நிறைய
க�ோயில்களுக்கு
அழைத்துப் ப�ோவார்.
தினமும் பத்து நிமிடம்
ச்லோகம�ோ 108
நாமாவளிய�ோ
ச�ொன்னால் மனம்
நிம்மதியாக இருப்பதாக ஒரு உணர்வு. சிறு
வயதிலேயே த�ோழியுடன் சைக்கிளில்
க�ோயிலுக்குக் கிளம்பி விடுவேன். தேங்காய், பூ,
பழமெல்லாம் வாங்க மாட்டோம். சுவாமியை
தரிசனம் பண்ணிவிட்டு பிராகாரத்தில் சிறிதுநேரம்
அமர்ந்துவிட்டு வந்தாலே நிறைவாக இருக்கும்.
சென்னை, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி
க�ோயிலில் இருக்கும் ஆண்டாள் எனக்கு மிகவும்
பிடிக்கும். நாங்கள் திருவல்லிக்கேணியில்
இருந்ததால் அம்மா அடிக்கடி அங்கு கூட்டிச்
செல்வார். எனக்கு நல்ல கணவர்
w ஏப்ரல்20222022
மே 34 KAMAKOTI
KAMAKOTIw March
w May 2022
வரவேண்டுமென்று என் அம்மா வேண்டிக்
க�ொண்டார். அப்படியே நடந்தது. என் மூன்று
பெண்களுக்காகவும் நான் வேண்டிக் க�ொண்டதும்
நடந்தது. திருமணப் பேச்சு எடுக்கும்போதே
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் க�ோயிலிலிருந்து கிளி
(அட்டை) வந்துவிடும். இது நல்ல சகுனமாகவே
இருக்கும். மூன்று பெண்களுக்கும் நல்ல புகுந்த
வீடு அமைந்தது. எல்லாம் இறைவனின் கருணை.
எப்போது அம்மன் க�ோயில்களுக்குப் ப�ோனாலும்
நிறைய கண்ணாடி வளையல்கள், பூமாலை
வாங்கிக்கிட்டு ப�ோவேன். எனக்கு 25ஆவது
திருமண நாள் வந்தப�ோது சந்தோஷமாக
இருந்தாலும் க�ொண்டாடும் மனநிலையில்லை.
ஏனெனி்ல் என் அம்மா அப்போதுதான்
தவறியிருந்தார். க�ோயிலுக்கும் செல்லவில்லை.
ஆனால் அன்று தட்டு நிறைய வளையல் மற்றும்
மங்கலப் ப�ொருட்கள் வீட்டிற்கு வந்தன. இது
எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. சிறிது
நேரத்தில் பச்சையம்மன் க�ோயில் பூசாரி ப�ோன்
w மே 2022 35 KAMAKOTI w May 2022
செய்து, ‘‘அம்மா. நேற்று அம்மன் கனவில் வந்து
இந்தப் ப�ொருட்களை உங்களிடம் சேர்க்கச்
ச�ொன்னார்’’ என்றார்.
இதுப�ோல் நிறைய நடந்திருக்கு. மனமுருகி
வேண்டினால் நிச்சயம் பலனிருக்கு. இவர் (கணவர்
திரு. அன்புமணி) மத்திய மந்திரியாக இருந்தப�ோது
டெல்லியிலுள்ள மலைமந்திருக்கு அடிக்கடி
ப�ோவேன். எந்த மனக்கஷ்டமிருந்தாலும் முருகனை
பார்த்த வினாடி அது உடனே தீர்ந்து விடும்.
மேல்மருவத்தூர் ஸ்ரீஆதிபராசக்தி என் இஷ்ட
தெய்வம். திருமணமாகி கணவரின் இல்லத்திற்குச்
செல்லும் முன்பு இந்தக் க�ோயிலுக்குத் தான்
சென்றோம். பங்காரு அடிகளாரை என்
குருவாகவே பாவிக்கிறேன்.
என் கணவர் வீட்டிலும் எல்லோரும் பக்தி
உடையவர்கள்தான். என் கணவரின் தாத்தா
நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும் மனப்பாடமாகக்
கூறுவாராம். என் கணவருக்கு அவ்வளவெல்லாம்
ச�ொல்லத் தெரியாவிட்டாலும் திருப்பதிக்குப் ப�ோக
ர�ொம்ப பிடிக்கும். அடிக்கடி நானும் அவரும்
திருப்பதிக்குச் சென்றிருக்கிற�ோம். திருப்பதி
ப�ோனாலே திருப்பம் வரும்தானே!
எங்கள் வீட்டு குலதெய்வம் ஐயனாரப்பன். என்
அப்பா வீட்டு குலதெய்வம் ஆஞ்சநேயர். ரொம்ப
வருடம் கழித்துதான் அது எங்களுக்குத்
தெரிந்தது. அதையும் நான்தான் கண்டுபிடித்தேன்.
வருடா வருடம் இரண்டு வீட்டு
குலதெய்வங்களையும் கும்பிட்டு விடுவ�ோம்.
குலதெய்வ வழிபாடுதானே குலம் காக்கும்!
w மே 2022 36 KAMAKOTI w May 2022
எந்த ஊருக்குப் ப�ோனாலும்
வழியிலுள்ள
க�ோயில்களையெல்லாம்
தரிசித்து விடுவ�ோம்.
இப்படித்தான்
ராமேஸ்வரத்திற்குச்
சென்றப�ோது ‘நம்பு
நாயகியம்மனை’ தரிசித்தோம்.
அந்த க�ோயிலில் அதிசயமான
வேண்டுதல் முறை
இருக்கிறது. நிறைய அம்மி குழவிகள்
இருக்கின்றன. அதில் நாம் க�ொண்டு செல்லும்
மஞ்சளை அரைத்து அம்மனுக்கு பூசக் க�ொடுக்க
வேண்டும். அப்போது அம்மனுக்கு ஏற்கெனவே
சாத்தியதை நமக்குத் தருவார்கள். அதை நம்பி
நாம் உட்கொண்டால�ோ இட்டுக் க�ொண்டால�ோ
நிச்சயம் நாம் எண்ணியது நிறைவேறும். இது
நிறைய பேருக்கு நடந்ததை என் கண்கூடாகக்
கண்டிருக்கிறேன்.
நமக்கு என்ன குறையாக இருந்தாலும்
அம்மாவிடம் ச�ொன்னால் அது இரட்டிப்பாகுமே
தவிர குறையாது. அம்மாவும்
வேதனைப்படுவார்கள். அவர்களையும் நாம்
கஷ்டப்படுத்தியதாக இருக்கும். அதற்குப் பதில்
இறைவனிடம் சென்று முறையிட்டால் குறை
சீக்கிரமே தீருவத�ோடு மனமும் லேசாகி விடும்.
இறைவனை சரணடைவதை தவிர வேறு வழியே
நமக்கில்லை. நம்பி சரணடையும்போது அந்த
பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உள்ளது.
நன்றி! I
w மே 2022 37 KAMAKOTI w May 2022
w மே 2022 38 KAMAKOTI w May 2022
fU¤J : vG¤J tot« :
rhujh ãufhZ uhÍ bt§fnlZ
சிவா வீடு
மீனா, சிவா அவர்களின் குழந்தை உதய் மற்றும்
சிவாவின் பெற்றோர் ராகா குடியிருப்பு H-101
என்ற எண்ணில் வசித்து வந்தனர். இது ஒரு
அழகான குடியிருப்பு. குடியிருப்பின் முகப்பில்
கட்டிடத்தைக் கட்டியவர் தனது எண்ணங்களை
அதில் கல்வெட்டாக செதுக்கியிருப்பார். அதில்,
இந்த குடியிருப்பில் குடியிருப்பவர்கள்,
நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்பதே
இதைக் கட்டும்போது என் கனவாக இருந்தது.
நான் நிறைய கட்டிடங்களைக் கட்டி அதை
வாங்குபவர்களும் இந்த க�ொள்கைகளுடன் குடும்ப
உறவுகளைப் பேணி மதித்து நடப்பவர்களாயிருப்பது
எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. பத்து
வருடங்களாக நான் என் வாடிக்கையாளர்களுடன்
த�ொடர்பிலேயே இருப்பதற்கு எனது
நல்லிணக்கமான வாழ்க்கை முறையே சான்று.
இப்போது எனது பெரிய திட்டமாக ஒரு ‘காலனி’
கட்டுகிறேன். அதில் வசிக்கப் ப�ோகும் மக்களும்
w மே 2022 39 KAMAKOTI w May 2022
இசைவ�ோடு
ஒத்து வாழ
வேண்டும் என்று
விரும்பினேன்.
அப்போதுதான்,
அனைத்து
குடியிருப்பிற்கும்
ராகத்தின்
பெயரை சூட்டலாம் என்று முடிவெடுத்தேன்.
குடியிருப்பிலுள்ள அனைவருமே இதிலுள்ள
க�ொள்கைகளைப் பின்பற்றி சந்தோஷமாக
இருந்தனர். நமக்கே எது நல்லது, எது கெட்டது
என்று தெரிந்தாலும், ஒரு நல்ல விஷயத்தை
த�ொடர்ந்து படிக்கவ�ோ அல்லது பார்க்கவ�ோ
நேரிட்டால், அதில் கவனம் சென்று அதன்படி
நடக்க முடியும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.
சிவா குடித்தனக்காரராக இந்த குடியிருப்பிற்கு
வந்தப�ோது வீட்டு உரிமையாளர் சில
விசித்திரமான கேள்விகளை அவரிடம் கேட்டார்.
உங்க சம்பளம் என்ன?
மனைவி வேலை பார்க்கிறார்களா?
எவ்வளவு சம்பளம் வருது? எதை எப்படி
கையாள்கிறீங்க?
உங்கள் இருவரின் அப்பா அம்மா என்ன
பண்றாங்க?
எங்க இருக்காங்க?
ஏன் அங்க இருக்காங்க?
என்று அடுக்கடுக்கான கேள்விகள்.
w மே 2022 40 KAMAKOTI w May 2022
ப�ொறுமையாக ஒவ்வொன்றுக்கும் பதிலளித்த
சிவாவை முறைத்தாள் மீனா.
வீட்டு உரிமையாளர் இவர்களுக்கு குடிக்க
தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்றிருந்த
சமயத்தில்,
‘‘என்ன அவர் பாட்டுக்கு தேவையில்லாமல்
ஒவ்வொரு கேள்வியா கேக்கறாரு. அவர்கிட்ட
அதெல்லாம் ச�ொல்ல வேண்டிய அவசியம் என்ன?
இங்கிதம் இல்லாம எப்படியெல்லாம் கேக்கறார்.
எனக்கு இந்த வீடே வேண்டாம்’’ என்று
க�ொதித்துப் ப�ோனாள் மீனா.
‘‘சரி விடு.... அவர் வந்ததும் பட்டும் படாம
பேசிட்டு கிளம்பிடலாம். எனக்கு அவர்
எல்லாத்துக்கும் மூக்கை நுழைப்பார்
ப�ோலிருக்கிறது’’ என்ற சிவாவிற்கு அவரின்
ப�ோக்கு பிடிக்காவிட்டாலும் அந்த வீட்டின்
அமைப்பு பிடித்திருந்தது. அவனுக்கு வாஸ்து
சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்ல ஞானமிருந்ததால்
அந்த வீட்டிற்கு வந்தால் எல்லாம் சரியாக நடக்கும்
என்று நம்பினான். அதனால் அந்த வீட்டை விட
மனமில்லை. இங்கேயே குடியிருக்கலாம் என
முடிவு செய்து விட்டான்.
பேச்சுவார்த்தை நடந்தப�ோது வீட்டு ச�ொந்தக்
காரருக்கு சிவாவின் நிலைமை நன்கு விளங்கியது.
சிவா தன் பெற்றோருக்குஒரே மகன் என்றும்,
தனது படிப்பிற்கே வங்கியில் கடன் வாங்கித்தான்
படித்தான் என்றும் மீனாவின் அம்மாவிற்கு
புற்றுந�ோய் என்பதால் விரைவிலேயே திருமணத்தை
நடத்த வேண்டும் என்ற காரணத்திற்காக
w மே 2022 41 KAMAKOTI w May 2022
சீக்கிரமே மணமுடித்து விட்டான் என்றும் தெரிந்து
க�ொண்டார். மணமான ஒரு வருடத்திலேயே
உதய்யும் பிறந்து விட்டான். பேரனை பார்த்ததில்
இரண்டு பெற்றோருக்கும் மகிழ்ச்சி.
சிவா தன் பெற்றோர�ோடு மீனாவின்
பெற்றோரையும் தன்னிடத்திலேயே வைத்துக்
க�ொள்ள ஆசைப்பட்டதற்கு இரண்டு காரணம்
இருந்தது. மீனாவின் பெற்றோர் ஊருக்கு வெளியே
கிராமத்தில் வசித்ததால் ப�ோய் வருவதற்கு செலவு,
பராமரிப்பு செலவு என்று எல்லாமே அதிகமாக
இருந்தது. இரண்டாவது, பெற்றோர்கள் இருவரும்
கூடவே இருந்தால், வீட்டையும் குழந்தையையும்
பார்த்துக் கொள்வார்கள். இருவரும் வேலைக்குப்
ப�ோனால் வங்கிக் கடனை சீக்கிரம் அடைக்கலாம்.
இவ்வாறு பல ய�ோசனைகள்...
இவர்களது நிதி நெருக்கடிகளைப் புரிந்து
க�ொண்ட வீட்டு உரிமையாளர் அவர்களை
அணுகிய முறை அவர்களுக்கு இன்ப
அதிர்ச்சியைக் க�ொடுத்தது!
ஒருநாள் இவர்களின் வீட்டுக்கு வந்த வீட்டு
உரிமையாளர், ‘‘சிவா... உன்கிட்ட உரிமையா சில
விஷயங்கள் பேசலாமா?’’
‘‘தாராளமா சார்’’
‘‘வாடகை அதிகமா? அதை தருவதில் உனக்கு
சிரமமிருக்கா?’’
‘‘அடடா.... இவர் சுத்தி வளைச்சு என்ன பேசப்
ப�ோறார�ோ தெரியலையே...’’ என்று ய�ோசித்தபடி
மண்டையை சொறிந்தான் சிவா.
(த�ொடரும்)
w மே 2022 42 KAMAKOTI w May 2022
உண்மையான பக்தியின்
வெவ்வேறு நிலைகள்
- $b#naªâu [uÞtâ
ÞthÄfŸ mUSiu
த�ொகுப்பு : fÇfhy‹
சம்பந்தர், அப்பர்,
சுந்தரர் பாடிய
தேவாரத் திருத்தலங்கள்
172. திருக்கடிக்குளம்
(கற்பகநாதர்குளம், கற்பகனார் க�ோயில்)
வேண்டும் வரம் தரும்
ஸ்ரீகற்பகநாதர் திருக்கோயில்
�ொடிக�ொள் மேனிவெண்ணூலினர் த�ோலினர்
ப
புலியுரிய தளாடை
க�ொடிக�ொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு
குரைகழல் சிலம்பார்க்கக்
கடிக�ொள் பூம்பொழில் சூழ்தருகடிக் குளத்து
உறையும் கற்பகத்தைத்தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியாரை
முன்வினை மூடாவே.
20 81 KAMOTI May20
என்று திருக்கடிக்குளத்தில் க�ோயில்
க�ொண்டுள்ள இறைவன், அடியார்களுக்கு
அருள் வழங்கும் திறத்தை திருஞானசம்பந்தர்
இத்தலம் குறித்த தமது தேவாரத் திருப்பதிகத்தின்
முதல் பாடலில் ப�ோற்றிப்பாடி பரவசமடைந்துள்ளார்.
‘‘திருநீறு அணிந்த திருமேனியரான ஈசன் தன்
திருமார்பில் வெண்ணூலான முப்புரிநூலினை
அணிந்தவர். க�ொடிய யானையின் த�ோலை
உரித்துப் ப�ோர்வையாகப் ப�ோர்த்திய அப்பெருமான்
புலித்தோல் ஆடையை உடுத்தியவர்.
இடபக்கொடியை உடையவரான அவர் தன்
திருவடிகளில் ‘கிணின்’ என்று பரல்கள்
ஒலித்திடும் வீரக்கழலையும் சிலம்பையும்
அணிந்தவர். நறுமணம் கமழும் பூஞ்சோலைகளால்
சூழப்பட்ட திருத்தலமான கடிக்குளத்தில் இனிதே
உறைந்தருளும் கற்பகநாதரான அப்பெருமானின்
திருவடிகளைப் பணிந்து வழிபடும்
மெய்யடியார்களுக்கு ஒருப�ோதும் முற்பிறப்புத்
தீவினைகள் துன்பம் தராது’’ என்று மேற்காணும்
பாடல் மூலம் புலப்படுத்தியுள்ள திருஞானசம்பந்தர்,
நான்காவது பாடலில், ‘‘அந்தப் ஈசனைச்
சீர்மிகுந்த செல்வன் எனப் ப�ோற்றிப் பணிந்து
த�ொழுதிடும் மெய்யடியார்களின் வலிய
தீவினைகள் யாவும் அழிந்தொழிவது உறுதி’’
என்றும் ஆறாவது பாடலில் ‘‘கடிக்குளத்து
இறைவனான கற்பகநாதரின் திருவடிகளைப்
பணிந்து போற்றித் துதித்து வழிபடுவ�ோருக்கு
தீவினைகள் பற்றித் துன்பம் தந்திடாது’’ என்றும்,
ஏழாவது பாடலில் ‘‘கடிக்குளத்தில் உறைந்தருளும்
இறைவனான கற்பகநாதரின் மட்டில்லா
வி 82 KAMOTI விMay2022
பெரும்புகழைப்
ப�ோற்றித் துதித்து
வழிபடு
பவர்களுக்கு
தீவினைகள்
ஒருப�ோதும்
அண்டித் துன்பம்
தராது’’ என்றும்,
ஒன்பதாவது
பாடலில் திருத்தலமாகிய கடிக்குளத்து இறைவன்
கற்பகநாதரின் சீர்மிகுந்த திருவடிகளைப்
ப�ோற்றி வழிபடுவ�ோரை ஒருப�ோதும் வலிய
தீவினைகள் வந்தடையாது’’ என்றும்
புலப்படுத்தியுள்ளார்.
இத்தலத்து இறைவன் அடியார்களின் முற்பிறவி
தீவினைகளை அழிந்தொழியச் செய்வத�ோடு
இப்பிறவியிலும் தீவினைகள் அண்டாமல் செய்யும்
அருள் திறத்தை திருஞானசம்பந்தர்
புலப்படுத்தியுள்ளதை எண்ணி மகிழ்ந்து
அனைவரும் நல்லவர்களாக வாழ்ந்து பாவங்கள்
அண்டாது உய்வடையலாம்.
கடிக்குளம் தலம் தற்போது கற்பகநாதர்குளம்
என்றும் கற்பகனார் க�ோயில் என்றும் வழங்கப்
படுகிறது. இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில்
உள்ளது. திருத்துறைப்பூண்டியில் இருந்து
த�ொண்டியக்காடு செல்லும் சாலையில் சென்றால்
சுமார் 15 கி.மீ. த�ொலைவில் திருக்கடிக்குளம் தலம்
உள்ளது. திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை,
பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய
ஊர்களிலிருந்து இத்தலத்திற்கு சென்றுவர
வி 83 KAMOTI விMay2022
பேருந்து வசதிகள் உள்ளன. தேவாரப்பாடல் பெற்ற
திருஇடும்பாவனம் இத்தலத்திலிருந்து ஒரு
கில�ோமீட்டர் த�ொலைவில் உள்ளது.
இத்தலத்தின் ......
இறைவன் : கற்பகநாதர், கற்பகேஸ்வரர்,
இறைவி : செளந்தரநாயகி,
பாலசெளந்தரி, பாலசுந்தரி
ஸ்தல விருக்ஷம் : பலாமரம்
தீர்த்தம் : விநாயக தீர்த்தம் (கடிக்குளம்),
லக்ஷ்மி தீர்த்தம்
ஸ்தல விநாயகர் : கற்பகவிநாயகர், மாங்கனிப்
பிள்ளையார்
பாடல் : திருஞானசம்பந்தர்
கம 85 KAMOTI May2022
இத்தலத்தின் கற்பகவிநாயகர் இத்தல
இறைவனான கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி
பெற்றுள்ளார். அதனால் இவ்விநாயகர் மாங்கனிப்
பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார். இவரின்
ஸந்நிதி க�ோயிலுக்கு வெளியே அமைந்துள்ளது.
ஒரு அந்தணர் தன் தந்தைக்கு பிதுர் கடன்
செய்வதற்காக க�ொண்டு வந்த அஸ்தி
இத்தலத்திற்கு வந்தவுடன் கொன்றை மலராக
மாறியது என்று ஸ்தலபுராணம் உரைக்கின்றது.
திருஇடும்பாவனம் ஸ்தலத்தைப் ப�ோன்றே
பித்ருக்களுக்குப் பரிகாரம் செய்ய திருக்கடிக்குளம்
உகந்த ஸ்தலம்.
இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக எட்டுபட்டை
களுடன் அழகாக காட்சி தருகிறார். இவரை
தரிசித்து வழிபட்டால் அஷ்டலக்ஷ்மியின் அருள்
கிடைக்கும் என்பது ஐதீகம். இவரை அஷ்டமி
திதியிலும், சனிக்கிழமை புத ஹ�ோரையிலும்
குங்குமப் பூவுடன் வெண்ணெய் சேர்த்து காப்பிட்டு
வணங்கி னால் வேண்டும் வரம் கிடைக்கும்
என்பது ஐதீகம்
இக்கோயிலில் தினந்தோறும் நான்கு கால
வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆனித்திருமஞ்சனம்,
நவராத்திரி, கார்த்திகை தீபம், திருவாதிரை, தைப்பூசம்,
அன்னாபிஷேகம், மஹாசிவராத்திரி முதலிய
வழிபாடுகள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.
திருக்கோயில் அமைப்பு:
கற்பகநாதர் க�ோயில் மூன்று நிலை
ராஜக�ோபுரத்துடனும் ஒரு பிரஹாரத்துடனும்
த�ோற்றம் 26-7-1950
மறைவு 06-04-2022
எங்களுக்கு ஸகல விதங்களிலும்
உறுதுணையாக இருந்து வழிகாட்டிய
வேத சாஸ்திரவிற்பன்னர்,
ப்ரய�ோக சக்கரவர்த்தி
திரு. சங்கரநாராயணன்
என்கிற சங்கர சாஸ்திரிகள்
அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த
வருத்தங்களைத் தெரிவிக்கும்
கிரி குடும்பம் மற்றும் ஊழியர்கள்
வி ய 91 KAMOTI விMay2022
nydh jÄœthz‹
ckh ghyR¥ukÂa‹
இறைவனின் திருவடியும்
முத்தியும்
திருவடி ஞானம் சிவமாக்குவிக்கும்
திருவடி ஞானம் சிவல�ோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்திமுத்தியே
-திருமூலர் திருமந்திரம்
சீதா கல்யாணம்
பரம கருணாமூர்த்தியான
ஸ்ரீசீதாராமரின் கருணையால் வேதிக்
ப்ரச்சார் ஸன்ஸ்தானின் ஏற்பாட்டுடன்
சீதா கல்யாணம் சிறப்பாக
நடைபெற்றது. ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்ரேமி
அவர்களின் பிரதான சிஷ்யரான
ஸ்ரீயக்ஞ நாராயண பாகவதர்
நிகழ்த்திய 9 நாட்கள்
உபன்யாஸத்தின் சிறப்பம்சமாக சீதா கல்யாணத்தன்று
விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், உஞ்சவிருத்தி
ஆகியவை விமரிசையாக நடந்து முடிந்தது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து க�ொண்டனர்.
அய�ோத்தியாவில் இருப்பதைப் ப�ோன்றே உணர்ந்த
பக்தர்களின் உணர்வை அறிய முடிந்தது.
விகம 128 KAMOTI விMay2022
ராமாயணச் சிந்தனைகள்
உற்சாகமூர்த்தி
வெற்றியும் த�ோல்வியும் எல்லோருடைய
வாழ்விலும் வரும். த�ோல்வியைத் தற்காலிகத்
தடையாகக் கருத வேண்டும்; அதுவே முடிந்த
முடிவாய் எண்ணி ச�ோர்வுற்று சாய்ந்து விடக்கூடாது.
த�ோல்விச் சுமையை விடாமல் மனதில் சுமப்பது,
காலில் தைத்த முள்ளைப் பிடுங்கி எறியாமல் அதைப்
பார்த்துப் புலம்பிக் க�ொண்டிருப்பது ப�ோலாகும்!
எடுத்த காரியம் நிறைவேறவில்லை என்றால�ோ
உழைத்தும் பலன் கிட்டவில்லை என்றால�ோ,
உயிரை விடுவது என்பது அறிவுடைமை அல்ல.
எத்தனைய�ோ துறைகளில் எத்தனைய�ோ த�ோல்வி
கண்டவர்கள், த�ொடர்ந்து முயன்று உழைத்து
இறுதியில் வெற்றி சிகரத்தை எட்டிப் பிடித்த
நிகழ்வை சரித்திரங்கள் படம் பிடித்துக்
காட்டுகின்றன.
இனி ராமாயணத்துக்குவருவ�ோம்!
ஸீதா தேவியைத் தேடிக்
கண்டுபிடிக்க ராமரின் கட்டளைப்படி
நாலாதிசைகளிலும் வலிமையும்,
திறமையும் வாய்ந்த மாவீரர்களை
uhkjÄœfhªj‹ அனுப்பினான் சுக்ரீவன்.
கம2022 129 KAMOTI May20
தென்திசை ந�ோக்கி அங்கதன் மற்றும் பல
வானர வீரர்கள�ோடு புறப்பட்டுச் சென்றார்
ஆஞ்சநேயர்.
அடர்ந்த காடுகள், நதிக்கரை ஓரப்
பூஞ்சோலைகள், இப்படிப் பல இடங்களிலும் மிக
கவனமாக அலைந்து திரிந்து தேடிக் களைத்தனர்!
நாட்கள் பறந்தன; சுக்ரீவன் க�ொடுத்த கெடு
முடிய சில நாட்களே இருந்தன! இன்னும்
ஸீதையைக் காண முடியவில்லையே என்று
வானரங்கள் வருந்தின! பலன் இன்றிப்
ப�ோகவே நம்பிக்கை இழந்தன. நெஞ்சம்
கலங்கின! உடல் களைத்து, மனம் சலித்து ஓய்ந்து
உட்கார்ந்தன.
உயிரை விடுவது தவிர, இனி வேறு எதுவும்
செய்வதற்கில்லை என்று முனகின.
அப்போது ந�ொந்து ப�ோன மனதுடன் அங்கதன்
சொல்லலானான்:
(த�ொடரும்)
அக்ஷயதிருதியை!
இம்மாதம் அக்ஷயதிருதியை வருகிறது. இந்த
நாள் தானம் தர்மம் செய்வதற்குச் சிறந்த நாள்.
சுய முன்னேற்றத்தில் மற்றவர்களுக்குக் க�ொடுத்து
உதவுவது மிகவும் முக்கியமானதாகும்.
நாம் வெற்றி பெற வேண்டும், உயர்ந்த
நிலையை அடைய வேண்டும் என்றால் முதலில்
பிறருக்கு உதவ வேண்டும். வாழ்வில் எதையும்
பெற வேண்டுமென்றால், வெற்றியை அடைய
வேண்டுமென்றால் பிறருக்குக் க�ொடுத்தால்
மட்டுமே முடியும்!
“இதென்ன? மற்றவர்களுக்குக் க�ொடுத்தால்,
எனக்கு எப்படி வெற்றி கிடைக்கும்?” என்று
த�ோன்றலாம்.
நாம் மற்றவர்களிடம் க�ோபப்பட்டால் அவர்கள்
நம்மிடம் திரும்பிக் க�ோபப்படுகிறார்கள். நாம்
அவர்களிடம் அன்பாகப் பேசினால் நம்மிடம்
அன்பாகப் பேசுகிறார்கள் அல்லவா? அதுப�ோல
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஓர் எதிர்ச்
செயலை ஏற்படுத்துகிறது.
நாம் க�ொடுப்பதால், அதே அல்லது அதைவிட
பல மடங்கு நாம் திரும்பப் பெறுகிற�ோம். நாம்
விவம 141 KAMOTI விMay2022
மற்றவர்களுக்கு உதவினால், நமக்கு உதவி
தேவையான சமயத்தில் கேட்காமலேயே
கிடைக்கிறது! இதை நாம் அனுபவபூர்வமாக
உணரலாம்.
கிணற்று நீர் இறைக்க இறைக்க மேலும் மேலும்
ஊறும் அல்லவா? அதுப�ோல, க�ொடுப்பவர்களுக்கு
மேலும் மேலும் செல்வங்கள் வந்து குவியும்.
“நீங்கள் க�ொடுக்க வேண்டியதைக் க�ொடுத்து
விடுங்கள்; அது உங்களுக்கே திரும்பி வரும்.
ஆனால் அதைப் பற்றி இப்போது நினைக்க
வேண்டாம். அது ஆயிரம் மடங்காகத் திரும்பி
வரும். கவனத்தை அதன் மீது செலுத்தக் கூடாது.
ஆதலால், முழு மனத்துடன் க�ொடுங்கள்.
கதிரவன் கடலிலிருந்து நீரை முகர்ந்து
க�ொள்வது, அதனை மழையாகத் திரும்ப அளிப்ப
தற்கே. க�ொள்வதற்கும் க�ொடுப்பதற்கும் ஆனத�ோர்
எந்திரம் மட்டுமே நீங்கள். க�ொள்வது
க�ொடுப்பதற்கே.
வி 142 KAMOTI விMay2022
எனவே, பிரதி பலனாக எதனையும் வேண்டா
தீர்கள். ஆனால் க�ொடுக்கும் அளவு பெருகப்
பெருக உங்களுக்கு வருவதும் அதிகமாகும்.
இந்த அறையிலிருந்து காற்றை வெளியேற்றும்
அளவு விரைவாக வெளியே உள்ள காற்றால் இது
நிரப்பப்படும். ஒரு துவாரமும் விடாமல் எல்லா
கதவுகளையும் மூடினால் உள்ளேயிருப்பது
அப்படியே இருக்கும். ஆனால் வெளியே உள்ளது
ஒருப�ோதும் உள்ளே வராது. உள்ளே இருப்பது
தேங்கி நின்று, கெட்டுப் ப�ோய், நஞ்சு
நிறைந்ததாகி விடும்.
ஆறு ஓயாமல் கடலினுள் பாய்ந்து க�ொண்டே
இருக்கிறது, ஓயாமல் மீண்டும் நிரப்பிக் க�ொண்டும்
உள்ளது” - சுவாமி விவேகானந்தர். ‘செயலும்
அதன் ரகசியமும்’ கலிப�ோர்னியா 4 ஜனவரி 1900.
க�ொடுப்பது என்றால் பணமாகத் தான்
க�ொடுக்க வேண்டும் என்றில்லை. பல வழிகளில்
தானம் செய்யலாம்.
கல்வி: ‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’
என்றார் பாரதியார். கல்வி தானம் என்பது
தானங்களிலேயே மிகவும் சிறந்த
தானம். பெற்றுக் க�ொள்பவருக்கு
அதிகரிக்கும் அதே சமயத்தில்
க�ொடுப்பவருக்கும் கல்வி
அறிவு சிறிதளவும் குறையாது!
நேரம்: வயதானவர்கள், தீராத
ந�ோய் வாய்ப்பட்டவர்கள்,
ஆகியவர்களுடன் பேசுவது.
அவர்கள் குறைகளைக் காது
வி 143 KAMOTI விMay2022
க�ொடுத்துக் கேட்பது
ப�ோன்று நமது நேரத்தை
மற்றவர்களுக்கு
உபய�ோகமாகச்
செலவிடலாம். இன்று பல
பேர் பல விதமான மன
உளைச்சலுக்கு
ஆளாகியிருக்கின்றனர். சிறிது
நேரம் சந்தோஷமாகப்
பேசினாலே அவர்கள்
பிரச்சினை எல்லாம் தீர்ந்து விடும்.
உணவு, உடை மற்றும் ப�ொருள்: இன்றைய கால
கட்டத்தில் பல ப�ொருட்கள் வீணாகிறன. பிறந்த
நாள் விழா, புத்தாண்டு மற்றும் பல்வேறு சர்வதேச
தினக் க�ொண்டாட்டங்களில் பல விதமாகப் பணம்
மற்றும் ப�ொருட்கள் வீணாகின்றன. இவற்றை
இல்லாதவர்களுக்கு வழங்கலாம். பல பேர் பீர�ோ
முழுவதும் உடைகள் மற்றும் காலணிகள் வைத்துக்
க�ொண்டு மேலும் மேலும் புதிதாக வாங்குகிறார்கள்.
இவற்றைத் தவிர்த்துப் பிறருக்கு உதவலாம். உதவி
யாருக்கு வேண்டுமானாலும் யார் மூலமாகவும்
சென்றடையலாம்.
உடல் உழைப்பு: ராமர் பாலம் கட்ட அணில்
சிறியதாக உதவி செய்த மாதிரி ஏதாவது வழியில்
மற்றவர்களுக்கு உதவி செய்யலாம்.
முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுங்கள்.
முன்னேற்றமும் வெற்றியும் உங்களைத் தேடி
வரும்.
அடுத்த மாதம் சந்திப்போம்
ரிஷபம்:
(கிருத்திகை 2, 3, 4பாதங்கள்,
ர�ோஹிணி, மிருகசீரிஷம் 1, 2பாதங்கள்)
இந்த மாதம் வீட்டுக்குத் தேவையான
ப�ொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிரயாணங்களால்
லாபமிருக்கும். எதற்கும் பிடிவாதம் பிடிக்க வேண்டாம். சுப
விரயமிருக்கும். ச�ொத்து சேரும். வீடு மாறும்
வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் சிறிதளவே லாபமிருந்தாலும்
நஷ்டத்திற்கு வாய்ப்பில்லை. அனைத்தும் நல்லவிதமாக
நடக்க ஷீர்டி ஸாயிபாபாவை பூஜிக்கவும்.
அதிர்ஷ்ட எழுத்து: C, P. நிறம்: மஞ்சள். தெய்வம்: ஐயப்பன்.
சந்திராஷ்டமம்: கிருத்திகை–18, 19; ர�ோகிணி–19;
மிருகசீரிஷம்–19, 20 தேதிகள்.
ரம2022
வி 146 KAMOTI வி May 2022
மிதுனம்:
(மிருகசீரிஷம் 3, 4பாதங்கள், திருவாதிரை,
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
இந்த மாதம் பணம் சம்பாதிக்க
பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். இருந்தாலும் எந்தவித
பலனுமிருக்காது. உறவினர், குழந்தைகள், வாழ்க்கைத்
துணையால் நலமுண்டாகும். திருமணமாகாதவருக்கு
விரும்பிய மணவாழ்க்கை அமையும். லலிதா திரிபுரசுந்த
ரியை பூஜித்து வந்தால் தடைகள் அனைத்தும் நீங்கும்.
அதிர்ஷ்ட எழுத்து: C,V. நிறம்: சிவப்பு. தெய்வம்: துர்க்கை.
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம் –19, 20; திருவாதிரை–21;
புனர்பூசம்–22 தேதிகள்.
கடகம்:
(புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய)
இந்த மாதம் இனம்புரியாத பயம் ஏற்படும்.
ஆர�ோக்கியத்தில் அக்கறை தேவை. வியாபாரம்
அனுகூலமாக இராது. உத்திய�ோகத்தில் உடன் பணிபுரிபவர்
களால் பிரச்சனையிருப்பதால், நம்பகமான விஷயங்களை
யாரிடமும் பகிர்ந்து க�ொள்ள வேண்டாம். க்ஷேத்திராடனம்
செல்லும் வாய்ப்பு கிட்டும். கிராம தேவதையை பூஜித்து வர
பிரச்சனைகள் விலக ஆரம்பிக்கும்.
அதிர்ஷ்ட எழுத்து: G, H. நிறம்: பச்சை. தெய்வம்:
ஸ்ரீகிருஷ்ணர்.
சந்திராஷ்டமம்: புனர்பூசம்–22; பூசம்–23; ஆயில்யம்–24
தேதிகள்.
சிம்மம்:
(மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம்)
இந்த மாதம் உங்களுடைய செயல்பாடுகளில்
நிறைய முன்னேற்றமிருக்கும். மன�ோபலத்தால்
நிறைய விஷயங்களை சாதிப்பீர்கள்.
பிரயாணத்தில் லாபமிருக்கும். ஆர�ோக்கியம்
சிறப்பாக இருக்கும். கணபதி ஹ�ோமம் செய்வது நல்லது.
ரம
வி 147 KAMOTI விMay2022
உறவினர்களின் ஆதரவு இருக்கும். புதிய வேலையில்
ப�ொறுப்பேற்றுக் க�ொள்வதற்கு ஏற்ற நேரம்.
அதிர்ஷ்ட எழுத்து: F, B. நிறம்: ஊதா. தெய்வம்:
பெருமாள்.
சந்திராஷ்டமம்: உத்திரம்–1, 27; ஹஸ்தம்-1, 28;
சித்திரை-2, 29 தேதிகள்.
கன்னி:
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம்,
சித்திரை 1, 2 பாதங்கள்)
இந்த மாதம் உங்களுடைய நிலைமையை
புரிந்து க�ொண்டு அதற்கேற்ப நடப்பது நன்மையைத் தரும்.
புதுப்புது விஷயங்களை கற்றுக் க�ொள்வீர்கள், ஆடை,
ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஒப்பந்தங்களில்
கைய�ொப்பமிடும் ப�ோது கவனம் தேவை. பிரயாணங்களை
மேற்கொள்வீர்கள். ஆர�ோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட எழுத்து: F, B. நிறம்: ஊதா. தெய்வம்:
பெருமாள்.
சந்திராஷ்டமம்: உத்திரம்–1, 27; ஹஸ்தம்-1, 28;
சித்திரை-2, 29 தேதிகள்.
துலாம்:
(சித்திரை 3, 4 பாதங்கள், ஸ்வாதி,
விசாகம் 1, 2, 3 பாதங்கள்)
இந்த மாதம் உங்களுக்கு கிரஹ நிலை
சாதகமாக உள்ளதால் அனைத்து காரியங்களும்
சிறப்பாகவே நடக்கும். வழக்கு விவகாரங்களில் ஜெயமுண்
டாகும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தர்ம
சிந்தனை மேல�ோங்கும். கடன் சுமை நீங்கும். வியாதிகள்
குணமாகும். பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். அனுகூல
மான மாதமிது.
அதிர்ஷ்ட எழுத்து: C, V. நிறம்: ஊதா. தெய்வம்: லக்ஷ்மி
நாராயணர்.
சந்திராஷ்டமம்: சித்திரை-2, 29; ஸ்வாதி–3, 30;
விசாகம்-4, 31 தேதிகள்.
கம
வி 154 KAMOTI விMay2022
திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்பாணர்,
முருக நாயனார் குருபூஜை.
19-05-2022 வியாழன்:
சங்கடஹர சதுர்த்தி. சைபர் ஸ்வாமிகள் ஜெயந்தி
விழா.காஞ்சி வரதர், சிறுவாச்சூர் ஸ்ரீமதுர
காளியம்மன் திருத்தேர்.
20-05-2022 வெள்ளி:
தருமை திருத்தேர். காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ
பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
21-05-2022 சனி:
சிரவண விரதம். காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ
பெருமாள் ஆளும் பல்லக்கில் தீர்த்தவாரி.
22-05-2022 ஞாயிறு:
திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர், ஸ்ரீகாந்திமதி
யம்மன் தாமிரபரணியில் திருமஞ்சன ஸேவை.
23-05-2022 திங்கள்:
சங்கரன் க�ோயில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்
பாவாடை தரிசனம்.
24-05-2022 செவ்வாய்:
திருவண்ணாமலை ஸ்ரீமாத்ரு பூதேஸ்வரர் மஹா பூஜை.
25-05-2022 புதன்:
தத்தாத்ரேயர் ஜெயந்தி. திருநள்ளாறு வைகாசி
விசாக தீர்த்தம்.