Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 27

வேத ஆராய்ச்சிப் பாடங்கள்

பாடப்பிரிவு : வேத ஆராய்ச்சிப் பாடங்கள் பாட எண் : 206

பாடத்தின் தலைப்பு : கிறிஸ்தவக் குடும்பம்

குடும்பம் மற்றும் குடியிருப்பு ஆகியவை குறித்து வேதாகமத்தில்


கூறப்பட்டுள்ள 1 ௦ முக்கியக் கோட்பாடுகளைக் கீ ழ்க்கண்ட தலைப்புகளில்
வேத வசன ஆதாரங்களுடன் விவரிக்கவும்.
1. குடும்பம் என்பது தேவனின் திட்டம்
“நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். நீ உன்
பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும்
காண்பாய்” (சங். 128:5,6). நானும், என் குடும்பமும், என் பிள்ளைகளும் என்று வாழ்வது
தேவனின் நோக்கமல்ல. நம்முடைய குடும்ப வாழ்வின் மூலமாய் கர்த்தரின் திட்டம்
நிறைவேற வேண்டும். அவருடைய இரட்சிப்பின் திட்டம் நம் குடும்பத்தின் மூலம்
நிறைவேற வேண்டும். மற்றவர்கள் அவரைப்பற்றி அறியவேண்டும். அவருடைய சபை
வளரவேண்டும். இதைத் தான் 5,6 ஆகிய வசனங்களிலே இஸ்ரவேல், எருசலேம் என்று
கூறுகிறார். குடும்ப வாழ்வுக்கும், எருசலேமுக்கும், இஸ்ரவேலுக்கும் என்ன சம்பந்தம்?
குடும்ப வாழ்வின் மூலமாக எருசலேம் வாழும், இஸ்ரவேல் கட்டப்படும். நமக்கு சபை
கட்டப்படும் என்று இதை நாம் பொருள்படுத்தலாம்.

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்”.


“இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய்
ஆசீர்வதிக்கப்படுவான்” (சங்.128:1, 4).
இதை வாசித்துக்கொண்டிருக்கும் கணவன்-மனைவி அல்லது புதியதாக
திருமணமானவர்களே! இதோ, உங்களுக்கு கர்த்தருடைய வார்த்தை
என்னவெனில், “உங்களுடைய திருமண வாழ்வு, குடும்ப வாழ்வு ஆசீர்வதிக்கப்
பட்டதாய் இருக்கவேண்டும் என்று கர்த்தர் திட்டமிட்டிருக்கிறார்”. இதுவே அவருடைய
சித்தம்!
அவருடைய சித்தத்தின்படி, திட்டத்தின்படி நம்முடைய குடும்பவாழ்வு
நடக்கவில்லையானால் யாருக்குப் பொறுப்பு? திருவாளர் மாணிக்கம் கடைக்குப் போய்
ஒரு நல்ல டேப்ரிக்கார்டர் வாங்கினார். எத்தனையோ நாட்களாய் சேர்த்துவைத்த
பணத்தைக் கொண்டு அந்த டேப்ரிக்கார்டரை வாங்கினார். வாங்கின உற்சாகத்திலே
அதிலே டேப்புகளையெல்லாம் போட்டு போட்டு நிறைய பாடல்களையும்
பிரசங்கங்களையும் கேட்டார். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. சில வாரங்கள் சென்றபின்பு
அது நின்றுபோய்விட்டது, வேலை செய்யவில்லை. என்ன ஆனது என்று அவருக்குத்
தெரியவில்லை. இவரால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. டேப்ரிக்கார்டரைப்
போட்டு கேட்கத்தான் தெரியும் தவிர, அதில் ஏதாவது தவறு நேர்ந்தால் அதை எப்படி

1
சரிசெய்வது என்றெல்லாம் அவருக்குத் தெரியாது. உடனே அதை எடுத்துக்கொண்டு
கடைக்குச் சென்று, கடைக்காரரிடம் “என்னய்யா, இந்த மாதிரி ஒரு டேப்ரிக்கார்டரை
எனக்கு கொடுத்துட்டீங்க. இது வேலை செய்யவில்லையே. நான் வாங்கி சில
வாரங்களேதான் ஆகிறது” என்று கேட்டார்.
அப்பொழுது கடைக்காரர் கேட்டார் “அய்யா திரு.மாணிக்கம், அந்த டேப்ரிக்கார்டரோடுகூட
ஒரு கையேடு புத்தகம் ஒன்று கொடுத்தேன். அது இருக்கிறதா? அதை படித்துப்
பார்த்தீர்களா?” என்றார். அதற்கு மாணிக்கம் “புத்தகமா, டேப்ரிக்கார்டரைத்தான் நான்
வாங்கிட்டுப் போனேன். அதோடுகூட நீங்கள் கொடுத்த கருவிகளையெல்லாம் நான்
வாங்கிட்டுப் போனேன். ஆனால் புத்தகம் ஒன்றும் இல்லையே” என்று கூறினார்.
கடைக்காரர் “அய்யா, நீங்கள் அந்த கையேடு புத்தகத்தை போய்த் தேடிப்பாருங்கள். இந்த
டேப்ரிக்கார்டரை செய்தவர் இதை எப்படி இயக்குவது? இது எப்படி இயங்குகிறது?
என்றெல்லாம் அந்த புத்தகத்திலே சொல்லியிருக்கிறார். ஏதாவது கோளாறு ஏற்பட்டால்
இது என்ன கோளாறு, ஏன் ஏற்பட்டது என்பதையெல்லாம் அந்த புத்தகத்தில் பார்த்தால்
தெரியும். எனவே அந்த கையேடு புத்தகம் மிகவும் முக்கியம்” என்று சொல்லி
மாணிக்கத்தை அனுப்பிவிட்டார்.
அருமையானவர்களே, திருமண வாழ்வு என்பது ஆண்டவர் கொடுத்த
ஈவு. ஆதியாகமம் 2 ஆவது அதிகாரத்திலே பார்க்கிறோமே, ஏவாளை ஆதாம்
உருவாக்கினானா? அல்லது தனக்கு திருமணம் வேண்டுமென்று சொல்லி ஆதாம்
ஏதாவது முயற்சி செய்தானா? இல்லை. அவன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று
கடவுளே பார்த்து அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை உருவாக்கி, கொண்டு
வந்து அவனுக்கு முன்பாக நிறுத்தினார். அப்போ திருமணத்தை உருவாக்கியது
யார்? கர்த்தர். அதை உருவாக்கினவர் அந்த திருமணம் எப்படி இயங்குவது, அதை எப்படி
இயக்குவது என்று இந்த சத்திய வேதத்திலே எழுதி வைத்திருக்கிறார். அதைப் பார்த்து
அதன்படி நடந்தால்தான், திருமண வாழ்வு மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் உள்ளதாய்
இருக்கும். இந்த செய்தியின் ஆரம்பத்தில் கூறியதுபோல் “உங்கள் திருமண வாழ்வு
ஆசீர்வாதமாக இருக்கவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்”. ஆனால், அது நம்மால்
நடக்கக்கூடிய ஒரு காரியம் அல்ல. அவர் சொன்னபடி, அவர் வார்த்தையிலே
கூறியிருக்கிற காரியங்களையெல்லாம் செய்து அதின்படி நடந்தால், உங்கள் திருமண
வாழ்வு ஆசீர்வாதமுள்ளதாக இருக்கும். இதுவே கர்த்தருடைய திட்டம்! அந்தத்
திட்டத்திற்கென்று அவர் ஒரு ஒழுங்கு வைத்திருக்கிறார். அதை இந்தச் சங்கீ தத்திலே
பார்க்கிறோம்
‘மனு‌
ஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன்
இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்’ (எபே.5:31) உங்கள் குடும்பத்தில்
தேவனுக்கு அடுத்தபடியாக முன்னுரிமை கொடுக்க வேண்டிய முக்கியமான நபர்
உங்கள் மனைவியாகும். இப்படி நடப்பதினாலே ‘பெண்ணுக்கு

2
அடிமையானவர்கள் அல்ல’ என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களை நம்பி
வாழ்க்கை நடத்த தன் பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகளை விட்டு விட்டு
உங்களை சார்ந்து வந்திருக்கிற உங்கள் மனைவி உங்கள் வாழ்வில்
முக்கியமான நபர் என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது. ஆகவே, ஒவ்வொரு
காரியத்திலும் மனைவியுடன் நீங்கள் இணைந்து செயல்படுவது உங்களுக்கு
ஆசீர்வாதமாக அமையும். ஒவ்வொரு நாளும் உங்கள் மனைவி, பிள்ளைகள்
மற்றும் உங்கள் வட்டிலுள்ள
ீ ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை
அறிந்து அவர்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பும் உங்கள் கையில் உள்ளது.

நீங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய மறுத்தால், நீங்கள் யாரைத்


தேர்ந்தெடுப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மூதாதையர்கள்
ஐப்பிராத்துக்கு அப்பால் பணிபுரிந்த தெய்வங்களை நீங்கள் விரும்புகிறீர்களா?
அல்லது நீங்கள் இப்போது வாழ்ந்த எமோரியரின் கடவுள்களாகவா? என்
குடும்பத்தார், நாங்கள் கர்த்தரைச் சேவிப்போம் என்றார்கள். (யோசுவா 24:15,)

உன் மனைவி உன் வட்டுக்குள்ளே


ீ ஒரு பலனைத் தரும்
திராட்சச்செடிபோல் இருப்பாய்; உன் பிள்ளைகள் உன் மேஜையைச் சுற்றிலும்
ஒலிவமரங்களைப்போல இருப்பார்கள். ஆமாம், இது ஆண்டவருக்கு அஞ்சிவரும்
மனிதனுக்கு ஆசீர்வாதம். (சங்கீ தம் 128: 3-4,)

ஜெப ஆலயத்தின் தலைவர் கிறிஸ்பஸ், அவருடைய குடும்பத்தாரில்


ஆண்டவர் மீ து விசுவாசம் வைத்தார்கள். கொரிந்துவில் இருந்த பலர் பவுலைக்
கேட்டு, விசுவாசிகளாகி, ஞானஸ்நானம் பெற்றார்கள். (அப்போஸ்தலர் 18: 8,)

எனவே ஒரு மூப்பர் நிந்திக்கப்படுவதற்கு மேலான ஒரு மனிதனாக


இருக்க வேண்டும். அவன் மனைவிக்கு உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும்.
அவர் தன்னடக்கத்தைக் கடைப்பிடித்து, புத்திசாலித்தனமாக வாழ வேண்டும்,
நல்ல நற்பெயரைக் கொண்டிருக்க வேண்டும். அவர் வட்டில்
ீ விருந்தினர்கள்
தங்கியிருக்க வேண்டும், மற்றும் அவர் கற்பிக்க முடியும். அவர் ஒரு கனமான
குடிமகனாக இருக்கக்கூடாது அல்லது வன்முறையில் இருக்கக்கூடாது. அவர்
மென்மையாக இருக்க வேண்டும், சண்டை போடாமலும், பணத்தை
நேசிக்காமலும் இருக்க வேண்டும். அவர் தனது சொந்த குடும்பத்தை நன்றாக
நிர்வகிக்க வேண்டும், அவருக்கு மரியாதை செலுத்துபவருக்கு கீ ழ்ப்படியுங்கள்.
ஒருவன் தன் சொந்த வட்டைக்
ீ கட்டிக்கொள்ளாவிட்டால், அவன் தேவனுடைய
ஆலயத்தைக் கவனித்துப்பார்க்கக்கூடும். (1 தீமோத்தேயு 3: 2-5,)

நித்திய நித்திய நிந்தைகளின்பேரில் அவருக்குப் பயந்தவர்களுடனேகூட


இருப்பார் ; அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகளோடே

3
உடன்படிக்கைபண்ணும்; அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்படி
அவர்கள் நினைப்பார்கள். (சங்கீ தம் 103: 17-18,)

துன்மார்க்கன் இறந்து, காணாமல் போவான், ஆனால் தேவபக்தியுள்ள


குடும்பத்தின் குடும்பம். (நீதிமொழிகள் 12: 7,)

தங்கள் குடும்பத்தில் அழிந்துபோகிறவன் எவனும் காற்றிலே வாழுவான்;


மூடனுக்கு ஞானிகளுக்கு வேலைக்காரர் இருப்பான். (நீதிமொழிகள் 11:29,)

ஒரு பேராசைக்காரன் தன் குடும்பத்தைத் தொந்தரவு செய்கிறான், ஆனால்


இலஞ்சத்தை வெறுக்கிறவன் பிழைப்பான். (நீதிமொழிகள் 15:27,)

ஒருவன் தன் சொந்தக் காரியங்களுக்காகவும், தன் வட்டாரைக்குறித்தும்



விசாரிக்கிறவனிடத்தில் விசுவாசத்தை மறுதலித்து, அவிசுவாசியிலும்
கெட்டவனாவான். (1 தீமோத்தேயு 5: 8,)

2. குடும்பத்திற்கான தேவனின் வாக்குத்தத்தங்கள்

குடும்பத்திற்கு தேவன் தரும் ஆசீர்வாதத்தைக் குறித்து 128 ஆம் சங்கீ தத்திலே


பார்க்கிறோம். “கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்” (சங்.128:5). ஏன்
சீயோன் இங்கு குறிக்கப்படுகிறது? சீயோன் என்பது கிருபையைக் காட்டுகிறது. “சீனாய்
மலை” நியாயப்பிரமாணத்திற்கு அடையாளமாயிருக்கிறது. “சீயோன் மலை” கிருபைக்கு
அடையாளமாயிருக்கிறது. குடும்ப வாழ்விலே கிருபை தேவை அல்லவா!
கர்த்தரின் மன்னிப்பை பெற்றுக்கொள்வதற்கும், ஒருவரையொருவர் மன்னிப்பதற்கும்
கர்த்தரின் கிருபை தேவையாயிருக்கிறது, நான் தப்பு செய்துவிட்டேன், உன்னை
புண்படுத்தி விட்டேன், என்னை மன்னித்துவிடு என்று நீ சொல்வாயானால், எத்தனையோ
ஆண்டுகளாக இருந்த மனத்தாங்கல் எல்லாம் தீர்ந்து விடும், இல்லையா! அதைச்
செய்யாமல் போனால், மனத்தாங்கல் வளர்ந்துகொண்டே போகிறது. அந்த தடுப்புச்சுவர்
பெரிதாகிக்கொண்டே போகிறது. “நீ ங்கள் கோபங்கொண்டாலும்
பாவஞ்செய்யாதிருங்கள்” (எபே. 4:26) என்று வேதவசனம் சொல்கிறது. கணவனும்,
மனைவியும் ஒருவருக்கொருவர் கோபம் கொண்டாலும், பெற்றோரும் பிள்ளைகளும்
ஒருவருக்கொருவர் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள். கோபப்பட்டு விட்டு
பாவம் செய்யாமலிருப்பது எப்படி? சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பாக உங்கள் எரிச்சல்
தணியக்கடவது. இரவு வருவதற்கு முன்பு, சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு
ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு அதை சரிபண்ணிக் கொள்ளுங்கள்.
கோபப்பட்டாலும், ஒருவருக்கொருவர் மனத்தாங்கல் ஏற்படும்படி பேசிவிட்டாலோ,
செயல்பட்டுவிட்டாலோ உடனே மன்னிப்புக் கேட்டு அதை சரிபண்ணிவிட வேண்டும்.

4
இல்லையானால் பிசாசுக்கு இடங்கொடுத்துவிடுகிறோம். அதைத்தான் எபேசியர் 4:27 ல்
பவுல் கூறுகிறார். இப்படி நாம் கிருபையினாலே மன்னிப்பைப் பெற்று, கிருபையினாலே
கடவுளுடைய பயத்திலே நடக்கும்பொழுது வருகிற ஆசீர்வாதம் சீயோன்
மலையிலிருந்து வருகிற ஆசீர்வாதம் என்று அழைக்கப்படுகிறது.

“இப்போதும் உமது அடியானின் வடு


ீ என்றைக்கும் உமக்கு முன்பாக
இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர்
அதைச் சொன்ன ீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வடு

என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக ” (2 சாமுவேல் 7:29).
தேவனுடைய சமூகத்தில் நிற்கும் பாக்கியம் கிடைக்கப் பெருவதே
ஆசீர்வாதம். ஆசீர்வாதங்களிலேயே மிகப்பெரிய ஆசீர்வாதம் தேவனுக்கு
முன்பாக இருப்பதுதான். எனவேதான் தாவது
ீ தன்னுடைய வடு
ீ தேவனுக்கு
முன்பாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்கிறார்.
தேவனுக்கு முன்பாக இருப்பவர்கள் தான் தங்கள் சுயத்திற்கு தினமும் மரித்து,
தேவனுடைய அங்கீ காரத்திற்கு பாத்திராக ஒவ்வொரு நாளும் தகுதியாக
முடியும்.
தேவனுக்கு முன்பாக இருக்கும் போது மட்டுமே ஒருவனுடைய சுயமும்,
அவன் செய்கிற தவறும் நன்றாக வெளிப்படும், தேவனுக்கு முன்பாக இருக்கும்
குடும்பத்தில் ஒவ்வொருவரும் தேவனுக்குப் பயந்து தேவனால்
நடத்தப்படுகிறவர்களாகிறார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் தேவனுடைய
ஆசீர்வாதம் நிறைவாக இருக்கும்.
ஆகையால் தான் கர்த்தாவே, எனது குடும்பம் உமக்கு முன்பாக இருக்க
வேண்டுமே என்று தாவது
ீ ஜெபிக்கிறார்.
அநேகர் தனது குடும்பம் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்று
நினைக்கிறார்கள் ஆனால் ஆசீர்வாதம் என்றால் என்ன என்பதை அறியாமல்
இருக்கிறார்கள்.
அதைச் சரியாக அறிந்து கொண்டால் உண்மையான ஆசீர்வாதங்களை
ஒவ்வொரு குடும்பங்களும் நிறைவாகப் பெற்றுக்கொள்ளும்.

தேவனுக்கு முன்பாக நமது குடும்பமும் இருக்கும் படி ஒவ்வொரு நாளும்


நாமும் வேண்டுதல் செய்வோம். தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பத்திற்கு
தேவன் கொடுக்கும் நன்மைகள் என்ன? என்பதை வேதாகம வசனங்கள் மூலமாக
அறிந்து கொள்வோம்.
தேவனால் அங்கீ காரம் பெற்ற குடும்பம்தான் ஆசீர்வாதமான குடும்பம். இதை
நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். “அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது
என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப்
போகவிடேன் என்றான்” (ஆதி 32:26). யாக்கோபு தேவன் தன்னை ஆசீர்வதிக்க
வேண்டும் என்று இரவு முழுவதுமாக போராடினான்.

5
இக்காலத்தில் ஆசீர்வாதம் என்றால் பொருளாதார செழிப்பு மட்டும்தான்
என்று அநேகர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் “அடியேனுக்கு தேவரீர்
காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும்
பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக்
கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும்
உடையவனானேன்” (ஆதி 32:10) என்று யாக்கோபு முந்திய வசனங்களில்
சொன்னதைக் காணலாம்.
ஒன்றுமில்லா நிலையில் தனது மாமன் வட்டிற்கு
ீ சென்ற யாக்கோபு,
குடும்பமாக மிகுந்த செல்வந்தனாக இரண்டு பரிவாரங்களுடன் வருகிறான்.
போதுமான அளவுக்கு அவன் செல்வந்தனாக இருக்கிறான். அப்பொழுதுதான் “நீர்
என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்” என்று தேவன் தன்னை
ஆசீர்வதிக்க வேண்டும் என்று போராடுகிறான்.

“கர்த்தர் வட்டைக்
ீ கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா”
(சங்கீ தம் 127:1) என்று வேதம் கூறுகிறது. இங்கு குறிப்பிடப்படும் வடு
ீ என்பது கல்,
மணல், செங்கலால் கட்டி எழுப்பப்படும் வட்டைக்குறித்து
ீ சொல்லப்பட்டது
அல்ல. கணவன்,மனைவி, பிள்ளைகள் என்று கட்டப்படும் குடும்பத்தைக் குறித்து
கூறுகிறது.
தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பத்தில் ஐக்கியம் பலப்படும். “அவன்
குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வட்டிலே
ீ விருந்துசெய்து, தங்கள்
மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம் பண்ணும்படி அழைப்பார்கள்”
(யோபு 1:4). யோபுவும் அவன் பிள்ளைகள் எல்லோரும் ஒற்றுமையுடன்
எல்லாவற்றிலும் இணைந்து, இசைந்து, மனமகிழ்ச்சியுடன் இருந்தார்கள் என்று
வேதம் கூறுகிறது. யோபுவின் குடும்பம் தேவனுக்கு முன்பாக இருந்தது, தேவன்
அந்த குடும்பத்தில் ஐக்கியத்தைப் பலப்படுத்தியிருந்தார்.

“உன் மனைவி உன் வட்டோரங்களில்


ீ கனிதரும் திராட்சக்கொடியைப்போல்
இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக்
கன்றுகளைப்போல் இருப்பார்கள். இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன்
இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்” (சங்கீ தம் 128:3,4) என்று வேதம் கூறுகிறது.
தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பம், தேவனுடைய பாதுகாப்பில்
இருக்கும். “நீர் அவனையும் அவன் வட்டையும்
ீ அவனுக்கு உண்டான
எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ?” (யோபு 1:10) யோபுவையும்
அவன் குடும்பத்தையும் சுற்றி கர்த்தர் வேலியடைத்து பாதுகாத்தார் என்று
சாத்தான் சொல்லுகிறான். ஏன் என்றால் அவன் தீங்கு செய்யும் படியும்,
பொல்லாப்பு செய்யும் படியும் சுற்றி வருகிறவன்.

“கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு


நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச்

6
சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;
அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும்
இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்” (சங்கீ தம் 121:5-8). தேவனுக்கு முன்பாக
இருக்கும் குடும்பத்தை சுற்றிலும் தேவன் எவ்விதமாக பாதுகாப்பு தருகிறார்
என்று 121 ம் சங்கீ தத்தில் வேதம் மிக தெளிவாக கூறுகிறது.
“உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும்
நன்மையும் உண்டாயிருக்கும்” (சங்கீ தம் 128:2). உழைக்கிற எல்லோரும் தங்கள்
பலனைப் பெற்றுக்கொள்வதில்லை. காரணம் அவர்கள் தங்கள் தேவைகளை முன்
வைத்தே தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்கிறார்கள்.
“உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு
ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி,
இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச்
சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்” (உபாகமம் 8:18) என்று
வேதம் கூறுகிறது.
மேலும், “நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம்
கட்டளையிடுவார்” (உபாகமம் 28:8). எவ்வளவுதான் ஒரு மனிதன் பிரயாசப்பட்டு
வேலை செய்தாலும் அதை தேவன் அங்கீ கரிக்க வேண்டும்.
தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பத்தில் சமாதானம் பெரிதாக இருக்கும்.
“உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன்
பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்” (ஏசாயா 54:13). ஒரு குடும்பம்
வாழையடி வாழையாக சமாதானத்தில் வளர வேண்டும். நீதியில் வளர
வேண்டும். அதற்கு தேவனால் போதிக்கப் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
இதுதான் தேவனுடைய நிறைவான ஆசீர்வாதம். இந்த ஆசீர்வாதங்களைப்
பெற்றுக்கொள்ள ஒவ்வொரு நாளும் தேவனே உமக்கு முன்பாக எனது குடும்பம்
இருக்க வேண்டும் என்று ஜெபித்து, தேவனுடைய வழிநடத்துதலின்படி நமது
குடும்பத்தை நடத்துவோம். நமது குடும்பம் ஆசீர்வாதமான குடும்பமாக
விளங்கும்.

அவளுடைய கணவனுடைய கிரீடம் மகிமையுள்ள தன்மையுடைய மனைவி;


அவளுடைய எலும்புகளில் அவமானகரமான மனைவி இருக்கிறாள்.
(நீதிமொழிகள் 12: 4,)
"சகோதரரே, ஆபிரகாமின் சந்ததியாரும், தேவனுக்குப் பயந்திருக்கிற உங்கள்
நடுவே இருக்கிறவர்களும், இந்த இரட்சிப்பின் செய்தியை
அனுப்பப்பட்டிருக்கிறார்களே." அப்போஸ்தலர் 13:26)

நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவிக்கு அஞ்சாதீர்கள், அச்சமயத்தில்


பிள்ளைகளைப்போல தத்தெடுக்கப்பட்ட ஆவியானவரை பெற்றுக்கொண்டோம்.
யாக்கோபின் மகனே, அபே, பிதாவே ! (ரோமர் 8:15,)என் இதயம், என் யூத சகோதர

7
சகோதரிகளுக்கு என் கசப்பான துக்கமும் வேதனையுமே நிரம்பியிருக்கிறது.
கிறிஸ்துவிலிருந்து நித்தியமாக சபிக்கப்படுவதற்கு நான் தயாராக இருப்பேன்! -
அவற்றை காப்பாற்றுவேன். அவர்கள் இஸ்ரேல் மக்கள், கடவுள் ஏற்று
குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட. கடவுள் அவர்களுக்கு அவருடைய மகிமையை
வெளிப்படுத்தினார். அவர் அவர்களுடனே உடன்படிக்கைபண்ணி, அவர்களுக்கு
நியாயஞ்செய்தான். தம்மை வணங்குவதற்கும் அவருடைய அற்புதமான
வாக்குறுதியைப் பெறுவதற்கும் பாக்கியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். (ரோமர்
9: 2-4,)

இயேசு கிறிஸ்துவின் மூலம் தம்மைத் தம்மிடம் கொண்டு வருவதன் மூலம்


தம் சொந்த குடும்பத்தில் நம்மை ஏற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே கடவுள்
தீர்மானித்தார். அவர் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாரோ அது
அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. (எபேசியர் 1: 5,)

ஆகையால் புறஜாதியாரும் இனி அந்நியரும் பரதேசியுமாயிருக்கிறார்கள்.


கடவுளின் பரிசுத்த ஜனங்களோடு நீங்கள் குடிமக்கள். நீங்கள் கடவுளுடைய
குடும்பத்தின் உறுப்பினர்கள். (எபேசியர் 2:19,)

இந்த காரணத்திற்காக, நான் பிதாவுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு,


பரலோகத்திலும் பூமியிலும் உள்ள ஒவ்வொரு குடும்பத்தாரும் பெயரிடப்பட்டது
... (எபேசியர் 3: 14-15,))

3. குடும்பத்தில் தலைமையும், உறவுகளும்

ஆதியாகமம் முதல் மூன்று அதிகாரங்களும் மிகத் தெளிவாக


குடும்பத்தைத் தலைமை தாங்கும் பொறுப்பைத் தேவன் கணவனுக்கே
கொடுத்திருக்கிறார் என்று தெரிவிக்கின்றன. முதலில் ஆணைப்படைத்த தேவன்
பின்பு ‍
பெண்ணை ஆணுக்குத் துணையாயிருக்கப் படைத்தார் (ஆதி. 1:26-27; 2:18-25).
ஆதாமும், ஏவாளும் பாவம் செய்தபின் கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டே முதலில்
அதற்கு விளக்கம் கேட்டார் (ஆதி: 3:9-12). கர்த்தர் ஆதாமைப் பார்த்து, “குடும்பத்தை
ஆளும் பொறுப்பை உனக்குக் கொடுத்திருந்தேன். ஆனால் அதை நீ முறையாக
செய்யவில்லை” என்றார். கர்த்தர் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் கொடுத்த
தண்டனையை மட்டுமன்றி ஆரம்பத்தில் கர்த்தர் அவர்கள் எந்தப்
பொறுப்புகளைச் சுமந்து குடும்பமாக இருக்க வேண்டு‍
மென்று எதிர்பார்த்தாரோ

அதையே தேவன் நினைவுபடுத்துகிறார்.. அதாவது, ஆதாம் குடும்பத்தை
ஆள்பவனாகவும், ஏவாள் அவனுக்கு ஏற்றபடி அமைந்து நடப்பவளாகவும் இருக்க
வேண்டுமென்பதே கர்த்தரின் கட்டளையாக இருந்தது. ஆகவே, குடும்பத்தை
ஆள்பவனாக கணவனே இருக்கிறான்.

8
சங்கீ தம் 128:1,2 இல் “கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன்
எவனோ, அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்;
உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்” என்று வாசிக்கிறோம். யாருக்கு
இந்த வார்த்தைச் சொல்லப்பட்டிருக்கிறது? “கணவருக்கு”. அப்படியென்றால், குடும்ப
ஆசீர்வாதத்திற்கு கணவரின் பங்கு என்ன? இந்த ஒழுங்கிலே, ஒரு கணவன் தனது
கைகளின் பிரயாசத்தினாலே வேலைசெய்து சம்பாதித்து, தனது குடும்பத்தை
நடத்தவேண்டும். கணவன் தனது கைகளின் பிரயாசத்தைக் கொண்டு அவர் சாப்பிட
வேண்டும், அவருடைய குடும்பமும் சாப்பிட வேண்டும். இதுதான் கர்த்தருடைய
ஒழுங்கு.
ஆனால் இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது? இன்றைக்கு சில
குடும்பங்களிலே கணவர் வேலை செய்யமாட்டார், அவர் 100 க்கு 100 முழுக்க
சோம்பேறியாய் இருப்பார். இந்தத் தேன ீக்களின் கூட்டத்திலே ஆண் தேன ீக்கள்
இருக்கின்றதல்லவா? இந்த ஆண் தேன ீக்கள் ஒரு வேலையும் செய்யாமல்
சோம்பேறியாய் இருக்கும். இந்த மாதிரியாக வேi லை செய்யாத சில கணவர்கள் உண்டு.
இப்படியான குடும்பங்களில் மனைவிதான் ஓடி ஆடி வேலைசெய்து பணத்தை
சம்பாதித்துக் கொண்டுவரவேண்டும். இது எல்லா வாழ்க்கை தரத்திலும், சில
குடும்பங்களிலே இன்று நடைபெற்று வருகிறது. ஏழையான ஒரு அம்மா போய் பல
வடுகளிலே
ீ வட்டுவேலை
ீ செய்துவிட்டு வருவார்கள். கணவர் வட்டில்
ீ இருந்துவிட்டு
குடித்து வெறித்து, அந்த பணத்தை எல்லாம் செலவழித்துவிட்டு, மனைவியை அடிப்பார்.
அங்கு எப்படி சமாதானம் இருக்கும்? அந்தக் குடும்பம் அப்படியே சிதறிப்போய்விடும்.
அதேபோல் கொஞ்சம் மேல்மட்டத்தில் உள்ள குடும்பங்களிலும் வேலை செய்யாத
சோம்பேறி ஆண்கள் உண்டு. இவர்கள் வேலை தேடி போவதில்லை, எந்த வேலையிலும்
நிலைத் திருப்பதில்லை. பின்பு எப்படி குடும்பம் நடக்கும்? அந்த வட்டுக்கார
ீ அம்மாதான்
போய் அலுவலகத்திலேயோ அல்லது வேறு எங்கேயோ வேலைசெய்து கஷ்டப்பட்டு
உழைத்து, சம்பாதித்த ஊதியத்திலே குடும்பம் நடக்கும். இது கர்த்தருடைய திட்டமா? இது
அவருடைய ஒழுங்கா? இல்லவே இல்லை!

இதை படித்துக்கொண்டிருக்கும் என் அருமையான சகோதரர்களே, உருப்படியான வேலை


செய்து, உண்மையாய் அதை செய்து குடும்பத்தை ஆதரிக்க வேண்டியது உன்னுடைய
பொறுப்பு. தகப்பனாகிய நீ, கணவராகிய நீ அந்த பொறுப்பிலிருந்து தவறுவாயானால் உன்
குடும்பம் சிதறிவிடுமே! நீ கர்த்தருக்கு கணக்கு கொடுக்கவேண்டும்.

கணவர் ஒருவேளை நோய்வாய்பட்டு அல்லது ஊனமுற்று வேலை செய்யமுடியாத


நிலையில் இருந்தால் அது வேறே காரியம். ஆனால் சுகமிருந்தும், பலமிருந்தும் வேலை
செய்ய மனமில்லாமல் இருந்தால் அது தவறு. அப்போ குடும்பத்தை ஆதரிப்பது

9
கணவரின் பொறுப்பாகும் என்பது தேவனுடைய திட்டமாகும். அதனாலே மனைவி
வேலைசெய்யக் கூடாது என்று நான் சொல்லவில்லை, வேதமும் போதிக்கவில்லை.
மனைவி வேலை செய்தாலும், குடும்பத்தை ஆதரிக்கும் முக்கியமான பொறுப்பு
கணவருக்கு உரியது.

கிறிஸ்தவ கணவனாக இருந்து குடும்பத்தை நடத்த வேண்டும்: எபேசி: 5:28 – “புருசனும்


மனைவிக்கு தலையாயிருக்கிறான்”. கிறிஸ்தவ கணவன் தன் குடும்பத்தை முதலில்
ஆவிக்குரிய காரியங்களில் நடத்திச் செல்வதற்கு கவனமாயிருக்க வேண்டும்.
குடும்பத்திற்குள் உலகம், அதன் ஆசை இச்சைகள் நுழைவது எளிது. ஆனால், ஆவிக்குரிய
தேவ ராஜ்யத்திற்குரியவைகள் நுழைவதுதான் சற்று கடினம். உலகத்தை அறிவது, கற்பது
எளிது. எனவே, தன் சொந்த குடும்பத்தை தேவனுக்குள் நடத்துவதில் கிறிஸ்தவ கணவன்
மிக கவனமுள்ளவனாயிருக்க வேண்டும். ஜெபம், பரிசுத்தம், வேதவாசிப்பு, விசுவாசம்,
ஆராதனை, ஊழியத்தை செய்வது, தாங்குவது இவற்றில் நடத்திச் செல்ல அர்ப்பணிக்க
வேண்டும்.

2. மனைவியின் மேல் அன்புகூர வேண்டும்: (எபேசி: 5:25) எப்படி அன்புகூர்வது?


“சபையில் அன்பு கூர்வது போல”. அப்: 20:28 – தேவன் தமது சுய இரத்தத்தினாலே
சம்பாதித்துக் கொண்ட தமது சபை". ஜீவனைக் கொடுத்து மனைவி மக்களை காப்பாற்ற
பாடுபட வேண்டும். உலகக் கணவன் – “சமைப்பது, பிள்ளை பெறுவது” என்ற ரீதியில்
நடத்துவான். கிறிஸ்தவ கணவன் - நாமோ அப்படியல்ல. அதற்கும் மேல் சில கடமைகள்
மனைவிக்கு உண்டு என்பதை அறிய வேண்டும். “ஆவிக்குரிய காரியங்களில்,
ஊழியங்களில், தாலந்து வரங்கள்” கர்த்தருடைய சபையில் பயன்படுத்தப்பட
உதவிகரமாக இருக்க வேண்டும். 1 பேது: 3:7 – மனைவியை கனம் பண்ணு.

3. இச்சையடக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும்: (யாத்: 20:17) ஏனைய பெண்களை


மனதளவில்கூட நினைத்துப் பார்க்கக்கூடாது. நீதி: 5:18,19 – "உன் இளவயதின்
மனைவியோடே மகிழ்ந்திரு; அவளே நெசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான
வரையாடும் போலிருப்பாளாக...." வட்டை
ீ ஆள்பவன் கணவன். எனவே, அவன் வட்டில்

இருப்பது அவசியம். கிறிஸ்தவ கணவன் வட்டிற்கு
ீ வெளியே அதிக நேரம், காலம்
செலவழிப்பது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போலாகும்.

மனைவியின் பொறுப்பு

சங்கீ தம் 128:3 இல் “உன் மனைவி உன் வட்டோரங்களில்


ீ கனிதரும்
திராட்சக்கொடியைப் போல் இருப்பாள்” என்று
சொல்லப்பட்டிருக்கிறது. “வட்டோரங்களில்”
ீ  என்கிற இந்த சொல்லை சரியானபடி

எபிரேய மொழியிலிருந்து மொழிபெயர்த்தால், ஒரு தேவாலயத்திலே பரிசுத்தமான ஒரு

10
பகுதி இருப்பதுபோல உன் வட்டுக்கு
ீ உண்டல்லவா. அப்படிப்பட்ட அந்த உள்ளான
இடத்திலேதான் மனைவிக்கு இடம். அப்படியென்றால் ஒரு வட்டுக்கு
ீ ராணி யார்?
மனைவிதான், தாய்தான். அந்த வட்டுக்குள்ளே
ீ கனிதரும் திராட்சக்கொடியைப் போல்
அவள் இருப்பாள். எனவே ஒரு மனைவிக்கு இடம் எது? வட்டுக்குள்ளே
ீ .

அப்படியானால் மனைவி வட்டுக்கு


ீ வெளியே வேலை செய்யக்கூடாதா? சமூக
சேவகியாய் இருக்கக்கூடாதா? சபை ஊழியத்திலே பங்குபெறக் கூடாதா? அப்படிச்
சொல்லவில்லை, சபை ஊழியம் சமூகசேவை என்றுசொல்லி ஊரெல்லாம் சுற்றிவிட்டு,
வட்டை
ீ கவனிக்காமல் குடும்பத்தை கவனிக்காமல் இருந்தால் அதுதான் தவறு.
இப்படிப்பட்ட சில பெண்கள் உண்டு அல்லவா! ஏம்மா பிள்ளைகளுக்கு சாப்பாடு
செய்யவில்லையே, கணவருக்கு ஒன்றும் சமைத்து வைக்கவில்லையே என்று கேட்டால்,
உபவாச ஜெபம் ஐயா, நான் போய்விட்டேன். நீ உபவாசம் இருந்தால் சரி, அவருக்கு
எப்படி? அவருக்கு சாப்பாடு வேண்டும் அல்லவா, உன் பிள்ளைகளுக்கு சாப்பாடு
வேண்டும் அல்லவா. ஆவிக்குரிய காரியங்களைக் காரணமாக வைத்து, கடவுளையும்
காரணமாக வைத்து, குடும்பப் பொறுப்பை உதாசீனம் செய்கிற பெண் தவறு செய்கிறாள்.
இதை நான் சொல்லவில்லை வசனம் சொல்கிறது. உன் வட்டோரங்களில்
ீ உன் மனைவி.
வட்டுக்குள்ளே
ீ உள்ள கடமைகளை கவனிக்க வேண்டும். அதனாலே நீ
வட்டுக்குள்ளேயேதான்
ீ இருக்கவேண்டும், வெளியே வேலை செய்யக்கூடாது
சமூகசேவை தேவையில்லை, சபை ஊழியம் தேவையில்லை என்று வசனம்
சொல்லவில்லை. தாராளமாய் சபை ஊழியம், சமூகசேவை, வெளியே வேலை
அனைத்தையும் செய்யலாம். ஆனால் வட்டை
ீ உதாசீனம் செய்யாதே, உன் குடும்ப
பொறுப்பை உதாசீனம் செய்யாதே. அது கர்த்தரின் ஒழுங்குக்கு மாறாக செல்வதாகும்.

பிள்ளைகளின் பொறுப்பு

“உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல்


இருப்பார்கள்” (சங்.128:3). எவ்வளவு அருமையான ஒரு காட்சி இது! பந்தியிலே கணவன்
மனைவி உட்கார்ந்திருக்கிறார்கள், பிள்ளைகளும் உட்கார்ந்திருக்கிறார்கள். குடும்பமாக
உட்கார்ந்து ஜெபித்து, சாப்பிடுவது எவ்வளவு ஒரு நல்ல ஒழுங்கு. சில குடும்பங்களில்
இப்படிப்பட்ட ஒழுங்கு இல்லை, குடும்ப ஜெபமும்கூட கிடையாது. சில வடுகளில்
ீ குடும்ப
ஜெபம் நடத்த முடியவில்லை என்று சொல்வார்கள். ஏன் என்று கேட்டால், “என்
வட்டுக்காரர்
ீ வேலைமுடித்து Over Time பார்த்து விட்டு இரவு நேரம் கழித்து வருகிறார்,
அதற்குள்ளாக பிள்ளைகளெல்லாம் தூங்கிவிடுகின்றனர். அதனால் குடும்ப ஜெபம்
நடத்தமுடியவில்லை” என்கிறார்கள். அப்படி தப்பித்தவறி அவர் வந்து அகப்பட்டுக்
கொண்டாலும்கூட, குடும்ப ஜெபத்திலே ஒரு பொம்மை மாதிரி உட்கார்ந்திருப்பார்,
வாயை திறக்கமாட்டார். வேதத்தைப் படிப்பது யார்? அந்த சிறுபிள்ளைகள்தான். பின்பு
ஜெபம் பண்ணுவது அம்மா. இவர் ஒன்றுமே செய்ய மாட்டார். எவ்வளவு தவறில்லையா!

11
என்அருமையான சகோதரனே, கணவன் என்கிற முறையிலே தகப்பன் என்கிற
முறையிலே, உன் குடும்பத்தின் ஆவிக்குரிய நிலைக்கு நீ பொறுப்பு! குடும்ப ஜெபத்தை
முன்னின்று நடத்தவேண்டியது உன்னுடைய பொறுப்பு. அதற்கு ஏற்ற ஒரு நேரத்தை
அமைத்து பிள்ளைகளும், தாயும் தகப்பனுமாக உட்கார்ந்து ஜெபிப்பது எவ்வளவு நல்ல
முறை. அதைப்போலவே குடும்பமாய் ஒன்றாக உட்கார்ந்து ஜெபித்து சாப்பிடுவது
எவ்வளவு நல்ல ஒழுங்கு. அந்தப் பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகளைப்போல
இருப்பார்கள். இது எதைக் காட்டுகிறது? பாதுகாப்பைக் காட்டுகிறது. இன்றைக்கு அநேக
வடுகளிலே
ீ குடும்பங்களிலே பாதுகாப்பு உணர்வு கிடையாது. “வாலவயதின் குமாரர்
பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன்
அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன்
பாக்கியவான்” (சங்.127:6). அம்பறாத்தூணி என்றால் “அம்புகளை வைக்கிற அந்த

பொருள்” இதிலே அம்புகள், கையிலே அம்புகள் – இது எதைக்


காட்டுகிறதென்றால், பாதுகாப்பைக் காட்டுகிறது. பிள்ளைகளுக்குத் தேவையானது
என்ன? பாதுகாப்பு. ஒரு வட்டிலே
ீ அம்மாவும், அப்பாவும் நாயும் பூனையும் போல

சண்டை போட்டால், பிள்ளைகளுக்கு எப்படி பாதுகாப்பு உணர்வு இருக்கும்?


ஒரு தங்கை இவ்வாறு கூறினாள்: “பாஸ்டர், எங்க வட்டிலே
ீ எனக்கு ஒரே
நடுக்கமாயிருக்கிறது. எங்க அப்பாவும், அம்மாவும் சண்டை போடத் தொடங்கிவிட்டால்
அவர்கள் போடுகிற சத்தத்திலே எனக்குள்ளே ஒரு நடுக்கம் வந்துவிடும். சில
சமயத்திலே அப்பாவும், அம்மாவும் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வார்கள்.
அப்பொழுது எனக்குள்ளே ஒரே பயமாயிருக்கும்” என்றாள். இதைக் கேட்ட என் உள்ளம்
அப்படியே உடைந்துவிட்டது. இன்று எத்தனை குடும்பங்களிலே இந்த நிலை. இதை
வாசித்துக் கொண்டிருக்கும் என் அருமையான சகோதரனே, சகோதரியே உன்
பிள்ளையின் பாதுகாப்பிற்காக, அவர்களுடைய பாதுகாப்பு உணர்வு பாதிக்கப்படாமல்
இருப்பதற்காக, நீங்கள் இருவரும் கணவனும், மனைவியும் ஒன்றுபடவேண்டும்.
அமைதியாய், சமாதானமாய் இருக்கவேண்டும். நீங்கள் ஒருபோதும் சண்டைபோடக்
கூடாது. ஏனென்றால் ஒரு நாளிலே அவர்கள் நின்று, உன்னாலேதான் என்னுடைய
ஆளத்துவம் பாதிக்கப்பட்டது. எனக்கு இத்தனைவிதமான மனோதத்துவ பிரச்சனைகள்
வந்ததற்கு காரணம் நீதான் என்று சொன்னால், நீ கர்த்தருக்கு கணக்குக்
கொடுக்கவேண்டும் இல்லையா?

4. குடும்பமாக ஜெபித்தலும் தேவனுக்கு ஊழியம் செய்தலும்

‘உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார், அவர்


வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார், அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து,
தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார், அவர் உன்பேரில் கெம்பீரமாய்க்

12
களிகூருவார்’. (செப்பனியா 3:17) பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையின்
மையத்தில் அருமை ஆண்டவரை நீங்கள் வைக்க வேண்டும். அப்போது
அவருடைய அளவற்ற ஆசீர்வாதங்களை நீங்கள் காண முடியும். நம்மில் அநேகர்
குடும்பம், பிள்ளைகள், வேலை, தொழில், படிப்பு, நண்பர்கள், கடைசியில் ஆண்டவர்
என தங்கள் வாழ்வில் ஏதோ ஒரு இடத்தை ஆண்டவருக்கு ஒதுக்கி
விடுகிறார்கள். உங்களை உருவாக்கின சர்வ வல்லவருக்கு ஒரு மூலையை
அல்ல, உங்கள் வாழ்வின் மையத்தில் அவரை வைக்க வேண்டும். அப்போது
தான் அளவுகடந்த ஆசீர்வாதங்களை அவரிடத்திலிருந்து பெறமுடியும். பரிசுத்தம்
பண்ணும்போது... ‘தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும்
சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி,
அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று,
தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே,
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய்,
அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்’. (II கொரிந்தியர்
6:16,17)

ஆம், நம்முடைய தேவன் பரிசுத்தமுள்ளவர். ‘நான் பரிசுத்தர், ஆகையால்


நீங்களும் பரிசுத்தராயிருங்கள்’ என I பேதுரு 1:16 கூறுகிறது. உங்கள் வாழ்வில்
பரிசுத்தத்திற்கு முதலிடம் கொடுக்கும்போது உங்கள் மத்தியில் தங்கியிருக்கவும்,
உங்களுக்குள்ளே உலாவி வரவும் அவர் வல்லமை உள்ளவராய் இருக்கிறார்.
அன்றைக்கு யோசுவா ஜனங்களைப் பார்த்து ‘இன்று உங்களை பரிசுத்தமாக்கிக்
கொள்ளுங்கள். நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்’
என கூறியதை யோசுவா 3:5 ல் வாசிக்கிறோம். ‘அந்நிய தேவர்களைத் தங்கள்
நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள், அப்பொழுது
அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்’. (நியாயாதிபதிகள்
10:16) துதித்துப் பாடும்போது... ‘சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு, இதோ,
நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’.
(சகரியா 2:10) நம்முடைய கர்த்தர் துதிகளின் மத்தியில் தங்கியிருக்கிறார். எங்கு
துதி ஆராதனை இருக்கிறதோ அங்கு அவர் நடுவில் வருவார். அது மட்டுமல்ல,
‘என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து,
உன்னை ஆசீர்வதிப்பேன்’. (யாத்திராகமம் 20:24)

நாம் கெம்பீரித்துப் பாடி தேவனைத் துதிக்கும்போது அவர் நம் நடுவில்


தங்கியிருப்பது எத்தனை ஆசீர்வாதம். பவுலும் சீலாவும் நடு இரவில் கைகளும்,
கால்களும் கட்டப்பட்ட நிலையிலும் தேவனைப் பாடி துதித்தபடியால் அங்கு
தம்முடைய வல்லமையோடு இறங்கி வந்தார். கட்டுகள் கழன்றது.
சிறைச்சாலைக் கதவுகளும் திறந்தது. துதி ஆராதனைக்கு அவ்வளவு
வல்லமையுண்டு. மேலும், பாடித் துதிக்கும்போது நம் நடுவில் அவர் இறங்கி
வருவாரென்றால் நமக்கு விரோதமாய் வருகிற சகல எதிரிகளையும் அசுத்த

13
ஆவிகளையும் அவர் விரட்டி நமக்காக யுத்தம் செய்யவும் சத்துருவை
மடங்கடிக்கவும் வல்லவராயிருக்கிறார். ஆகவே அவரை ஒவ்வொரு நாளும்
துதிக்க மறவாதீர்கள். அப்போது அவர் உங்கள் நடுவில் வருவார். அதிசயங்களைக்
காண்பீர்கள். ‘பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய்
வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர்
மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்
பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்’. (II நாளாகமம் 20:22)

ஜெபம் பண்ணும்போது... ‘இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே


எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்’.
(மத்தேயு 18:20) நம் அருமை ஆண்டவரை நம்முடைய வாழ்வின் மையத்திற்குக்
கொண்டுவர மற்றொரு முக்கியமான வழி, கூடி ஜெபிப்பது ஆகும். அதாவது
குடும்ப ஜெபத்தைக் குறித்து குறிப்பிட விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தில்
ஒருமனப்பட்டு இரண்டு அல்லது மூன்று பேர் கூடி வந்தால் நிச்சயம் அவர்கள்
நடுவில் அருமை ஆண்டவர் வருவார். ஏறெடுக்கும் ஜெபத்தை நிச்சயம் கேட்பார்.
குடும்ப ஜெபம் ஒரு கர்த்தருடைய பிள்ளைகளுக்கு மிகவும் அவசியமாகும்.
குடும்ப ஜெபம் இல்லாத வடு,
ீ நான்கு சுவரும் இல்லாத வடு
ீ என பேட்ரிக்
ஜோஷ்வா என்ற தேவ மனிதன் கூறுகிறார். குடும்ப ஜெபம் செய்ய முடியாதபடி
சத்துரு பல தந்திரங்களைக் கொண்டு வருவான். ஆனால் அதை மேற்கொண்டு
அனுதினமும் கூடி ஜெபிக்க அர்ப்பணிக்க வேண்டும். அன்றைக்கு சாத்ராக்,
மேஜிக், ஆபேத்நேகோ என்ற தேவமனிதர்கள் அக்கினிச் சூளையில்
போடப்பட்டாலும் அவர்கள் நடுவிலே நம் ஆண்டவர் உலாவினார். காரணம்
அவர்களுடைய ஒருமனப்பாடு. உங்கள் குடும்பத்தில் ஜெப வாழ்க்கையை கட்டி
எழுப்புவர்களென்றால்
ீ ஆண்டவர் உங்கள் நடுவில் வந்து வாசம் பண்ணுவார்.
நிச்சயம் நீங்கள் வேண்டிக் கொள்ளுவதற்கும், நினைப்பதற்கும் மிகவும்
அதிகமாய் உங்களை ஆசீர்வதிப்பார். எனவே உங்கள் தனிப்பட்ட வாழ்வில்,
குடும்பத்தில், தொழிலில், படிப்பு, வேலை எல்லாவற்றிலும் கிறிஸ்துவுக்கு மைய
இடத்தை ஒதுக்கிவிடுங்கள். ஆச்சரியமான ஆசீர்வாதங்களை நிச்சயம்
பெறுவர்கள்.
ீ ‘கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை
விலக்கினார், இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்,
இனித்தீங்கைக் காணாதிருப்பாய்’ (செப்பனியா 3:15) என்பது இறைவாக்கு ஆகும்.

…நானும் என் வட்டாருமோவென்றால்,


ீ கர்த்தரையே சேவிப்போம்.’ (யோசுவா
24:15)

‘குடும்ப ஜெபம் இல்லாத வடு


ீ கூரையில்லாத வடு’
ீ என்பார்கள். உங்கள் வட்டில்

ஜெபம் என்ற கூரை இருக்கிறதா என சிந்தித்துப் பாருங்கள். இந்த காலத்திலே
குடும்பமாக தேவனை ஆராதிக்க நேரங்களை ஒதுக்கிக் கொள்ளுங்கள். கிறிஸ்தவ
வடுகள்
ீ பலவற்றில் “கிறிஸ்துவே வட்டின்
ீ தலைவர்” என்னும் வாசகம் அழகாக

14
வரவேற்பறையில் தொங்கிக்கொண்டிருப்பதை நீங்களும் கண்டிருக்கலாம்,
சிலவேளைகளில் உங்கள் வட்டிலும்
ீ அப்படியிருக்கலாம். “கிறிஸ்துவே தலைவர்”
என்பது வெறுமனே எழுத்துக்களில் மட்டும்தானா? வட்டிலுள்ளவர்கள்
ீ உள்ளத்தில்
கிறிஸ்து இல்லை என்றால் அது துக்கத்துக்குரிய விஷயம்! கிறிஸ்து தலைவர்
என்பதை குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் உணர்வார்களானால் குடும்பமாகச்
சேர்ந்து அவரை ஆராதிப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் காரியமாகவே
இருக்கும்.

இஸ்ரவேலரிடம், “இன்று நீங்கள் யாரைச் சேவிக்கப் போகிறீர்கள் என தெரிவு


செய்யுங்கள்” என்று கூறிய யோசுவா, “நானும் என் வட்டாருமோவென்றால்

கர்த்தரையே சேவிப்போம்” என்று ஆணித்தரமாகக் கூறியதைப்போல நாமும்
கூறத்தக்கவிதத்தில் நமது குடும்ப ஜெபங்களை அமைத்துக்கொள்ள வேண்டாமா!
என்றைக்கு ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தில் இணைந்து, கணவன்,
மனைவியாகிறார்களோ அன்றைக்கே அவர்கள் குடும்ப ஜெபத்தை
ஆரம்பிக்கவேண்டும். பிள்ளை பிறந்து ஓரளவு விளங்கிக்கொள்ளும் பருவத்தை
அடைகிறவேளையில் அப்பிள்ளையும் குடும்ப ஜெபத்தில் சேர்த்துக்கொள்ளப்பட
வேண்டும். குடும்ப ஜெபத்தில் அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்ளும்
பிள்ளைகள், ஞாயிறு ஆராதனையில் அமைதியாக இருப்பார்கள் என்பது உறுதி.
பிள்ளைகள் வளர்ந்து வரும்போது அவர்களை ஜெபிக்கவும், வேதத்தை
வாசிக்கவும் நாம் ஊக்குவித்து நமது குடும்ப ஜெபங்களைக்
கட்டியெழுப்பவேண்டும். தேவனை ஆராதிப்பதும், குடும்பத் தேவைகளுக்காக,
உறவினர், நண்பர்களுக்காக ஜெபிப்பதும், குடும்பத்தில் யாராவது தவறு செய்து
மற்றவரை மனம்நோகப் பண்ணியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருவதும்
குடும்ப ஜெப நேரத்தில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது அவசியம்.

யாத்திராகமம் 17:8-16 வரை. யாத்திராகமம் 17:9-இல், இஸ்ரவேல் மக்களின் leader-


மோசே, அமலேக்கியரோடு யுத்தம் நேரிடுகையில், “நான் மலையுச்சியில்
தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன்” என்று
சொல்லி, கர்த்தரை முன்னிலை படுத்துவதையும், கர்த்தரை முதலாவதாக
தேடுவதையும் நாம் பார்க்கலாம். இறுதியில் “யேகோவாநிசியாகிய” தேவன்
இஸ்ரவேலரை வெற்றியடையச் செய்கிறார். இதை போல், நம் வாழ்வில் எல்லாக்
காரியங்களிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிலை படுத்தும்பொழுது
கிறிஸ்துவுக்குள்ளாக ஜெயமான வாழ்க்கை வாழ்ந்திட திரியேக தேவன் நம்மை
வழிநடத்துவார்.

யாத்திராகமம் 17:10-ல், “யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து,


அமலேக்கோடே யுத்தம் பண்ணினான்.” என்று பார்க்கலாம். இதில், மோசே,
யோசுவாவை செய்யச் சொன்ன காரியத்தில் யோசுவா எந்த எதிர் கேள்வியும்
கேட்காமல், கீ ழ்ப்படிந்து செயல்படுவதை நாம் தெரிந்துகொள்ளலாம். இதே போல்,

15
நம் வாழ்வில், கணவன், மனைவி இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர்
கிறிஸ்த்துவுக்குள்ளாக கீ ழ்ப்படிந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இயேசு
கிறிஸ்துவும் கூட, லூக்கா 2:51-ல், “பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய்,
நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீ ழ்ப்படிந்திருந்தார்.” என தன் தாய்,
தகப்பனுக்கு கீ ழ்ப்படிந்திருந்ததை பார்க்கலாம். ஆம், கணவன், மனைவி இருவரும்
ஒருத்தருக்கு ஒருத்தர் மட்டும் அல்ல, தங்கள் பெற்றோருக்கும்,
முதியவர்களுக்கும் கூட கிறிஸ்த்துவுக்குள்ளாக கீ ழ்ப்படிந்து வாழ்வது வேதம்
கற்றுத்தருகிற ஒரு முக்கியமான குறிப்பாகும்.

யாத்திராகமம் 17:10-ல், “மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில்


ஏறினார்கள்” என்று பார்க்கலாம். இதில், மோசே தேவனுடைய கோலை கையில்
பிடித்துக்கொண்டு விண்ணப்பம் செய்ய மலை ஊச்சிக்கு செல்லும்பொழுது,
ஆரோனும், ஊரும் மோசேக்கு துணையாக செல்வதை நாம் தெரிந்து
கொள்ளலாம். இதே போல், கணவன், மனைவி இருவரும் எங்கு சென்றாலும்,
என்ன செய்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக செயல்பட
வேண்டுமென்பது (சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் தவிர) வேதம் நம்மக்கு
கற்றுத்தரும் ஒரு குறிப்பாகும். பவுலும் கூட, I கொரிந்தியர் 7:5-ல் இதே கருத்தை
குறிப்பிடுவதை காணலாம். இந்த, நவன
ீ காலங்களில் கணவன் தனியாகவும்,
மனைவி தனியாகவும் பல காரியங்களில் ஈடுபடுவதையும், ஊழியத்திலும் கூட
இருவரும் தனித்தனியாக செயல்படுவதையும் நாம் பார்க்கலாம். இது சில
பிரச்சனைகளுக்குத்தான் வழிவகுக்குமே தவிர, கிறிஸ்துவுக்குள்ளாக குடும்பம்
நடத்திட வழிவகுக்காது. ஆக, இருவரும் ஒன்றாக, ஒருத்தருக்கு ஒருத்தர்
துணையாக நின்று செயல்படுவதையே தேவன் விரும்புகிறார்.

யாத்திராகமம் 17:12-ல், “அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து


அவன் கீ ழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும்
ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன்
கைகளைத் தாங்கினார்கள்;” என்று எழுதியிருப்பதை பார்க்கலாம். ஒரு
குடும்பத்தில், சந்தோஷம் மட்டுமே இருக்கும் என்றில்லை. பாடுகளும்,
நெருக்கடிகளும் சில வேளைகளில் வரலாம். ஆனால், கிறிஸ்தவர்களாகிய நம்
குடும்பத்திற்க்கு ஒரு நிலையான உத்திரவாதம், நம்பிக்கை உண்டு அது
குடும்பத்தை இணைத்த தேவன் உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும்
நம்மோடுகூட ‘இம்மானுவேல்’லாக இருக்கிறார் என்பதே!!. குடும்பத் தலைவனும்,
தலைவியும் எல்லா சூழ்நிலைகளிலும், வியாதியிலும், கஷ்டங்களிலும்
ஒருத்தருக்கு ஒருத்தர் தேற்றி, குறிப்பாக பணம், வேலை போன்ற
நெருக்கடியிலும் ஒருத்தார் பாரத்தை மற்றொருவர் கை கொடுத்து தாங்கி
குடும்பத்தை கிறிஸ்துவுக்குள்ளாக கட்டுவது வேதம் நம்மக்கு கற்றுத்தரும்
குறிப்பாகும். மேலுள்ள வசனத்தில், ஆரோனும் ஊரும் மோசேயினுடைய

16
கைகளைத் தாங்கினார்கள் என்று பார்க்கின்றோம். அதே போல், நம் குடும்பத்தில்
கூட முதியவர்களோ, நெருக்கடியில் உறவினர்களோ இருக்கலாம். அவர்களுக்கும்,
குடும்பமாக கிறிஸ்துவுக்குள் கை கொடுத்து தாங்குவது வேதம் நம்மக்கு
கற்றுத்தரும் மற்றொரு குறிப்பாகும்.

பவுல், எபேசியர் 2:16-22-ல் கூறிய வசனங்கள் இஸ்ரவேளர்களுக்கும்,


புறஜாதியருக்கும் மட்டும்மல்ல, குடும்பத் தலைவனுக்கும்,தலைவிக்கும்
மிகப்பிரமிப்பாக பொருந்தும், அது, “16.பகையைச் சிலுவையினால் கொன்று,
அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
17.அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீ பமாயிருந்த
அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். 18.அந்தப்படியே நாம்
இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை
அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். 19.ஆகையால், நீங்கள் இனி அந்நியரும்
பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய
வட்டாருமாயிருந்து,
ீ 20.அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய
அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு
இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; 21.அவர்மேல் மாளிகை
முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக
எழும்புகிறது; 22.அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய
வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.” என்பதே. ஆம், குடும்பத்
தலைவனும், தலைவியும் அதேப்போல், கிறிஸ்துவுக்குள்ளாக ஒரு அழகான
குடும்பத்தை கட்டி எழுப்ப, கருத்து வேறுபாடுகளையும், வெறுப்புகளையும்
தகர்த்து ஒரு இசைவாக வாழ, அவர்கள் வாழ்வில் கிறிஸ்துவின் சிலுவையும்,
அதனால் உண்டான இரட்சிப்பும் மிக முக்கியமான ஒன்றாகும்.

கொலோசெயர் 3: 13, 14-ல் பவுல், “13.ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில்


ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல,
ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். 14.இவை எல்லாவற்றின்மேலும்,
பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.” என்று
கூறுவதை பார்க்கலாம். ஆம், கிறிஸ்துவுக்குள்ளாக குடும்பம் என்பது,
கிறிஸ்துவின் பூரண அன்பைத் குடும்பத் தலைவனும், தலைவியும்
தரித்துக்கொண்டு, பரிசுத்த வேதத்தில் கூறப்பட்டுள்ள வசனங்களை தங்கள்
வாழ்வில் கடைப்பிடித்து, இயேசுவை பிரதிபளிப்பவர்களாக வாழ்வதுதான். இது
தேவனால் வடிவமைத்த ஒரு அழகிய பொருளாகும். அதை தாங்கிப்பிடித்து,
கிறிஸ்துவுக்குள்ளாக கட்டி எழுப்பும் மிக உயர்ந்த பொறுப்பினை தேவன்,
கணவன் மனைவியாகிய இருவருக்கும் கொடுத்திருக்கிறார். கணவனாக,
மனைவியாக, பிள்ளைகளாக, நாம் கிறிஸ்துவுக்குள் அற்பணித்தவர்களாய், அன்பை
தரித்துக்கொண்டு, இயேசுவின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களாக

17
வாழும்பொழுது, அங்கு அன்பும், சமாதானமும், இசைவான நல்லிணக்கத்தையும்
தேவன் அக்குடும்பத்தில் நிலையாக வைக்கிறார். ஆமென். !!

5. ஆவிக்குரிய பயிற்ச்சி மையமாக வடு


ீ அமைதல்

‘கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன்


பாக்கியவான்’ (சங்.128:1). ஒவ்வொரு திருமண ஆராதனைகளிலும் மேலே
குறிப்பிட்டுள்ள சங்கீ தத்தை மையமாகக் கொண்டு தான் பிரசங்கிப்பார்கள். ஆறே
வசனங்களைக் கொண்ட இந்த அதிகாரத்தின் ஆரம்பமே கர்த்தருக்குப் பயப்படும்
பயம் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத் தலைவனுடைய
வெற்றியின் ரகசியம், அவன் தேவனுக்குப் பயப்படும் பயத்தில்தான் இருக்கிறது.
தன் வாழ்வில் கர்த்தருக்கு முதலிடம் கொடுப்பதே அவருக்கு பயப்படுகிற
பயமாகும்.

‘புரு‌
ஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள் மேல் கசந்து
கொள்ளாதிருங்கள்’ (கொலோ.3:19, எபே.5:25) ‘கடைசி நாட்களில் மனு‌
ஷனுடைய
அன்பு தணிந்து போகும்’ (மத்.24:12) என்று நம் அருமை ரட்சகர் கூறிய தீர்க்க
தரிசனத்தின்படியே இன்று அநேக குடும்பங்கள் அன்பில்லாமல், அங்கலாய்த்துக்
கொண்டிருக்கிறதை நாம் அனைவரும் அறிவோம். தற்காலத்தில் குடும்ப
வாழ்வுக்கு அன்பை முதலீடு செய்யாமல் பணத்தை முதலீடு செய்வதால், பணம்
இருக்கும் வரைக்கும் அன்பு இருக்கும். பணம் இல்லாமல் போனால் அன்பைத்
தேட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தெய்வக
ீ அன்பை மறந்து உலக
அன்பைத் தேடி சில குடும்பங்கள் அலைகிறபடியினால், பிசாசினால்
அக்குடும்பங்கள் அலைக்கழிக்கப்படுகிறது. பாவ சோதனைகளுக்குள் சிக்குண்டு
குடும்ப வாழ்வே முறிந்து போகிறது. ‘நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே
தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த
நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது’ (ரோமர் 5:5).

“யோபு ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனை தங்கள்

இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி,

பரிசுத்தப்படுத்தி அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய

இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்துவான்” (யோபு 1 : 5 )

யோபு தன் பிள்ளைகளின் காரியத்தில் எவ்வளவு விழிப்பாக


செயல்பட்டிருக்கிறான் பாருங்கள்! அவனுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய
வாழ்க்கையைக் குறித்து, அக்கறை எடுத்துக்கொண்டான். இன்றைக்கு அநேகம்
பெற்றோர்கள் அப்படி அக்கறை எடுக்காததினால், எத்தனை பிள்ளைகள்

18
பிற்காலத்தில் சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள். அவர்களுடைய படிப்பு,
அவர்களுக்கு பணம்சேர்ப்பது, நல்ல வேலைவாங்குவது, நல்ல திருமணம்
செய்யவேண்டுமென்பது போன்ற உலகபிரகாரமான காரியங்களில் அதிக
விழிப்போடு செயல்படுகிறார்கள். ஆனால் ஆவிக்குரிய காரியங்களுக்கோ
முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நீ அவ்விதம் உன்னுடைய பிள்ளைகளுக்குச்
செய்து கொண்டிருக்கிறாயா? உன் பிள்ளைகளே, உன்னை பிற்காலங்களில்
குற்றஞ்சாட்டுவார்கள் என்பதை மறவாதே.

நமது பிள்ளைகள் சிறுபிராயத்திலிருந்தே அவ்விதம் ஆவிக்குரிய


வாழ்க்கையில் நடத்தப்படவேண்டும். அதில் குடும்ப ஜெபம், ஆலயத்திற்கு
ஒழுங்காக அழைத்துச்செல்லுதல், ஓய்வு நாள் பாடாசாலைகளில் ஒழுங்காக
கலந்துக்கொள்ளுதல் மிக முக்கியமானவைகள் என்பதை உணர்ந்து, அவர்கள்
அதில் பங்குபெற காலங்களையும் நேரங்களையும் ஒதுக்கவேண்டும். இன்றைக்கு
அநேக கிறிஸ்தவ குடும்பங்களில் குடும்ப ஜெபங்கள் செய்வது
நின்றுபோய்விட்டது அல்லது அதை தினமும் செய்வதில்லை. நினைத்தால்
அல்லது நேரம் கிடைத்தால் செய்வார்கள். அப்படி செய்வர்களானால்
ீ குடும்ப
பலிபீடத்தை நீங்கள் இடித்துப்போடுகிறீர்கள். தேவ ஆசீர்வாதம் அங்கு எப்படி
இருக்கும்?

மறுபடியும் குடும்ப பலிபீடத்தை செப்பனிடுங்கள். குடும்ப ஜெபங்களில்


கர்த்தரைத் துதித்து பாடுங்கள். இவ்விதமான தின தியானங்களை வாசித்து
ஜெபியுங்கள். கர்த்தர் உங்கள் குடும்பங்களை, உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதித்து
வழிநடத்துவார். கர்த்தருடைய சமாதானம் அந்தக் குடும்பத்தில் காணப்படும்.
‘நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும்,
சகோதரசிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும்,
இணக்கமுள்ளவர்களுமாயிருங்கள்.’—1 பேதுரு 3:8.

மனிதவர்க்கத்தின் மிகப் பழமையான அமைப்பில்—குடும்பத்தில்—மேற்காணும்


வசனம் எவ்வளவு நன்றாகப் பொருந்துகிறது! இந்த அம்சங்களில் பெற்றோர்
தலைமை வகிப்பது எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது! அவர்களுடைய
உடன்பாடான குணங்களும் எதிர்மறையானவையும் பொதுவாக குழந்தைகளில்
எடுத்துக்காட்டப்படும். இருப்பினும், தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு,
குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரிடமும் இருக்கிறது. கிறிஸ்தவர்களாக,
நாம் ஆவிக்குரிய ஆட்களாக அல்லது மாம்சத்திற்குரிய ஆட்களாக இருப்பதற்கு
தெரிவு செய்யலாம். நாம் கடவுளை மகிழ்விப்பதற்கு அல்லது மனவருத்தப்படச்
செய்வதற்குத் தெரிவு செய்யலாம். அந்தத் தெரிவு ஓர் ஆசீர்வாதத்தில், நித்திய
ஜீவனிலும் சமாதானத்திலும்—அல்லது ஒரு சாபத்தில், நித்திய மரணத்தில்—
விளைவடையலாம்.—ஆதியாகமம் 4:1, 2; ரோமர் 8:5-8; கலாத்தியர் 5:19-23.

19
1 பேதுரு, 3-ம் அதிகாரம், 8-ம் வசனத்திலுள்ள அப்போஸ்தலனின் வார்த்தைகள்,
மனைவிகளுக்கும் கணவர்களுக்கும் கொடுக்கப்பட்ட சில நல்ல ஆலோசனையை
உடனடியாகப் பின்தொடர்கிறது. கிறிஸ்தவக் குடும்பங்களின் நலனில் பேதுரு
உண்மையிலேயே அக்கறை உள்ளவராய் இருந்தார். ஓர் ஒன்றுபட்ட, ஆதரவுள்ள
குடும்பத்துக்குப் பலமான ஆவிக்குரிய தன்மையே முக்கியமானதாக இருக்கிறது
என்பதை அவர் அறிந்திருந்தார்.* இவ்வாறாக, கணவர்களுக்கான தன்னுடைய
ஆலோசனை அசட்டை செய்யப்பட்டால், கணவனுக்கும் யெகோவாவுக்கும்
இடையில் ஓர் ஆவிக்குரிய தடையில் அது விளைவடையும் என்று அவர் 7-ம்
வசனத்தில் குறிப்பிட்டார். அவன் தன்னுடைய மனைவியின் தேவைகளைப்
புறக்கணித்தால் அல்லது தயவற்றத் தன்மையால் அவளை நெருக்கினால், அந்தக்
கணவனின் ஜெபங்கள் தடைசெய்யப்படக்கூடும்.

ஒரு குடும்பத்தின் ஆவிக்குரிய தன்மை நல்ல முன்மாதிரியைச் சார்ந்திருக்கிறது.


கணவன், கிறிஸ்தவத்தை நடைமுறையில் அப்பியாசிக்கும் ஒருவராக
இருக்கும்போது, ஆவிக்குரிய தன்மைகளைக் காண்பிப்பதில் அவர் முன்மாதிரி
வகிக்கிறார். விசுவாசத்திலிருக்கும் கணவனைக் கொண்டில்லாதபோது,
பொதுவாகத் தாய் அந்த உத்தரவாதத்தை எடுத்துக்கொள்ள முயலுகிறாள்.
எவ்விதத்திலும், இயேசு கிறிஸ்து பின்பற்றுவதற்குப் பரிபூரண மாதிரியை
அளிக்கிறார். அவருடைய நடத்தை, அவருடைய வார்த்தைகள், அவருடைய
சிந்தனை ஆகியவை எப்போதும் கட்டியெழுப்புவதாகவும் புத்துணர்ச்சி
அளிப்பதாகவும் இருந்தன. திரும்பவும் திரும்பவும், கிறிஸ்துவின் அன்பான
மாதிரிக்கு அப்போஸ்தலன் பவுல் வாசிப்பவரின் கவனத்தைத் திருப்புகிறார்.
உதாரணமாக, அவர் குறிப்பிடுகிறார்: “கிறிஸ்து சபைக்குத்
தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்;
அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். புருஷர்களே, உங்கள் மனைவிகளில்
அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, . . .
தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.”—எபேசியர் 5:23, 25, 27, 29; மத்தேயு
11:28-30; கொலோசெயர் 3:19.

ஆவிக்குரிய தன்மைக்கும் அன்பு, தயவு, பரிவு ஆகியவை வெளிக்காட்டப்பட்ட


தலைமைத்துவத்துக்கும் மிகச் சிறந்த மாதிரியாக இயேசு இருந்தார். அவர் சுய-
தியாகம் செய்பவராக இருந்தார், கட்டுப்பாடற்ற சுய விருப்ப நுகர்வுடையவராக
அல்ல. அவர் எப்போதும் தம்முடைய தகப்பனை மகிமைப்படுத்தி, அவருடைய
தலைமைத்துவத்தை மதித்தார். அவர் தம்முடைய பிதாவிடமிருந்து பெற்ற
வழிநடத்துதலைப் பின்பற்றினார்; ஆகவே அவரால் இவ்வாறு சொல்ல முடிந்தது:
“நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே
நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின
பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு

20
நீதியாயிருக்கிறது.” “நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப்
போதித்தபடியே இவைகளைச் சொன்னேன்.”—யோவான் 5:30; 8:28; 1 கொரிந்தியர்
11:3.

இது கணவன்மாருக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? எப்போதும் தம்முடைய


பிதாவிற்குக் கீ ழ்ப்படுத்திய கிறிஸ்துவின் மாதிரியையே அவர்கள் எல்லாக்
காரியங்களிலும் பின்பற்ற வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது.
எடுத்துக்காட்டாக, பூமியிலுள்ள எல்லா உயிர் வகைகளுக்கும் யெகோவா
உணவளித்ததுபோல, இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு உணவளித்தார்.
அவர்களுடைய அடிப்படையான பொருள்சம்பந்தப்பட்ட தேவைகளை அவர்
புறக்கணிக்கவில்லை. அவர் 5,000 புருஷரையும் 4,000 பேரையும் போஷித்த
அற்புதங்கள் அவருடைய அக்கறை மற்றும் பொறுப்புணர்ச்சிக்கு அத்தாட்சியாக
உள்ளன. (மாற்கு 6:35-44; 8:1-9) அதேவிதமாகவே இன்று, பொறுப்புணர்ச்சியுள்ள
குடும்பத் தலைவர்கள் தங்களுடைய வட்டாரின்
ீ சரீரத் தேவைகளுக்குக் கவனம்
செலுத்துகின்றனர். ஆனால் அவர்களுடைய பொறுப்பு அங்கே முடிந்துவிடுகிறதா?
—1 தீமோத்தேயு 5:8.

இயேசு சுட்டிக்காண்பித்தபடி, குடும்பங்களுக்கு மற்ற, அதிக முக்கியமான


தேவைகளும் இருக்கின்றன. அவர்களுக்கு ஆவிக்குரிய மற்றும்
உணர்ச்சிப்பூர்வமான தேவைகள் இருக்கின்றன. (உபாகமம் 8:3; மத்தேயு 4:4)
குடும்பத்திலும் சபையிலும் நாம் ஒருவரோடொருவர் செயல்தொடர்பு
கொள்ளுகிறோம். கட்டியெழுப்பக்கூடியவர்களாய் இருக்கும்படி நம்மைத்
தூண்டுவதற்கு நமக்கு நல்ல வழிநடத்துதல் தேவைப்படுகிறது.
இதைக்குறித்ததில், கணவன்மாரும் தகப்பன்மாரும் பெரும்பாகம் வகிக்கின்றனர்—
அதிலும் அவர்கள் மூப்பர்கள் அல்லது உதவி ஊழியர்களாக இருந்தால்
இன்னுமதிக பங்கை வகிக்கின்றனர். தங்களுடைய பிள்ளைகளுக்கு உதவி
செய்கையில் ஒற்றைப் பெற்றோருக்கு அதேவிதமான குணங்கள்
தேவைப்படுகின்றன. குடும்ப அங்கத்தினரால் எவை சொல்லப்படுகின்றனவோ,
அவற்றை மட்டுமல்லாமல், சொல்லப்படாமல் விடப்பட்டவற்றையும் பெற்றோர்
புரிந்துகொள்ளவேண்டும். அது பகுத்துணர்வு, நேரம், மற்றும் பொறுமையைத்
தேவைப்படுத்துகிறது. கணவன்மார் கரிசனையுள்ளவர்களாகவும் தங்கள்
மனைவிகளுடன் விவேகத்துடன் வாழவேண்டும் என்றும் பேதுரு
சொல்லியிருப்பதற்கு அது ஒரு காரணமாக இருக்கிறது.—1 தீமோத்தேயு 3:4, 5, 12; 1
பேதுரு 3:7.

6. பணத்தை கையாளுவதும் சரியான உக்கிரானக்காராக இருப்பதும்.

வாழ்வதற்கு பணம் தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகிவிடக்


கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் சந்தோஷமாகவும்

21
வாழ்வார். “பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர்
இந்த ஆசையை வளர்த்துக்கொண்டு . . . பலவித வேதனைகளால் தங்களையே
ஊடுருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—1
தீமோத்தேயு 6:10.

“செல்வந்தனாக முயன்று உனது உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளாதே.”—


நீதிமொழிகள் 23:4,
நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு “மனநோய் வர
வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்ல முதுகுவலி, தலைவலி, தொண்டைவலி
போன்ற பிரச்சினைகளும் வருகின்றன. அவர்கள் போதை மருந்துக்கும்,
குடிப்பழக்கத்துக்கும் அடிமையாக வாய்ப்பு இருக்கிறது. பணக்காரராக வேண்டும்
என்பதில் குறியாக இருக்கிறவர்கள் நிறைய பிரச்சினையில்
மாட்டிக்கொள்கிறார்கள்” என்று தி நார்சிஸிஸம் எபிடெமிக் என்ற புத்தகம்
சொல்கிறது.

“பண ஆசையில்லாமல் வாழுங்கள்; உள்ளதை வைத்துத் திருப்தியுடன்


இருங்கள்.”—எபிரெயர் 13:5.

இருப்பதை வைத்து திருப்தியோடு வாழவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு


பணக் கஷ்டமே இருக்காது என்று சொல்ல முடியாது. ஆனால், அவர்கள்
பணத்தைப் பற்றிய கவலையிலேயே மூழ்கிவிட மாட்டார்கள். உதாரணத்துக்கு,
அவர்களுக்கு ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் அதை பற்றி அதிகமாக
கவலைப்பட்டுக்கொண்டு இருக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக, இயேசுவின்
சீடரான பவுலைப் போல் நடந்துகொள்வார்கள். “குறைவான பொருள்களோடும்
எனக்கு வாழத் தெரியும், ஏராளமான பொருள்களோடும் எனக்கு வாழத் தெரியும்;
வயிறார உண்ணும்போதும் சரி பட்டினி கிடக்கும்போதும் சரி, நிறைவிலும் சரி
குறைவிலும் சரி, எந்தச் சூழ்நிலையிலும் எல்லாவற்றிலும் திருப்தியுடன்
இருப்பதற்கான ரகசியத்தை நான் கற்றுக்கொண்டேன்” என்று பவுல் சொன்னார்.—
பிலிப்பியர் 4:12.
“தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்”—நீதிமொழிகள் 11:28.

பண பிரச்சினையினால்தான் நிறையப் பேர் விவாகரத்து செய்துகொள்கிறார்கள்


என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். பணப் பிரச்சினையால் சிலர்
தற்கொலையும் செய்துகொள்கிறார்கள். சிலருக்கு தங்கள் துணையைவிட, ஏன்
தங்கள் உயிரைவிட பணம்தான் முக்கியமாக இருக்கிறது. ஆனால், பணத்துக்கு
அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் அதையே முழுமையாக நம்பி இருக்க
மாட்டார்கள். “ஒருவனுக்கு ஏராளமான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு
வாழ்வைத் தராது” என்ற இயேசுவின் அறிவுரையை புரிந்துகொள்கிறார்கள்.—
லூக்கா 12:15.

22
“ஏழைகளுக்கு அவர்களுடைய பக்கத்து வட்டாரும்கூட
ீ நண்பர்களாக
இருப்பதில்லை. ஆனால் செல்வர்களுக்கோ ஏராளமான நண்பர்கள்.”—
நீதிமொழிகள் 14:20,

இந்த வசனம் சொல்லுவதுபோல, பணம் இல்லாதவர்களை நாம் மதிக்காமல்


போகலாம், அவர்களால் நமக்கு எந்த ஆதாயமும் இல்லை என்று நினைக்கலாம்.
ஆனால் வசதியானவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்தலாம். அவர்களிடம்
நல்ல பெயர் வாங்கினால் நமக்கு ஏதாவது லாபம் கிடைக்கும் என்றும்
ஆசைப்படலாம்.

பாரபட்சம் காட்டுவதை பைபிள் கண்டிக்கிறது. ஏழைகளை ஏளனமாக பார்ப்பதும்


“சொந்த லாபத்திற்காக மற்றவர்களைப் போலியாக” புகழ்வதும் தவறென்று
சொல்கிறது. (யூதா 16; ஏசாயா 10:1, 2) அதனால், எல்லாரையும் சரிசமமாகப் பார்க்க
எப்போதும் முயற்சி செய்யுங்கள்.

பைபிள் இப்படி சொல்கிறது ...

“பணம் பாதுகாப்பு தரும்.” —பிரசங்கி 7:12,

ஆனால் இந்த எச்சரிப்பையும் தருகிறது . . .

‘விரைவிலேயே செல்வந்தராகப் பார்க்கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்.’ —


நீதிமொழிகள் 28:20, பொது மொழிபெயர்ப்பு

“பணக்காரராவதில் குறியாக இருக்கிறவர்கள், சோதனையிலும் கண்ணியிலும்


சிக்கிக்கொள்கிறார்கள்; அதோடு, தீங்கிழைக்கும் முட்டாள்தனமான பலவித
ஆசைகளுக்கு அடிபணிந்துவிடுகிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:9.

அதனால் பைபிள் இப்படி சொல்கிறது . . .

“பண ஆசையில்லாமல் வாழுங்கள்”—எபிரெயர் 13:5.

“எல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்;


ஏனென்றால், ஒருவனுக்கு ஏராளமான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு
வாழ்வைத் தராது”—லூக்கா 12:15.

“நன்மை செய்யவும், உங்களிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும்


மறந்துவிடாதீர்கள்”—எபிரெயர் 13:16.

பைபிள் சொல்வதைக் கேட்டால் என்ன நன்மை?

23
“பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம்”—
அப்போஸ்தலர் 20:35.

“தாராள குணமுள்ளவர்கள் வளமாக வாழ்வார்கள், மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி


அளிக்கிறவர்கள் புத்துணர்ச்சி அடைவார்கள்.”—நீதிமொழிகள் 11:25,

“கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும். ஆனால்,


எதையும் அவசரப்பட்டுச் செய்கிறவர்களுக்கு வறுமைதான் வரும்.”—
நீதிமொழிகள் 21:5.

பட்ஜெட் போட்டபடி செலவு செய்யுங்கள். உங்களுக்கு இருக்கிற எல்லா


செலவுகளையும் முதலில் பட்டியல் போடுங்கள். அவற்றை போக்குவரத்து, கல்வி,
உணவு என பல பிரிவுகளாகப் பிரித்து எழுதுங்கள். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு
தொகையை ஒதுக்குங்கள். ஒரு பிரிவில் அதிகமாகச் செலவாகிவிட்டால்,
இன்னொரு பிரிவுக்கு ஒதுக்கியிருக்கிற பணத்தில் கொஞ்சம் எடுத்து செலவை
ஈடுகட்டுங்கள். உதாரணத்துக்கு, பெட்ரோல் செலவு நீங்கள் நினைத்ததைவிட
அதிகமாகிவிட்டதா? அவ்வளவு முக்கியமாக இல்லாத விஷயத்துக்கு
ஒதுக்கியிருந்த பணத்தை வைத்து, உதாரணத்துக்கு ஹோட்டலுக்குப் போய்
சாப்பிடுவதற்காக ஒதுக்கியிருந்த பணத்தை வைத்து, செலவை சமாளியுங்கள்.

தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். முடிந்தவரை, கடன் வாங்குவதை


தவிர்த்துவிடுங்கள். உங்களுக்குத் தேவையானதை வாங்க பணத்தைச் சேர்த்து
வையுங்கள். நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா? அப்படியானால், கட்ட
வேண்டிய பணத்தை அந்தந்த மாதமே முழுவதுமாகக் கட்டிவிடுங்கள். அப்படிச்
செய்தால், வட்டி கட்ட வேண்டிய அவசியம் வராது. நீங்கள் ஏற்கெனவே கடன்
வாங்கியிருந்தால், அதை அடைப்பதற்கு திட்டம் போட்டு, அதன்படி செய்யுங்கள்.

பொதுவாக, கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருள்களை வாங்குகிறவர்கள்,


பணத்தை அதிகமாகச் செலவழிப்பதாக ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது. உங்களிடம்
கிரெடிட் கார்டு இருந்தால், அதைக் கவனமாகப் பயன்படுத்துங்கள்.

“சோம்பேறி குளிர் காலத்தில் நிலத்தை உழ மாட்டான். அதனால் அறுவடைக்


காலத்தில் கையேந்தி நிற்பான்.”—நீதிமொழிகள் 20:4 சோம்பேறித்தனம்
வறுமையில் கொண்டுபோய் விடும். அதனால், சுறுசுறுப்பாக வேலை செய்யுங்கள்.
முடிந்தவரை, எதிர்காலத்துக்காகச் சேர்த்து வையுங்கள்.

கடினமாக உழையுங்கள். உங்கள் வேலை பறிபோகாமல் இருக்க, கடினமாக


வேலை செய்யுங்கள்; பொறுப்பாக நடந்துகொள்ளுங்கள். இப்படிப்பட்ட
ஆட்களைத்தான் முதலாளிகள் விரும்புகிறார்கள்.

24
நேர்மையாக இருங்கள். முதலாளியிடமிருந்து திருடாதீர்கள். நேர்மையாக
இல்லையென்றால், உங்கள் பெயர் கெட்டுவிடும். பிறகு, உங்களுக்கு வேலை
கிடைப்பதே திண்டாட்டமாகிவிடும்.

பேராசையைத் தவிருங்கள். பணம், பணம் என்று ஓட ஆரம்பித்தால், உடம்பு


கெட்டுவிடும். உறவுகளும் முறிந்துவிடும். பணம் மட்டுமே வாழ்க்கை கிடையாது
என்பதை மறந்துவிடாதீர்கள்.

“குடிகாரர்களும் பெருந்தீனிக்காரர்களும் ஏழைகளாவார்கள். தூக்க


மயக்கத்திலேயே இருப்பவர்கள் கந்தல் துணியைத்தான் உடுத்துவார்கள்.”—
நீதிமொழிகள் 23:21.

பணத்தை நினைத்து ரொம்பக் கவலைப்படாதீர்கள்.

“எதைச் சாப்பிடுவது, எதைக் குடிப்பது என்று உங்கள் உயிருக்காகவும், எதை


உடுத்திக்கொள்வது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை
நிறுத்துங்கள்.”—மத்தேயு 6:25.

பொறாமைப்படாதீர்கள்.

“பொறாமைபிடித்தவன் சொத்து சேர்ப்பதில் வெறியாக இருக்கிறான். ஆனால்,


வறுமை அவனைத் துரத்திப் பிடித்துவிடுமென்று தெரியாமல் இருக்கிறான்.”—
நீதிமொழிகள் 28:22.

பணத்தைத் திட்டமிட்டு செலவு செய்ய வேண்டுமென்றால் முதலில்,


உங்களுடைய வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு என்பதைத்
தெரிந்துகொள்ள வேண்டும். “திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம்
சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலைசெய்பவர் பற்றாக்குறையில்
இருப்பார்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 21:5, பொது மொழிபெயர்ப்பு)
சிலர், “சாப்பாடு,” “வாடகை,” “துணிமணி” என்று ஒவ்வொரு செலவிற்கும் ஒரு
‘கவர்’ வைத்துக்கொண்டு அதில் பணத்தைப் போடுகிறார்கள். நீங்கள் இப்படிச்
செய்தாலும் சரி வேறு எப்படிச் செய்தாலும் சரி, உங்கள் பணம் எங்கே போகிறது
என்பதைத் தெரிந்து வைத்திருப்பது முக்கியம். எப்போதும் அத்தியாவசியமான
காரியங்களுக்கு முதலில் பணத்தை ஒதுக்குங்கள், ஆடம்பரத்திற்கு அல்ல.

வளரும் நாடுகளில் இருக்கும் நிறையப் பேர் செழிப்பான நாடுகளில் உள்ள


மக்களைப் போல் வாழ நினைக்கிறார்கள். தனி நபர்கள்கூட, அக்கம்பக்கத்தில்
உள்ளவர்களைப் பார்த்து ஆடம்பரமாக வாழ ஆசைப்படுகிறார்கள். அப்படிச்
செய்தால், புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாகிவிடுமே.

25
யாருக்குத் தெரியும், அப்படி ஆடம்பரமாக வாழ்கிறவர்களும் கடன் வாங்கியே
பொருள்களைச் சேர்த்திருக்கலாம். “பொறாமைக் கண்ணோடு பார்ப்பவன்
பணக்காரனாகத் துடிக்கிறான்; ஆனால், படுகுழியில்தான் விழுவான் என்பது
அவனுக்குத் தெரியாது” என்று பைபிளும் எச்சரிக்கிறது.—நீதிமொழிகள் 28:22,

“நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே” என்று


எரேமியாவின் உதவியாளர் பாருக் என்பவருக்கு யெகோவா தேவன் அறிவுரை
சொன்னார். (எரேமியா 45:5) ஆம், வாங்கும் சம்பளம் கைக்கும் வாய்க்குமே
போதாதபோது கார் பங்களாவிற்கு ஆசைப்பட்டால் பண நெருக்கடியில்தானே
மாட்டிக்கொள்வோம். ஏஷியன் டெவலப்மென்ட் பேங்க், ஆசியாவைப் பற்றி
வெளியிட்ட அறிக்கையின்படி பிலிப்பைன்ஸில் கிட்டத்தட்ட மூன்றில்
ஒருவரும் இந்தியாவில் பாதிக்கு அதிகமானோரும் வறுமைக்கோட்டிற்குக் கீ ழே
இருக்கிறார்கள்; அவர்களுடைய தினக்கூலி கிட்டத்தட்ட 60 ரூபாய்தான். இந்தளவு
குறைவான சம்பளம் வாங்குகிறவர்கள், அடிப்படை தேவைகளுக்கு
முக்கியத்துவம் கொடுப்பதுதானே சரியாக இருக்கும். ஏன், பணக்கார நாட்டில்
உள்ளவர்கள்கூட இந்த ஆலோசனையைப் பின்பற்றினால் பொருளாதார
நெருக்கடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கலாம்.

போதும் என்ற மனதோடு வாழுங்கள்.


எளிமையாக வாழ வேண்டுமென்றால் போதும் என்ற மனம் வேண்டும். 1
தீமோத்தேயு 6:8-ல் பைபிள் சொல்லும் ஆலோசனையைக் கவனியுங்கள்: “நமக்கு
உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் இருந்தால், அதுவே
போதும் என்று திருப்தியுடன் வாழ வேண்டும்.” பணம் மட்டுமே சந்தோஷத்தைத்
தராது. ஏனென்றால், கொஞ்ச பணத்தை வைத்துக்கொண்டே அதிக சந்தோஷமாக
வாழ்கிறவர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள். இருப்பதை வைத்து அவர்கள்
திருப்தியாக வாழ்கிறார்கள். பணத்தைப் பெரிதாக நினைக்காமல், தங்கள்
உறவுகளும் நண்பர்களும் காட்டும் பாசத்தையே சொத்தாக நினைக்கிறார்கள்.—
நீதிமொழிகள் 15:17.

அநாவசியமாகக் கடன் வாங்காதீர்கள்.


“ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன்வாங்கினவன்
கடன்கொடுத்தவனுக்கு அடிமை” என்று பைபிள் சொல்வதை யாராலும் மறுக்க
முடியாது. (நீதிமொழிகள் 22:7) சில நேரங்களில், கடன் வாங்குவதைத் தவிர்க்க
முடியாதுதான். ஆனால், கடன்வாங்கியாவது ஆசைப்பட்டதை அடைய வேண்டும்
என நினைப்பவர்கள் பணக்கஷ்டத்தில் மாட்டிக்கொண்டு திண்டாடுவார்கள்.
அதுவும், ‘கிரெடிட் கார்டு’ (கடன் அட்டை) வைத்திருந்தால் கேட்கவே வேண்டாம்!
டைம் பத்திரிகை சொல்கிறது: “கையில் ‘கிரெடிட் கார்டு’ இருந்தால், கண்மண்
தெரியாமல் செலவு செய்துவிடுவோம்.” பிலிப்பைன்ஸில் இருக்கும் எரிக்
சொல்கிறார்: “பணம் கொடுத்து வாங்கறதவிட, ‘கிரடிட் கார்டுல’ வாங்கினேனா

26
எவ்ளோ செலவு பண்றேன்னே தெரியாது. கடைசியில மொத்தமா பணம்
கட்டும்போதுதான் பட்ஜெட் உதைக்கும்.” அப்படியென்றால், ‘கிரெடிட் கார்டை’
கொண்டு போகும்போது பார்த்துப் பார்த்து செலவு செய்வது முக்கியம்
இல்லையா?—2 இராஜாக்கள் 4:1; மத்தேயு 18:25.

சேமித்து வைத்து வாங்குங்கள்.


அதெல்லாம் இந்தக் காலத்திற்குச் சரிப்பட்டுவராது என்று நினைக்காதீர்கள். பணப்
பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க இதுவே மிகச் சிறந்த வழி. சேமித்து வைத்துப்
பொருள் வாங்கினால், கடன் தொல்லை... எக்கச்சக்கமான வட்டி... போன்ற
அடுக்கடுக்கான பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வர்கள்.
ீ தவணையில்
வாங்கினால், பொருளுக்குரிய பணத்தைவிட அதிகமாகக் கொடுக்க
வேண்டியிருக்கும். சின்னஞ்சிறிய ஜீவனான எறும்பே, “அறுப்புக்காலத்தில்
தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.” இப்படி முன்கூட்டியே சேர்த்து
வைப்பதால், எறும்பு ‘ஞானமுள்ளது’ என பைபிள் சொல்கிறது.”—நீதிமொழிகள் 6:6-
8; 30:24, 25.

27

You might also like