Professional Documents
Culture Documents
Sub Code (Ministry Missions)
Sub Code (Ministry Missions)
1
நாம் இந்தச் சுயாதீனத்தைக் குறித்துச் சந்தோஷப் படுகிறோம், ஆனால்
அதைப் பற்றிப் பெருமை பாராட்ட மாட்டோம். பிறரைக் கட்டியெழுப்பவும்,
அவர்கள் தேவனோடு நடக்கும் நடையையும், அவருக்கென்று செய்யும்
பணியையும் நாம் மதிப்பதைக் காட்டவும் அந்த விடுதலையைப்
பயன்படுத்துகிறோம். 'சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள்,
இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கு ஏதுவாக அனுசரியாமல்,
அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்' (கலாத்தியர் 5:13).
2
கண்ணோட்டம் கொண்டிருந்தான். ஆனால் இயேசுவோ, 'அவனைத் தடுக்க
வேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் எளிதாய் என்னைக்
குறித்துத் தீங்கு சொல்ல மாட்டான். நமக்கு விரோதமாய் இராதவன் நமது
பட்சத்தில் இருக்கிறான்' என்று சொன்னார் (மாற்கு 9:39-40). இயேசு பரந்த மனம்
படைத்தவர்.
3
வாதம், அடக்கியாளுதல், ஒப்பிடுதல், குறைவுகளை ஏற்காமை, போட்டி,
விமரிசனம், சிறு காரியங்களைப் பெரிதுபடுத்தல், இன்னும் வேறு பல. உள்ளே
இருந்து: பெருமை, பயம், கசப்பு, எரிச்சல், மன்னியாத குணம், பாதுகாப்பற்ற
உணர்வு, சரீர முயற்சி, குற்றவுணர்ச்சி, வெட்கம், புறங்கூறுதல், மாய்மாலம்,
இன்னும் எத்தனையோ...இவையெல்லாம் கிருபையைக் கொல்பவை!
4
செய்யாமலேயே அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று முடிவு
கட்டிவிடக் கூடாது. அவர்கள் உண்மை, நொறுங்குண்ட மனம், சிலுவைப்
பாதை இவை பற்றிக் கொஞ்சமேனும் அறிந்திருப்பார்களானால், ஒரு
கிறிஸ்தவச் சகோதரனையோ அல்லது சகோதரியையோ - அதுவும்
தேவனுடைய ஊழியத்தில் உள்ள ஒரு தலைவரையோ பற்றிக் குறை
கூறவோ, தீது சொல்லவோ வெகுவாகத் தயங்குவார்கள். அதே சமயத்தில்
விவரங்களைச் சரிபார்க்காமல் தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட
கூற்றுகளை வெளியிடுவோரும் தங்களது தவறு சுட்டிக்காட்டப்படும்
பட்சத்தில் தங்களைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
உண்மை விவரங்களைச் சேகரிப்பதிலும், மிகைப்படுத்திக் கூறாமலிருப்பதிலும்
அதிகக் கவனம் காட்ட வேண்டும். தங்களை விமரிசிப்போரை நேசிக்கவும்,
ஊழியம் செய்கையில் அவர்களைக் குறித்து அன்பற்ற காரியங்களைச்
சொல்லாதிருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
5
அடுத்த தன்மை அடக்கியாளுதல். ஸ்வின்டால் கூறுகிறார்:
6
விவரங்களில் பிரிவினைகளும், பதட்டங்களும் காணப்படுகின்றன. வேதாகமம்
திட்டவட்டமாகப் பேசாத சில காரியங்களிலும் கூட நாம் இவ்வளவு
பிடிவாதம் காட்ட வேண்டுமா? வெவ்வேறு மக்கள் கூட்டங்கள் நடுவில்
வெவ்வேறு விதங்களில் தேவன் கிரியை செய்கிறார் என்பதை நாம் ஏற்றுக்
கொள்ளக் கூடாதா? தேவனுடைய பணி என்பது எந்த ஐக்கியத்தையும், எந்த
நிறுவனத்தையும் விடப் பெரியது. ஒரு பணி நிறைவேற்றப்பட
வேண்டுமானால், குறிப்பிட்ட தேவைகளைச் சந்திக்கக் கூடிய குறிப்பிட்ட
நிறுவனங்கள் அவசியம் தான். உதாரணமாக, ஒரு திட்டவட்டமான
நோக்கத்திற்கென்று ஐரோப்பிய, வட அமெரிக்க இளைஞர்களையும், அதன்
பிறகு அகில உலகின் இளைஞர்களையும் தமது பணியில் அணிதிரளச்
செய்வதற்காகவே ஆபரேஷன் மொபிலைசேஷனை தேவன் தோன்றச்
செய்தார். நாம் நிறுவனங்களைத் தலை மேல் தூக்கி வைத்துக்
கொண்டாடுவதும் இல்லை, அவற்றில் நடைபெறுவதெல்லாம் நமக்குப்
பிடிக்கவில்லை என்பதற்காக பின்னணியில் அவற்றை ஒரேயடியாக ஒதுக்கி
விடுவதும் இல்லை. அவற்றின் குறிப்பிட்ட நோக்கத்தின் மதிப்பிட்டுப் பார்க்க
வேண்டும். பரந்த மனதுடன் நடந்து கொள்ள வேண்டும். நம்மைக் காட்டிலும்
பிறரை உயர்வாகக் வண்
ீ கருத வேண்டுமென பிலிப்பியர் 2 கூறுவதை மறந்து
விட்டாயா? 'ஒன்றையும் வாதினாலாவது, பெருமையினாலாவது செய்யாமல்,
மனத்தாழ்மையினாலே ஒருவரை ஒருவர் தங்களிலும்
மேன்மையானவர்களாக எண்ணக் கடவர்கள்.
ீ அவனவன் தனக்கானவைகளை
அல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக' (பிலிப்பியர் 2:3-4).
7
படைப்புக்களையே மற்றவர்களுடைய படைப்புக்களையும் பாராட்டிப்
பேசுவதைக் கேட்பதும், தங்களது கூட்டங்களுக்கு மற்றவர்களது
படைப்புக்களை எடுத்துச் செல்வதைப் பார்ப்பதும் எத்தனை பெரிய பாக்கியம்!
இதை ஏற்கெனவே செய்து வருவோருக்காகத் தேவனுக்கு நன்றி
செலுத்துகிறேன்.
8
அல்லது அப்படிச் செய்யலாம் என்பதற்குப் பதிலாக இப்படித் தான் செய்தாக
வேண்டும் என்று அறுதியிட்டுக் கூறப்படுகின்றன. இப்படிப்பட்ட சர்ச்சைகள்
ஏராளம் உண்டு.
9
பணமும், ஊக்கம் தரும் மற்ற பல காரியங்களும் குறைவுபடும் வேளைகளில்
கசப்பு எளிதில் தலைதூக்கும் என்பதை அறிந்து கொள்வாய். உன்னை
ஊக்கமிழக்கச் செய்வதற்காக நான் இதைச் ஏராளமாக வரும்.
சொல்லவில்லை, உண்மை தான், ஜெபத்திற்கு விடையாக ஆசீர்வாதங்களும்,
சந்தோஷமும் மிஷனெரிப் பணி என்பது ஒரு இன்பமான பணியாகும். நான்
அறிந்த பல மிஷனெரிகள் கிருபை எழுப்புதல் பெற்றவர்கள்! தங்கள்
வாழ்க்கையை அதிகப் பயன் தருவதாக்குவது எப்படி ஒரு என்று
அறிந்தவர்கள். ஆனாலும், விசுவாச இலட்சியங் களுக்கும் யதார்த்தமற்ற
எதிர்பார்ப்புகளுக்கும் இடையே சமநிலையைக் கண்டுபிடிப்பதும்
விலைக்கிரயத்தை எண்ணிப் பார்ப்பதன் ஒரு பகுதியே. ஈடித் ஷேஃபர் அதை
இப்படிக் கூறுகிறார்: 'ஒரு சுவிசேஷகன் அல்லது "சத்தியத்தை
எடுத்துரைப்பவனின்” வாழ்க்கையின் யதார்த்தம், எல்லா வியாதி,
விக்கினங்களையும், சரீரக் களைப்பையும் அவனிடமிருந்து முற்றிலும்
அகற்றிப் போடும் தொடர்ச்சியான அற்புதங்கள் அல்ல, அந்த மனிதனின்
பெலவனத்தின்
ீ நடுவே போதுமான அளவு தேவனுடைய பெலன்
விளங்குகின்ற, கடின உழைப்பு நிறைந்த நாட்களே.' (பாடுகள் - Affliction).
10
விபரங்களை நீ தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம். உனது
எதிர்காலத்திற்கான தேவனுடைய திட்டம் என்ன என்பதைத் தெளிவாக
அறிந்து கொள்ளும் முயற்சியில் நிச்சயமாக நீ ஜெபிக்கவும், வேதத்தைப்
படிக்கவும் வேண்டியதாகும். [கிளென் மையர்ஸ் தனது 'The World Christian Starter
Kit' (அகில உலகக் கிறிஸ்தவனின் ஆரம்பப் பாடம்) என்ற நூலில் 'நான் என்ன
செய்ய வேண்டும்?' என்ற கேள்விக்குப் பதிலாக நீ செய்யக் கூடிய நூறு
செயல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.] மிஷனெரிப் பணித்தளத்துக்கு
அழைப்பு என்பது உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும், உணர்வுப் பூர்வமான
அழைப்பு அல்ல. ஒரு சிலரது அனுபவம் அப்படிப்பட்டதாக இருக்கலாம்.
ஆனால் பொதுவாக, அடிப்படையில் அது இந்தப் பத்தியில் நாம் வருணித்த
பல முறைமைகளின் விளைவாக ஏற்படும், நமது சித்தத்தின் தெரிந்தெடுப்பே
ஆகும். பல சமயங்களில் அது, ஒவ்வோரடியாகக் கவனமாக எடுத்து வைத்து
முன் செல்லும் ஒரு தொடர்ச்சியான முறைமையாகும். டெட்சுனவ்
யாமமோரி, 'Penetrating Missions' Final Frontier' (மிஷனெரிப் பணியில் இறுதியான
ஊடுருவுதல்) என்பதில் இவ்வாறு எழுதுகிறார்: எல்லைகளை
11
செல்லும் விஷயத்தில் சம அளவு அக்கறை கொண்டவர்களாக இருக்கும்படி
எதிர்பார்க்கப் பட்டனர். அந்தப் பெரிய பணியில் நமது பங்கு எதுவானாலும்
சரி, நம்மிடம் இன்று எதிர்பார்க்கப் படுவதும் அது தான்.
12
எழுதப்பட்டதோ அவர்கள், விசுவாசிகளாகிச் சில வாரங்கள் மட்டுமே
ஆகியிருந்தன. இளமையிலேயே பயிற்சியைத் தொடங்கலாம். மக்களை,
அவர்கள் இருக்கின்ற இடங்களிலேயே தலைமைப் பொறுப்புகளுக்குப்
பயிற்றுவிக்கும் பணிக்கு, அதே சமயத்தில் உலகளாவிய தரிசனம் ஒன்றை
அவர்களுக்கு வழங்குவதற்கு என்னை அர்ப்பணித்திருக்கிறேன். அப்போஸ்தலர்
1:8 இன் தரிசனம் படைத்த, தங்கள் சொந்த நாடுகளில் வல்லமை மிக்க
ஆவிக்குரிய தலைவர்களை உருவாக்கும் வேத போதனையை நாம் ஒன்று
திரட்டக் கூடுமானால் திருச்சபை எவ்வளவு பெரிய 'வல்லமை நிலையமாக'
விளங்கக் கூடும், அல்லவா? இது சபையை மிஷனெரிப் பணியில் பலத்த
உந்துதலோடு முன்செல்லச் செய்யும். 'வரீ திரமும் கற்பனா சக்தியும் கொண்ட
மிஷனெரிப் பணிகளுக்கென்று தேவ மக்களை அணி திரட்டக் கூடிய
தலைவர்கள் இன்று வெகுவாகத் தேவை. [பால் பீஸ்லி - மர்ரே - A Call to
Excellence (உன்னதத்திற்கு ஓர் அழைப்பு). அப்படிப்பட்ட தலைவர்களைத் தேவன்
தாமே நமக்குத் தந்தருளுவாராக. ஆவியானவரால் நிறைந்திரு
13
முன்னேற்றம் மற்றும் தேவனுடன் நடப்பது பற்றியே அதிகமாகப் பேசுகிறேன்.
தலைவர்களுக்கு இதை விட அவசியமானது, முக்கியமானது
வேறொன்றுமில்லை. தானாக இதைத் தொடரும் மற்றொரு காரியம்
தலைவர்கள் மற்றவர்களுடனான தங்களது உறவுகளில் தங்களாலான மட்டும்
மற்றவர்களுக்குப் பக்திவிருத்தி உண்டாக்கவும், மற்றவர்களைக்
14
கூடாது. அனுதினமும் நமது வாழ்க்கைகளை எப்படி நடத்திச் செல்கிறோம்
என்பதில் (கலாத்தியர் 5:22-25). யதார்த்தமாக வெளிப்பட வேண்டும். கிறிஸ்தவப்
பணியில் நாம் உருவாக்குகின்ற யுக்திகளை, செயல்திட்டங்களைப் பாதிக்க
வேண்டும். விசேஷமாக, கிறிஸ்தவப் பணியில் முன்செல்லப் பரிசுத்த
ஆவியானவரே நம்மை வழிநடத்தும்படியாக அவரையே இன்னும் அதிகமாக
நாம் சார்ந்திருக்க வேண்டுமென்று தலைவர்களிடம் அதிகப் பாரத்தோடு
கூறிக் கொள்கிறேன். பரிசுத்த ஆவியானவரே மிஷனெரிப் பணியை நடத்திச்
செல்கிறார் என்பது அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வெட்ட
வெளிச்சமாகிறது.
15
நிரப்பப்பட்ட ஸ்தேவானும் கிறிஸ்துவுக்கு ஓர் உன்னத சாட்சியாகத் திகழ்ந்து,
இரத்தசாட்சியாக மரித்தான் (6:3,5 7:55). ஆவியானவரின் நிறைவில் தான் பவுல்
தனது ஒப்பற்ற ஊழியத்தை ஆரம்பித்தார், நிறைவேற்றினார் (9:17; 13:9). அவரது
மிஷனெரி நண்பரான பர்னபாவும் ஆவியானவரால் நிரம்பியிருந்தார் (11:24).
ஆவிக்குரிய தலைமைத்துவத்துக்கு அடிப்படைத் தகுதியும். ஆயத்தமும்
இதுவே என்பதை நிதானித்து அறிய முடியாத எவனும் ஒரு விந்தையான
(ஆவிக்குரிய தலைமை) குருடனே எனலாம்.
16
4. தலைவரிடம் எதிர்ப்பார்க்க படுகிறவை, அவர்களிடம் இருக்க
வேண்டியவை மற்றும் தலைவர்கள் தவிர்க்க வேண்டியவை
ஆகியவைகளை விவரிக்கவும்.
ஒரு தலைவனின் வாழ்வில் சமச்சீர் நிலை
17
பற்றிய விவேகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய தங்கள் பொறுப்பை
உணர்ந்து நடக்க வேண்டும். குறிப்பாக, இளம் தலைவர்கள், மிஷனெரி
வரலாற்றில் அரும்பெரும் வரர்களாக
ீ விளங்கிய மனிதர்களின் வாழ்வில்
காணப்படும் துணிச்சலான விசுவாசம், பொதுவாக அவர்களது பல்லாண்டுக்
கால அனுபவங்களுக்கும், ஆரம்ப காலத் தவறுகளுக்கும் பின்னர் வந்ததே
என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கை
வரலாறுகள் பல முழுமையான உண்மையைக் கூறவில்லை என்பது என்
எண்ணம். ஏனெனில் அவை கடந்த காலத்தின் தலைசிறந்த தலைவர்களது
பாவங்களையும் தோல்விகளையும் பற்றி எதுவும் சொல்லாமல் விட்டு
விடுகின்றன. A.W. டோஸர் சொன்னது போல:
18
கட்டுப்பாடு இல்லாத கிருபை அவமானத்துக்கே வழி நடத்தும்.
ஆண்டவருடைய பணியின் ஒரு பகுதியை மேற்பார்க்கும் பொறுப்பிலுள்ள
தலைவர்கள் விதிகளின் முக்கியத்துவத்தை அளவுக்கு மீ றி வலியுறுத்தலாம்.
உலகில் ஒலிக்கும், கட்டுப்பாட்டுக்கு எதிரான சுதந்தரத்தின் குரல்களைக்
காண்பதன் விளைவாக அவர்கள் இப்படி விதிகளை முக்கியப்படுத்தலாம்.
அல்லது நான் சொன்னதைப் பிறர் கேட்டு நடந்தேயாக வேண்டும் என்ற
பெருமையின் விளைவாகவும் இப்படி நடக்கலாம். ஒருவேளை அவர்கள்
ஏற்படுத்தியுள்ள விதி அல்லது சட்டம் சரியானதாக இருக்கலாம், ஆனால்
அதைத் தங்களைச் சுற்றியுள்ளோரிடம் தெரியப்படுத்தும், அமுல்படுத்தும்
முறை சரியற்றதாக இருக்கலாம். வலுவான குணநலன்களும், உறுதியான
நம்பிக்கைகளும் உள்ள நம்மைப் போன்றோர் பொதுவாக மற்றவர்களை
அதிகம் நோகடிக்கிறோம், ஆனால் அதை உணரத் தவறி விடுகிறோம்.
19
4. முன்னுரிமைகளை நிர்ணயிப்பது என்பது தலைவர்கள் முன் இருக்கும் ஓர்
இடையறாத சவால் எனலாம். நமது கவனத்தைக் கோருகின்ற ஏராளமான
காரியங்கள் உண்டு, எனவே நேரத்தைக் கவனமாகப் பயன்படுத்துவது
இன்றியமையாததா கிறது. நாம் காத்துக் கொள்ள வேண்டிய சில
முக்கியமான சமச்சீர் நிலைகள்: தனியாக நேரம் செலவிடுவது மற்றும்
பிறரோடு நேரம் செலவிடுவது; குடும்பத்தோடு நேரம் மற்றும் குடும்பத்தினர்
அல்லாதவர்களோடு நேரம்; வேலை நேரம் மற்றும் ஓய்வு நேரம்; வேலை
நேரம் மற்றும் விளையாட்டு நேரம்; ஜெப நேரம் மற்றும் வேதவாசிப்பு நேரம்;
அவிசுவாசிகளுக்குச் சாட்சி கூறும் நேரம் மற்றும் விசுவாசிகளுக்கு உதவும்
நேரம். இந்தச் சமச்சீர் நிலையைக் கண்டு பிடிப்பதில் நமது இயற்கையான
சுபாவத்துக்குப் பெரும் பங்குண்டு. எந்த இரண்டு தலைவர்களோ அல்லது
அவர்களது பணிகளோ ஒரே மாதிரி இருப்பதில்லை. காலத்தைப்
பயன்படுத்துவதில் சமச்சீர் நிலை என்பது அந்தந்தத் தலைவர்களின்
குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கண்டறியப்பட வேண்டும்.
தலைவர்கள் அல்லாத மக்களும் தங்களது தலைவர்களின் வாழ்வில் இந்தச்
சமச்சீர் நிலை காணப்படத் தங்களால் இயன்ற அளவிற்கு ஒத்துழைப்பு நல்க
வேண்டும். தலைவர்கள் மீ து தேவையற்ற நெருக்கடிகளைத் திணிக்கக் கூடிய,
அளவுக்கு மிஞ்சிய எதிர்பார்ப்புக்கள் இன்றி நடந்து கொள்ள வேண்டும்.
அன்பும், குழுவாக இணைந்து பணி செய்தலும் வலியுறுத்தப்பட வேண்டும்.
நாம் நமது வாழ்க்கையின் முடிவு பரியந்தம் இதைச் செய்து
கொண்டேதான் இருப்போம்.
20
அறிக்கையிட்டு, மற்றவர்களிடம் உண்மையைச் சொல்லி மன்னிப்பு
கேட்பதாகும். இது, யாராவது பதிலுக்கு ஏதாவது செய்து விட்டால் என்ன
செய்வது என்ற பயத்தில் தவறுகளைத் தட்டிக் கேட்காமல் விடுவது அல்ல.
உண்மையில் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளில்
அத்தியாவசியமானது எந்தப் பயமுறுத்தலைக் கண்டும் பணியாத
அஞ்சாநெஞ்சம் ஆகும். இன்னும் சிலர் மற்றவர்களைப் பயமுறுத்திப் பணிய
வைப்பதில், அவர்களைத் தரக் குறைவாக எண்ணச் செய்வதில் வல்லவர்கள்.
இப்படிச் செய்யாமல் நம்மைக் காக்க வல்ல ஒரு வசனம் II தீமோத்தேயு 1:7
ஆகும்: 'தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும்
தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.'
21
சுத்தத்தை நேசிக்க எனக்குக் கற்றுத் தந்துள்ளனர். A W டோஸர், இன்னும்
அவரைப் போன்ற வேறு பலர், அனுதினமும் தேவனுடைய பிரசன்னத்தை
அனுபவித்து அறிவதன் மதிப்பை உணர உதவியுள்ளனர். இவையிரண்டுமே
வலியுறுத்தப்பட வேண்டியது அவசியம். இவையிரண்டுக்கும் இடையே
எப்போதும் ஒரு பதட்டம் இருந்து கொண்டேயிருக்கும் - ஜீவனுக்கும்
கோட்பாட்டுக்கும் இடையே, வாழ்க்கைக்கும் கொள்கைக்கும் இடையே, ஒரு
சமச்சீர் நிலை. எனினும், கொள்கை என்பது தனிப்பட்ட நம்பிக்கைகளிலும்,
இலட்சியங்களிலும் இருந்து வேறுபடுத்தி அறியப்பட வேண்டும். அநேகத்
தலைவர்கள் தாங்கள் இப்போதுள்ள பதவிகளில் இருக்கக் காரணம், ஏதோ
ஒரு குறிப்பிட்ட பணி நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அவர்களது
தனிப்பட்ட வலுவான நம்பிக்கையே. இதில் தவறொன்றும் இல்லை,
என்றாலும் நாம் அனைவரும் கட்டாயமாக விசுவாசிக்க வேண்டிய முக்கிய
கோட்பாடுகளுக்கும், ஓரளவு கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்கக் கூடிய
மற்றக் காரியங்களுக்கும் இடையேயுள்ள மயிரிழை அளவு வித்தியாசத்தை
உணர வேண்டியது அவசியம். அநேக சபைப் பிரிவுகளின் தலைவர்கள் சபைப்
பாகுபாடற்ற ஒத்துழைப்பு நல்கப் பயப்படுகிறார்கள். அடிப்படைக் கிறிஸ்தவக்
கோட்பாடுகளுக்குப் பங்கம் வராதென்றாலும், எங்கே தங்கள்
நம்பிக்கைகளையும் இலட்சியங்களையும் விட்டுக் கொடுக்க நேருமோ.
22
நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய வேண்டுமானால் தொடர்பு சாதன
முறைமைகள் அனைத்தையும் கையாள வேண்டும் என்பது எனது கருத்து.
வதியிலும்
ீ சரி, உலகிலும் சரி மக்கள் மிஷனெரி மக்கள் அனுபவங்களைப்
பெறச் செய்ய வேண்டும். உள்ளூரில் நாம் எதையாவது செய்வது உலகில்
பெரிய தாக்கத்தையே ஏற்படுத்த முடியும் என்பதை நாம் உணர வேண்டும்.
புதிய பணியாளர்கள் நுழைவதற்கு ஏற்ற திறந்த வாசல்கள் எங்கே உள்ளன
என்பது பற்றிய விவரங்களை நாம் சேகரிக்க வேண்டியது அதிக அவசியம்.
இது பற்றிய விவரங்கள் உண்மையில் மலை போல் குவிந்துள்ளன
என்றாலும் ஒரு சராசரி மனிதனின் கையில் இவை கிட்டுவதில்லை.
மிஷனெரிப் பணிக்கு அணி திரட்டும் ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் ஒரு
டஜன் மிஷனெரி ஐக்கியங்களுடனாவது தொடர்பு கொண்டிருக்க வேண்டும்:
அவர்களது தகவல்களைப் பெற்றுத் திறந்த வாசல்களைக் கண்டறிந்து
கொள்ள வேண்டும். அதற்குக் கடிதங்கள் எழுத வேண்டியதாகலாம்,
தொலைபேசி அழைப்புகள், ஃபேக்ஸ்கள், e-மெயில்கள் தேவைப்படலாம்.
இன்றைய நாளில் இருக்கின்ற தொலைத் தொடர்பு வழிமுறைகள்
அனைத்தையும் பார்க்கையில் எதையும் செய்யாமல் இருக்க நமக்குச் சாக்குப்
போக்கே கிடையாது. அப்போஸ்தலனாகிய பவுல், தனது கரங்களில் ஒரு
'மொபைல் போன்' அல்லது 'கம்ப்யூட்டர்' வைத்திருப்பதை உன்னால் கற்பனை
செய்து பார்க்க முடிகிறதா? இவற்றையெல்லாம் தேவன் கருவிகளாக நமது
கரங்களில் கொடுத்திருக்கிறார். தொழில் நுட்பத்தைப் பார்த்து நாம் பயப்பட
வேண்டியதில்லை. இதைத் தவறாகப் பயன்படுத்தலாம் என்பது உண்மைதான்,
ஆனால் அந்தப் பயம் இவற்றைத் தகுந்த முறையில் பயன்படுத்தவே நம்மை
ஏவி விட வேண்டும். திறந்த வாசல்கள் அநேகம் உண்டு, சாதாரண மக்களும்,
மிஷனெரிப் பணிக்குச் செல்லக் கூடியவர்களும் இந்த வாசல்களைப் பற்றிக்
கேள்விப்படுகையில், நிச்சயமாகச் செயலில் இறங்குவர் என்று நம்புகிறேன்.
ஆனால் முதலில், அவர்கள் தகவல்களைப் பெற்றாக வேண்டும்.
23
இணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை நாம் உணர வேண்டும்.
இந்த உலகம் தழுவிய பிணைப்பை ஏற்படுத்த 'Adopt A People' இயக்கம், AD 2000,
லூஸான் மற்றும் WEF போன்ற பெரிய அமைப்புகள் சிறந்த மையங்களாகக்
கூடும். இவற்றின் நடுவில், சிறிய மிஷனெரி இயக்கங்களின் முக்கியத்
துவத்தையும் நாம் மறந்து விடக் கூடாது. இவை போன்ற ஆயிரக்கணக்கான
இயக்கங்கள் உலகெங்கும் உண்டு. (மிஷனெரிப் பணியில் பல்லாண்டு
அனுபவம் பெற்ற நாம் இந்தப் புதிய சிறு இயக்கங்களுடன் நமது
அனுபவங்களைத் தாராளமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது நாம் செய்த
சில தவறுகளை அவர்கள் தவிர்க்க உதவும். ஒருவரோ டொருவர் இணைந்து
செயலாற்றுவது முக்கியம் என நான் கூறுவதற்கு மற்றொரு காரணம் இது
தான்.) பெரிய இயக்கங்கள், சிறிய இயககங்கள், தனிப்பட்ட மிஷனெரி
அணிதிரட்டுபவர்கள் ஒருவரோடொருவர் கலந்து பேச வேண்டும்.
24
இருக்கும். நீதிமொழிகள் 18-லும், இன்னும் வேறுபல வேத பகுதிகளிலும் நாம்
வாயைத் திறந்து பேசுமுன் நம்மிடம் உள்ள தகவல்கள் உண்மைதானா
என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
25
பெட்டி மூலமாக நிரம்பி வழியும் கருவிகளைக் கண்டு நானே ஆச்சரியத்தில்
ஆழ்ந்து விடுகிறேன். வேறு ஏதோ ஓரிடத்தில் மிஷனெரிப் பணிக்கு அணி
திரட்டும் வண்ணமாக நூறு மில்லியன் இலக்கியப் பிரதிகளை விநியோகிப்பது
பற்றி எழுதியது என் நினைவிற்கு வருகிறது. அது ஒன்றும் அளவுக்கு
அதிகமல்ல. இதில் பெரும்பகுதி ஏற்கெனவே பல்வேறு திருச்சபைகளாலும்
இயக்கங்களாலும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. ஏற்கெனவே
தயாரிக்கப்பட்டு வருவதைப் பத்து மடங்கு பெருகச் செய்தால், அது
காலாகாலத்திற்கும் மிகப் பிரமாண்டமான மிஷனெரிப் பணி அணி
திரட்டலுக்கு வழி நடத்தும் என்று யோசிக்கிறேன். அதன் மூலமாக, 2000 வது
ஆண்டுக்குள்ளாக ஒவ்வொருதனிநபருக்கும் நற்செய்தி, ஒவ்வொரு மக்கள்
கூட்டத்திற்கும் ஒரு திருச்சபை என்பன போன்ற ஏற்கெனவே
ஏற்படுத்தப்பட்டுள்ள சிறந்த இலக்குகளை நிறைவேற்ற முடியும். ஆனால் இது
நடைமுறையில் உண்மையாவதற்கு புத்தாயிரமாவது ஆண்டில் பல
வருடங்கள் பிடிக்கும் என்பதை இப்போது காண்கிறேன். நாம் அதிகம்
பின்தங்கிப் போனோம் என்பதை ஒப்புக் கொள்ளவே வேண்டும்.
26
ஒளிநாடாவைப் போட்டுக் காட்டலாம், அல்லது சில இலக்கியங்களைப்
பகிர்ந்து கொள்ளலாம். இறுதியில் உலகெங்கும் உள்ள கோடிக் கணக்கான
மக்களைப் பாதிக்கும் விதத்தில் இன்று தாங்கள் மிஷனெரிப் பணியில்
ஏதாவது செய்யக் கூடும் என்பதைக் கிறிஸ்தவர்கள் மட்டும் உணரச் செய்ய
முடியுமானால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு ஓர் அளவோ,
எல்லையோ இருக்காது.
27
எதையும் வேண்டுமென்றே செய்யாதிருப்போம். அப்படிச் செய்வது 'நான்' என்ற
அகங்காரத்துக்கு வழி வகுக்கும். சில விதமான மக்களின் சிறப்பான கவனம்
நம்மீ து விழுகிறது, இதுவும் நல்லதல்ல. நம்மோடு உடன்படாத மக்களின்
கருத்துக்களையும், நாம் மிதமிஞ்சி செய்கிறோம் என்று எண்ணும்,
மிகைப்படுத்திப் பேசுகிறோம் என்று கூறும் மக்களின் எண்ணங்களையும்
கேட்டறிய வேண்டும். இப்படியாக நாம் ஒற்றுமையை உருவாக்கலாம்,
நிறைவேற்றலாம். தலையாய முன்னுரிமைகளை
28
வலியுறுத்துகின்றனர். இது நிச்சயமாகக் கவலையளிக்கும் விஷயம் தான். சில
இடங்களில் மேற்கத்திய மிஷனெரிக்கும் சுதேசத் திருச்சபைக்கும் இடையே
ஒரு பெரிய சுவரே எழும்பி விடுகின்றது. சுதேச ஊழியர்களே கூடத் தங்கள்
சொந்த நாடுகளிலுள்ள மற்றப் பண்பாடுகளைச் சார்ந்த மக்களின்
உணர்வுகளை மதியாமல் நடந்து கொண்ட சம்பவங்கள் ஏராளமுண்டு. இரு
பக்கத்திலும் குற்றமுண்டுஎன்றாலும், பொதுவாக மேற்கத்திய மிஷனெரிகள்
தங்களது பண்பாடு மற்றும் இறையியல் மூட்டைகளைத் தங்களோடு சுமந்து
வருகின்றனர், விளைவாக சட்டதிட்டங்களை மிகைப்படுத்தி, கிருபை காட்டத்
தவறி விடுகின்றனர் என்பது உண்மையே. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த
நமது தவறு, நாம் பணிபுரியும் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளக்
கூடிய எளிமையான வாழ்க்கைத் தரம் அற்றவர்களாய் இருப்பதே. நாம்
வரும்போதே ஏராளமான மூட்டை முடிச்சுகளுடன் வந்து சேருகிறோம். சில
கலாச்சாரங்களில் அது ஏகப்பட்ட குழப்பத்தை உண்டாக்குகிறது. இந்தப்
பிரச்சனை பற்றி லூஸான் உடன்படிக்கை கூறுகிறது:
மிஷனெரிப்
29
குறுகிய காலப் பணித் திட்டத்தின் நற்பயன்களில் இதுவும் ஒன்று. OM இன்
இரகசியங்களில் ஒன்று, அநேகர் எங்களுடன், இருக்கும் காலங்களில் தங்களது
'மிஷனெரி அழைப்பிலிருந்து' விடுவிக்கப்படுகின்றனர் என்பதாகும்! கடினமான,
கலாச்சாரம் கடந்த மிஷனெரிப் பணி சூழ்நிலைகள் தங்களுக்கு ஒத்து வராது
என்று இவர்கள் உணர்ந்து கொள்கின்றனர். இப்படித் தகுதியற்றவர்களை
வடிகட்டி எடுத்து விடும் முறைமை விலை மதிப்பு மிக்கது.
சார்ந்து வாழ்தல்
30
பயன்படுத்துகிறோம். இந்தப் புத்தகங்கள் வெளிநாட்டு மிஷனெரிகளுக்கு
மட்டுமல்ல, உள்நாட்டு ஊழியர்களுக்கும் அவசியம். OM தனது
உலகமயமாக்கும் கொள்கைக்குப் பெயர் போனது. ஏனெனில் 80 வெவ்வேறு
நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடையதல்லாத 1 டஜன் வெளி நாடுகளில்
பணி செய்கின்றனர். ஆனால் புதிதாக மிஷனெரிகளை அனுப்பத்
தொடங்கியிருக்கும் நாடுகளிலிருந்து வருவோர் தங்கள் ஆதரவைத் தங்கள்
சொந்த நாடுகளிலிருந்தே - அதிலும் பெரும்பகுதியைத் தங்கள்
திருச்சபையிலிருந்தே திரட்டித் தராத பட்சத்தில் நாங்கள் அவர்களை
ஏற்பதில்லை. நீண்ட கால அளவில், முன்னேறிச் செல்ல இதுவே சரியான
வழி என்று நாங்கள் கருதுகிறோம். வளமான எதிர்காலம் என்பது மேற்கத்திய
நாடுகளிலிருந்து, உதவி பெறும் நாடுகளுக்கு அளவில்லாமல் பணம்
வாரியிறைக்கப்படுவதில் இல்லை.
31
வசதியாக வாழ ஆரம்பித்து விடுகின்றனர். இவர்கள் குற்றவுணர்வு கொள்ளச்
செய்ய வேண்டாம். இன்னும் இயேசுவோடு சரியான உறவில்
இருப்பார்களானால் தேவனுக்கு ஸ்தோத்திரம். எனினும், மக்களை மிஷனெரிப்
பணிக்காக இம்முறையில் பயிற்றுவிப்பதில் உள்ள அபாயங்களை நாம்
அறிந்து வைத்திருப்பது நல்லது.
32
ஒப்பீடுகள் அளவுக்கு மிஞ்சித் திரித்துக் கூறப்படுகின்றன. இது எனக்கு
வருத்தமளிக்கிறது.
33
வேண்டுமென்றால் இவர்கள் பகுதி நேரமாவது வேறு ஏதாவது தொழில்
செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.) பல இலட்சாதிபதிகளை உறுப்பினராகக்
கொண்ட ஒரு சபை, 70 இலட்சத்திற்கும் 80 இலட்சத்திற்கும் திட்டம் போட்டு
கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு சபை, ஒரு மிஷனெரிக்
குடும்பம் வெளிநாட்டில் மிஷனெரிப் பணி செய்யும்படி அனுப்பிவைப்பதற்கு
ஆண்டுக்கு 30,000 பவுண்டுகள் திரட்ட முடியவில்லை என்று புலம்புவது
எனக்கென்னவோ அற்பத்தனமாகத் தான் படுகின்றது.
34
பிறக்கிறார்கள். இவர்களுக்குக் கிடைக்கும் அந்த அற்ப சம்பளம் குடும்பத்
தேவைகளைச் சரிக்கட்டுவதில்லை. ஆக மனக்கசப்பும், வேதனையும்,
குழப்பமும் மேலிடுகின்றன. உலகைச் சுவிசேஷமயமாக்கும் அரும்பெரும்
பணியில் இவற்றுக்கு இடமளிப்பது சரிப்பட்டு வராது.
35
பணம் திரட்டுதல் என்ற இந்தச் சிக்கல் நிறைந்த விஷயத்தில், நிறுவனத்துக்கு
நிறுவனம், நபருக்கு நபர் அணுகுமுறைகள் மாறுபடுகின்றன. 'People Raising'
(மக்களைத் திரட்டுதல்) என்ற தனது ஒப்பற்ற புத்தகத்தில் வில்லியம்
டில்லான் பலவேறுபட்ட வழிவகைகள் பற்றி எழுதுகிறார். 'A Practical Guide to
Raising Support' (நிதி திரட்டுவதற்கு ஒரு நடைமுறைத் துணைவன்) என்று
உபதலைப்பிடப்பட்டுள்ள இந்நூல், ஜெபம் மட்டுமே செய்ய வேண்டும் என்ற
ஜார்ஜ் முல்லரின் முறையில் தொடங்கி, ஜெபம், விபரங்கள், பணத்திற்கு
வேண்டுகோள் விடுத்தல் ஆகிய அனைத்தும் வேண்டும் என்ற D.L. மூடியின்
முறையில் முடிவுறுகின்றது. நடுவில், ஜெபமும் வேண்டும், விபரங்களும்
வேண்டும், ஆனால் பணம் வேண்டும் எனக்கேட்கக் கூடாது என்று கூறும்
ஹட்ஸன் டெய்லரின் முறையையும் விவரிக்கத் தவறவில்லை. இறுதியாக
ஆசிரியர் சொல்கிறார்: 'கேள்வி என்னவென்றால்: நிதி ஆதாரத்தைத்
திரட்டுவதற்கு வேதவசனம் கூறும் ஒரே வழி முறை என்ன? என்பது தான்.
ஆனால் அதற்குப் பதில், ஒரே முறை என்று எதுவுமே கிடையாது.
எத்தனையோ மாதிரிகளும், வழிமுறைகளும் இருக்கின்றன என்பதே.'
36
அனைத்தையும் சந்திப்பவர், நமது நன்றி அனைத்துக்கும் உரியவர் தேவன்
மாத்திரமே என்ற மனப்பான்மை ஓங்க வேண்டும் என்றுமே கெஞ்சிக்
கேட்கிறேன்.
37