Professional Documents
Culture Documents
Джатакам 6
Джатакам 6
ஸப்தரிஷிநாடி
3. இந்த ஜாதகன் செனன யோகம், அழகிய தந்தையின் யோகம்.
தாயின் யோகம், இவன் உடன்பிறந்தவர்கள், மனைவி, மக்கள் ஆகியோர்
செய்திகள், இவனுடைய முன்சென்மம், மறுசென்மம் முதலான யாவற்றை
யும் இந்த சாஸ்திரத்தில் நாங்கள் சொல்லுகின்றோம். கரும்பு போன்ற
இனிய சொற்களைப் பேசும் பார்வதி தேவியே! கேட்பாயாக.
4. தந்தையின் துணையாண் கானான் சத்தியு மைவ ராகும்
பிந்தியுஞ் சிலது சேதம் பிதாவு மே தனியாய் வாழ்வன்
எந்தகா ரணத்தி னாலே இவன் துணை ஆண்பால் காணான்
'மந்தனு நவத்தி லாக "மழைக்கோளு மதற்கு மூன்றில் ;
4. தந்தையின் உடன் பிறந்தவர்களில் ஆண்கள் எவருமில்லை. பெண்
கள் ஐவர். அவர்களிலுஞ் சிலர் சேதமடைவர். தந்தை தனியாக வாழ்
வான். எந்தக் காரணத்தினால் தந்தைக்கு யுடன் பிறந்த சகோதரர்கள் இல்லை?
சனி ஒன்பதாமிடத்திலும், சுக்கிரன் அதற்கு மூன்றா மிடமாகிய மீனராசியில்,
5. இருப்பதால் சொன்னோம் யாங்கள் இயம்புவோம் பிதாகு
(ணத்தை
2. சுக்கிரன்,
### book_page 111
விருஷப லக்னம்-ஜாதகம் 6
75
ஸப்தரிஷிநாடி
10. இவனுடைய உடன் பிறந்தானும் மன வருத்தமடைந்து கூறிய
சாபத்தைக் கேளுங்கள். எனக்குச் சேரவேண்டிய மதிப்புள்ள பாகத்தைக்
கொடுக்காமல், கடனை மாத்திரம் கொடுத்தவனாகிய பாவியே! இனி வரப்
போகும் பிறவியில் என்னைப்போன்ற சகோதரரில்லாமல், மனைவியும்
இறந்து, வனத்தில் வாழ்வதுபோலத் தனித்து வாழ்வாயாக ;
11. இன்னமும் பலவார் சொல்லி இறைத்தனன் தெருத்தூள்
(தானும்
ஸப்தரிஷிநாடி
17. தனக்கு உடன்பிறந்த ஆண் துணையில்லாதவன். பெண்கள் ஐவர்
ஆண்பால் துணை தோஷம் ஏற்படும் என்று சொன்னோம். இவன் தனியாக
வாழ்வான். என்ன காரணத்தினால் இவனுக்கு சகோதரர் இல்லை ?
கொடுமையாக லக்கினத்துக்கு ஆறாமிடத்தில் ராகு தங்கியிருப்பதால் ஆண்
துணை யில்லை யென்று சொன்னோம், நாங்கள்.
18. இதுவன்றி நாலோன் தானும் ஈராறி லிருப்ப தாலே
மதிமுக மன்னை யாண்டுள் மரிப்பளா மென்று சொல் வோம்
வதிபதி குணமெவ் வாறு அறிவிப்பீர் முனியே நீர்தாம்
துதிசெய்தோர்க் குதவு வாளாம் துன்பங்க ளெவர்க்கு
[மெண்ணாள்.
வி-6
### book_page 118
ஸப்தரிஷி நாடி
32. ஐம்பத்தாறாம் வயதில் எமனுலகம் புகுவாள். தனக்குப் பிள்ளை
கள் பிறந்தும் நிலையாமல் மடியும். அதற்குக் காரணமான தோஷக்கை:
சொல்லுங்கள். குரு ஒன்பதாமிடத்தில் நீசச
் மாகவும், புத்திர ஸ்தானத்துக்
குரியவனான புதன் விரயஸ்தானத்திலும் இருப்பதால் பிள்ளைகள் பிறக்க
தோஷமாம் என்று சொன்னேன். இந்த ஜாதகனுடைய முற்பிறப்பைப்
பற்றிக் கேளாய்.
33. தென் திசை யாழி தன்னில் செனித்தனன மறையோனாக
பொன்பணி அதிக முண்டாய்ப் புகழுடன் வாழும் நாளில்
கன்னிகை விதவை போகம் கலந்துமே கருவு தங்க
பின்னங்கள் செய்தா னென்றோ புக்கித்து அந்த தோடம்
33. தென்தேசத்தில் கடற்கரைக் கருகிலுள்ள ஒரு ஊரில் அந்தணனாக
உதித்தான். செல்வங்கள் அதிகமாகிப் புகழுடன் வாழும்போது விதவை
யுடன் கூடியதால் அவளுக்குக் கர்ப்பமுண்டாகி, அதைக் கலைத்தபோது
அந்தத் தோஷம் இவனைச் சார்ந்தது.
34. காலன் தன் நாட டைந்து கஞ்சனால் வரையப் பட்டு
சீலமில் லாத ரெட்டி குலமதில் உதிப்பா னாகும்
சாலவே பிருகு சொல்வார் சதுர்மறை குலமுன் சென்மம்
பாலகன் குலந்தாழ் வாகப் பிறந்தகா ரணங்கள் சொல்வாய்.
34. பின்பு மரணமடைந்து பிரமனால் படைக்கப்பட்டு ஒழுக்கமில்லாத
ரெட்டியார் குலத்தில் பிறந்தான். பிருகு முனி சொல்லுவார். இவன் முன்
சென்மம் அந்தணர் குலம். இப்பிறவியில் இவன் தாழ்ந்த குடியில் பிறந்த
காரணங்களைச் சொல்வாய்.
35. முன்சென்மம் வேதம் தன்னை முயலாத தோடம் ஒன்று
கன்னிகை விதவை யாகக் கலந்ததால் குலந்தாழ் வாச்சு
தன்சுத ருதிக்கும் தீதாம் சாற்றுவீ ரதற்குச் சாந்தி
மன்னவன் தில்லைக் கேகி மாரனை எரித்தோ னுக்கு.
35. முற்பிறப்பில் வேதங்களைக் கற்காத தோஷத்தாலும் விதவையைக்
கூடிய தாலும், இப்பிறப்பில் குலம் தாழ்வாயிற்று. தன் குமாரர்களுக்கும்
தீமையாம். அதற்குச் சாந்தியைச் சொல்லுவீர். ஜாதகன் சிதம்பரம்
சென்று மன்மதனை எரித்த சிவபெருமானுக்கு,
36. சகஸ்திர அர்சச
் னை செய்து சதுர்மறை மாதுக் கேதான்
பகையிலா விடமும் கந்தம் பணம்சீலை அவர்க்குத் தந்து
மிகுதவம் புரிவோ ரான வேதியர் தசம்பே ருக்கு
உரிமையா யன்ன மீய ஒதுங்கிடும் வினைகள் தாமே.
### book_page 119
83
விருஷப லக்னம்-ஜாதகம் 6
36. ஆயிரம் அருச்சனைகள் செய்து, அந்தணர்குல மங்கைக்கு சந்த
ணம் பணம் ஆடைகள் முதலாயின தந்து, மிகுந்த தவம் செய்கின்ற பத்து
அந்தணர்களுக்கு நல்ல அன்னமும் அளிக்க, தீவினைகள் தொலையும்.
37. மதலைக ளாண்பால் ரெண்டு மாதுவு மவ்வார் தீர்க்கம்
இதுநிற்க இவனின் யோகம் இயம்புவோ மினிமே லாகப்
பதியது மூன்று செய்தும் பாருகள் மூவூர் சேர்ப்பன்
நிதியது பெருக்கம் செய்வன் நேமியோர்க் குதவி செய்வன்.
37. புத்திரர்கள் இரண்டு பேர். பெண்களும் இரண்டு பேர். நிற்க,
இனிமேல் இவன் யோகங்களை உரைப்போம். மூன்று வீடுகள் கிடைக்கும்.
மூன்று ஊர்கள் சேர்ப்பான். செல்வங்களை விருத்தி செய்வான். அண்டின
வர்க்கு உதவிகள் புரிவான்.
38. தந்தைக்கு மேலாய் வாழ்வன் திருப்பணி செய்வா னாகும்
முந்தின புகழு மேற்பன் மொழியதைக் காப்பா னாகும்
வந்தவர்க் கன்ன மீவன் வழக்கோரை நசிக்க வைப்பன்
நிந்தைக ளேற்கா னாகும் நிருபர்கள் நேசம் கொள்வன்.
38. தகப்பனாருக்கு மேலாக மதிப்புடன் வாழ்வான். திருப்பணிகள்
பல செய்வான். முற்பட்ட பெருமை களை அடைவான். சொன்ன சொல்
லைக் காப்பான். பசியென வந்தவர்களுக்கு அன்னம் ஈவான். வம்பர்களைத்
தொலைப்பான். பழிச் சொற்களை ஏற்கமாட்டான். அரசர்கள் நட்பைக்
கொள்ளுவான்.
39. யோகமெவ் விதமாய்ச் சொன்னீர் உரைப்பரீ ்க ளந்தச் சங்கை
1 ஆகமன் காரி திங்கள் அணுகிட நவத்தி லாக
நாகமு மாறி லேற 'லக்கினத் தோனு முச்சம்
பாகமா யிருப்ப தாலே பாரிசாத யோகம் ஒன்று.
39. யோகம் ஏற்படும் என்று எப்படிச் சொன்னீர்கள் ? அந்தச் சர்
தேகத்தை விளக்கிக் கூறுங்கள். குரு, சனி, சந்திரன் ஆகியோர் ஒன்பதா
மிடத்தில் தங்கவும் ராகு துலாத்தில் நிற்கவும் சுக்கிரன் மீனராசியில் உச்ச
மாக இருப்பதாலும், பாரிசாத யோகம் ஒன்று.
40. தர்மகர் மாதி யோகம் தாமரை யோக மொன்று
திருதிய யோகத் தா லே சேயனும் சுகமாய் வாழ்வன்
அரசருக் கிவன்சொல் மேன்மை அறம்செய்வன் பெருமை
[யேற்பன்
1. குரு
2. ஈண்டு சுக்கிரன்
### book_page 120
ஸப்தரிஷிநாடி
40. தர்மகர்மாதிபதியினால் ஏற்படும் யோகம், தாமரை யோகம்
ஒன்று ஆக இம்மூன்று யோகங்களினாலும் இவன் சுகமாக வாழ்வான். அர
சர்களுக்கு இவன் சொல்லே மதிப்பாகும். தருமங்கள் செய்வான். பெருமை
கள் கொள்வான். பகைவர்களுடன் உறவாடி வெல்லுவான். குபேரனைப்
போல வாழ்வான்.
41. அறுபது ஒன்ப தாண்டில் ஆவணி மாதந் தன்னில்
நிறைபக்கம் சட்டி தன்னில் நிமலன் தன் னுடல மேகும்
மறுசென்மம் வேங்க டத்தில் வருகுவான் மறைகு லத்தில்
குறையிலா தவங்கள் செய்யும் கோதையே கேட்டி டாயே.
41. அறுபத்து ஒன்பதாம் வயதில் ஆவணி மாதத்தில் வளர்பிறைச்
சஷ்டியில் இவன் மரண மடைவான். மறுபிறவி வேங்கடத்தில் அந்தணர்
குலத்தில் உதிப்பான். குறையில்லாது தவம்புரியும் உமையே! கேட்பாயாக.
42. இதுமத்தில் சாத கர்க்கு எய்தாதோ மார கங்கள்
விதவித பிணி யனேகம் மேவிடும் கண்டம் போலே
மதிகுரு நவத்தில் தங்க வரும்வினை விலகு மென்றோம்
சதியிலா வயது தீர்க்கம் சங்கரி கேட்டி டாயே.
42. இந்த ஜாதகனுக்கு இடையில் மரணத்தைக் கொடுக்கக்கூடிய
வியாதிகள் ஏற்படாவோ ? பலவிதமான வியாதிகள் கண்டங்கள் போல ஏற்
படும். ஆனால், சந்திரனும் குருவும் ஒன்பதாமிடத்தில் தங்கியிருப்பதால்
ஏற்படக்கூடிய துன்பங்கள் விலகும். குற்றமில்லாமல் வயது தீர்க்கம்.
பார்வதியே! கேட்பாயாக.
43. உதித்திடுங் காலந் தன்னில் உத்திராடம் கடைபா தத்தில்
பதங்கன் தன் தசையி ருப்புப் பகருவோம் திங்க ளெட்டும்
இது முதல் பாகம் சொன்னோம் இயம்புவோம் பின்பா
[கத்தில்
அதிதியை யாத ரிக்கும் அம்பிகை யாளே கேளாய்.
43. செனன காலத்தில் உத்திராட நட்சத்திரம் நான்காம் பாதமாகும்.
சூரியமகாதசை இருப்பு எட்டு மாதங்கள் என்று சொல்லுவோம். இதுவரை
முதல்பாகக் கூறினோம். மற்றவற்றை இரண்டாம் பாகத்தில் சொல்லுவோம்.
அடைக்கலமென்று அடைந்தவர்களைக் காக்கும் அம்பிகையே! மேலும்
கேட்பாயாக.
### book_page 121