கலித்தொகை - தமிழ் விக்கிப்பீடியா

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 8

கலித் தொகை

அகத்தியம்

நற்றிணை
ஐங்குறுநூறு
பரிபாடல்
அகநானூறு

திருமுருகாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
நெடுநல்வாடை
பட்டினப்பாலை

நாலடியார்
இன்னா நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணை ஐம்பது
ஐந்திணை எழுபது
திருக்குறள்
ஆசாரக்கோவை
சிறுபஞ்சமூலம்
ஏலாதி

தமிழ்ச் சங்கம்
சங்க காலப் புலவர்கள்
சங்க கால ஊர்கள்
சங்க கால நாட்டுமக்கள்
சங்ககால விளையாட்டுகள்
பா · உ · தொ (https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%A
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை
நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு
நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல்,
சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் சிவனைப்
பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன.
அப்பாடல்களை அடி எல்லை நோக்கில் ஆராயும் போது குறைந்த அடி எல்லையாக 11
அடிகள் கொண்ட பாடல்களும் உயர்ந்த அடி எல்லையாக 80 அடிகள் கொண்ட
பாடல்களும் காணப்படுகின்றன.

அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும்


பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு
பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள்
எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை
கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. கலித்தொகை காதலர்தம்
அகத்தொகை எனவும் கூறலாம். இப்பாடல்களின் மூலம் பண்டைக் கால ஒழுக்க
வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர், தீயவர் பண்புகள்,
விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை
அறிந்து கொள்ளலாம்.

பதிப் பு வரலாறு
கலித்தொகை நூலை முதன்முதலில் சி. வை. தாமோதரம்பிள்ளை 1887-ஆம்
ஆண்டில் பதிப்பித்தார். கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையுமாக "
நல்லந்துவனார் கலித்தொகை" என்னும் பெயரில் அவர் பதிப்பித்தார். அதன்
பின்னர் பல ஏட்டுச் சுவடிகளை ஒப்பிட்டும் வேறு நூல்களை ஆராய்ந்தும் உரிய
விளக்கங்களுடன், பல்கிய மேற்கோள்களை அடிக்குறிப்புகளாக அளித்தும்,
சென்னை பிரசிடென்சி கல்லூரியின் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இ. வை.
அனந்தராமையர் 1925-ஆம் ஆண்டு பதிப்பித்தார். அதன் பின்னரே பலரும்
கலித்தொகைக்கு உரை கண்டனர் எனலாம்.

தொகுப் பு
கலித்தொகை எம்முறையில் தொகுக்கப்பட்டுள்ளது எனக் கீழ் வரும் இரு
பாடல்களின் உதவியுடன் அறியலாம்.
பாடல் 1
இன்ன திணையை இன்னார் பாடினார் என்பது:

பெருங் கடுங் கோன் பாலை, கபிலன் குறிஞ் சி,

மருதனிள நாகன் மருதம் , - அருஞ் சோழன்

நல் லுருத் தி ரன் முல் லை, நல் லந் துவன் நெய் தல்

கல் விவலார் கண் ட கலி.


கலித்தொகை நூலில் உள்ள

பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவர் (பாலை பாடிய) பெருங்கடுங்கோ ( 35


பாடல்கள்)
குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர் கபிலர் (29 பாடல்கள்)
மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் மருதன் இளநாகனார் (35 பாடல்கள்)
முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன் (17 பாடல்கள்)
நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் நல்லந்துவன் (33 பாடல்கள்)
இந்தத் தொகைநூலில் திணைகள் வரிசைப்படுத்தி அடுக்கி
வைக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பாடலே அடிப்படை.

பாடல் 2
ஐந்திணைக்குரிய ஒழுக்கங்களுள் இன்னின்ன திணைக்கு உரிய பொருள்
இன்னின என எளிமைப்படுத்தித் தெளிவாக்கும் பாடல்

போக் கெல் லாம் பாலை புணர் தல் நறுங் குறிஞ் சி

ஆக் கமளி ஊடல் அணிமருதம் - நோக் கொன் றி

இல் லிருத் தல் முல் லை இரங் கியபோக் கேர் நெய் தல்

புல் லும் கலிமுறைக் கோப் பு.[1]


இதில் சொல்லப்பட்டவை:
தலைவன், தலைவி

பிரிதல் போக்கு - பாலை

புணர்தல் - இனிமை தரும் குறிஞ்சி

இன்பத்துக்கு ஆக்கம் தரும் ஊடல் - அருமையான மருதம்

நோக்கம் ஒன்றுபட்டு தலைவி இல்லத்தில் ஆற்றியிருத்தல் - முல்லை

இரங்கிய போக்கு - நெய்தல்

பாடல் தொகைகள்
கலித்தொகைப் பாடல்களில் நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்
தவிர்த்து 149 பாடல்களுள், பாலைக்கலியில் 35 பாடல்களும் குறிஞ்சிக்கலியில் 29
பாடல்களும் மருதக்கலியில் 35 பாடல்களும் முல்லைக்கலியில் 17 பாடல்களும்
நெய்தற்கலியில் 33 பாடல்களும் பாடப்பட்டுள்ளன.

குறிஞ் சிக் கலி


புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சித் திணைக்குரிய உரிப்பொருள் ஆகும்.
குறிஞ்சி நிலத்தின் இயற்கை எழிலை வருணிப்பதோடு தலைவியைத் திருமணம்
புரிந்து கொள்ளுமாறு தலைவனை வலியுறுத்துவதையும் முக்கிய நோக்கமாகக்
கொண்டவை குறிஞ்சிக்கலிப் பாடல்களாகும். கபிலரின் பாடல்களில் நகைச்சுவை
உணர்வும் நாடகப் பாங்கிலான பாக்களும் அமைந்து படிப்போர்க்கு இன்பம்
தருவதாக அமைந்துள்ளன.

"சுடர்த்தொடீஇ கேளாய்"

என்று தொடங்கும் குறிஞ்சிக்கலியின் 51-ஆம் பாடல் ஓரங்க நாடக அமைப்புடன்


அமைந்து இன்பம் பயப்பதாகும். இப்பாடல் பிற்காலச் சிறுகதைகளின்
முன்னோடியாகக் கூறப்படுகிறது.

முல் லைக் கலி


முல்லைக்கலிப் பாடல்கள், தலைவனோடு மனத்தால் ஒன்றுபட்டு இருந்த தலைவி
தலைவன் பிரிந்து சென்ற போது இல்லிருந்து தன்மனதை ஆற்றியிருத்தலைக்
கூறுகின்றன. கைக்கிளைப் பாக்கள் இதில் மிகுந்துள்ளன. ஆடவர் ஏறுதழுவுதலைச்
சில பாடல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.

மருதக் கலி
பரத்தையின் காரணமாக தலைவன் பிரிவதும் அவ்வாறு பிரிந்த தலைவன் திரும்ப
வருகையில் தலைவனிடத்து ஊடல் கொள்வதும் தலைவியின் ஊடலைத்
தலைவன் தீர்த்தலையும் நோக்கமாகக் கொண்டவை மருதக்கலிப் பாடல்களாகும்.

நெய் தற் கலி


பிரிவாற்றாத தலைவி, தலைவனின் துன்பங்களைப் புலப்படுத்தும், மடலேறுதல்,
மாலைப் பொழுதில் புலத்தல் போன்ற துறைகளைப் பற்றிப் பாடுவது நெய்தற்கலி
ஆகும்

பாலைக் கலி
'உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅத் தடுமாற்றருந்துயரம்
கண்ணீா் நினைக்கும் கடுமை காடு' எனப் பாலை நிலத்தின் கொடுமையைக்
கூறுவதோடு, தலைமகனின் பிரிவைத் தடுப்பதையும் தோழியர், தலைவனின் வரவு
குறித்து தலைவிக்கு உணர்த்தி தலைவியை மகிழ்விப்பதையும் முக்கிய கருத்தாகக்
கொண்டவை பாலைக்கலிப் பாடல்கள் ஆகும்.

கலித் தொகை உணர் த் தும் அறக் கருத் துகள்


'கற்றறிந்தார் ஏத்தும் கலி', 'கல்வி வலவர் கண்ட கலி' என்று சிறப்பித்துக்
கூறப்படும் கலித்தொகையில் பழமொழிகள் போன்று ஒரே வரியில்
அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

ஆற் றுதல் என் பது ஒன் று அலந் தார் க் கு உதவுதல்

போற் றுதல் என் பது புணர் ந் தாரைப் பிரியாமை

பண் பு எனப் படுவது பாடறிந் து ஒழுகுதல்

அன் பு எனப் படுவது தன் கிளை செறாமை

அறிவு எனப் படுவது பேதையர் சொல் நோன் றல்

செறிவு எனப் படுவது கூறியது மறாஅமை

நிறைவு எனப் படுவது மறைபிறர் அறியாமை

முறை எனப் படுவது கண் ணோடாது உயிர் வௌவல்

பொறை எனப் படுவது போற் றாரைப் பொறுத் தல்

(கலி ,133) [2]

கலித் தொகை காட் டும் சமூகம்


களிற் றையும் அடக் கும் ஆற் றல் இசைக் கு உண் டு என் ற
உண் மையும் , நீராடல் பற் றிய செய் தியும் , மக் களின்
நல் வாழ் விற் கான நெறிகளும் இவற் றில் விளக் கப் பட் டுள் ளன.
மடலேறுதல் , பொருந் தாக் காதல் , ஒருதலைக் காமம் ஆகியன
பற் றிச் செய் திகள் அதிகம் உள் ளன. மக் கள் காமனை வழிபாடு
செய் தமை பற் றி அறிய முடிகிறது.

வரலாற் று, புராணச் செய் திகள்


கலித் தொகையில் சேர,சோழ மன் னர் கள் பற் றிய குறிப் புகள்
காணப் படவில் லை. பாண் டிய மன் னர் , பாண் டிய நாட் டுக்
கூடல் மாநகர் , வைகையாறு போன் ற பாண் டிய நாட் டுச்
செய் திகளே அதிகம் கூறப் பட் டுள் ளன. பாரதக் கதை
நிகழ் ச் சியான அரக் கு மாளிகை தீப் பிடித் தல் , பீமன் காப் பாற் றல் ,
திரௌபதியின் கூந் தலை துச் சாதனன் பற் றியிழுத் தல் , பீமன்
வஞ் சினம் , துரியன் தொடையைப் பீமன் முறித் தது ஆகிய
புராணச் செய் திகள் இதில் இடம் பெற் றுள் ளன. திருமால் ,
முருகன் , கண் ணன் , பலராமன் முதலிய கடவுளர் கள் பற் றியும்
பிற தொகை நூல் களில் இடம் பெறாத 'காமன் வழிபாடு' பற் றியும்
கலித் தொகை கூறுகிறது.முருகனின் படைவீடுகள் பற் றிய
குறிப் புகளும் இடம் பெற் றுள் ளது.

வெளி இணைப் புகள்


பாடல் கள் (http://www.chennainetwork.com/tamil/pathitruppathu.ht
ml) பரணிடப் பட் டது (https://web.archive.org/web/20050315204649/
http://www.chennainetwork.com/tamil/pathitruppathu.html) 2005-03-
15 at the வந் தவழி இயந் திரம்
அடிக் குறிப் புகள்
1. அகத் திணை வாய் பாட் டுப் பாடல்
2. மது.ச. விமலானந் தம் (2020) (in தமிழ் ). தமிழ் இலக் கிய
வரலாறு. தி-நகர் , சென் னை.: முல் லை நிலையம் . பக் . பக் க
எண் . 45.

"https://ta.wikipedia.org/w/index.php?
title=கலித்தொகை&oldid=3398225" இருந்து
மீள்விக்கப்பட்டது


Last edited 2 months ago by G. R. Krishnamurthy

You might also like