Professional Documents
Culture Documents
காலபைரவர் அஷ்டகம்
காலபைரவர் அஷ்டகம்
காலபைரவர் அஷ்டகம்
ஸ்லோகம் :
ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்
வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு
அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது.
ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத
தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும், இலுப்பை எண்ணை, விளக்கு எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லஎண்ணை, பசு நெய்
இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.
ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆறு
தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.
அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை
வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர்
அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே துணை !வேணும் வைரவமூர்த்தி துணை !
காலபைரவருக்கு உகந்த இந்த அஷ்டகத்தை (தமிழில்) ஒன்பது பௌர்ணமிகள் சொல்லி காலவைரவரை வழிபாடு செய்து
வந்தால் வட்டில்
ீ வறுமை என்பதே இருக்காது. பண ரீதியான கஷ்டங்கள் நீங்கும். குறிப்பாக கடன் தொல்லைகள் முற்றிலுமாக
நீங்கிவிடும்.
காலபைரவர் அஷ்டகத்தை வாசிப்பவர்களுக்கு எந்த தீவினையும் நெருங்காது என்பது ஆகம நியதி. எதிரிகள் தொல்லை, கடன்
பிரச்சனைகள் போன்றவை நீங்க கால பைரவரை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
உங்கள் வட்டில்
ீ பண ரீதியான கஷ்டங்கள் இருக்கும் பொழுது, கையில் சுத்தமாக காசு இல்லாத சமயத்தில் கால பைரவரை வணங்கி
வழிபாடுகள் செய்து, இந்த அஷ்டகத்தை 18 முறை வாசித்தால் பணம் நிச்சயம் கிடைக்கும். இந்த வழிபாட்டை பௌர்ணமி அன்று செய்ய
வேண்டும். கால பைரவர் படத்தை வட்டில்
ீ வைத்து வழிபடக்கூடாது. அதனால் அவருடைய அம்சமாக விளங்கும் ஸ்வர்ண பைரவர்
படத்தை வைத்து, செவ்வரளி மலர் சாற்றி, சந்தன குங்குமம் இட்டு, இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். நைவேத்தியமாக அவல்
பாயாசம் செய்து வைப்பது நல்லது. பின்னர் தூப, தீபங்களை காண்பித்து கீ ழ் வரும் இந்த அஷ்டகத்தை பதினெட்டு முறை பாராயணம்
செய்ய வேண்டும்.