Professional Documents
Culture Documents
தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது
தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது
நரகாசுரனின் கதை:
நரகாசுரனை கொன்ற நாளை நாம் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றோம்.
பூமா தேவியின் புதல்வன் நரகாசுரன். அவனின் தந்தை வராகன். இவன் வானா சுரனுடன் சேர்ந்து மக்களை கொடுமைப்படுத்தி
வந்தான். மிக சக்தி வாய்ந்தவனாக இருந்த நரகாசுரன் மண்ணுலகத்தை தாண்டி விண்ணுலகத்தையும் ஆள வேண்டும் என ஆசை
கொண்டான்.
வீட்டில் இருள் நீங்கி ஒளி பெற தீபாவளி அன்று லட்சுமி பூஜையை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
இதற்காக அரசவை கூட்டி தன் முடிவை தெரிவித்தார். ஆனால் அவரது அமைச்சர் ஒருவர், தேவர்கள் சாகா வரம் பெற்றவர்கள்.
அவர்களை வெல்வது சாதாரண விஷயம் அல்ல. அதனால் நீங்களும் சாகா வரம் பெற வேண்டும். அதன் பின்னர் மூன்று உலகத்தையும்
நீங்கள் எளிதாக கைப்பற்றலாம் என கூறினார்.
இதையடுத்து, தன் தாயின் கையால் தான் இறக்க வேண்டும். எந்த ஒரு தாயும் தன் மகனை கொல்ல மாட்டாள் என்பது தான் அவனின்
யோசனை. அந்த வரத்தை பிரம்மன் வழங்கினார்.
இறவா வரம் பெற்றதாக எண்ணிய நரகாசுரன் மேலும் தன் கொடுமையை அதிகரித்தான்.நரகாசுரன் தேவலோகத்திற்கு சென்று
கைப்பற்றினான். 16,100 தேவர்களையும் கைது செய்தான். அதோடு இந்திரனின் தாய் அதிதியின் காதணியையும் பறித்து சென்றனர்
அசுரர்கள்.
அங்கிருந்து தப்பிச் என்ற இந்திரன், தங்களை காப்பாற்றுமாறு மகா விஷ்ணுவிடம் வேண்டினர். தற்போது கிருஷ்ண அவதாரம் நான்
எடுத்துள்ளேன். அவரிடம் முறையிடுங்கள் அவர் உங்களுக்கு உதவுவார் என்றார்.
நரகாசுரனுடன் போரிட்ட கிருஷ்ணன், அவனது சேனைகளைத் துவம்சம் செய்தார். ஆனால் நரகாசுரனின் தாயான பூமாதேவி தான்,
இந்த அவதாரத்தில் சத்யபாமாவாக,கிருஷ்ணரின் மனைவியாக அவதரித்திருந்தார்.
நரகாசுரனின் சேனையால் தான் காயமடைந்து மயக்கமானது போல் கிருஷ்ணன் நடித்தார். இதனால் மிகவும் கோபமடைந்த சத்யபாமா,
நரகாசுரன் மீது அம்பு தொடுத்தான்.
சத்யபாமாவின் அம்பு துளைக்க நரகாசுரன் மண்ணில் சாய்ந்து உயிரை துறந்தான். அவன் சாகும் தருவாயில் தான் நரகாசுரனுக்கு
பூமாதேவியின் அவதாரம் தான் சத்திய பாமா என்றும், நரகாசுரன் தான் அவனின் மகன் என்றும் சத்யபாமாவும் உணர்ந்தார்.
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு பின் உள்ள பல்வேறு உண்மைகள் தெரியுமா?
தியாகத்திற்கான பண்டிகை:
தன் மகன் என்றும் பாராமல், மக்களை கொடுமைப் படுத்திய நரகாசுரனைக் கொன்ற சத்திய பாமாவின் தியாகத்தை போற்றும்
விதமாகவும், நரகாசுரன் கொல்லப்பட்ட தினத்தைத் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது.
சுனந்தா சர்மா போன்ற பாடகர்களுடன் பாடலாம்!