Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 32

பழமொழிகளின் உண்மையான விளக்கம் .....

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.


ஒருவரது உள்ளத்தின் சிந்தனை முகத்தில் தெரியும். 

அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்தியே 


பயனற்றது 

அக்கம் பக்கம் பார்த்து பேசு

அகல் வட்டம் பகல் மழை

அகல உழுகிறதை விட ஆழ உழு

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்

அச்சாணி இல்லாத தேர் முச்சானும் ஓடாது

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு


ஒற்றுமையே பலம்.

அடாது செய்தவன் படாது படுவான்


பிறருக்கு துன்பம் செய்வோர் அதன் பயனை அனுபவிப்பர். (செய்வினைப் பயன்)

அடக்கமே பெண்ணுக்கு உலகு


    

அடக்கம் உடையார் அறிஞர் அடங்காதவர் கல்லார்

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்


விடாமுயற்சி காரிய வெற்றிக்கு உதவும்.

அடியாத மாடு பனியாது

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்

அடி நாக்கிலே நஞ்சும் நுணி நாக்கில் அமுதமும்

அற்ப ஆசை கோடி தரித்திரம் 


தகாத ஆசை 

அஞ்சில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் 


இறைவனின் தீர்ப்பே நியாயம்

அரசன் எவ்வழி குடிமக்கள் அவ்வழி 


முன்மாதிரி 

அவனின்றி அணுவும் அசையாது 


இறைவனின் வல்லமை 

அழையா விருந்துக்கு நுழையாதே 


அழைப்பு விடுக்கப்படாத இடத்துக்கு செல்லாதே 

அழுத பிள்ளை பால் குடிக்கும்.


முயற்சி செய்தவன் பயன் பெறுவான்.

அழகேசன் ஆனாலும் அளவறிந்து செலவு செய் 


வரவுக்கு தக்க செலவு செய்ய வேண்டும் 

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு


எந்த ஒரு விடயத்திலும் அளவோடு நடந்து கொள்ள வேண்டும்.

அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறியலாம்


உண்மையான நண்பனின் செயலை ஆபத்தில் அறியலாம்.

ஆசை வெட்கம் அறியாது 


ஆசை மயக்கத்தைக் கொடுக்கும் 

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.


கோபம் சிந்தனைக்கு இடையூறு.

ஆடத் தெரியாதவனுக்கு பூமி கோணல்

திறமை இல்லாதவர் அதனை மறைக்க சாக்குப்போக்கு கூறுதல்.

ஆடமாட்டாதவள் அரங்கு பிழை என்றாளாம் 


விடயப் புலமை இன்றி பிறரைக் குறை கூறாதே 

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது 


முதலைக் கண்ணர்ீ வடித்தல் 

ஆடை இல்லாதவன் அரை மனிதன் 


உடுப்பு ஒருவரின் தரத்தை உயர்த்தும் 

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு 


எதையும் அளவோடு செய்தல் வேண்டும் 

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

மரணம் எந்த வயதிலும் வரும்

ஆறின கஞ்சி பழங் கஞ்சி


எதையும் உரியமுறையில் செய்யா விட்டால் அதனால் ஏற்படும் பயன் மிகவும் குறையும்.

ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு 


எதேச்சதிகாரம் 

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திற் கண்ணாயிரு


கருமத்திற் கண் வை 

ஆழமறியாது காலை விடாதே.


எதையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை 


அற்பனுக்கும் சில வேளை மதிப்பு ஏற்படும் 

ஆனைக்கும் அடி சறுக்கும்


பெரியோரும் தவறு செய்யலாம்.

ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம் 


காலம் மாறி வரும்.

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை 


    திருப்தியற்ற மனம் 

இட்டுக் கெட்டார் எவரும் இல்லை 


    தருமம் செய்து கெட்டுப்போனவர் எவருமில்லை 

இரவற்சீலையை நம்பி இடுப்பிற் கந்தையை எரியாதே 


    பிறரை நம்பி உனது உடைமையைக் கைவிடாதே

இளமையிற் கல்வி சிலையில் எழுத்து

    சிறுவயதில் கற்கும் கல்வியானது மனதில் நன்றாகப் பதியும்.

இளங்கன்று பயமறியாது 
    இளமைப் பருவத்தில் துணிவு அதிகம்

இறக்கப் போனாலும் சிறக்கப் போ 


    வறுமையிலும் செம்மையாக வாழ வேண்டும்.

இறைத்த கிணறு ஊரும் இறைக்காத கிணறு நாறும் 


    தருமம் (முயற்சி) செய்தலின் சிறப்பு 

இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான் 


    சிறு குற்றமும் தவிர் 

ஈட்டி எட்டிய மட்டும் பாயும் பணம் பாதாளம் வரைக்கும் பாயும் 


    பண வலிமையால் எதையும் சாதிக்கலாம் 

உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை 


    தன் கையே தனக்கு உதவி 

உண்ணாச் சொத்து மண்ணாய் போகும் 


    உலோபம் கூடாது அனுபவிக்காது சேர்த்து வைத்தால் அது வணாகும்.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

    சிறு உதவியை செய்த ஒருவரை ஒருபோதும் மறத்தலாகாது.

உண்மை சொல்லிக் கெட்டவர் இல்லை 


    உண்மை உயர்வு தரும்.

உண்மையே உயர் தந்திரம் 


    உண்மையின் உயர்வு 

உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?


    தகுதிக்கு மேல் எண்ணக்கூடாது.

உலை வாயை மூடலாம்; ஊர் வாயை மூட முடியாது 


    பலரும் அறிந்த விடயத்தை மறைத்தல் இயலாது 

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் 


    ஒற்றுமையின்மையினால் கேடு விளையும் 

ஊருக்கு உபதேசம் உனக்கல்ல 


    சொல்லும் செயலும் வேறுபடல் 
ஊசி போகும் இடம் பார்ப்பார். உலக்கை போகும் இடம் பாரார்.
    சிறு விடயங்களில் கவனம் காட்டும் அதே வேளை பெரிய விடயங்களை கவனியாது விடுவர்.

எட்டிப் பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?


    ஈகை செய்வதன் அவசியம் 

எடுக்கிறது பிச்சை ஏறுவது பல்லக்கு 


    வண்
ீ பெருமை 

எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாம் 


    ஒற்றுமை வாழ்வுக்கு அவசியம். 

எறும்பூரக் கற்குழியும் 
    விடா முயற்சி பயன் தரும் 

எய்தவனிருக்க அம்பை நோவானேன் 


    குற்றம் செய்தவன் இருக்க வேறொருவன் தண்டிக்கப்படல்.

எரிகிற வட்டிற்
ீ பிடுங்கினது லாபம்
    அகப்பட்டதைச் சுருட்டும் குணம்

எளிவலையானாலும் தனி வலை வேண்டும் 


    தனிக்குடித்தனமே சிறந்தது.

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது 


    அனுபவம் இல்லாத வெறும் ஏட்டுக் கல்வி பயனற்றது.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

    சிறுவயதில் திருத்த முடியாததை வளர்ந்தபின் திருத்த முடியாது.

ஐயர் வருமட்டும் அமாவாசை காத்திருக்குமா 


    காலம் நில்லாது

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

    எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்தால் நல்வாழ்வு வாழலாம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 


    ஒருவரது இயல்பை அவரது ஒரு செயலே உணர்த்திவிடும் 
ஒரு கை தட்டினால் ஓசை உண்டாகுமா?உண்டாகுமா?
    கூட்டு முயற்சியின் பயன்.

ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி 


    எதுவானாலும் தனது காரியம் முடிந்தால் சரி.

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் 


    நம்பிக்கை காக்கும்.

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகுமா?


    தகுதிக்கு மேல் எண்ணுதல் கூடாது.

கடுகு சிறிதானாலும் காரம் பெரிது 


    சிரியதனிலும் சிறப்புண்டு 

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?


    காலம் தவறுதல் 

கம்பன் வட்டுக்
ீ கட்டுத் தறியும் கவி பாடும் 
    குலவித்தை 

கரும்பு திண்ண கைக்கூலியா?


    நல்லதையே விரும்புவர். அதற்கு உபகாரம் தேவையில்லை.

கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு 


    வறுமையிலும் செம்மையாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆகுமா?


    நல்லவை சில.

கற்றது கை மண்ணளவு. கல்லாதது உலகளவு 


    நாம் கற்றவை சிறிதளவு. கற்க வேண்டியவை பெருமளவு 

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

    சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்


காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு 
    தன்னுடையது பெரியது சிறப்புடையது.

காகம் திட்டி மாடு சாகாது 


    வண்
ீ பழிக்கு அஞ்சக் கூடாது.

காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் 


    சந்தேக புத்தி 

காலத்தைப் பொன் செய் 


    சந்தர்ப்பத்தை பயன்படுத்து 

கிட்டாதாயின் வெட்டென மற 


    உனக்கு கிடைக்காதென கருதின் அதனை உடனே மறந்து விடு.

கிட்டவிருந்தால் முட்டப் பகை     


    பழக்கத்தின் புளிப்பு 

கிணற்று தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?


    ஒதுங்கி வாழ்பவர்கள் உலகை அறியமாட்டார்கள் 

கீ ரைக் கடைக்கும் எதிர் கடை வேண்டும் 


    சில விடயங்களில் போட்டி அவசியம் 

குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்ன ீர் 


    வண்
ீ பெருமை கொள்ளல் 

குந்தித் தின்றால் குன்றும் மாலும் 


    உழைத்துண்ணாது சும்மா இருந்து உண்டால் செல்வம் கரையும் 

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.


    தவறு செய்பவரை அவரது மனச்சாட்சி உறுத்தும் 

குறை குடம் தளம்பும். நிறை குடம் தளம்பாது.


    அறிவுடையோர் அடக்கமாயிருப்பர். அற்ப அறிவுடையோர் ஆரவாரிப்பர்.
குலம் குப்பையில் பணம் பந்தியில் 
    பணத்தின் மதிப்பு 

குரைக்கிற நாய் கடியாது 


    வெறும் சலசலப்பு 

குரங்குக்கும் தன் குட்டி பொன் குட்டி 


    எவருக்கும் தனது பிள்ளை அருமையானது.

குப்பையில் கிடந்தாலும் குன்றிமணி மங்காது 


  அறிவுடையார் எங்கிருந்தாலும் அவர்களது புகழ் பிரகாசித்துக் கொண்டே இருக்கும். மங்காது.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

    ஒற்றுமை நன்மைகளைத் தரும்.

கூழுக்கும் ஆசை மீ சைக்கும் ஆசை 


    பேராசை 

கெட்டாலும் செட்டி கிழித்தாலும் பட்டு 


    நற்புகழ் மங்காது 

கெடுவான் கேடு நினைப்பான் 


    கெட்டதை நினைப்பவர்கள் அழிந்துவிடுவார்கள்.

கேடு வரும் பின்னே. மதி கெட்டு வரும் முன்னே.


    அறிவற்ற செயலால் கெடுதலே வந்து சேரும்.

கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்


    பிறர் பேச்சைக் கேட்பவனால் தீமையே விளையும். 

கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ் 


    நம்மையன்றி நம் பொருளுக்கு பாதுகாப்பானவர் இல்லை.

கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை 
    அதிர்ஸ்டக் குறைவு.

கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா?


    தெட்டத் தெளிவு 
கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலையாதே 
    கையில் பொருள் இருக்க வணாய்
ீ அலையாதே 

கோரைக் கிழங்கும் ஒரு வேளைக்கு உதவும் 


    அற்ற பொருளும் ஒரு சமயத்தில் உதவும் 

கோயிற் பூனை தேவரை மதியாது 


    பழக்கத்தின் புளிப்பு 

கோழி மிதித்து குஞ்சு சாகாது 


    அன்புக் கண்டனம் அழிக்காது.

சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும் 


    துணிவின் முன் யாவும் துரும்பு 

சானேற முழம் சறுக்கியது 


    உயர்ச்சியை மிஞ்சிய தளர்ச்சி.

சித்திரமும் கைப்பழக்கமும் செந்தமிழும் நாப்பழக்கமும் 


    பயிற்சியின் பயன் 

சிறு துரும்பும் பல் குத்த உதவும் 


    சிறிதையும் பேணு.

சிறுதுளி பெருவெள்ளம் 
    சிறுகச் சிறுக சேமித்தால் அது பெரும் செல்வம் ஆகிறது

சுகமும் துக்கமும் சுழலுஞ் சக்கரம் 


    இன்பமும் துன்பமும் இணை பிரியாதன.

சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற் பணம் 


    கூடிய முயற்சியில் குறைந்த பயன் 

சோளியன் குடுமி சும்மா ஆடுமா

    தமது தேவையை நிறைவு செய்து கொள்ள வேண்டும் எனும் உத்தேசத்துடன் உதவுதல்


தவளையும் தன் வாயால் கெடும்

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் 


    பிழையான பிடிவாதம் 

துட்டரைக் கண்டால் தூர விலகு 


    தீமையை, கெட்டவரைக் கண்டு விலகு.

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் 


    பழக்கத்தின் வலிமை.

பலதும் கற்கப் பண்டிதன் ஆவான்

பழகப் பழகப் பாலும் புளிக்கும்

ஒருவருடன் தொடர்ந்து பேசும்போது வெறுப்பு ஏற்படும்.

பணமில்லாதவன் பிணம் 
    பணத்தின் அருமை 

பானையில் இருந்தால் அகப்பையில் வரும்.


    உள்ளதுதான் வரும்.

புத்திமான் பலவான் 
    புத்தியே பலம்.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

 சிலர் வறுமை அடைந்தாலும் பொருத்தமற்ற காரியங்களைச் செய்ய மாட்டார்கள்

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு 


    தாய்ப் பாசம் 

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

    ஒருவருக்கு மனநிறைவே சிறந்த செல்வமாகும்.


விளையும் பயிரை முளையிலே தெரியும்

    ஒருவனுடைய சிறுவயது பழக்கவழக்கங்களை வைத்து அவனைப் பற்றி மதிப்பிடல்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் 


    துன்பத்தின் கொடுமையும் இன்பத்தின் அருமையும் 
    

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

    ஒருவர் வாழ்வில் சுகதேகியாக இருப்பது நிறைந்த செல்வமாக கருதப் படல்.

மனமுண்டானால் இடமுண்டு
    விருப்பமே வெற்றி 

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

    அனுபவம் முதிர்ந்தவர்கள் கூறும் புத்திமதிகள் பெறுமதியானவை.


Tamil Proverbs with English Translation

1.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

The face is the index of the mind

2.அகோர தபசி, விபரீத சோரன்

All saint without, all devil within

3.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

Great engines turn on small pivots

4.அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான்

The fox knows much, but more, he that catcheth him

5.அஞ்சில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

A young twig is easier twisted than an old tree

6.அஞ்சில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா?

The child is father to the man

7.அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறியாக்கும்

A house well-furnished makes a good house wife

8.அடங்காத மாடுக்கு அரசன் மூங்கில் தடி

அடியாத மாடு படியாது

Restive horses must be roughly dealt with


9.அடாது செய்பவர் படாது படுவர்

Do evil and look for like.

10 அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவார்கள்

Spare the rod and spoil the child

11.அடிக்கும் பிடிக்கும் சரியாப் போச்சு

ஆனைக்கும் பானைக்கும் சரி

Tit for tat

12.அடி நாக்கில் நஞ்சு, நுனிநாக்கில் அம்ருதம்

A smooth tongue and an evil heart

13.அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

Little strokes fell great oaks

14.ஆண்டவர் எப்படியோ தொண்டரும் அப்படியே

Like God, like worshipper

15.அதிக ஆசை அதிக நஷ்டம் ; பேராசை பெரு நஷ்டம்


Much would have more, and lost all

16.அத்ருஷ்டமும் ஐஸ்வர்யமும் ஒருவர் பங்கல்ல;

லெட்சுமி ஓரிடத்தில் இருக்கமாட்டாள்

Fortune’s wheel is ever revolving

17.அதிவிநயம் துர்த்த லக்ஷணம்

கண்டால் காமாட்சி நாயக்கர் காணாவிட்டால் வடுகப்பயல்

கண்டால் காமாட்சி நாயக்கர் காணாவிட்டால் காமாட்டி நாயக்கர்

கண்டால் முறை சொல்லுகிறது, காணாவிட்டால் பெயர் சொல்லுகிறது

Too much courtesy, too much craft

18.அப்பன் அருமை, அப்பன் செத்தால்தான் தெரியும்

Blessings are not valued till they are gone

19.அப்பா என்றால் உச்சி குளிருமா?

Fair words fill not the belly

20.அப்பியாசம் கூசா வித்தை

சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்

Practice makes perfect

21.அம்மாவாசை அன்னம் என்றைக்கும் அகப்படுமா?


போனால் வாராது, பொழுது விடிந்தால் கிடைக்காது

Christmas comes but once a year

22.அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிரே!

What can you expect of a hog but his bristles?

23.அரசனுக்கு ஒரு சொல், அடிமைக்கு தலைச் சுமை

What is sport to the boy is death to the frog

24.அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்

Justice stays long, but strikes at last

25.அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி

As is the king, so are the subjects

26.அரைக் காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது

One cloud is enough to hide all the sun

27.அறையில் ஆடியல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்?

You must walk before you run

28.அலைகடலுக்கு அணை போட முடியுமா?

Against God’s wrath no castle is proof

29.அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்

பள்ளம் என்று ஒன்று இருந்தால் மேடு என்று ஒன்று இருக்கும்

முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருஷம் வழ்ந்தவனும்


ீ இல்லை

Sadness and gladness succeed each other

30.அல்லார் அஞ்சலிக்கு நல்லார் உதை மேல்

குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்

A kick from the wise is better than a kiss from a fool


31.அவரவர் அக்கரைக்கு அவரவர் படுவார்

வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்

Everyone rakes the embers to bake his own cake

32.அவனன்றி ஓர் அணுவும் அசையாது

There is a special providence in the fall of a sparrow

33.அழ அழச் சொல்லுவர் தம்மக்கள், சிரிக்க சிரிக்கச் சொல்லுவர் பிறர்

A friend’s frown is better than a foe’s smile

34.அழுத பிள்ளை பால் குடிக்கும்

அரிப்புள்ளவன் சொரிந்து கொள்வான்

கேட்டால்தான் கிடைக்கும்

Ask and it shall be given

35.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்


Too much of anything is good for nothing

36.அள்ளாது குறையாது. சொல்லாது பிறவாது

Every why has a wherefore

37.அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்

Sins wilfully committed, must woefully expiated

38.அறிவு மனதை அரிக்கும்

In much knowledge, the is no rest

39.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்ரியில் குடை பிடிப்பான்

Beggars mounted run their horses to death

40.அன்பற்ற மாமிக்கு கும்பிடும் குற்றமே

வேண்டாப் பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்

Where there is no love, all is fault

41.அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறி

A friend in need is a friend indeed

42.அன்று தின்னும் பலாக்காயினும் இன்று தின்னும் களாக்காய் மேல்

A bird in the hand is worth two in the bush

43.ஆம் காலம் ஆகும், போம் காலம் போகும்

Men rise with Fortune’s smile or fall with Fortune’s frown

44.ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்

Let patience have her perfect work

Haste makes waste

45.ஆசானுக்கும் அடைவு தப்பும்

யானைக்கும் கூட அடி சறுக்கும்

Good swimmers are sometimes drowned


46.ஆசை வெட்கம் அறியாது

Love will creep where it cannot walk

Love is blind

47.ஆஸ்தியில்லாதவன் மனிதன் அல்ல.

பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை; அருள் அல்லார்க்கு அவ்வுலகம் இல்லை

A man without money is a bow without an arrow

48.ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

ஆடத்தெரியாத –—அடியாள், தெருக் கோணல் என்றாளாம்

A bad workman quarrels with his tool

49.ஆட்டைக் காட்டி வேங்கையைப் பிடிக்க வேண்டும்

சின்ன மீ னைப் போட்டாத்தான் பெரிய மீ னைப் பிடிக்கலாம்


Venture a small fish to catch a big one

50.ஆடை பாதி, ஆள் பாதி

ஆடை இல்லாதவன் அரை மனிதன்

Dress is half a man

தொடரும்…………………………..

LEAVE A COMME NT

by  TA MIL AND VEDAS  o n MAY 28 , 20 15   •  PE RMALINK

Pos ted i n த மிழ் பண் பாடு

Ta gged  ஆங் கிலப் ப ழமொழிக ள் , தமிழ் ப ழமொழிக ள்

இராமன் பற்றிய தமிழ் பழமொழிகள்

கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்


கட்டுரை எண்—968 தேதி 10 ஏப்ரல் 2014

அனுமார் வால் போல நீளுகிறதே or அனுமார் வால் போல நீண்டதாம்!


இந்தப் பழமொழி ராமாயண சுந்தர காண்ட நிகழ்ச்சியில் இருந்து வந்தது. ராவணனால் துன்புறுத்தப்பட்ட அனுமன்,
இலங்கைக்கு தீ வைத்தான். அப்பொழுது அவன் வால் திரவுபதியின் புடவை வற்றாது வந்தது போல நீண்டு கொண்டே
போனது. அதாவது ஆஞ்சநேயனை தீயானது சுடவே இல்லை. இந்தியாவின் ‘’சூப்பர்மேன்’’ Superman மாருதி. அவன் செய்யாத
சாகசம் இல்லை. அத்தனையையும் இன்று வெள்ளைக்காரர்கள் ‘காப்பி’ அடித்து காமிக்ஸ் Comics ஆக (சூபர்மேன், superman
ஸ்பைடர்மேன் Spiderman, போகேமான் Pokeman, பேண்டம் Phantom) என்றெல்லாம் எழுதி, விற்றுக் கோடிக் கணக்கில்
சம்பாதிக்கிறார்கள்.

இன்னொரு சம்பவமும் சுந்தர காண்டத்தில் உண்டு. ஆஞ்சநேயனக்கு ஒரு தூதருக்கு (ambassador) உரிய மரியாதை
கொடுக்கப்பட வேண்டும்.ஆனால் அது கொடுக்கப்படவில்லை இன்று சர்வதேச ‘ப்ரோடோகோல்’Protocol (சம்பிரதாய விதிகள்)
என்ற பெயரில் தூதர்களை எப்படி நடத்த வேண்டும் என்று விதிகள் உள்ளன. இதை உலகிற்குக் கற்பித்தது இந்தியர்கள்!
சாணக்கியன் எழுதிய விதிகளை திருவள்ளுவனும் ஒரு அதிகாரம் முழுதும் பாடியிருக்கிறான். அப்படி மரியாதை தர
ராவணன் மறுத்தான். ஆசனம் கூட கொடுக்கவில்லை. அனுமார் தன் வாலை நீட்டி அதன் மூலம் ஒரு ஆசனம் அமைத்து
ராவணனைவிட உயரத்தில் உட்கார்ந்து ‘பதில் மரியாதை’ செய்தான்!

இராம பாணம் பட்டு உருவினாற் போல


அந்தக் காலத்தில் ஒருவர் வரத்தை
ீ மெய்ப்பிக்க ஏழு பொருள்களை ஒரே அம்பினால் துளைக்கச் சொல்லுவார்கள். இந்த ஏழு
மர துளை போடும் போட்டி வேறு கலாசாரங்களிலும் உண்டு. இதை ஒட்டியே ராமனின் திறமையைக் கண்டுபிடிக்க ஏழு மரா
மரங்களைத் துளைக்கும் அம்பைவிடச் சொன்னான் சுக்ரீவன். ராமன் விட்ட அம்பு ஏழு மரங்களையும் துளை போட்டது. இதே
போல ஒரு வகைப் பூச்சியும் புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பாக்கம் வரை குண்டு துளைத்தாற்போல துளை
போடும் அந்த பூச்சிக்கும் இந்தியர்கள் ராமபாணம் என்று பெயர் வைத்தனர்.

இராமர் இருக்கும் இடம் அயோத்தி


மக்களுக்கு குணம் மிக்க ஒரு தலைவன் இருந்தால் போதும்; ஒரு ஆபத்தும் வராது என்று தெரியும். முறையாக ஆட்சி
செய்யும் மன்னவன் இறைவனுக்கு சமம் என்று வள்ளுவனும் கூறுவான். இதனால்தான் மக்கள் அனைவரும் இரண்டு முறை
இராமனைப் பின் தொடர்ந்து சென்றனர். முதல் முறை அவன் காடேகிய நாள் அன்று. ஆனால் இராமனே அவர்களைத் திருப்பி
அனுப்பி விட்டான். இரண்டாவது முறை ராமன் ஆற்றில் ஜல சமாதி அடைய இறங்கிய போது அயோத்தியில் உள்ள
அத்தனை மனிதர்களும், ஜீவராசிகளும் ராமனுடன் சரயு நதியில் இறங்கி மோட்சம் அடைந்தனர். அவர்களைப் பொறுத்த
மட்டில், இராமன் எங்கே இருக்கிறானோ அதுதான் அயோத்தி! (Ayodhya now in Uttar Pradesh was the capital of Kingdom of Kosala)
இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது
இராம,லெட்சுமணன்—ஆகிய இருவரும் இணை பிரியாத ஜோடிகள். எல்லா படங்களிலும் இதைக் காணலாம். அவர்கள்
ஒற்றுமையை உவமையாக கூறும் போது, இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது என்று சொல்லுவர்.

இராம வாக்குக்கு இரண்டு உண்டோ?


இராமன் சத்ய தர்ம பராக்ரமன். சொன்ன சொல்லை மீ றாதவன். ஆயுதம் இழந்த ராவணனைக் கூட கொல்லாமல் ‘’இன்று
போய், நாளை வா!’’ என்று இயம்பினன். ஆகையால் ராமனின் சொல்லுக்கு மறு சொல் கிடையாது. இலட்சுமணன் மிகவும் (short
tempered) கோபக்காரன். எதற்கும் பொங்கி எழுவான. ஆனால் அண்ணன் ஒரு சொல் சொன்னால் போதும். அடங்கிவிடுவான்.
இராம வாக்குக்கு இரண்டு உண்டோ?

இராமனைப் போல ராசா இருந்தால் அனுமாரைப் போல சேவகனும் இருப்பான்


மனம் போல மாங்கல்யம். தலைவன் எவ்வழி அவ்வழி தொண்டன். ஆகவே இராமன் போல ஒரு ராஜா (Truthful, honest, sincere,
amicable, easily accessible,heroic, people friendly) இருந்தால் உலகமே அவனுக்கு அடங்கி நடக்கும். இராம சேது என்னும் பாலம்
கட்டும் போது அணில் கூட உதவி செய்யவில்லையா?
இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?
உலகில் நிறைய பேர் சுயகாரியப்(Selfish, self centred) புலிகள். தங்களுக்கு வேண்டியது கிடைத்தால் போதும். வாயை
மூடிக்கொண்டு அநியாயங்களைக் கண்டும் காணாமல் இருந்து விடுவர். மஹாத்மா காந்தி, பல சத்தியாக் கிரகம், பாத
யாத்திரை என்று அறைகூவல் விடுத்தபோதும் சிறை சென்றவர்கள் எண்ணிக்கை சில ஆயிரம்தான். எனக்கு என்ன?
வெள்ளைக்காரன் ஆண்டால் என்ன? இந்தியர் ஆண்டால் என்ன? என்று இருந்தவர்களைக் கண்டு பாரதியும் பாடி இருக்கிறான்.
“நெஞ்சில் உரமும் இன்றி” என்ற பாடலைப் படித்தால் புரியும். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று
இருப்போரே உலகில் அதிகம்.

இராமன் மங்கையோடு இணங்கியது அவம்


இராமனுடைய மங்கை சீதை. அவளுடன் இராவணன் வாழ நினைத்தது தவறு. இராமன் மங்கையோடு இணங்கியது அவம்.

இராமாமிர்தமே சீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா?


ராமனுடைய பெயரைச் சொல்லுவதே அமிர்தம் என்று உண்ணாவிரதம் இருந்தோரைக் குறித்து சொன்ன சொல் இது.
மனிதனாகப் பிறந்துவிட்டால் உடலையும் பேணித்தான் ஆகவேண்டும். இராமாமிர்தமே சீவனம் என்று பட்டினியாய்
இருக்கலாமா? சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் உள்ளம் பெருங் கோயில், ஊனுடம்பு ஆலயம்.
இரா முழுதும் இராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் என்ன வேண்டும்? என்ற கதை (சீதைக்கு ராமன் சித்தப்பன் என்றானாம்)

சொன்ன சொல்லை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் ஒரு செயலை சடங்கு போல செய்வோரைக் குறிக்கும் வசனம் இது.
அர்த்தத்தைப் புரிந்துகொண்டு உண்மையான ஆர்வத்தோடு ஒரு செயலை செய்ய வேண்டும். எதைப் படித்தாலும் கேட்டாலும்
சிரத்தையோடு செய்தால் உண்மைப் பொருள் விளங்கும். வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுத்து முடித்த பின்னர்
அடிப்படையே புரியாமல் ஒரு கேள்வி கேட்டல் அவருக்கு எப்படி இருக்கும்! ஒரு கச்சேரிக்குப் போனவர் வித்துவானைப்
பார்த்து, உங்கள் தோடி ராகத்தைக் கேட்க அல்லவா நான் வந்தேன் என்று ஒருவர் சொன்னாராம். அவர் அப்போதுதான் தோடி
ராகம் பாடி முடித்திருந்தார்!

இராமேசுரத்துக்கும் காசிக்கும் போயும் என்னைப் பிடித்த சநீசுரன் தொலையல்ல


சனி பகவான் யாராக இருந்தாலும் ஏழரை ஆண்டுக் காலம் பிடித்தே தீருவான். அதை மூன்று இரண்டரை ஆண்டுகளாகப்
(3X2.5 years=7.5 years) பிரிப்பர். ஒரு குறிப்பிட்ட இரண்டரை ஆண்டு, சொல்ல முடியாத துயரம் கொடுப்பான. அவரவர்
ஜாதகத்தைப் பொறுத்து இதன் உக்கிரம் அமையும். அப்போது அவர்கள் காசி ராமேஸ்வரம் சென்றாலும் கர்மவினை
தொடர்ந்தே வரும். இதையே மற்ற விஷயங்களுக்கும் மக்கள் உவமையாகப் பயன்படுத்துவர். என்னதான் பரிகாரம்
செய்தாலும் ஒரு கெட்டது விலகவில்லையானால் அப்பொழுது இந்த சொற்றொடரைப் பயன்படுத்துவர். தொடர்ந்து வரும்
கஷ்டங்களை இது குறிக்கும். புராணத்தில் அரிச்சந்திரன் பட்ட பாட்டை நினைத்தால் இது சட்டென விளங்கும்.

Clash between Shiva and Saturn

சிவ பெருமான் பற்றியும் ஒரு கதை சொல்லுவர். சனி பகவானிடம் “நான் மும்மூர்த்திகளில் ஒருவன். என்னை நீர் ஒன்றும்
செய்ய முடியாது” என்றார் சிவன். சனைச்வரன் (Sanai:= slow, Charan= Moving; slow moving) சிரித்துக் கொண்டே “இதற்கு யாரும்
விதி விலக்கு அல்ல” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். சிவனுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. சரி இந்த ஆள்
கண்டுபிடிக்காமல் இருக்க வேண்டுமானால் யாராலும் கற்பனை செய்ய முடியாத இடத்தில் ஒளிந்து கொள்வோம் என்று ஒரு
சாக்கடையில் ஒளிந்து கொண்டாராம். சனிச்சரன் மறு முறை சிவனை சந்தித்தபோது, “பார்த்தாயா, என்னை நீ ஒன்றும் செய்ய
முடியவில்லை” என்று சிவ பெருமான பெருமையாகச் சொன்னாராம்.

சனைச்சரன், “இல்லையே, சோதிட விதிகளுக்கு கடவுளும் விதி விலக்கல்ல. இந்தக் குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் எங்கே
இருந்தீர்கள்?” என்று சிவனை சனி பகவான் கேட்டார். சிவன் பெருமையாக “நீங்கள் கண்டு பிடிக்கமுடியாத பாதாள
சாக்கடையில் ஒளிந்திருந்தேன். நீங்கள் ஏமாந்து போன ீர்கள்” என்று பதில் சொன்னார். சனி பகவான் சிரித்துக் கொண்டே
கைலாசத்தில் பாரிஜாதம் முதலான புஷ்பங்கள் கமழும் இடத்தில் இருக்கவேண்டிய நீவர்ீ சாக்கடையில் காலம் தள்ளின ீர்
அல்லவா? அதுதான் உமக்கு சனி திசை” என்று சொன்னவுடன் சிவன் முகம் சிவந்து போனது!!!

தம்பி உடையான் படைக்கஞ்சான் ( லெட்சுமணன் பற்றிய மொழி)


இராமனுக்கு பெரிய பலம் அவன் தம்பி லெட்சுமணன். அண்ணன் தம்பி ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இராம
லெட்சுமணர்கள். 14 ஆண்டுக் காலமும் இமைப் பொழுது சோராமல் அண்ணனைக் காத்தவன் லெட்சுமணன். உலக
இலக்கியத்தில் இப்படி ஒரு சகோதர ஜோடியை எங்கும் பார்க்கமுடியாது. இரட்டையரைக் காணலாம். ஆனால் இரு வேறு
தாயாருக்குப் பிறந்து ஒரு சேர ஜோடி சேர்ந்த சகோதரர் இவர்கள். அப்பேற்பட்ட தம்பி உடைய ஒரு வரன்
ீ எப்பேற்பட்ட படை
வந்தாலும் அஞ்சாமல் எதிர்த்து நிற்பான்; வெற்றியும் பெறுவான்!

இராவண சந்யாசி போல இருக்கான்


ராவணன் ஒரு ‘ருத்திராட்சப் பூனை’ (Hypocritical Cat). துணிச்சலாக வரன்
ீ போல வந்து சீ தையைக் கவரவில்லை. ஏனெனில்
ராமனை வெல்ல முடியாது என்பது அவனுக்குத் தெரியும். சந்யாசி வேடத்தில் வந்து ஏமாற்றியவன். யாரேனும் ஒருவன்
வேடம் தரித்து ஏமாற்றுகிறானோ என்ற சந்தேகம் வந்தால் உடனே மக்கள், “ஜாக்கிரதை இவன் ஒரு ராவணன்” என்று
சொல்லி உஷாராகி விடுவர்.
இராவணன் குடிக்கு மஹோதரன் போலும், சுயோதனன் குடிக்கு சகுனி போலும்
துரியோதனன் கெட்டுக் குட்டிச் சுவராகப் போக அவன் மாமன் சகுனிதான காரணம் சூதாட்டத்தில் மாயா ஜாலம் செய்து
வெற்றி பெற்றுப் பின்னர் போர் ஏற்பட வழி செய்தவன். இதே போல ராவணனிடம் மகோதரன் என்பவன் முதல் மந்திரியாக
(Chief Minister) இருந்தான். மகா மாயாவி (Cheat). இந்திரன் போல வேடம் கொண்டு வெள்ளை யானை மேல் ஏறி
லெட்சுமணனுடன் போரிட வந்தவன். ராமன் பற்றி உளவு (Spy) வேலைகளில் ஈடுபட்டவன். சீதையை அனுப்பவேண்டாம் என்று
கெட்ட யோசனை(wrong Advice) கூறி ராவணன் அழிய வழிவகுத்தவன்.(ஆதாரம்: அபிதான சிந்தாமணி-Tamil Encyclopaedia)
ஆக யாராவது ஒருவர் குடியைக் கெடுக்கும் வேலைகளையோ, மற்றவர்கள் அழிய துர் போதனை செய்தாலோ அவர்களை
சகுனி, மகோதரன் ஆகியோருக்கு ஒப்பிடுவர்.

படிப்பது ராமாயணம் இடிப்பது சிவன் கோவில் / ராமன் கோவில்


சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் செய்பவர்களைக் குறை கூறும் பழமொழி இது. நல்ல விஷயங்களைப் பேசிவிட்டு,
கேட்டுவிட்டு அதற்கு நேர் மாறான செயல்களைச் செய்வோர் ராமாயணத்தைப் படித்துவிட்டு கோவிலையே இடித்தது போல
இது.
தேசத்தையே வைத்து சூதாடிய தருமபுத்திரனைக் குறைகூறும் பாரதி

“கோயிற்பூசை செய்வோர் சிலையை கொண்டு விற்றல் போலும்


வாயில் காத்து நிற்போன் வட்டை
ீ வைத்து இழத்தல் போலும்
ஆயிரங்களான நீதி – அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்திழந்தான் சீச்சீ சிறியர் செய்கை செய்தான்”
என்று சாடுகிறான். சொல் ஒன்று செயல் வேறு என்பதற்கு, இது நல்ல எடுத்துக் காட்டு. இப்படிப்பட்டவர்களை ‘படிப்பது
ராமாயணம் இடிப்பது ராமர் கோவில்’ எனலாம்.

ராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்.


“இந்த இப்பிறவியில் இரு மாதரை சிந்தையாலும் தொடேன்”- (Kamba Ramayanam Quote) என்று சபதம் செய்தவன் ராமன். அந்தக்
க லத்தில் அரசர்கள் நிறைய பேரைக் கல்யாணம் செய்வது இந்திய மரபு. நாடுகளுடன் நட்புறவு வேண்டும் என்பதற்கும்,
வேற்று நாட்டான் படை எடுக்கையில் அருகிலுள்ள நாடுகள் படை அனுப்பி உதவி செய்யவேண்டும் என்பதற்காகவும் பல
நாட்டுப் பெண்களை மணப்பது ராஜ நீதி (diplomacy), சாணக்கிய நீதி! இதனல்தான் ஆப்கனிஸ்தானத்தில் உள்ள காண்டஹார்
(காந்தாரம்) நகரில் இருந்து வந்த பெண்ணை காந்தாரி என்றும் பஞ்சாபில் இருந்து வந்த பெண்ணை பாஞ்சாலி என்றும்,
சோழதேசப் பெண்ணை சோழமாதேவி என்றும், பாண்டிய தேச இளவரசியை பாண்டிமாதேவி என்றும் அழைப்பர்.
அவர்களுடைய அம்மா அப்பா வைத்த பெயர் எல்லாம் காலப் போக்கில் மறைந்துவிடும். இப்படிப் பல தேசப் பெண்களை
மணக்கும் வழக்கம் இமயம் முதல் குமரி வரை இருந்ததற்கு இலக்கியமும் கல்வெட்டுகளும் சான்று பகரும் .ஆனால் ராமன்
மட்டும் ஒரே பெண்ணைக் கல்யாணம் செய்ததோடு மட்டுமின்றி மனதாலும் வேறு ஒரு பெண்ணை நினைக்கமாட்டேன்
(சிந்தையாலும் தொடேன்) என்றான். இதனால் அவன் உயிர் வாழ்ந்த காலத்திலேயே, அவனை கடவுள் நிலைக்கு உயர்த்தினர்
மக்கள். அந்த ராமனின் நாமத்தைச் சொன்னாலேயே காம எண்ணங்கள் பறந்தோடிப் போகும்.

வாலை ஒட்ட நறுக்கிவிடுவேன்! என்னிடம் வாலாட்டாதே!


அனுமனைப் பார்த்து ராவணன் சொல்லிய சொல் இது. ஆனால் அனுமனோ இலங்கைக்கே தீவைத்து “ராவணன் வாலை”
ஒட்ட அறுத்து விட்டான். வால் என்பதும் அஹம்காரம் என்பதும் ஒன்றே. நாமெல்லாரும் யான் எனது என்னும் செருக்கில் ( I-
ness, My-ness) ஆடாத ஆட்டம் ஆடுகிறோம். இதுதான் நமது வால். இதை நாய்வால் மாதிரி நிமிர்த்தவே முடியாது. ஒட்ட வெட்டி
எறியவேண்டும். நாமும் நமது அகந்தை(Ego & Arrogance) என்னும் வாலை நோக்கி தினமும் “என்னிடம் வாலாட்டாதே ஒட்ட
நறுக்கிவிடுவேன்”– என்று சொல்லச் சொல்ல ஞானம் பிறக்கும்.
பழமொழிகள் தமிழ் விளக்கம்

1.ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

விளக்கம் – ஊரான் பிள்ளை என்பது தம் மனைவியை குறிக்கும். அவள் பிள்ளை சுமந்திருக்கும் காலத்தில்

அவளை அவள் கணவன் நல்ல முறையில் பராமரிப்பானாக இருந்தால் அம்மனைவி வயிற்றில் வளரும் அவனது
குழந்தையும் ஆரோக்கியமாக நலமுடன் வளரும்.

2. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

விளக்கம் – ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவர்கள்.


ீ அது நாம்தான்
குழப்பமாக இருக்கிறதா ஓட்டைக் கப்பல் என்பது மனித உடலையும் ஒன்பது மாலுமிகள்

நம் உடலில் உள்ள பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது. எனவே தான் இந்த மனித வாழ்க்கையில் ஒருவனுக்கு
மரணம் நேரும்போது அவனுடைய உயிர் மூச்சு அந்த உடலின் எந்த ஓட்டை வழியேனும் வெளியேறலாம்

என்பதற்காய் பெரியோர்கள் நிலையற்ற இந்த மனித வாழ்வை குறிக்கும் போது ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி
போய் ஆக வேண்டியதை பாரப்பா என்று சொல்லி வைத்தார்கள்.

3. புல் தடுக்கிப் பயில்வான் போல.

விளக்கம் – புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன் அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்
தான்.

ஒரு முறை கானக பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர் உடனே அதை வேரோடு பிடுங்கி எரித்து சாம்பலாக்கி
கரைத்து குடித்தாராம்.

எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர்
சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது.

4. அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்.

விளக்கம் – இந்த பழமொழியில் அடி என்பது இறைவனின் திருவடியை குறிக்கிறது. துன்பங்கள் நேரும் போது,

எல்லாம் அவனே என இறைவனை நினைத்து கொண்டோர்க்கு எந்தவித துன்பமும் இல்லை. அந்த இறைவனின்
அருள் உதவுவது போல் யாரும் உதவ முடியாது.

5. ஆறிலும் சாவு நூறிலும் சாவு.

விளக்கம் – இந்த பழமொழிக்கான சம்பவம் மஹாபாரதத்தில் இருந்து உதாரணம் காட்டப்படுகின்றது. (போர் நிகழும்
போது) கர்ணனை குந்தி தேவி தம் தார்மீ க வாரிசுகளான பஞ்சபாண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக
இருக்கும் கிருஷ்ணனுடன் சேர்ந்து கொள்ள வற்புறுத்துகிறாள்.

அதற்கு கர்ணன் தாயே பஞ்சபாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணன் இவர்கள் ஆறு பேருடன் இருந்தால் சரி அல்லது
கௌரவ சகோதரர்கள் நூறு பேருடன் இருந்தாலும் சரி மரணம் என்பது எனக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்று.

அதாவது ஆறிலும் சாவு நூறிலும் சாவு நான் செஞ்சோற்றுக் கடனுக்காக கௌரவர்களுடனே இருந்து
செத்துப்போகிறேன் என்கிறான் கர்ணன்.
Tamil Proverbs With Meaning In Tamil

6. கோத்திரம் அறிந்து பெண் கொடு.. பாத்திரம் அறிந்து பிச்சை எடு.

விளக்கம் – இது மன்னர் குடும்பத்திற்கு சொல்லப்பட்ட அறிவுரையாக அறியப்படுகிறது. கோ என்பது அரசன் எனப்
பொருள்படும். திறம் என்பது திறன் அல்லது திறமை.

அதாவது ஒரு மன்னன் தன் பெண்ணை திறமையுள்ள ஒரு அரசனாக பார்த்து ஆராய்ந்து மணமுடித்து தர வேண்டும்
என்பதை இது குறிக்கிறது. கோத்திரம் என்பது கோத்திறம் என வரவேண்டும்.

அதேபோல் பாத்திரம் என்பது பாத்திறம் என வரவேண்டும். புலவனுக்கு பரிசு அளிக்க நினைக்கும் மன்னன் அந்த
புலவனது பாடல் திறமைக்கு ஏற்றவாறு பரிசுகளை மதிப்பிட்டு அளிக்க வேண்டும்.

7. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.

விளக்கம் – நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே என்று வந்திருக்க வேண்டும்.

அவசர உலகில் பேசுவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த பழமொழியில் நல்லவை, தீயவை என்ற இரண்டு
வார்த்தைகளும் மறக்கப்பட்டு ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று வந்து விட்டது.

8. போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை.. வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.

விளக்கம் – வார்த்தைகளை சற்று பிரித்து பார்த்தால் இந்த பழமொழி சொல்லவந்த உட்பொருள் அர்த்தத்தை எளிதாக
விளங்கி கொள்ளலாம்.

போக்கத்தவன் = போக்கு + கற்றவன், அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்ட மனிதன் போலீஸ் வேலைக்கு
தகுதியானவன்.

வாக்கத்தவன் = வாக்கு + கற்றவன், வாக்கு என்பது சத்தியம், அறிவு என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது.

மொத்தத்தில் படித்தவன், அறிவு பெற்றவன் போன்ற தகுதிகளை கொண்டவன் கற்பித்தல் பணிக்கு தகுதியானவன்.

இதைக் கொண்டே சொல்லப்பட்ட பழமொழி மருகி திரிந்து மேற்கொண்ட முறையில் வந்துவிட்டது.

9. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

விளக்கம் – இங்கு சூடு எனும் சொல் சுவடு என்று வந்திருக்க வேண்டும். சந்தையில் மாட்டை வாங்கும் போது அது
பதிக்கும் தடம் சுவடு.

அழுத்தமான சுவட்டை பாதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது.

ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். இதுவே இதன் உண்மை விளக்கம்.

10. உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பான.?

விளக்கம் – உடையார்பாளையம் என்பது வன்னியகுல சத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம்.

உள்ளூரிலேயே சாதாரண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தானம் மக்கள் முன் ஒரு வரச்செயலை

செய்துகாட்ட முடியும் என்பதே இதன் உண்மை விளக்கம்.
பழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும்
Posted by ர ா ஜே ஷ் ல ி ங் க து ரை  on A U G U S T 6 , 2 0 1 8

1) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
இங்கு அரசன் என்பது அரசமரத்தைக் குறிக்கும். பொதுவாகப் பெண்கள் குழந்தைப் பேறு வேண்டி அரசமரத்தை
சுற்றுவது வழக்கம். அரசமரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. என்னதான்
நம்பிக்கையுடன் அரசமரத்தை சுற்றினாலும், கணவனை சுற்றி வந்தால்தானே குழந்தை பிறக்கும். கணவனை
சுற்றாமல், அரசமரத்தைச் சுற்றுவதில் ஒரு பயனில்லை என்பதை உணர்த்தச் சொல்லப்பட்டதுதான்  இந்தப்
பழமொழி.
“அரசனை நம்பி, கட்டியக் கணவனைக் கைவிட்டுப் போனவள்” என்று ஒரு இழிவான தகவலைப் பழமொழிகள்
நமக்கு ஒருபோதும் தராது. ஆகையால், பழமொழியைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். இங்கு அரசன்
என்பது அரசமரத்தை மட்டுமே குறிக்கும்.
2) அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். 
இது பழமொழி என்று சொல்வதை விட ஒரு விடுகதை என்று சொல்லலாம். மழை பெய்து ஒரே நாள்
இரவில், பல இடங்களில் காளான்கள் முளைத்திருக்கும். “நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்”
என்ற சொல்லாடலைக் கேட்டிருப்போம். ஒருநாள் மழையில் முளைத்த காளான், சீக்கிரம் அழிந்தும் போகும்,
அதனால்தான் அற்பன் என்ற சொல். கிராமத்துப்பக்கம் அதனை குடைக்காளான் என்று சொல்வார்கள்.
பார்ப்பதற்கு குடை போலவே இருக்கும். அந்தக் காளானுக்காக சொன்ன விடுகதைதான் இது.
“அர்ப்பணித்து வாழ்பவன் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்” என்பதுதான் உண்மையான பழமொழி
என்று வாதிடுவோரும் உண்டு.  இரண்டு விளக்கங்களுமே சரியென்றே தோன்றுகிறது. ஆகையால் நாம்
விடுகதை, பழமொழி இரண்டையும் ஏற்றுக்கொள்வோம்.
Advertisements

REPORT THIS AD

3) ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.
சித்த வைத்தியம் தொடர்பான பழமொழி இது. சித்த வைத்தியத்தில் வேர்தான் மூலாதாரம். பல வேர்களைப்
பற்றி அறிந்து கொண்டால்தான் வைத்தியம் கற்றுக்கொள்ள முடியும். “ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை
வைத்தியன்” என்று இருந்த பழமொழிதான் காலப்போக்கில் மருவி வைத்தியரைக் கொலைகாரர்
ஆக்கிவிட்டது. ஒருவேளை ஆங்கில மருத்துவம் படித்து வந்தவர்கள், சித்த மருத்துவத்தை ஒழிப்பதற்காக
கிளப்பி விட்ட வதந்தியாக இருக்குமோ? எது எப்படியோ உண்மையில் அது வேர்தான் என்பதை நாம்
புரிந்துகொண்டால் சரிதான்.
4) ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.
“ஆயிரம் முறை போய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்” என்பதுதான் பொய் என்று
மாறிப்போனது. காதோரம் நரைமுடி எட்டிப்பார்த்தும் கல்யாணம் ஆகவில்லையே என்று வருத்தப்பட்ட யாரோ
ஒரு சிலர்தான் தங்கள் வசதிக்காக பழமொழியை மாற்றியிருக்கக் கூடும். இந்தப் பழமொழியைக் காரணம்
சொல்லி இனிமேல் யாரும் பொய் சொல்லி கல்யாணம் பண்ண முடியாது.
5) ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
இந்தப் பழமொழியின் விளக்கம் மிகவும் எளிதானது. சேர, சோழ, பாண்டியர்கள் முதல் தமிழகத்தை ஆண்ட
சிற்றரசர்கள் வரை அனைவருமே எந்நேரமும் போரிட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். போர் வரர்களுக்கு

மரணபயம் இருக்கக்கூடாது. மரணபயம் இருப்பவன் போர்வரன்
ீ ஆக முடியாது. ஆகையால் வரர்களுக்கு

உற்சாகமூட்டும் விதமாக சொல்லப்பட்டதுதான் இந்தப் பழமொழி. இதற்கு வேறு ஒரு விளக்கமும்
சொல்லப்படுகிறது. அது உண்மைதானா என்று தெரிந்து கொள்வோம்.
இந்தப் பழமொழி கர்ணன் சொன்னதென்று பலர் விளக்கம் சொல்கிறார்கள். உண்மையில் கர்ணனுக்கும் இந்தப்
பழமொழிக்கு ஒரு தொடர்பும் கிடையாது. பாண்டவர்களோடு சேர்ந்து 6 பேராக வந்தாலும் சாவு நிச்சயம்,
கௌரவர்கள் 100 பேரோடு சேர்ந்தாலும் சாவு நிச்சயம் என்று கர்ணன் சொன்னானாம். கர்ணன் சாவைக்
குறித்து அவ்வளவு வருந்தியிருந்தால் போர்க்களத்துக்கு வந்திருக்க மாட்டான். மகாபாரதக் கதையில் கர்ணன்,
அர்ஜுனனை விட வரன்,
ீ அவன் சாவுக்கு அஞ்சி பேசுவது போல அர்த்தம் சொல்வது இந்தப் பழமொழிக்கு
பொருந்தாது. ஆகையால் இது  நமது போர் வரர்களை
ீ உற்சாகப்படுத்த சொல்லப்பட்ட பழமொழிதான். சாவு
ஆறு வயதிலும் வரலாம், நூறு வயதிலும் வரலாம், சாவைக்கண்டு அஞ்சுவதில் ஒரு பயனில்லை என்பதுதான்
பழமொழியின் அர்த்தம்.
6) ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும்.
இந்தப் பழமொழிக்கு பல பொருள் உண்டு. யானை போல பலமானவர்களுக்கு ஒரு காலம் வந்தால், பூனை
போன்ற பலம் குறைந்தவர்களுக்கும் ஒரு காலம் வரும் என்பது நேரடியாக நாம் புரிந்து கொள்ளும் பொருள்.
ஆனால் பூனையின் பலத்தை யானையோடு ஒப்பிட்டுக் கூறுவது பொருத்தமற்றது. எலியைக் கேட்டால்,
பூனைதான் பலசாலி என்று தலையில் அடித்து சத்தியம் செய்யும். ஆகையால் இது சரியான பொருள்தானா
என்று புரியவில்லை. இன்னொரு விளக்கத்தைப் பார்க்கலாம்.
ஆ நெய் என்பதுதான் ஆனை என்று மருவியதாக சொல்லப்படுகிறது. ஆ நெய் என்றால் பசுவின் நெய் என்று
பொருள். அதே போல பூ நெய் என்ற சொல்தான் பூனை என்று காலப்போக்கில் மாறிவிட்டதாக
சொல்கிறார்கள்.  பூ நெய் என்றால் தேன் என்று அர்த்தம். “ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால், பூநெய்க்கும் ஒரு
காலம் வரும்” என்று வைத்துக்கொண்டால், இந்த பழமொழிக்கு இன்னொரு அர்த்தம் வரும். பசு மாட்டு நெய்
அதிகமாக சேர்த்துக் கொண்டால் உடலில் கொழுப்பு சேரும், அந்தக் கொழுப்பைக் குறைக்க தேன் உதவும்
என்பது அந்தப் பழமொழியின் அர்த்தம்.  இந்தப் பழமொழிக்கு மற்றுமொரு பொருளும் இருக்கிறது.
யானை கட்டிப் போரடித்தப் பரம்பரை என்ற சொல்லைத் திரைப்படங்களில் சொல்லக் கேட்டிருப்போம்.
பொதுவாக அறுவடைக் காலங்களில் போரடிக்க யானையைக் கூட்டி வருவார்கள். அறுவடை எல்லாம்
முடிந்து நெல்லை சேமித்து வைத்ததும், நெல்லைத்தின்பதற்கு எலிகள் நிறைய வரும். அந்த எலிகளை
வேட்டையாடப் பூனைகளைக் கொண்டுபோய் விடுவார்கள்.  ஆகையால் “ஆனைக்கு ஒரு காலம் வந்தால்,
பூனைக்கும் ஒரு காலம் வரும்”. என்றும் பொருள் கொள்ளலாம்.
7) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
மருமகளுக்கும் மாமியாருக்கும், கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்திலிருந்தே ஒத்துவராது என்பது வரலாறு.
ஆனால் “வரலாறு முக்கியம் அமைச்சரே” என்று மருமகளைக் கொடுமைப்படுத்தினால், மாமியாரின் மகன்
தலையில் பூரிக்கட்டை விழுவதை யாராலும் தடுக்க முடியாது. தனது மகனைப் பூரிக்கட்டையிலிருந்துக்
காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினால், இன்னொரு வட்டிலிருந்து
ீ தன் வட்டிற்கு
ீ வாழவந்த மருமகளை,
மாமியார்  நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்யும் பழமொழி. மாமியாருக்கு
மட்டுமல்ல, அவர் மகனுக்கும் சேர்த்தே எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது இந்தப் பழமொழி மூலம்.
மனைவி கருவுற்றிருக்கும்போது, அவளை நன்றாக கவனித்துக் கொண்டால், அவள்  வயிற்றில் வளரும் தனது 
குழந்தை நன்றாக வளரும் என்ற பொருளும் உண்டு. இது கணவனுக்கு அறிவுரை சொல்லும் வகையில்
சொல்லப்பட்டுள்ளது. பிறர் வட்டிற்கு
ீ வாழச்செல்லும் பெண்ணை, நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும்
என்பதற்காக மாமியாருக்கும், அந்த பெண்ணின் கணவருக்கும் சொல்லப்பட்ட அறிவுரைதான் இது.
8) கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
கப்பல் விடும் அளவுக்கு பெரும் பணக்காரராய் வாழ்ந்து, ஒருவேளை கப்பலே கவிழ்ந்தாலும், அதை எண்ணிக்
கவலைப்பட்டு கன்னத்தில் கை வைத்துக் கொண்டு உட்காருவதால் ஒரு பயனில்லை என்பது நாம் நேரடியாக
புரிந்து கொள்ளும் செய்தி. ஆனால் இதற்கு வேறு ஒரு பொருளும் உண்டு.
“கன்னமிடுதல்” என்றால் திருடுதல் என்று பொருள். ஒருவேளை கப்பலே கவிழ்ந்து செல்வத்தை எல்லாம்
இழந்து வறுமையில் வாடும் நிலை வந்தாலும், திருடும் எண்ணம் வரக்கூடாது என்பதுதான் இந்தப்
பழமொழியில் மறைந்திருக்கும் உண்மையான செய்தி.
9) கல்லைக் கண்டால் , நாயைக் காணோம்! நாயைக் கண்டால் , கல்லைக் காணோம்!!
இந்த பழமொழி திருமந்திரப் பாடலிலிருந்து உருவாக்கப்பட்டது.
“மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்”
இது திருமூலர் பாட்டு. மரத்தால் அழகிய யானை உருவம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை வெறும் மரம்
என்று பார்ப்பவர்களுக்கு யானை தெரியாது. யானை என்று பார்ப்பவர்களுக்கு மரம் தெரியாது. இந்தப் பாடலை
வைத்துதான் பல்வேறு சொல்லாடல்கள் உருவாக்கப்பட்டன. “தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை
என்றால் வெறும் சிலைதான்” என்ற கண்ணதாசன் பாட்டுக்கும், “கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது”
என்று வாலி பாடிய பாடல் வரிகளுக்கும் கடன் கொடுத்தவர் திருமூலர்தான். அந்த வரிசையில்
உருவானதுதான் இந்தப் பழமொழி. கல்லினால் செய்து வைத்த நாய் சிலையில் கல்லை மட்டும் பார்த்தால்,
அதில் நாய் தெரியாது, நாயாகப் பார்த்தால் கல் தெரியாது என்பதுதான் பொருள். அடுத்த முறை நாயைப்
பார்க்கும்போது, தேவையில்லாமல் கல்லைத் தேடாதீர்கள்.
10) களவும் கற்று மற.
“களவும் கத்தும் மற” என்பதுதான் உண்மையான பழமொழி என்று பல குறிப்புகள் கிடைக்கின்றன. “கத்து” என்ற
சொல்லுக்கு பொய் என்று அர்த்தமும் உண்டு. களவும், பொய் சொல்வதையும் தவிர்த்து விடு என்பதை
வலியுறுத்தும் பழமொழி இது. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு.
சங்க இலக்கியங்களில், அகவாழ்க்கையை இரண்டு விதமாகப் பிரித்துச் சொல்வார்கள். களவு வாழ்க்கை, கற்பு
வாழ்க்கை என்ற, அந்த இரண்டும் காதல் வாழ்க்கையையும், திருமண வாழ்க்கையையும் குறிக்கும்.
திருக்குறளில் கூட களவியல், கற்பியல் என்ற அதிகாரங்கள் உண்டு. ஆகையால் இங்கு களவு என்பது காதல்
வாழ்க்கையைக் குறிக்கும். காதல் வாழ்க்கையைக் கடந்து இல்லற வாழ்க்கைக்குள் நுழைய வேண்டுமென்று
அறிவுறுத்தும் பொருளில் இந்தப் பழமொழி அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பழமொழியை சாக்காக வைத்து எத்தனைத் திருடர்கள், அரசியல்வாதிகள் மக்கள் பணத்தைக்
கொள்ளையடித்தார்களோ தெரியவில்லை. பழமொழி சற்று மாறினால், அது எத்தனை பேருக்கு தவறான
உதாரணமாக மாறிவிடுகிறது. இனியாவது பழமொழிகளை சரியாகப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
11) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
கோரைப் புல்லில்தான் பாய் தைப்பார்கள். கழு என்பது ஒருவகை கோரைப்புல். அந்த கழு என்ற
கோரைப்புல்லைப் பயன்படுத்தித் தைக்கப்பட்ட பாயில் கற்பூர வாசனை வருமாம். இதைச்  சொல்வதற்குதான்
“கழு தைக்கத் தெரியுமாம் கற்பூர வாசனை” என்று சொன்னார்கள். காலப்போக்கில் கழுதை உள்ளே
வந்துவிட்டது. இனி ஒருபோதும் கற்பூரத்தைக்  கழுதையிடம் கொண்டுபோய் காட்டி உதை வாங்கிக்
கொள்ளாதீர்கள்.
12) கோத்திரம் அறிந்து பெண் கொடு பாத்திரம் அறிந்து பிச்சை இடு.
இது மன்னர் பரம்பரையில் வந்தவர்கள், வள்ளல்கள் ஆகியோருக்காக சொல்லப்பட்ட பழமொழி. உண்மையில்
அது “கோத்திறம் அறிந்து பெண் கொடு பாத்திறம் அறிந்து பிச்சை இடு”  என்று இருக்க வேண்டும். “கோத்திறம்
அறிந்து பெண் கொடு” என்றால், அரசனுடைய திறமை அறிந்து பெண்ணைக்கொடு என்று அர்த்தம். “பாத்திறம்
அறிந்து பிச்சை இடு” என்றால், புலவர்களின் பாடல் திறமையைப் பார்த்து அன்பளிப்புக் கொடு என்று அர்த்தம்.
காலப்போக்கில் இது கோத்திரம், பாத்திரம்என்று மாறிப்போய் விட்டது.

13) தை பிறந்தால் வழி பிறக்கும் 
தை மாதம் பிறந்தால், வயலில் அறுவடை ஆகும். உழவர்கள் கையில் செல்வம் புரளும், வாழ்க்கை செழிக்கும்
என்பது நாம் நேரடியாக புரிந்துகொள்ளும் பொருள். இந்தப் பழமொழிக்கு மேலும் சில அர்த்தங்களும் உண்டு.
வயற்காட்டில் விளைந்திருக்கும் நெல்மணிகள், முழு வளர்ச்சி அடையும் போது, அவை வரப்புகளில் சாய்ந்து
கிடக்கும். அப்போது வரப்புகளில் நடப்பதற்கு வழி இருக்காது. தை மாதம் அறுவடையான பின், மீ ண்டும்
வரப்புகளில் நடப்பதற்கு பாதை கிடைக்கும். இதையும் குறிப்பிடுவதுதான் இந்தப் பழமொழி.
இந்தப் பழமொழி குறித்து இன்னொரு புதுத்தகவல் உண்டு. மார்கழி மாதம் பெண்கள் பொதுவாக வட்டு
ீ முன்
கோலம் போடுவார்கள். கோலம், வடு
ீ துவங்கி, சாலை வரை நீளும். தப்பித்தவறி கோலத்தில் கால் வைத்தவர்
நிலைமை அலங்கோலமாகி விடும். கோலம் சாலையை மறைப்பதால் நமக்கு நடப்பதற்கு பாதை  இருக்காது.
தை மாதம் பிறந்தவுடன் கோலத்திற்கு முடிவு வரும். நமக்கும் நடந்து செல்ல வழி பிறக்கும்.
14) புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து.
பழமொழி ஒருவரை நல்வழிப்படுத்துமே தவிர, தீய வழியை ஒருபோதும் காட்டாது. மனம் புண்பட்டால், புகை
பிடிக்க வேண்டும் என்பது போல அனைவரும் அர்த்தம் புரிந்து கொள்கிறார்கள். உண்மையான அர்த்தம்
அதுவல்ல. “புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று” என்பதுதான் உண்மையான பழமொழி. மனம்
புண்பட்டிருக்கும் நேரம், துன்பத்தை எண்ணியெண்ணி வருந்திக் கொண்டிருக்காமல், மனதைத் திசைதிருப்பித்
துன்பத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் உண்மையான விளக்கம்.

15) மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?


இதுவும் சற்றே திரிந்த பழமொழிதான். “மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?” என்பதுதான் பழமொழி.
குதிர் என்றால், ஆற்று வெள்ளத்தில் தற்காலிகமாக ஏற்பட்ட மணல்மேடு. அதில் கால் வைத்தால், நாம்
ஆற்றில் மூழ்கி விடுவோம். அதனால் மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது என்ற எச்சரிக்கைதான்
இது. மற்றபடி, குதிரைக்கும் இந்தப் பழமொழிக்கும் ஒரு தொடர்பும் கிடையாது.

16) முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல.


ஒருவரின் குறையைச் சொல்லி இழிவுபடுத்துவது பழமொழியின் நோக்கமல்ல. இந்தப் பழமொழி
காலப்போக்கில் மருவியிருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. உண்மையான பழமொழி “முயலான் கொம்புத்
தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல” என்பதுதான். முயற்சியே செய்யாமல் ஒருவன் கொம்புத்தேனுக்கு
ஆசைப்படலாமா? என்பது அதன் உண்மையான அர்த்தம். முயலான் என்ற சொல் முடவன் என்று மாறிப்போய்
விட்டது.
17) நாற்பது வயதில் நாய் குணம் அறுபது வயதில் பேய் குணம் 
இந்தப் பழமொழி உண்மையென்றால், நமது நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் அனைவரும் நாய் குணம்,
பேய் குணம் கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். பழமொழி கொஞ்சம் மாறிவிட்டது, அதனால்
பொருளும் மாறிவிட்டது. “நாற்பது வயதில் நா குணம் அறுபது வயதில் அரிய  குணம்” என்பதுதான்
உண்மையான பழமொழி.
நாற்பது வயதை எட்டியவர்களுக்கு, உலக அறிவு நிறைய இருக்கும், அவர் பேச்சில் உறுதி இருக்கும்,
நாவண்மை நிரம்பியிருக்கும். அதனைக் குறிப்பிடுவதற்குதான் “நாற்பது வயதில் நா குணம்”. அறுபது வயதைக்
கடந்தவர்கள் அனுபவ அறிவில் திளைத்திருப்பார்கள். வெறும் ஏட்டில், எழுத்தில் வரும் அறிவல்ல அது. அந்த
அரிய அனுபவத்தைக் குறிப்பிடும் விதமாக சொல்லப்பட்டதுதான் “அறுபது வயதில் அரிய  குணம்”. இனிமேல்
யாரையும் “நாற்பது வயதில் நாய் குணம் அறுபது வயதில் பேய் குணம்”என்று சொல்லாதீர்கள். ஏனென்றால்
நானும் சில ஆண்டுகளில் நாற்பது வயதை எட்டிப்பிடிக்க் காத்திருக்கிறேன்.

You might also like