அக்ஷாதீ³ ன் விநிஹத்ய வீக்ஷ்ய த ³ ஶகம் த ³ க்⁴த்³ வா புரீம் தாம் புந:
தீர்ணாப்³ தி⁴: கபிபி⁴ர்யுதோ யமநமத் தம் ராமசந்த்³ ரம் ப⁴ஜே ||
இது ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் அருளிய ஏக ஸ்லோக சுந்தரகாண்டம். எவருடைய அனுக்ரஹ
பலத்தினால், ஸ்ரீ ஹனுமார், கடலை விளையாட்டாக கடந்து, இலங்கையை அடைந்து, ராமருடைய பிரிய மனைவியான சீதா தேவியை பார்த்து, ஆறுதல் சொல்லி, ராவணனுடைய அசோக வனத்தை அழித்து, அக்ஷன் முதலான ராக்ஷதர்களை வதம் செய்து, தசக்ரீவனான ராவணனைப் பார்த்து, அவனுக்கு நல்ல புத்தி சொல்லி, அவன் கேட்காமல், ஹனுமாருடைய வாலில் தீ வைத்த போது, அந்த தீயினாலையே, இலங்கையை எரித்து விட்டு, மீண்டும் கடலை கடந்து, வானரர்களோடு வந்து, ராமரை வணங்கி சீதா தேவியோட சூடாமணியை கொடுத்து, அவர் மனசை சந்தோஷப் படுத்தினாரோ, அந்த ராமரை பஜிக்கிறேன்