Professional Documents
Culture Documents
வேரறுந்த பின்னே
வேரறுந்த பின்னே
ஹமீ து தம்பி .
சாவன்ன ஹாஜியார், சுபுஹு தொழுகைக்கு எழுந்தவர் . தொழுது முடித்ததும்
,அவருக்கு ஒரு சாயா குடிக்கவேண்டும் .இரவே ப்ளாஸ்க்கில் எப்போதும் சாயா
போட்டு வைத்துவிட்டுத்தான் போயிருப்பாள் இன்னாசி .அதில் பாதி சூடு
போயிருக்கும் .மைக்ரோ ஓவனில் சுடவைத்து குடிக்கலாம் .இருந்தாலும் புதுசா
போட்டு குடிச்சா இந்த இளம் குளிர் நாளையில் சுகமாய் இருக்கும் .பக்கத்தில்
சாயா கடை ஏதுமில்லை .தெருவுக்குள் போகவேண்டும் .அங்கே நைனா கடை
திறந்திருக்கும் .பள்ளிக்கு ஸுபுஹ் தொழுக போய் இருக்கவேண்டும் .தொழுது
விட்டு நைனா கடையிலே சாயா குடிச்சிட்டு வந்திருக்கலாம் . பள்ளிக்கு போகும்
அளவுக்கு உடம்புக்கு முடியவில்லை. அடிக்கடி வயதுக்குரிய பிரட்சினைகள்
.சக்கரை ,ரெத்தக்கொதிப்பு எல்லாமே காலம் தவறாமே ,நாற்பதுக்கு முன்னாடியே
வந்துருச்சி . வியாபாரத்தை கவனித்துக்கொண்டு வேலை வெட்டி என்று
அலைந்த 65 வயசுவரை எந்த தொந்தரவும் இல்லை .அதுக்கு பொறவு அல்லா
ஒவ்வொரு சுவிட்ச்சா அணைக்க ஆரம்பிச்சுட்டான் என்று நினைத்துக்கொண்டார்
.இப்போ ஓய்வுனு வந்து பத்து வருஷம் ஆவுது .பிள்ளைகளிடமும்
,மருமக்களிடமும் வியாபாரங்களை ஒப்படைத்துவிட்டு சென்னையில் மகளின்
குடும்பத்தோடுதான் ,மனைவியோடு இருந்தார் .அப்போதுகூட இத்தனை உடல்
பிரட்சினைகள் இல்லை .
அந்த வடுகட்டியதே
ீ ,ஒரு கதை . அவர்களின் வடு ீ ,அதாவது முன்பு
சொன்னதுபோல் ,அந்த ஊர் வழக்கப்படி அவர் மனைவிக்கு கொடுக்கப்பட்ட
வடுதான்
ீ அவர் வடு
ீ . அது தெருவுக்குள் இருந்த பாரம்பரியமான வடு ீ .ஆனால்
அந்த ஊரில் வடுகள்
ீ நெருக்கமாக கட்டி ,தெருக்கள் சிறிய சந்துகலாக இருந்தது .
பெரிய பழைய காலத்து வடாக ீ இருந்தபோதிலும் , குறுகிய சந்துக்குள் இருந்தது .
சரி எப்படியும் சாயா உடனே குடித்தாக வேண்டும் கடை வரை போய் பார்ப்போம்
என்று கிளம்பினார். நைனா கடையை நோக்கி போனார் தோட்டக்காடுகளை
கடந்து தெருவுக்குள் வருவதற்குள் அவருக்கு மூச்சு வாங்கியது. இன்னும் அது
மண்' சாலைதான் .மழை காலத்தில் நடக்கமுடியாது .பஞ்சாயத்து போர்டு
இதெல்லாம் செய்யாது .நாம்தான் தார் ரோடோ ,சிமின்ட்'ரோடோ
போடவேண்டும் என்று எண்ணிக்கொண்டார். நடந்து வந்தது மூச்சு வாங்கியது .
காலை நடப்பயிர்சியை விட்டு இப்போது ஒருவருடத்துக்கு மேலாகிவிட்டது
.இன்சா அல்லாஹ்,.அதை தொடரவேண்டும் என்று எண்ணிக்கொண்டார் .
எங்காவது சிறிது உட்காரலாம் என்றால் வசதியாக ஒரு கல்கூட இல்லை ..
வட்டு
ீ வேலி கதவை திறந்து கொண்டு ஜன்னல் அருகில் போனார்\. அருகில்
சென்றதும் அது மைமூனா என்று தெரிந்தது..
நான் வந்து ஒரு வாரம் ஆகுது. இங்கே இந்த தோட்ட பங்களாவுல தங்க
முடிவெடுத்துட்டேன் என்றார்