நிறைகாணா தவிக்கின்ற பொன் வண்டைப் போல மாலின்முக மண்டலத்தே நோக்கும் நின் விழிகள் மயங்குவதும் ரசிப்பதுவும் ஆசை வெட்கம் துள்ள பாலித்துத் தியங்குவதாய் பார்வையது கொண்டாய் பாற்கடலின் திருமகளே நினது கடைப் பார்வை சால்புடைய என்மீது தவழவிட வேண்டும் சகல நலன் அப்பார்வை தந்துவிடும் தாயே. 2
அரி துயிலும் முகுந்தனையே இமையால் நோக்கி
ஆனந்தப் பெருமிதப்பில் ஆழ்த்துகின்றாய் தாயே வரிகாமன் வசம்பட்டு நின் கருவிழிகள் இரண்டும் வட்டாடி நிலைபுரண்டு இமையோடு சேர்ந்து புரிசெவியின் அருகுவரை போய்வந்து மீண்டு பூரித்து நீண்டு விட்டதென விளங்கும் பிரிவிழியின் கருணை நிறை ஒளி நிறைந்த பார்வை ் ன் மேல் இன்பத்தில் ஆழ்த்துக எந்நாளும். 3 வீழ்நதெ
திருமாலின் திருமார்பில் திகழ் துளபமாலை
தேவி நீ நோக்க இந்திர நீலமதாய் மாறும் பெருமாளின் விருப்பமதை நிறைவேற்றும் வலிமை பெற்றுத் திகழ்கின்றது நின் ஒளி நிறைந்த பார்வை திருமகளே கடைக்கண்ணால் எனை நோக்குவாயேல் திருவுடனே மங்கலங்கள் எனைச் சரணம் செய்யும் பெருமனது கொண்டு கடைக் கண்ணதனால் நோக்காய் பேரின்பச் சுகமெல்லாம் எனைச் சாரட்டும் தாயே. 4
நீருண்ட மேகமெனத் திகழும் திருமாலின்
நெடிய திரு மார்பதனில் கொடி மின்னலென்ன சீருடனே விளங்கும் நின் திருவுருவம் தாயே செய்தவத்தால் பிருகுமுனி நினைமகளாய்ப் பெற்றான் பாருலக மெலாம் நின்னைத் தாயெனவே வாழ்த்தி பக்தியுடன் தொழுகின்றார் நினது திருவுருவை சார்நத ் ிட்டேன் நின்னடியைச் சகல நலமருள தாயே என்மீது கடைக் கண் வைப்பாய் நீயே. 5