Professional Documents
Culture Documents
Agm யோகி அவயோகி
Agm யோகி அவயோகி
பல ஜோதிடர்கள் நான்கு கிரகம் ஆட்சி, நான்கு கிரகம் உச்சம் பெற்ற ஜாதகங்கள்தான் யோக ஜாதகம் என்று
நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. ஜாதகங்களில் பல ரகசியங்களும், சூட்சுமங்களும் அடங்கியுள்ளன. ஒரு கிரகம்கூட
ஆட்சி உச்சம் பெறாமல் ராஜயோகங்கள் அடங்கிய பல ஜாதகங்கள் உண்டு. பல கிரகங்கள் ஆட்சி, உச்சம்பெற்ற நிலையில்
வீடில்லாமலும், உண்ண உணவில்லாமல் வீதியில் வசிப்போர்களின் ஜாதகங்கள் பல உள்ளன. ஜோதிடத்தில் மறைந்துக்கிடக்கும்
சூட்சுமங்கள் பல உள்ளன.
பல ஜோதிட குருமார்களும் ஆச்சார்ய பெருமக்களும் இந்த நித்ய நாமயோகத்தை பற்றி ஆய்வுசெய்து பல பதிவுகளையும்
புத்தக்கட்டுரைகளையும் வெளியிட்ட பின்பும் நான் தொடர்ந்து இதிலேயே உழன்றுக்கொண்டு ஆய்வுசெய்வதற்கு
மறுக்கமுடியாத பல தீர்க்கமான பல காரணங்கள் உள்ளன.
நான் எனது அறிவுக்கும் அனுபவத்துக்கும் எட்டியவரை 27 நித்திய நாமயோகங்களை பற்றி ஆய்வுசெய்து பல பதிவுகளை
பதிவேற்றி உள்ளேன். ஜோதிட சூட்சுமத்தின் பெரும்பகுதி இந்த யோகி அவயோகிகளிடம்தான் உள்ளது.
மூலநூல்களில் இது விளக்கப்படாவிட்டாலும் பஞ்சாங்கத்தின் அடிப்படையான நாள், நட்சத்திரம், திதி, யோகம், கர்ணம் என்ற
ஐந்து அங்கங்களுள் ஒன்று நாமயோகம். இதை முதலில் சிரஞ்சரி பிரபலபடுத்தினார். கோமிலா-குட்டன் என்பவர் இதைபற்றி
மிக விளக்கமான ஆய்வுகளை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஜோதிடர்களில் சிலருக்கு மட்டு மே இதன் முக்கியத்துவம் பற்றி தெரியும். வட இந்தியாவில் உள்ள
ஜோதிடர்கள் பெரும்பாலும் இதை பற்றி தெரிந்நு வைத்திருப்பதால் ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் முதலில் அந்த ஜாதகர்
எந்த யோகத்தில் பிறந்திருக்கிறார் என்றும் அவருக்கு யோகியாக வரும் கிரகம் யார் என்றும், யோகி சாரத்தில் எத்தனை
கிரகங்கள் இருக்கின்றன. தற்போது நடைபெறும் தசாபுத்திநாதர்கள் யோகி அல்லது அவயோகி நட்சத்திரத்தில்
இருக்கிறார்களா என்பதை கணக்கிடுவார்கள். ஆங்கிலத்தில் கணக்கற்ற கட்டு ரைகள் Yogi avayogi planets, Yogi
avayogi prosperous and destruction, போன்ற தலைப்புகளில் உள்ளதை காணலாம்.
யோகி, அவயோகி சூட்சுமத்தை தெரிந்த யாரோ சில ஜோதிடர்களும் அதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்து
விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் நமக்கு தெரிந்த ஜோதிட ரகசியங்களை மறைத்து வைக்கும் ஒரு சிலருக்கு
புதனின் தோசம் அதிகமாகவே பற்றுவதால் அவர்களால் இத்திறையில் சிறப்பையும், புகழையும் ஒரு காலமும் அடைய
முடியாது. புதன் கொஞ்சம் ஆச்சரியமான இல்லை இல்லை அதிகமான சூட்சும கிரகம்தான். ஒரு குற்றம்
நடந்திருக்கும்போது புதன் வக்கிரமானால் அவ்வக்கிரகாலம் முடிந்த பிறகே துப்பு துலங்கும் என்றால் பாருங்களேன்.
பஞ்சபூத காற்று, பிரபஞ்ச ரகசியம் உள்ள கிரகம்.
பஞ்சாங்கம்:
நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் இந்த ஐந்தும் கொண்டதுதான் பஞ்சாங்கம். இதில் பெரும்பலோனோருக்கு பிறந்த
நட்சத்திரமும், நாளும்தான் தெரியும். இதில் உள்ள யோகம் தெரியாது. உங்களது ஜாதக நோட்டில் நல்ல ஜோதிடர்
எழுதியிருந்தால் நீங்கள் என்ன யோகத்தில் பிறந்துள்ளீர்கள் , என்ன திதியில் பிறந்துள்ளீர்கள் என்று நிச்ச யம்
எழுதியிருப்பார்.
மொத்தம் 27 நித்திய நாமயோகங்கள் உள்ளன. அந்த 27 யோகங்கள் என்னவென்றும், அதற்கு யார் யோகி கிரகம் என்றும்,
யார் அவயோகி கிரகம் என்றும் கீழே கொடுத்துள்ளேன்.
மேசத்தில் இருந்து சூரியனின் பாகையையும் சந்திரனின் பாகையையும் கூட்டி அதனோடு 93.20 பாகையை கூட்டிவரும்
நட்சத்திராதிபதியே யோகியாவார். அதற்கு ஒவ்வொரு பெயரையும் சூட்டியுள்ளனர் ஞானிகள்.
அதிலிருந்து 186.40 பாகையில. வரும் நட்சத்திராதிபதி அவயோகியாவார். அதாவது இது யோகி நட்சத்திரத்திற்கு 15 வது
நட்சத்திர அதிபதியே அவயோகி நட்சத்திரமாகும். யோகிக்கு ஆறாவது நட்சத்திராதிபதியே அவயோகி என்றாலும் சரிதான்.
முதல் நித்தியநாமயோகம் விஷ்கும்பம் என்பது பூசம் நட்சத்திரத்திலிருந்து துவங்குவதால் சூரியனின் பாகை சந்திரனின்
பாகை மற்றும் 93.20 பாகை ஆகியவற்றைக் கூட்டுவதே யோகிப்புள்ளி.
யோகி:
யோகி பாகை எந்த நட்சத்திரத்தில் விழுகிறதோ அந்த நட்சத்திர அதிபதியே யோகி.
அந்த நட்சத்திராதிபதியின் மூன்று நட்சத்திரங்களுமே யோகி நட்சத்திரங்களே.
அதாவது ஒருவருக்கு யோகி பாகை 223 பாகயில் விழுந்தால் சனியின் நட்சத்திரமான அனுச நட்சத்திரத்தில் விருட்சிக
ராசியாக வரும். இந்த நட்சத்திர யோகம் கண்ட யோகம் ஆகும். இப்போது சனியே யோகியாவார். சனி தசா சனி கெடுதல்
செய்யும் ராசியில் இருந்தாலும் யோகமே செய்யும். அதுமட்டுமின்றி சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுசம்,
உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் எந்த மோசமான கிரகம் நின்று தசா நடத்தினாலும் யோகம் செய்யும்.
யோகி என்று அதற்கு எதற்கு பெயர் வந்ததென்றால் அவர் லக்னத்திற்கு எந்த அதிபதியாக இருந்தாலும் எந்த இடத்தில்
இருந்தாலும் யோகத்தை செய்வதால்தான்.
அனுயோகி:
யோகி புள்ளி நட்சத்திரம் விழுந்த ராசிநாதனே அனுயோகி/ சகயோகியும் ஆவார். இதை duplicate yogi என்றும், supporting
yogi என்றும் ஆங்கிலத்தில் அழைப்பர். இந்த அனுயோகி யோகியை விட சற்று குறைவான (70 சதவீதம் தோராயமாக,
ஆனால் அதுபெறும் வலிமைக்கேற்ப ) யோகம் தரும்.
அவயோகி:
யோகியின் நட்சத்திர பாகையிலிருந்து 186 பாகையிலுள்ள நட்சத்திரம் அவயோகி நட்சத்திரம். அவயோகியாக வரும்
கிரகமும் அவயோகி நட்சத்திர பாதம் நின்ற கிரகங்களும் தனது தசா புத்தி காலங்களில் மிக மோசமான பலன்களை
தருவார்கள். அவயோகியை மற்றொரு குறுக்கு வழியில் எளிதாக கண்டுபிடிக்கலாம். அதாவது யோகி நட்சத்திரத்திற்கு
ஆறாவது நட்சத்திர அதிபதியே அவயோகி.
1. சனி யோகியென்றால் சந்திரன் அவயோகி
2. சூரியன் யோகியென்றால் சனி அவயோகி
3. சந்திரன் யோகியென்றால் புதன் அவயோகி
4. புதன் யோகியென்றால் செவ்வாய் அவயோகி
5. குரு யோகியென்றால் சூரியன் அவயோகி
6. சுக்கிரன் யோகியென்றால் குரு அவயோகி
7. ராகு யோகியென்றால் சுக்கிரன் அவயோகி
8. கேது யோகியென்றால் ராகு அவயோகி
9. செவ்வாய் யோகியென்றால் கேது அவயோகி
Person 1: மிதுன லக்னத்தில் பிறந்து அந்த லக்னத்திற்கு யோகாதிபதியான 8, 9 ஆம் வீட்டிற்கு அதிபதியான சனி
லக்னத்திற்கு 12 ல் ஆட்சிபெற்ற மற்றொரு யோகாதபதியான சுக்கிரனோடு சேர்நத ் ்திருந்து. பொதுசுபரான குருவின்
பார்வையில் இருக்க யோகியின் புத்தி நடந்ததே் காரணம்.
Person 2: கடக லக்னமாகி லக்னத்திற்கு 12 ல் எட்டாம் அதிபதி சனி குரு மற்றும் புதனோடு இணைந்து மிகுந்த சுபத்துவம்
வலு பெற்று தசா நடத்தியதே காரணம். இருவரும் தற்போது கனடாவில்.
Example 3:
திரு Steve jobs அவர்களின் ஜாதகத்தை வெளியிட்டு மீண்டும் விளக்கம் அளிக்கிறேன்.
நாமயோகம், புஷ்கார நவாம்சம், திதி சூனியம், இந்து லக்கினம் போன்றவற்றிற்கு எடுத்து காடாக திகழும் யோக ஜாதகம்
இவரது தொழில்காரனான சுக்கிரன் துனுசுராசியில் சூரியனின் உத்தாரட நட்சத்திரத்தில் வர்க்கோத்தம நவாம்சம் பெற்றது.
உத்தாரடம் ஒன்றாம் பாதமும் புஷ்கர நவாம்சம் ஆகும். 1982 முதல் 2002 வரை சுக்கிரனின் தசா நடந்த காலத்தில்தான்
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராகி ஐபோன், ஐபேடு, செல்போன்களை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக்கியவர். சூரியன் (
யோகி) தசாவில் அமெரிக்க ஜனாதிபதியின் விருதையும் பெற்றவர். ஆப்பிள் செல்போனை இக்காலகட்டத்தில் நம்பர் ஒன்
செல்போன் என்ற புகழை அடைய செய்தவர். இவர் பிறந்தது உத்தரட்டாதி நட்சத்திரம் நட்சத்திரம் அவயோகி நட்சத்திரம்.
இளமையில் அவயோகி சனிதசா நடந்தபோது வறுமை, உணவுக்கே கஷ்டம், படிப்பை பாதியில் விடுதல் போன்ற துன்பங்களை
பெற்றவர். சனி வீட்டில் இருந்த புதனும் அவயோகி வீட்டில் இருந்ததால் பல நிறுவனங்களில் பணிபுரிந்தநிலையில் நிலையற்ற
தொழிலை தந்தது. ஆனால் புஷ்கரபாகமும், யோகிபுள்ளியுமே லக்னமாக அமைந்து அவர்களது தசாக்களான சுக்கிரன்
மற்றும் சூரியனின் தசாவில் மாபெரும் யோகத்தை அடைய செய்தது. அவயோகியான சனிசாரம் பெற்ற சந்திர தசா காலமான
2011 ல் இறவாப்புகழுடைய மரணத்தை தந்தது.
Example 4: DSP யின் ஜாதகம்:
Group 1 தேர்வில் வெற்றிபெற்று காவல்துறை அதிகாரியாக இருக்கும் நண்பரின்
ஜாதகங்களை கீழே பதிவிட்டுள்ளேன்.
அவரது பிறந்த தேதி 07.07.1980.
பிறந்த நேரம் மாலை 04. 10 PM.
பிறந்த இடம் ஈரோடு.
கடைசியாக லக்னாதிபதி சனி அவர்கள் சுபராசிகளிலோ, சுபர் சேர்க்கையிலோ, அல்லது சுபர்பார்வையிலோ இருந்தால் நல்ல
யோகபலன்களை கட்டாயம் தருவார்.
குரு லக்னாதிபதிக்கு சமத்துவம் பெற்ற கிரகம் என்றாலும் ஆதிபத்திய விசேசம் இல்லாத்தால் நல்ல பலன்களை தரமுடியாது.
ஒருவேளை பிறந்த ராசிக்கு யோகராக இருந்தால் சிறிது யோகபலன்களையும், நன்மைகளையும் வழங்குவார்.
சூரியன், சந்திரன், செவ்வாய் லக்னாதிபதிக்கு எதிரி என்பதால் நல்ல பலன்களை வழங்க இயலாது. ஆனால் இவர்கள்
3,6,10,11 ல் உபஜெய ஸ்தானத்தில் அதிக வலுபெறாமல் சுபத்தன்மை அடைந்திருந்தால் தீயபலனின்றி சராசரி நற்பலன்கள்
நடைபெறும்.
புதனும் சுக்கிரனும் சேர்ந்து நல்ல ராசிகளில் கெடாமல் இருந்தால் பிரபலமான ராஜயோகமான தர்மகர்மாதிபதி யோகத்தை
தனது தசாவில் வழங்கி அதிகாரம்,செல்வம்,சுகம், வசதி படைத்தவராகவும், யோகசாலியாகவும், மகிழ்ச்சியான வாழ்ககை ்
வசதிகளையும் வழங்குவார்கள்.
Example 6
இது ஒரு மிகப்பெரிய பதவியில் அதிகாரத்தோடு இருப்பவரின்
ஜாதகம். இவருக்கு தற்போது ரிசபலக்னத்திற்கு
தர்மகர்மாதிபதியாகவும் கன்னிராசிக்கு யோகராகவும் வரக்கூடிய
சனிதசா தனது பகைவீடான சிம்மத்தில் ராகுவோடு இணைந்த
பாவத்துவமான நிலையில் தசா நடக்கிறது.
ரிஷப லக்னம், துலாம் ராசி விசாகம் நட்சத்திரம், ரிசப லக்னத்தற்க்கு 7-ஆம் பாவம் விருச்சகம் வரும். அப்போ கனவருடைய
லக்னம் விருச்சகத்தில் இருந்து பாா்த்தால் 8-ஆம் பாவாதிபதி புதன் தசை, புதன் புத்தியில் மரனம் நிகழ்துள்ளது. புதன் 8-
ஆம் அதிபதி 4-ல் உள்ளாா் சூரியனுடன், அவருக்கு வீடுகொடுத்த சனி மூன்றில் ஸ்திர லக்னத்திற்க்கு மாரக ஸ்தானத்தில்
செவ்வாயுடன் பலமாக உள்ளாா். விபத்து நடக்கும் போது புதன் தசை புதன் புத்தி, சூரியன் அந்தரம் அந்த சூரியன்
அட்டமாதிபதியுடன் கூடி 4-ல் வாகனஸ்தானத்தில் சூரியன் நிற்பது ராகு சாரம் அந்த ராகுவும் விருச்சக லக்னத்திற்க்கு 2-ல்
மாரக ஸ்தானத்தில் இருப்பதால் வாகன விபத்து நடந்துள்ளது.
நடிகர சாருக்கான் ஜாதகம். இது நுட்பமான விதிகள் உள்ளதென்பதால்
திருக்கணித முறையான லாகிரியில் கணித்துள்ளேன்.
சாராவளி என்ற மூலநூலில் சனி+குரு சேர்க்கை கேந்திரங்களில் அமைந்தால் ராஜமந்திரியாகவோ அல்லது சங்கம்,
நகரம் கிராமம் போன்றவற்றிற்கு தலைவராகவோ ஆவதோடு சனிதசா உயர்ந்த ராஜயோகத்தையும் தரும் என்கிறது.
பலதீபிகையும் சனி குரு சேர்க்கையை யோகசேர்க்கை என்கிறது.
1981 ல் குரு + சனிதசா இணைவு ஏற்பட்டது. அவ்வருடத்தில் பிறந்தவர்கள் பலர் சனி குரு தசாவில் உயர்வான
பதவி, பல யோகவசதிகளை பெற்றிருப்பதே இதற்கு ஆதாரமாகும்.
மற்றொரு சூட்சுமமாக குரு தீமையை செய்யும் லக்னமான ரிசபம், துலாம் மற்றும் கேந்திராதிபத்ய, மாரகாதிபத்ய,
பாதகாதிபத்ய தோசங்களை தரும் உபய லக்னங்களான மிதுனம், கன்னி, துலாம், மீனம் லக்னங்களுக்கு சனியுடன்
சேர்ந்த குரு மட்டுமே தனது தசாவில் யோகத்தை செய்வதோடு அடுத்துவரும் சனிதசாவும் மாபெரும் யோகத்தை
செய்யும்.
அவயோகியாக இருக்கும் கிரகமே திதிசூன்ய ராசியில் இருந்தாலோ, ராகு சேர்க்கை அல்லது ராகுவின்
நட்சத்திரத்திலோ இருந்தாலோ யோகம் செய்யும்.
நான் உதாரணமாக கீழே கொடுத்துள்ள ஜாதகம் எனது நண்பருடையது. அவர் மாவட்ட துணை ஆட்சியருக்கு
சமமான பதவியில் இருப்பவர்.
இவர் கன்னி லக்னத்தில் பிறந்து சூரியன் பத்தில் திக்பலம்.
இரண்டாவதாக லக்னம் மற்றும் பத்தாமதிபதியான (பத்து-தொழில், உத்தியோகம்) ஆட்சி பெற்று வக்கிரம்
ஆனதால் உச்சபலத்தை பெற்றது. சுக்கிரன் சந்திரன் பரிவர்த்தனை.
இரண்டு கிரகங்கள் திக்பலம் பெற்றால் ராஜயோக அமைப்பு.
இவரின் ஜாதகத்தில் குரு லக்னத்தில் திக்பலம்.
சூரியன் 10 ல் திக்பலம். இவருக்கு சனியுடன் சேர்ந்த குருமகாதசாவில்தான் கெஜட்டடு ரேங்க் அரசு பதவி
கிடைத்தது.
இதே குரு தசா சனி புத்தியில் மேலும் உயர்பதவி உயர்வு பெற்றார். இவர் IAS முதன்மை தேர்வில் வெற்றிபெற்று
நேர்முகதேர்வு வரை சென்று தேர்ச்சிபெறாதவர். ஆனால் மாநிலதேர்வில் உயர் பதவியை தேர்வுமூலம் பெற்றவர்.
இந்தக் குரு யோகி. 12 ரூப வலிமைபெற்ற சூரியன் நட்சத்திரசாரம்.
அதைவிட சனியோடு 2 பாகைக்குள் இணைவுபெற்றவர்.
இதில் அவயோகி சூரியன் திதிசூன்ய தோசத்தை அடைந்தாலும் ராகுவின் நட்சத்திரத்தை பெற்று
தோசநிவர்த்தியை அடைந்துள்ளது.
இன்னும் பல சிறப்புகளை ஜாதகத்தில் நீங்களே ஆய்வுசெய்யுங்களேன்.
முக்கியமாக குருவும் சனியும் புஷ்கர நவாம்சத்தையும் புஷ்கர பாகையையும் பெற்றிள்ளதை நீங்களே பாருங்கள்.
யோகாதிபதி
1. மேஷம் சூரியன்
2. ரிஷபம் சனி
3. மிதுனம் சுக்ரன்
4. கடகம் சிம்மம் (செவ்வாய்)
5. கன்னி சுக்ரன்
6. துலாம் சனி
7. விருச்சகம் சந்திரன்
8. தனுசு சூரியன்
9. மகரம் சுக்ரன்
10. கும்மம் சுக்ரன்
11. மீனம் சந்திரன்
யோகம்/ யோகதாரை/ யோகி & அவயோகம்/ அவயோக தாரை/ அவயோகி
No யோகம் யோகதாரை யோகி அவயோக தாரை அவயோகி
1 விஷ்கம்பம் (விஷ் யோகம்) பூசம் சனி திருவோணம் சந்திரன்
2 ப்ரீதி (ப்ரீ யோகம்) ஆயில்யம் புதன் அவிட்டம் செவ்வாய்
3 ஆயுஷ்மான் (ஆயு யோகம்) மகம் கேது சதயம் ராகு
4 செளபாக்யம் (செள யோகம்) பூரம் சுக்ரன் பூரட்டாதி குரு
5 சோபனம் (சோ யோகம்) உத்திரம் சூரியன் உத்திரட்டாதி சனி
6 அதிகண்டம் (அதி யோகம்) ஹஸ்தம் சந்திரன் ரேவதி புதன்
7 சுகர்மம் (சுக யோகம்) சித்திரை செவ்வாய் அஸ்வினி கேது
8 திருதி (திரு யோகம்) சுவாதி ராகு பரணி சுக்ரன்
9 சூலம் (சூல யோகம்) விசாகம் குரு கார்த்திகை சூரியன்
10 கண்டம் (கண் யோகம்) அனுஷம் சனி ரோகினி சந்திரன்
11 விருத்தி (விரு யோகம்) கேட்டை புதன் மிருகசீரிடம் செவ்வாய்
12 துருவம் (துரு யோகம்) மூலம் கேது திருவாதிரை ராகு
13 வ்யாகதம் (வ்யா யோகம்) பூராடம் சுக்ரன் புனர்பூசம் குரு
14 ஹர்ஷணம் (ஹர் யோகம்), உத்திரட்டாதி சூரியன் பூசம் சனி
15 வஜ்ரம் (வஜ் யோகம்), திருவோணம் சந்திரன் ஆயில்யம் புதன்
16 சித்தி (சித் யோகம்), அவிட்டம் செவ்வாய் மகம் கேது
17 வியதீபாதம் (விய யோகம்) சதயம் ராகு
18 வரீயான் (வரீ யோகம்) பூரட்டாதி குரு உத்திரம் சூரியன்
19 பரிகம் (பரி யோகம்) உத்திரட்டாதி சனி சித்திரை செவ்வாய்
20 சிவம் (சிவ யோகம்) ரேவதி புதன் சித்திரை செவ்வாய்
21 சித்தம் (சித் யோகம்) அஸ்வினி கேது சுவாதி ராகு
22 சாத்தியம் (சாத் யோகம்) பரணி சுக்ரன் உத்திரம் சூரியன்
23 சுபம் (சுப யோகம்) கார்த்திகை குரு அனுஷம் சனி
24 சுப்பிரம் (சுப் யோகம்) ரோஹிணி சந்திரன் கேட்டை புதன்
25 பிராம்மியம் (பிரா யோகம்) மிருகசீரிஷம் செவ்வாய் மூலம் கேது
26 ஐந்திரம் (ஐந் யோகம்) திருவாதிரை ராகு பூராடம் சுக்ரன்
27 வைதிருதி (வை யோகம்) புனர்பூசம் குரு உத்ராடம் சூரியன்
திதி/சூன்யம்
NO திதி சூன்யம் கிரகம்
1 பிரதமை மகரம், துலாம், சனி, சுக்கிரன்
2 துவிதியை தனுசு, மீனம், குரு
3 திரிதியை மகரம், சிம்மம், சனி, சூரியன்
4 சதுர்த்தி கும்பம், ரிஷபம், சனி, சுக்கிரன்
5 பஞ்சமி மிதுனம், கன்னி புதன்
6 சஷ்டி மேஷம், சிம்மம் செவ்வாய், சூரியன்
7 சப்தமி தனுசு, கடகம் குரு, சந்திரன்
8 அஷ்டமி மிதுனம், கன்னி புதன்
9 நவமி சிம்மம், விருச்சிகம் சூரியன், செவ்வாய்
10 தசமி சிம்மம், விருச்சிகம், சூரியன், செவ்வாய்
11 ஏகாதசி தனுசு, மீனம் குரு
12 துவாதசி மகரம், துலாம் சனி, சுக்கிரன்
13 திரயோதசி ரிஷபம், சிம்மம், சுக்கிரன், சூரியன்
14 சதுர்த்தசி மிதுனம், கன்னி, புதன் குரு
15 அம்மாவாசை கடகம் சந்திரன்
15 பௌர்ணமி சிம்மம் சூரியன்
முடக்கு ராசிகள்
உத்திரம் ஆயில்யம் புனர்பூசம் மிருக சீரிடம்
ஹஸ்தம் மகம் பூசம் திருவாதிரை
பூரம்
சித்திரை கார்த்திகை
சுவாதி ரோகிணி
விசாகம் அஸ்வினி
அனுஷம் பரணி
ரேவதி
கேட்டை உத்ராடம் அவிட்டம் பூரட்டாதி
மூலம் திருவோணம் சதயம் உத்திரட்டாதி
கிரக சேர்ககை
் யளவு:
ஒரு ராசியில் இரண்டு கிரகங்கள் சேர்ந்திருந்தால் மட்டுமே சேர்ககை ் யால் உண்டாகும் யோகம் கிடைத்துவிடாது. அக்கிரகங்கள்
எத்தனை பாகைகள் நெருக்கமாக இணைந்திருக்கின்றன என்பதை பொருத்தே யோகம் அமையும். 12 பாகைக்கு மேல் இணைந்த
கிரக சேர்ககை ் யால் ஒரு சதவீதம் கூட யோகம் இல்லை. ஒரு பாகை அளவில் சேர்ந்த கிரகங்கள் 100 சதவீதம் யோகத்தை
வலிமையாக செய்யும். ஒரு பாகைக்குள் சேர்ந்திருக்கும் கிரகங்களுக்கிடையே கிரகயுத்தம் ஏற்படும். கிரகயுத்தத்தில் வெற்றிபெற்ற
கிரகங்கத்திற்கு ஒரு ரூபம் பலத்தை கூட்டிக்கொள்ளவேண்டும். தோற்ற கிரகத்திற்கு ஒரு ரூபம் பலத்தை கழுத்துக்கொள்ள
வேண்டும். ரூபம் என்பது கிரகங்களின் வலிமையை அளக்கும் ஒரு அளவீடு. உதாரணமாக தனது பரம உச்ச பாகையில் உள்ள கிரகம்
ஒரு ரூபம் பலம் பெற்றிருக்கும். திக்பலம் பெற்ற கிரகம் ஒரு ரூபம் பலமர பெற்றிருக்கும். பிறந்த நேரத்தில் உள்ள ஹோரை அதிபதி
ஒரு ரூபம் பலம் பெற்றிருக்கும். இவற்றை கூட்டி கணக்கிடுவதே கிரகங்களின் மொத்த சட்பலம். 10 ரூபம் மேல் பெற்ற கிரகங்கள்
ஆரோகண கதியிலிருந்தால் மிகுந்த சுகத்தை கொடுக்கும்.
இவ்வாறாக கிரகயுத்தத்தில் வென்ற கிரகம் ஒரு ரூபம் பலமடைவதால் மிகுந்த யோகம் தரும். அதாவது அதிக பாகை, கலை,
விகலை பெற்ற கிரகமே கிரக யுத்தத்தில் வெற்றிபெறும். இக்கிரகம் தோறரற கிரகத்தின் ஆதிபத்தத்தையும் சேர்த்து செய்யும்.
ஜோதிடமன்னன். K.S கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மூன்று பாகைக்குள் சேரும் கிரகசேர்ககை ் மிக நெருக்கமான ஒன்றாகும்
என்கிறார். உதைதான் மகாகவி காளிதாசர் 100 சதவீத சேர்ககை ் யளவு 1 பாகை என்று குறிப்பிட்டுள்ளார். சுபத்துவம்
,அசுபவத்துவத்தையும் தர்மகர்மாதிபதிகள் சேர்ககை ் யால் உண்டாகும் யோகத்தை கணக்கிடும்போது பாகையளவை கட்டாயம்
கணக்கிட்டு பலன் காண வேண்டும். சேர்ககை ் யால் உண்டாகும் யோகம் நல்லயோகம் கெட்டயோகம் என்று சேரும் கிரகங்களை
பொருத்து எதுவாகவும் இருக்கலாம்.