Professional Documents
Culture Documents
Джатакам 7
Джатакам 7
கேது
2. மகரராசி
### book_page 122
86
ஸப்தரிஷிநாடி
3. இவற்றிற்கு அருகில் திருமால் கோயிலுண் . அக்கோயிலுக்குக்
கிழக்கே சிவபெருமான் கோயில் இருக்கின்றது. விநாயகப் பெருமான் தென்
மேற்கில் வீற்றிருக்கின்றார். பெரிய முனியம்மன் கோயிலும் அங்குண்டு.
இந்த ஊருக்கு அருகில் நதியொன்று உள்ளது. அரசன் அரண்மனையும்
கிழக்குப் பக்கம் இருக்கின்றது. இவ்வாறான ஊரில் வாணியர் வமிசத்தில்
இந்தப் பெண் பிறப்பாள் என்று சொல்லுவோம்.
4. பிறந்தவ ளிவளின் யோகம் பேசுவோம் தந்தை யோகம்
சிறந்திடும் மாதுர் யோகம் செப்புவோம் துணைவர் யோகம்
உரைந்திடு புத்திர யோகம் உரைக்கின் றோம் முன்பின்
[சென்மம்
ஸப்தரிஷியாடி
மையான இளைய சகோதரன் ஒருவன் இவனுக்குண்டு என்று சொன் னாம்
அவனுடைய செய்தியைச் சொல்லுகின்றோம். அம்பிகையே! கேட்பாயாக.
11. மாநிறம் சமதே கத்தன் மருமமும் பெருமை காட்டும்
தேன்மொழி கூறு வானாம் சொல்லது இரண்டு முண்டு
ஆனவர் நேசங் கொள்வன் அழகுளான் செலவு செய்வன்
ஈனமாம் குணங்க ளுள்ளான் எதிரிக்கு அஞ்சா
[னென்றோம்.
ஸப்தரிஷிநாடி
ஆகிலு மதிக்கு மூன்றில் அருக்கனும் புந்தி சேரில்
பாகமாய் மாதுர் வாலே பெருகிற்று அந்தத் தோஷம்
தாகமாய் அந்தத் தோஷம் சாற்றுவீர் முனியே என்றன்
வேகமாய்ச் சொல்லு கின்றேன் வித்தகி கேட்டி டாயே
18. ஆயினும், மாதுர்காரகனான சந்திரனுக்கு மூன்றாமிடத்தில் சூரிய
னும், புதனும் சேர்ந்திருப்பதாலும் முற்பிறப்பில் இவள் தாய்க்கு ஏற்பட்ட
ஒரு பழியினாலும் சகோதர தோஷம் ஏற்பட்டது. அந்தத் தோஷம் எப்படி
ஏற்பட்டது? என்று சொல்லுங்கள், முனிவரே! என்று பார்வதிதேவி கேட்
டாள். மிக விரைவாக அந்தத் தோஷத்தைப்பற்றிச் சொல்லுகின்றேன்.
தேவியே! கேட்பாயாக.
19, மாதுமால் நிறத்த ளாவள் மன துசஞ்சலமு முள்ளாள்
மேதினில் பித்த சூடு மேவிடு நாபி நோயும்
பாதக மில்லா ளாகும் பாலர்கள் ஆடை யுள்ளாள்
சூதுக ளில்லா ளாகும் சோம்பிடாள் காரியத்தில்
19. இப்பெண் கரிய நிறமுடையவள். சஞ்சல மனத்தை உடைய
வள். பித்தசூடும், நாபி நோயும் உண்டு. குற்றமில்லாதவள். ஆடையை
உடையவள். கபட மில்லாதவள். வேலை செய்வதற்குச் சோம்பல்
கொள்ளா தவள்.
20. அவசர மனத்தளாகும் அவள் துணை ஆண்பால் ரெண்டு
நவனியில் கன்னி ஒன்று நவிலுவோம் தீர்க்க மாக
இவளுடைத் தாயின் இல்லம் இயம்புவோம் உள்ளூர்
(தன்னில் .
ஸப்தரிஷிநாடி
தோஷமாக ஆயிற்று. இரண்டு தோஷங்கள் ஏற்பட்டனவாதயால்
புத்திர தோஷம் உண்டாகும் என்று சொன்னோம். அப்படிப் பிறந்தாலும்
நிலையாமல் போம்.
26. செயமுனி இதனைக் கேட்டுச் செப்புவார் முனிவ ருக்கு
வியமாகும் சுதர்கள் என்றீர் வித்தகி இருப்ப தென்ன
நயமுடன் சொல்லு மென்ன நற்குரு புகரு மேழில்
பயமிலா திருப்ப தாலே பகருவோம் வயது தீர்க்கம்.
26. செயமுனிவர் இதனைக் கேட்டு அத்திரி முனிவரிடம் சொல்
லுவார். புத்திர தோஷம் உண்டு என்று கூறினீர். இவள் மாத்திரம்
நிறைந்த ஆயுளுடன் இருப்பது எப்படி ? அதற்குரிய காரணத்தைச்
சொல்லுங்கள் என்று கேட்க, குரு சுக்கிரன் ஆகியோர் ஏழாமிடத்தில் பய
மில்லாமல் தங்கியிருப்பதால் இவளுக்கு வயது தீர்க்கம்.
27. இப்படிச் சொல்லும் போது ஈச்வரி கேட்க லுற்றாள்
செப்பினீர் சுதர்கள் தோஷம் செனிக்குமா யில்லை
(யோசொல்
29. தியானமாக, ஒம், ஐம், கிலியும், சௌ, வௌ, சீயும் என்று கூமி,
மாயமாகக் கண்ணுக்குப் படாமல் திரியும் பிசாசை அகற்றிடுவாய், சிவ
பெருமானே! உனக்கு வணக்கம் ; என்று பக்தியுடன் மனத்தில் நினைத்து
ஆயிரம் முறை செபித்து, தாமிரத்தகட்டில் அறுகோண வடிவமுள்ள
சக்கரம் போட்டு, அதனுள் அம்பிகை பீஜாட்சரத்தை எழுதி;
30. சக்தியின் பூசை செய்வரீ ் சகஸ்திரம் உருவு கொண்டு
பக்தியாய் அணிவா ராகில் பிசாசுதன் பீடை நீங்கி
வித்தகி தனக்குப் புத்திரர் விளங்கிடு மாண்பால் ஒன்று
குத்தமாய்ச் செய்யா ளாகில் கூறினோம் சுதர்கள் தோஷம்.
30. அம்பிகைக்கு ஆயிரம் முறை அருச்சனை செய்து, அந்தத் தகட்டி
னைப் பக்தியுடன் அணிந்து கொள்வாளானால், பிசாசின் துன்பம் நீங்கி,
இவளுக்கு ஆண் குழந்தை யொன்று பிறந்து நிலைக்கும். செய்யாமல்
தவறுவாளாகில், புத்திரதோஷம் ஏற்படும் என்று சொன்னோம்.
31. சாதகி மணத்தின் காலம் சாற்றுவோம் பதின்மூன் றாண்டுள்
ஓதுவோம் தென்கீழ் தன்னில் உத்தமன் வரன்உண் டாகும்
தீதிலான் நற்கு ணத்தான் சித்தசன் ஒப்ப தாகும்
மேதினில் பாக்கியம் கொஞ்சம் விதவித செட்டுச் செய்வன்.
31. ஜாதகியின் திருமண காலத்தை உரைப்போம். இவளின் பதின்
மூன்றாவது வயதில் தென்கிழக்குத் திசையில் உத்தமமான கணவன்
கிடைப்பான். தீமையில்லாதவன். நல்ல குணமுடையவன். உலகில்
குறைவான பாக்கியத்தை உடையவன். பலவித வியாபாரங்கள் செய்வான்.
32. புத்திர விருத்தி தன்னைப் புகலுவோம் ஆண்பால் ரெண்டு
சித்தமாய்ப் பெண்பால் மூன்று செப்பினோம் தீர்க்க மாக
பத்திய மூன்று நஷ்டம் பகருவோம் இவளுக்குக் கேதான்
அத்தியைப் பெற்ற மாதே அறைந்தனம் மொழிகுன் றாது.
32. புத்திர சம்பத்தைச் சொல்லுவோம். இரண்டு ஆண்கள், பெண்
கள் மூவர் என்று கூறினோம். இவளுக்குப் பிறப்பவர்களில் மூவர் மாண
மடைவர். யானைமுகனைப் பெற்ற பெண்ணே ! நாங்கள் கூறிய சொற்கள்கள்
தவறா.
33. தந்தையின் முன் சென் மத்தைச் சாற்றுவோம் பட்சி தன்னில்
எந்தையே சூத்திர னாக இவனுமே யுதித்தா னென்றோம்
சந்ததம் ஆலயத்தில் தானுமே வாத்தியம் செய்து
பந்தமாய் மனைவி மைந்தர் பாரினில் கீர்தத
் ி யாகி,
### book_page 130
94
ஸப்தரிஷி நாடி
33. தகப்பனாரின் முற்பிறப்பைக் கூறுவோம், திருக்கழுக்குன்:
தில் சூத்திர சாதியில் இவன் பிறந்தானென்று சொன்னோம். தினம்
கோவிலில் வாத்தியம் வாசித்து மனைவி புத்திரர் இவர்களுடன் உலகில்
புகழோடு,
34. வந்தவர் மனம்க ளிக்க மங்கைக்குக் கல்வி சொல்லி
சிந்தையு மர்ம மின்றிச் சிவகாமி பூசை செய்து
முந்தியே மரண மாகி முயன்றவ னிவனே யென்றாம்
பிந்திய சென்மம் தன்னைப் பேசுவோ மினிமேலாக.
34. வந்தவர்களின் மணம் சந்தோஷிக்கப் பெண்ணுக்குப் படிப்பு
முதவியன சொல்லிவைத்து எண்ணத்தில் கபடமில்லாது, பார்வதி தேவி
யைப் பூஜை செய்து மனைவிக்கு முன்னாலேயே மானமடைந்தவன் இவன்
என்று கூறினோம். இவனுடைய அடுத்த பிறவியை உரைப்போம் இனி
மேல்.
35. அருணையின் நகரம் தன்னில் அவனுமே சைவ வமிசம்
பெருமையாய் உதித்து மேலும் பிரபல குடும்பி யாகி
வருவோர்க்கு உபதேசித்து வாழ்குவா னென்று சொன்னோம்
அறுமுகன் தன்னைப் பெற்ற அம்பிகை யாளே கேளாய்.
35. திருவண்ணாமலை நகரத்தில் சைவ குலத்தில் பிறந்து மேலும்
பிரபலமான குடும்பியாகி, வந்தவர்களுக்குப் புத்திகள் சொல்லி வாழ்வான்
என்று சொன்னோம். முருகக் கடவுளைப்பெற்ற பார்வதிதேவியே! மேலும்
கேட்பாயாக.
36. தந்தைக்கு இருபா னெட்டில் சாற்றுவோம் கண்டம்
(தானும்