Professional Documents
Culture Documents
கலித்தொகை - தமிழ் விக்கிப்பீடியா
கலித்தொகை - தமிழ் விக்கிப்பீடியா
கலித்தொகை - தமிழ் விக்கிப்பீடியா
அகத்தியம்
நற்றிணை
ஐங்குறுநூறு
பரிபாடல்
அகநானூறு
திருமுருகாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
நெடுநல்வாடை
பட்டினப்பாலை
நாலடியார்
இன்னா நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணை ஐம்பது
ஐந்திணை எழுபது
திருக்குறள்
ஆசாரக்கோவை
சிறுபஞ்சமூலம்
ஏலாதி
தமிழ்ச் சங்கம்
சங்க காலப் புலவர்கள்
சங்க கால ஊர்கள்
சங்க கால நாட்டுமக்கள்
சங்ககால விளையாட்டுகள்
பா · உ · தொ (https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%A
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை
நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு
நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல்,
சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் சிவனைப்
பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன.
அப்பாடல்களை அடி எல்லை நோக்கில் ஆராயும் போது குறைந்த அடி எல்லையாக 11
அடிகள் கொண்ட பாடல்களும் உயர்ந்த அடி எல்லையாக 80 அடிகள் கொண்ட
பாடல்களும் காணப்படுகின்றன.
பதிப் பு வரலாறு
கலித்தொகை நூலை முதன்முதலில் சி. வை. தாமோதரம்பிள்ளை 1887-ஆம்
ஆண்டில் பதிப்பித்தார். கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையுமாக "
நல்லந்துவனார் கலித்தொகை" என்னும் பெயரில் அவர் பதிப்பித்தார். அதன்
பின்னர் பல ஏட்டுச் சுவடிகளை ஒப்பிட்டும் வேறு நூல்களை ஆராய்ந்தும் உரிய
விளக்கங்களுடன், பல்கிய மேற்கோள்களை அடிக்குறிப்புகளாக அளித்தும்,
சென்னை பிரசிடென்சி கல்லூரியின் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இ. வை.
அனந்தராமையர் 1925-ஆம் ஆண்டு பதிப்பித்தார். அதன் பின்னரே பலரும்
கலித்தொகைக்கு உரை கண்டனர் எனலாம்.
தொகுப் பு
கலித்தொகை எம்முறையில் தொகுக்கப்பட்டுள்ளது எனக் கீழ் வரும் இரு
பாடல்களின் உதவியுடன் அறியலாம்.
பாடல் 1
இன்ன திணையை இன்னார் பாடினார் என்பது:
நல் லுருத் தி ரன் முல் லை, நல் லந் துவன் நெய் தல்
பாடல் 2
ஐந்திணைக்குரிய ஒழுக்கங்களுள் இன்னின்ன திணைக்கு உரிய பொருள்
இன்னின என எளிமைப்படுத்தித் தெளிவாக்கும் பாடல்
பாடல் தொகைகள்
கலித்தொகைப் பாடல்களில் நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்
தவிர்த்து 149 பாடல்களுள், பாலைக்கலியில் 35 பாடல்களும் குறிஞ்சிக்கலியில் 29
பாடல்களும் மருதக்கலியில் 35 பாடல்களும் முல்லைக்கலியில் 17 பாடல்களும்
நெய்தற்கலியில் 33 பாடல்களும் பாடப்பட்டுள்ளன.
"சுடர்த்தொடீஇ கேளாய்"
மருதக் கலி
பரத்தையின் காரணமாக தலைவன் பிரிவதும் அவ்வாறு பிரிந்த தலைவன் திரும்ப
வருகையில் தலைவனிடத்து ஊடல் கொள்வதும் தலைவியின் ஊடலைத்
தலைவன் தீர்த்தலையும் நோக்கமாகக் கொண்டவை மருதக்கலிப் பாடல்களாகும்.
பாலைக் கலி
'உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅத் தடுமாற்றருந்துயரம்
கண்ணீா் நினைக்கும் கடுமை காடு' எனப் பாலை நிலத்தின் கொடுமையைக்
கூறுவதோடு, தலைமகனின் பிரிவைத் தடுப்பதையும் தோழியர், தலைவனின் வரவு
குறித்து தலைவிக்கு உணர்த்தி தலைவியை மகிழ்விப்பதையும் முக்கிய கருத்தாகக்
கொண்டவை பாலைக்கலிப் பாடல்கள் ஆகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?
title=கலித்தொகை&oldid=3398225" இருந்து
மீள்விக்கப்பட்டது
Last edited 2 months ago by G. R. Krishnamurthy