ஈரடி குறளில் உலக தத்துவங்கள் அனைத்தையும் திருக்குறள் எனும் உன்னத படைப்பின் மூலம் மக்களுக்குக்
கொடுத்தவன் நான். ஆம்! நான்தான் திருவள்ளுவர்.
என் தந்தை ஆதி, தாய் பகவான். இவர்களைச் சிறப்பிக்கவே “அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” என்ற முதல் குறளைப் படைத்தேன்.
திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துபால் எனும் மூன்று பால்களும் 133 அதிகாரங்களும்
ஒரு அதிகாரத்தில் 10 குறட்பாக்கள் அடங்கலாக 1330 குறள்களை உள்ளடக்கி உள்ளேன்,
பல்வேறு தனித்துவமான பெருமைகளை கொண்ட திருக்குறளில் மனித
வாழ்வின் எல்லா சந்தேகங்களுக்கும் விடை அளித்துள்ளேன். மனிதன் எவ்வகையில் வாழவேண்டும் என இது வழிகாட்டுகிறது. என் நூலில் உள்ள கருத்துக்களை கற்று உணர்ந்து அதன் பொருட்டு ஒருவர் வாழ்வாரே ஆனால் அது அர்தத ் முள்ள வாழ்வாக அமையும். நன்றி