Professional Documents
Culture Documents
பழமொழிகளின் உண்மையான விளக்கம்
பழமொழிகளின் உண்மையான விளக்கம்
இளங்கன்று பயமறியாது
இளமைப் பருவத்தில் துணிவு அதிகம்
எறும்பூரக் கற்குழியும்
விடா முயற்சி பயன் தரும்
எரிகிற வட்டிற்
ீ பிடுங்கினது லாபம்
அகப்பட்டதைச் சுருட்டும் குணம்
கம்பன் வட்டுக்
ீ கட்டுத் தறியும் கவி பாடும்
குலவித்தை
கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை
அதிர்ஸ்டக் குறைவு.
சிறுதுளி பெருவெள்ளம்
சிறுகச் சிறுக சேமித்தால் அது பெரும் செல்வம் ஆகிறது
பணமில்லாதவன் பிணம்
பணத்தின் அருமை
புத்திமான் பலவான்
புத்தியே பலம்.
மனமுண்டானால் இடமுண்டு
விருப்பமே வெற்றி
கேட்டால்தான் கிடைக்கும்
Love is blind
தொடரும்…………………………..
LEAVE A COMME NT
இன்னொரு சம்பவமும் சுந்தர காண்டத்தில் உண்டு. ஆஞ்சநேயனக்கு ஒரு தூதருக்கு (ambassador) உரிய மரியாதை
கொடுக்கப்பட வேண்டும்.ஆனால் அது கொடுக்கப்படவில்லை இன்று சர்வதேச ‘ப்ரோடோகோல்’Protocol (சம்பிரதாய விதிகள்)
என்ற பெயரில் தூதர்களை எப்படி நடத்த வேண்டும் என்று விதிகள் உள்ளன. இதை உலகிற்குக் கற்பித்தது இந்தியர்கள்!
சாணக்கியன் எழுதிய விதிகளை திருவள்ளுவனும் ஒரு அதிகாரம் முழுதும் பாடியிருக்கிறான். அப்படி மரியாதை தர
ராவணன் மறுத்தான். ஆசனம் கூட கொடுக்கவில்லை. அனுமார் தன் வாலை நீட்டி அதன் மூலம் ஒரு ஆசனம் அமைத்து
ராவணனைவிட உயரத்தில் உட்கார்ந்து ‘பதில் மரியாதை’ செய்தான்!
சொன்ன சொல்லை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் ஒரு செயலை சடங்கு போல செய்வோரைக் குறிக்கும் வசனம் இது.
அர்த்தத்தைப் புரிந்துகொண்டு உண்மையான ஆர்வத்தோடு ஒரு செயலை செய்ய வேண்டும். எதைப் படித்தாலும் கேட்டாலும்
சிரத்தையோடு செய்தால் உண்மைப் பொருள் விளங்கும். வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுத்து முடித்த பின்னர்
அடிப்படையே புரியாமல் ஒரு கேள்வி கேட்டல் அவருக்கு எப்படி இருக்கும்! ஒரு கச்சேரிக்குப் போனவர் வித்துவானைப்
பார்த்து, உங்கள் தோடி ராகத்தைக் கேட்க அல்லவா நான் வந்தேன் என்று ஒருவர் சொன்னாராம். அவர் அப்போதுதான் தோடி
ராகம் பாடி முடித்திருந்தார்!
சிவ பெருமான் பற்றியும் ஒரு கதை சொல்லுவர். சனி பகவானிடம் “நான் மும்மூர்த்திகளில் ஒருவன். என்னை நீர் ஒன்றும்
செய்ய முடியாது” என்றார் சிவன். சனைச்வரன் (Sanai:= slow, Charan= Moving; slow moving) சிரித்துக் கொண்டே “இதற்கு யாரும்
விதி விலக்கு அல்ல” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். சிவனுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. சரி இந்த ஆள்
கண்டுபிடிக்காமல் இருக்க வேண்டுமானால் யாராலும் கற்பனை செய்ய முடியாத இடத்தில் ஒளிந்து கொள்வோம் என்று ஒரு
சாக்கடையில் ஒளிந்து கொண்டாராம். சனிச்சரன் மறு முறை சிவனை சந்தித்தபோது, “பார்த்தாயா, என்னை நீ ஒன்றும் செய்ய
முடியவில்லை” என்று சிவ பெருமான பெருமையாகச் சொன்னாராம்.
சனைச்சரன், “இல்லையே, சோதிட விதிகளுக்கு கடவுளும் விதி விலக்கல்ல. இந்தக் குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் எங்கே
இருந்தீர்கள்?” என்று சிவனை சனி பகவான் கேட்டார். சிவன் பெருமையாக “நீங்கள் கண்டு பிடிக்கமுடியாத பாதாள
சாக்கடையில் ஒளிந்திருந்தேன். நீங்கள் ஏமாந்து போன ீர்கள்” என்று பதில் சொன்னார். சனி பகவான் சிரித்துக் கொண்டே
கைலாசத்தில் பாரிஜாதம் முதலான புஷ்பங்கள் கமழும் இடத்தில் இருக்கவேண்டிய நீவர்ீ சாக்கடையில் காலம் தள்ளின ீர்
அல்லவா? அதுதான் உமக்கு சனி திசை” என்று சொன்னவுடன் சிவன் முகம் சிவந்து போனது!!!
விளக்கம் – ஊரான் பிள்ளை என்பது தம் மனைவியை குறிக்கும். அவள் பிள்ளை சுமந்திருக்கும் காலத்தில்
அவளை அவள் கணவன் நல்ல முறையில் பராமரிப்பானாக இருந்தால் அம்மனைவி வயிற்றில் வளரும் அவனது
குழந்தையும் ஆரோக்கியமாக நலமுடன் வளரும்.
நம் உடலில் உள்ள பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது. எனவே தான் இந்த மனித வாழ்க்கையில் ஒருவனுக்கு
மரணம் நேரும்போது அவனுடைய உயிர் மூச்சு அந்த உடலின் எந்த ஓட்டை வழியேனும் வெளியேறலாம்
என்பதற்காய் பெரியோர்கள் நிலையற்ற இந்த மனித வாழ்வை குறிக்கும் போது ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி
போய் ஆக வேண்டியதை பாரப்பா என்று சொல்லி வைத்தார்கள்.
விளக்கம் – புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன் அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்
தான்.
ஒரு முறை கானக பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர் உடனே அதை வேரோடு பிடுங்கி எரித்து சாம்பலாக்கி
கரைத்து குடித்தாராம்.
எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர்
சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது.
விளக்கம் – இந்த பழமொழியில் அடி என்பது இறைவனின் திருவடியை குறிக்கிறது. துன்பங்கள் நேரும் போது,
எல்லாம் அவனே என இறைவனை நினைத்து கொண்டோர்க்கு எந்தவித துன்பமும் இல்லை. அந்த இறைவனின்
அருள் உதவுவது போல் யாரும் உதவ முடியாது.
விளக்கம் – இந்த பழமொழிக்கான சம்பவம் மஹாபாரதத்தில் இருந்து உதாரணம் காட்டப்படுகின்றது. (போர் நிகழும்
போது) கர்ணனை குந்தி தேவி தம் தார்மீ க வாரிசுகளான பஞ்சபாண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக
இருக்கும் கிருஷ்ணனுடன் சேர்ந்து கொள்ள வற்புறுத்துகிறாள்.
அதற்கு கர்ணன் தாயே பஞ்சபாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணன் இவர்கள் ஆறு பேருடன் இருந்தால் சரி அல்லது
கௌரவ சகோதரர்கள் நூறு பேருடன் இருந்தாலும் சரி மரணம் என்பது எனக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்று.
அதாவது ஆறிலும் சாவு நூறிலும் சாவு நான் செஞ்சோற்றுக் கடனுக்காக கௌரவர்களுடனே இருந்து
செத்துப்போகிறேன் என்கிறான் கர்ணன்.
Tamil Proverbs With Meaning In Tamil
விளக்கம் – இது மன்னர் குடும்பத்திற்கு சொல்லப்பட்ட அறிவுரையாக அறியப்படுகிறது. கோ என்பது அரசன் எனப்
பொருள்படும். திறம் என்பது திறன் அல்லது திறமை.
அதாவது ஒரு மன்னன் தன் பெண்ணை திறமையுள்ள ஒரு அரசனாக பார்த்து ஆராய்ந்து மணமுடித்து தர வேண்டும்
என்பதை இது குறிக்கிறது. கோத்திரம் என்பது கோத்திறம் என வரவேண்டும்.
அதேபோல் பாத்திரம் என்பது பாத்திறம் என வரவேண்டும். புலவனுக்கு பரிசு அளிக்க நினைக்கும் மன்னன் அந்த
புலவனது பாடல் திறமைக்கு ஏற்றவாறு பரிசுகளை மதிப்பிட்டு அளிக்க வேண்டும்.
விளக்கம் – நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே என்று வந்திருக்க வேண்டும்.
அவசர உலகில் பேசுவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த பழமொழியில் நல்லவை, தீயவை என்ற இரண்டு
வார்த்தைகளும் மறக்கப்பட்டு ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று வந்து விட்டது.
விளக்கம் – வார்த்தைகளை சற்று பிரித்து பார்த்தால் இந்த பழமொழி சொல்லவந்த உட்பொருள் அர்த்தத்தை எளிதாக
விளங்கி கொள்ளலாம்.
போக்கத்தவன் = போக்கு + கற்றவன், அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்ட மனிதன் போலீஸ் வேலைக்கு
தகுதியானவன்.
வாக்கத்தவன் = வாக்கு + கற்றவன், வாக்கு என்பது சத்தியம், அறிவு என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது.
மொத்தத்தில் படித்தவன், அறிவு பெற்றவன் போன்ற தகுதிகளை கொண்டவன் கற்பித்தல் பணிக்கு தகுதியானவன்.
விளக்கம் – இங்கு சூடு எனும் சொல் சுவடு என்று வந்திருக்க வேண்டும். சந்தையில் மாட்டை வாங்கும் போது அது
பதிக்கும் தடம் சுவடு.
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். இதுவே இதன் உண்மை விளக்கம்.
உள்ளூரிலேயே சாதாரண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தானம் மக்கள் முன் ஒரு வரச்செயலை
ீ
செய்துகாட்ட முடியும் என்பதே இதன் உண்மை விளக்கம்.
பழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும்
Posted by ர ா ஜே ஷ் ல ி ங் க து ரை on A U G U S T 6 , 2 0 1 8
1) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
இங்கு அரசன் என்பது அரசமரத்தைக் குறிக்கும். பொதுவாகப் பெண்கள் குழந்தைப் பேறு வேண்டி அரசமரத்தை
சுற்றுவது வழக்கம். அரசமரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. என்னதான்
நம்பிக்கையுடன் அரசமரத்தை சுற்றினாலும், கணவனை சுற்றி வந்தால்தானே குழந்தை பிறக்கும். கணவனை
சுற்றாமல், அரசமரத்தைச் சுற்றுவதில் ஒரு பயனில்லை என்பதை உணர்த்தச் சொல்லப்பட்டதுதான் இந்தப்
பழமொழி.
“அரசனை நம்பி, கட்டியக் கணவனைக் கைவிட்டுப் போனவள்” என்று ஒரு இழிவான தகவலைப் பழமொழிகள்
நமக்கு ஒருபோதும் தராது. ஆகையால், பழமொழியைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். இங்கு அரசன்
என்பது அரசமரத்தை மட்டுமே குறிக்கும்.
2) அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
இது பழமொழி என்று சொல்வதை விட ஒரு விடுகதை என்று சொல்லலாம். மழை பெய்து ஒரே நாள்
இரவில், பல இடங்களில் காளான்கள் முளைத்திருக்கும். “நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்”
என்ற சொல்லாடலைக் கேட்டிருப்போம். ஒருநாள் மழையில் முளைத்த காளான், சீக்கிரம் அழிந்தும் போகும்,
அதனால்தான் அற்பன் என்ற சொல். கிராமத்துப்பக்கம் அதனை குடைக்காளான் என்று சொல்வார்கள்.
பார்ப்பதற்கு குடை போலவே இருக்கும். அந்தக் காளானுக்காக சொன்ன விடுகதைதான் இது.
“அர்ப்பணித்து வாழ்பவன் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்” என்பதுதான் உண்மையான பழமொழி
என்று வாதிடுவோரும் உண்டு. இரண்டு விளக்கங்களுமே சரியென்றே தோன்றுகிறது. ஆகையால் நாம்
விடுகதை, பழமொழி இரண்டையும் ஏற்றுக்கொள்வோம்.
Advertisements
REPORT THIS AD
3) ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.
சித்த வைத்தியம் தொடர்பான பழமொழி இது. சித்த வைத்தியத்தில் வேர்தான் மூலாதாரம். பல வேர்களைப்
பற்றி அறிந்து கொண்டால்தான் வைத்தியம் கற்றுக்கொள்ள முடியும். “ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை
வைத்தியன்” என்று இருந்த பழமொழிதான் காலப்போக்கில் மருவி வைத்தியரைக் கொலைகாரர்
ஆக்கிவிட்டது. ஒருவேளை ஆங்கில மருத்துவம் படித்து வந்தவர்கள், சித்த மருத்துவத்தை ஒழிப்பதற்காக
கிளப்பி விட்ட வதந்தியாக இருக்குமோ? எது எப்படியோ உண்மையில் அது வேர்தான் என்பதை நாம்
புரிந்துகொண்டால் சரிதான்.
4) ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.
“ஆயிரம் முறை போய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்” என்பதுதான் பொய் என்று
மாறிப்போனது. காதோரம் நரைமுடி எட்டிப்பார்த்தும் கல்யாணம் ஆகவில்லையே என்று வருத்தப்பட்ட யாரோ
ஒரு சிலர்தான் தங்கள் வசதிக்காக பழமொழியை மாற்றியிருக்கக் கூடும். இந்தப் பழமொழியைக் காரணம்
சொல்லி இனிமேல் யாரும் பொய் சொல்லி கல்யாணம் பண்ண முடியாது.
5) ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
இந்தப் பழமொழியின் விளக்கம் மிகவும் எளிதானது. சேர, சோழ, பாண்டியர்கள் முதல் தமிழகத்தை ஆண்ட
சிற்றரசர்கள் வரை அனைவருமே எந்நேரமும் போரிட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். போர் வரர்களுக்கு
ீ
மரணபயம் இருக்கக்கூடாது. மரணபயம் இருப்பவன் போர்வரன்
ீ ஆக முடியாது. ஆகையால் வரர்களுக்கு
ீ
உற்சாகமூட்டும் விதமாக சொல்லப்பட்டதுதான் இந்தப் பழமொழி. இதற்கு வேறு ஒரு விளக்கமும்
சொல்லப்படுகிறது. அது உண்மைதானா என்று தெரிந்து கொள்வோம்.
இந்தப் பழமொழி கர்ணன் சொன்னதென்று பலர் விளக்கம் சொல்கிறார்கள். உண்மையில் கர்ணனுக்கும் இந்தப்
பழமொழிக்கு ஒரு தொடர்பும் கிடையாது. பாண்டவர்களோடு சேர்ந்து 6 பேராக வந்தாலும் சாவு நிச்சயம்,
கௌரவர்கள் 100 பேரோடு சேர்ந்தாலும் சாவு நிச்சயம் என்று கர்ணன் சொன்னானாம். கர்ணன் சாவைக்
குறித்து அவ்வளவு வருந்தியிருந்தால் போர்க்களத்துக்கு வந்திருக்க மாட்டான். மகாபாரதக் கதையில் கர்ணன்,
அர்ஜுனனை விட வரன்,
ீ அவன் சாவுக்கு அஞ்சி பேசுவது போல அர்த்தம் சொல்வது இந்தப் பழமொழிக்கு
பொருந்தாது. ஆகையால் இது நமது போர் வரர்களை
ீ உற்சாகப்படுத்த சொல்லப்பட்ட பழமொழிதான். சாவு
ஆறு வயதிலும் வரலாம், நூறு வயதிலும் வரலாம், சாவைக்கண்டு அஞ்சுவதில் ஒரு பயனில்லை என்பதுதான்
பழமொழியின் அர்த்தம்.
6) ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும்.
இந்தப் பழமொழிக்கு பல பொருள் உண்டு. யானை போல பலமானவர்களுக்கு ஒரு காலம் வந்தால், பூனை
போன்ற பலம் குறைந்தவர்களுக்கும் ஒரு காலம் வரும் என்பது நேரடியாக நாம் புரிந்து கொள்ளும் பொருள்.
ஆனால் பூனையின் பலத்தை யானையோடு ஒப்பிட்டுக் கூறுவது பொருத்தமற்றது. எலியைக் கேட்டால்,
பூனைதான் பலசாலி என்று தலையில் அடித்து சத்தியம் செய்யும். ஆகையால் இது சரியான பொருள்தானா
என்று புரியவில்லை. இன்னொரு விளக்கத்தைப் பார்க்கலாம்.
ஆ நெய் என்பதுதான் ஆனை என்று மருவியதாக சொல்லப்படுகிறது. ஆ நெய் என்றால் பசுவின் நெய் என்று
பொருள். அதே போல பூ நெய் என்ற சொல்தான் பூனை என்று காலப்போக்கில் மாறிவிட்டதாக
சொல்கிறார்கள். பூ நெய் என்றால் தேன் என்று அர்த்தம். “ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால், பூநெய்க்கும் ஒரு
காலம் வரும்” என்று வைத்துக்கொண்டால், இந்த பழமொழிக்கு இன்னொரு அர்த்தம் வரும். பசு மாட்டு நெய்
அதிகமாக சேர்த்துக் கொண்டால் உடலில் கொழுப்பு சேரும், அந்தக் கொழுப்பைக் குறைக்க தேன் உதவும்
என்பது அந்தப் பழமொழியின் அர்த்தம். இந்தப் பழமொழிக்கு மற்றுமொரு பொருளும் இருக்கிறது.
யானை கட்டிப் போரடித்தப் பரம்பரை என்ற சொல்லைத் திரைப்படங்களில் சொல்லக் கேட்டிருப்போம்.
பொதுவாக அறுவடைக் காலங்களில் போரடிக்க யானையைக் கூட்டி வருவார்கள். அறுவடை எல்லாம்
முடிந்து நெல்லை சேமித்து வைத்ததும், நெல்லைத்தின்பதற்கு எலிகள் நிறைய வரும். அந்த எலிகளை
வேட்டையாடப் பூனைகளைக் கொண்டுபோய் விடுவார்கள். ஆகையால் “ஆனைக்கு ஒரு காலம் வந்தால்,
பூனைக்கும் ஒரு காலம் வரும்”. என்றும் பொருள் கொள்ளலாம்.
7) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
மருமகளுக்கும் மாமியாருக்கும், கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்திலிருந்தே ஒத்துவராது என்பது வரலாறு.
ஆனால் “வரலாறு முக்கியம் அமைச்சரே” என்று மருமகளைக் கொடுமைப்படுத்தினால், மாமியாரின் மகன்
தலையில் பூரிக்கட்டை விழுவதை யாராலும் தடுக்க முடியாது. தனது மகனைப் பூரிக்கட்டையிலிருந்துக்
காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினால், இன்னொரு வட்டிலிருந்து
ீ தன் வட்டிற்கு
ீ வாழவந்த மருமகளை,
மாமியார் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்யும் பழமொழி. மாமியாருக்கு
மட்டுமல்ல, அவர் மகனுக்கும் சேர்த்தே எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது இந்தப் பழமொழி மூலம்.
மனைவி கருவுற்றிருக்கும்போது, அவளை நன்றாக கவனித்துக் கொண்டால், அவள் வயிற்றில் வளரும் தனது
குழந்தை நன்றாக வளரும் என்ற பொருளும் உண்டு. இது கணவனுக்கு அறிவுரை சொல்லும் வகையில்
சொல்லப்பட்டுள்ளது. பிறர் வட்டிற்கு
ீ வாழச்செல்லும் பெண்ணை, நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும்
என்பதற்காக மாமியாருக்கும், அந்த பெண்ணின் கணவருக்கும் சொல்லப்பட்ட அறிவுரைதான் இது.
8) கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
கப்பல் விடும் அளவுக்கு பெரும் பணக்காரராய் வாழ்ந்து, ஒருவேளை கப்பலே கவிழ்ந்தாலும், அதை எண்ணிக்
கவலைப்பட்டு கன்னத்தில் கை வைத்துக் கொண்டு உட்காருவதால் ஒரு பயனில்லை என்பது நாம் நேரடியாக
புரிந்து கொள்ளும் செய்தி. ஆனால் இதற்கு வேறு ஒரு பொருளும் உண்டு.
“கன்னமிடுதல்” என்றால் திருடுதல் என்று பொருள். ஒருவேளை கப்பலே கவிழ்ந்து செல்வத்தை எல்லாம்
இழந்து வறுமையில் வாடும் நிலை வந்தாலும், திருடும் எண்ணம் வரக்கூடாது என்பதுதான் இந்தப்
பழமொழியில் மறைந்திருக்கும் உண்மையான செய்தி.
9) கல்லைக் கண்டால் , நாயைக் காணோம்! நாயைக் கண்டால் , கல்லைக் காணோம்!!
இந்த பழமொழி திருமந்திரப் பாடலிலிருந்து உருவாக்கப்பட்டது.
“மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்”
இது திருமூலர் பாட்டு. மரத்தால் அழகிய யானை உருவம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை வெறும் மரம்
என்று பார்ப்பவர்களுக்கு யானை தெரியாது. யானை என்று பார்ப்பவர்களுக்கு மரம் தெரியாது. இந்தப் பாடலை
வைத்துதான் பல்வேறு சொல்லாடல்கள் உருவாக்கப்பட்டன. “தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை
என்றால் வெறும் சிலைதான்” என்ற கண்ணதாசன் பாட்டுக்கும், “கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது”
என்று வாலி பாடிய பாடல் வரிகளுக்கும் கடன் கொடுத்தவர் திருமூலர்தான். அந்த வரிசையில்
உருவானதுதான் இந்தப் பழமொழி. கல்லினால் செய்து வைத்த நாய் சிலையில் கல்லை மட்டும் பார்த்தால்,
அதில் நாய் தெரியாது, நாயாகப் பார்த்தால் கல் தெரியாது என்பதுதான் பொருள். அடுத்த முறை நாயைப்
பார்க்கும்போது, தேவையில்லாமல் கல்லைத் தேடாதீர்கள்.
10) களவும் கற்று மற.
“களவும் கத்தும் மற” என்பதுதான் உண்மையான பழமொழி என்று பல குறிப்புகள் கிடைக்கின்றன. “கத்து” என்ற
சொல்லுக்கு பொய் என்று அர்த்தமும் உண்டு. களவும், பொய் சொல்வதையும் தவிர்த்து விடு என்பதை
வலியுறுத்தும் பழமொழி இது. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு.
சங்க இலக்கியங்களில், அகவாழ்க்கையை இரண்டு விதமாகப் பிரித்துச் சொல்வார்கள். களவு வாழ்க்கை, கற்பு
வாழ்க்கை என்ற, அந்த இரண்டும் காதல் வாழ்க்கையையும், திருமண வாழ்க்கையையும் குறிக்கும்.
திருக்குறளில் கூட களவியல், கற்பியல் என்ற அதிகாரங்கள் உண்டு. ஆகையால் இங்கு களவு என்பது காதல்
வாழ்க்கையைக் குறிக்கும். காதல் வாழ்க்கையைக் கடந்து இல்லற வாழ்க்கைக்குள் நுழைய வேண்டுமென்று
அறிவுறுத்தும் பொருளில் இந்தப் பழமொழி அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பழமொழியை சாக்காக வைத்து எத்தனைத் திருடர்கள், அரசியல்வாதிகள் மக்கள் பணத்தைக்
கொள்ளையடித்தார்களோ தெரியவில்லை. பழமொழி சற்று மாறினால், அது எத்தனை பேருக்கு தவறான
உதாரணமாக மாறிவிடுகிறது. இனியாவது பழமொழிகளை சரியாகப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
11) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
கோரைப் புல்லில்தான் பாய் தைப்பார்கள். கழு என்பது ஒருவகை கோரைப்புல். அந்த கழு என்ற
கோரைப்புல்லைப் பயன்படுத்தித் தைக்கப்பட்ட பாயில் கற்பூர வாசனை வருமாம். இதைச் சொல்வதற்குதான்
“கழு தைக்கத் தெரியுமாம் கற்பூர வாசனை” என்று சொன்னார்கள். காலப்போக்கில் கழுதை உள்ளே
வந்துவிட்டது. இனி ஒருபோதும் கற்பூரத்தைக் கழுதையிடம் கொண்டுபோய் காட்டி உதை வாங்கிக்
கொள்ளாதீர்கள்.
12) கோத்திரம் அறிந்து பெண் கொடு பாத்திரம் அறிந்து பிச்சை இடு.
இது மன்னர் பரம்பரையில் வந்தவர்கள், வள்ளல்கள் ஆகியோருக்காக சொல்லப்பட்ட பழமொழி. உண்மையில்
அது “கோத்திறம் அறிந்து பெண் கொடு பாத்திறம் அறிந்து பிச்சை இடு” என்று இருக்க வேண்டும். “கோத்திறம்
அறிந்து பெண் கொடு” என்றால், அரசனுடைய திறமை அறிந்து பெண்ணைக்கொடு என்று அர்த்தம். “பாத்திறம்
அறிந்து பிச்சை இடு” என்றால், புலவர்களின் பாடல் திறமையைப் பார்த்து அன்பளிப்புக் கொடு என்று அர்த்தம்.
காலப்போக்கில் இது கோத்திரம், பாத்திரம்என்று மாறிப்போய் விட்டது.
13) தை பிறந்தால் வழி பிறக்கும்
தை மாதம் பிறந்தால், வயலில் அறுவடை ஆகும். உழவர்கள் கையில் செல்வம் புரளும், வாழ்க்கை செழிக்கும்
என்பது நாம் நேரடியாக புரிந்துகொள்ளும் பொருள். இந்தப் பழமொழிக்கு மேலும் சில அர்த்தங்களும் உண்டு.
வயற்காட்டில் விளைந்திருக்கும் நெல்மணிகள், முழு வளர்ச்சி அடையும் போது, அவை வரப்புகளில் சாய்ந்து
கிடக்கும். அப்போது வரப்புகளில் நடப்பதற்கு வழி இருக்காது. தை மாதம் அறுவடையான பின், மீ ண்டும்
வரப்புகளில் நடப்பதற்கு பாதை கிடைக்கும். இதையும் குறிப்பிடுவதுதான் இந்தப் பழமொழி.
இந்தப் பழமொழி குறித்து இன்னொரு புதுத்தகவல் உண்டு. மார்கழி மாதம் பெண்கள் பொதுவாக வட்டு
ீ முன்
கோலம் போடுவார்கள். கோலம், வடு
ீ துவங்கி, சாலை வரை நீளும். தப்பித்தவறி கோலத்தில் கால் வைத்தவர்
நிலைமை அலங்கோலமாகி விடும். கோலம் சாலையை மறைப்பதால் நமக்கு நடப்பதற்கு பாதை இருக்காது.
தை மாதம் பிறந்தவுடன் கோலத்திற்கு முடிவு வரும். நமக்கும் நடந்து செல்ல வழி பிறக்கும்.
14) புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து.
பழமொழி ஒருவரை நல்வழிப்படுத்துமே தவிர, தீய வழியை ஒருபோதும் காட்டாது. மனம் புண்பட்டால், புகை
பிடிக்க வேண்டும் என்பது போல அனைவரும் அர்த்தம் புரிந்து கொள்கிறார்கள். உண்மையான அர்த்தம்
அதுவல்ல. “புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று” என்பதுதான் உண்மையான பழமொழி. மனம்
புண்பட்டிருக்கும் நேரம், துன்பத்தை எண்ணியெண்ணி வருந்திக் கொண்டிருக்காமல், மனதைத் திசைதிருப்பித்
துன்பத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் உண்மையான விளக்கம்.