Professional Documents
Culture Documents
முன்பு ஒரு காலத்தில்
முன்பு ஒரு காலத்தில்
இக்கிளிக்கு ஒரே போல் தோற்றம் உடைய இரு கிளி குஞ்சுகள் இருந்தன. ஒருநாள், தாய் கிளி
உணவு தேடிச் சென்ற பொழுது ஒரு வேடன் மரத்தில் ஏறி கூண்டில் இருந்த கிளி குஞ்சுகளை
எடுத்து தன் பையில் போட்டான். ஆனால், ஒரு குஞ்சு சாமர்த்தியமாக தப்பிச் சென்று விட்டது.
அவ்வழியே வந்த ஒரு சன்யாசி வேடனிடமிருந்து தப்பித்து பறக்க முயற்சி செய்யும் கிளி
குஞ்சைத் தன் ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்றார். இவ்வாறு ஒரு கிளி குஞ்சு வேடனிடமும்
மற்றொன்று சன்யாசியிடமும் வளர்ந்தன. ஒரு நாள், அந்நாட்டு மன்னர், காட்டிற்குள் குதிரையில்
வந்த பொழுது வேடனின் குடிசையைக் கண்டு அந்த பக்கம் சென்றார். அப்பொழுது, திடீரென்று
கீர்ச்சிடும் சத்தத்தில்………………….
கிளி 1: எஜமான், நம் வீட்டிற்கு ஒரு ஆள் வருகின்றான். சீக்கிரம் அம்பையும் வில்லையும் எடுத்து
அவனைக் கொல்லுங்கள்’’.
என்று கத்தியது. அதற்கு மன்னர்……..
மன்னர்: நற்குணமில்லாத பறவையாக உள்ளது
என்று கூறி பின்னர் கிளியைத் திரும்பி பார்க்காமல் சென்றார். குதிரை ஓட்டி செல்லும்போது
வழியில் ஒரு ஆசிரமம் தரிந்த. அங்கிருந்து, சிறிது தண்ணீர் குடிக்க நினைத்துக் குதிரையை
நிறுத்தினார். அங்கும் கூண்டிற்குள் ஒரு கிளி இருப்பதைப் பார்த்து
என்று நினைத்தார். ஆனால், அவர் ஆச்சரியம் படும் விதத்தில் அப்பறவைப் பாட தொடங்கியது.
கிளி 2 : வருக வருக மன்னரே, மிக்க மகிழ்சச
் ியுடன் உங்களை எங்கள் வீட்டிற்கு
வரவேற்கின்றோம்.
கிளியின் இந்த பதில் அரசரின் மனதில் பதிந்து மகிழ்ச்சி அளித்ததால் அவர் கிளி மற்றும்
அதனை வளர்த்த சன்யாசிக்கும் புகழ்ந்து நன்றி கூறி சென்றார்.