மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் வாசி ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற தொடர்பு கொள்க ஜோதிடர் திவ்யபாரதி தொலைபேசி எண் +917010389042 வாட்ஸ்அப் எண் +919578053581 ஓம் சரஹணபவ, செயலொளிபவ, திகழொளி பவ, அறுமா முகனே அம்பலவாணன் மகனே குரு முனிக்குபதேசனே குமரகுருபரனே குழந்தைவேல் முருகனே கொடிய அசுரரைக் கூர்வேல் கொண்டு குத்தியே வதைத்த சத்துரு சம்மாரனே குட்டியே வேதனைச் சிறையில் இட்ட கோழிக் கொடியோனே கட்டிக் கனியாம் கான வள்ளியைக் கட்டியே யனைந்த கழுகா ஜலனே கந்தா கடம்பா கார்த்திகைப் பெண் கள் கீ ர்த்திசேர் குமாரா கிரவுஞ்ச மலை யைப் பிளந்த மயூர வாகனனே. தெய்வ குஞ்சரியைத் திரு மணம் புரிந்த சேனாதிபதியே சரணஞ் சரணம் ஷண்முகா சரணம் குறைகளைத் தீர்க்கும் குகனே சரணம் முருகா சரணம், முதல்வா சரணம், வருவாய் என் னெதிர் வடிவேலா சரணம், குருவே சரணம், அடி யேனை ஆட்கொள்ள உந்தன் அடிமலர் சரணம் பரி வாய் என் மேல் பகை கொண்டோரும் வைப்பு சூன்ய மும் வைராக்கியமும் பில்லியும் ஏவல் பிரம்மராக்ஷ தரும் கொள்ளிப் பிசாசும் குரளைக் காட்டேரியும் தவ முனி, ஜபமுனி, ஐடாமுனி, மோகினி, டாகினி பேயும் பற்பல முனியும் என் சொற்பொழியுங் காலத்து திரிந்து ஓடவேண்டும் பன்னிருகரனே பாலன் உந்தன் பாதமலர் சரணம் சரணம் சரணம் சங்கரி மகனே உன் தாளடி சரணம் சரணமே. இதனைப் பூசைக்கு முன் ஒரு முறை தியானித்து அதன் மேல் பூசை செய்க. மேற்கண்ட எந்திரத்தைத் தகட்டிலே போட்டுப் பூஜை செய்யச் சீக்கிரம் சித்தியாகும். தேங்காய், பழம், தினைமா, தேன், வெற்றிலைப் பாக்கு முதலியன நைவேத்தியம் செய்து ஒரு மண்டலம் பூஜை செய்யவும். இதன் மூல மந்திரம் ஓம் ஐயும் கிலியும் சௌவும் றீயும் ஸ்ரீரியும் ஹரியும் சரவணபவ வசி வசி வா வா சுவாஹ என்று இலக்ஷம் உருச்செபிக்கச் சித்தியாகும். இம் மந்திரத்தைச் சொல்லி விபூதி பிடித்து போடச் சகல தோஷமும் நிவர்த்தியாகும் சனவசியமும் ஆகும்.