Professional Documents
Culture Documents
6.முந்திரி தோட்டம்
6.முந்திரி தோட்டம்
திட்ட
முன்மொழிவு
Cashew Gardening-Intercrops
முந்திரி (கஜூ)
தோட்டமும்
ஊடுபயிர்களும்
INTRODUCTION | அறிமுகம்
முந்திரி (கஜூ):
முந்திரிப்பழம்
முந்திரியில் முந்திரிப்பழமென அழைப்பது உண்மையில் பழமல்ல. அது போலிப்பழம்
எனவும் அழைக்கப்படும். இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின்
அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில்
விருத்தியடைகின்றது. இதனை முந்திரி ஆப்பிள் எனவும் அழைப்பர்.
நன்மை:
முந்திரி பயிர்செய்கைக்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை. மழை பெய்யும் போது
உரமிடல் மற்றும் பூ பூக்கும் நேரத்தில் பூச்சி மருந்து தெளித்தல் வேண்டும். இவை
இரண்டும் வருடத்திகு ஒரு முறை மட்டுமே.
முந்திரியின் பயன்கள்:
வறுக்கப்பட்ட முந்திரிக்கொட்டைகள் உலகில் பலராலும் விரும்பி உண்ணப்படுவதுடன், கறி
சமைக்கவும், ருசியைச் சேர்ப்பதற்காக இனிப்பு வகை உணவுகளுடன் சேர்க்கப்பட்டும்
பயன்படுத்தப்படுகின்றது.
சிற்றுணவான முந்திரிப் பருப்பு, ஐஸ் கிரீம், கேக், மிட்டாய் வகைகளைத் தயாரிக்கப்
பயன்படுகிறது. இதில் புரதம் மிகுந்தும் சர்க்கரை குறைந்தும் உள்ளதால், ஊட்ட
உணவுகளிலும் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுகிறது. முந்திரிப்பழம் முந்திரி சாறு
மற்றும் ஜாம் ஆக பதப்படுத்தப்படுகிறது. பிரேசிலில், முந்திரிப்பழம் கஜுனா என்ற பானம்
தயாரிக்கப் பயன்படுகின்றன, இது மருத்துவ பண்புகளைக் கொண்டிருப்பதாகக்
கூறப்படுகிறது. இந்தியாவின் கோவாவில், முந்திரி ஃபெனி என்று அழைக்கப்படும்
ஸ்க்னாப்ஸ் தயாரிக்கவும் இந்த சாறு பயன்படுத்தப்படுகிறது.
ஊட்டச்சத்து மதிப்புகள்:
இதில் மோனோசாச்சுரேட்டட் உள்ளதால் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின்
அளவை அதிகரிக்கசெய்கிறது. முந்திரி பருப்புகள் ஆன்டிஆக்சிடென்ட்,
மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் போன்ற போன்ற
கனிம தாதுக்களின் நல்ல மூலமாகும், இது எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் நொதிகளின்
செயல்பாட்டிற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
பருப்புக்களில் இரும்புச்சத்து உள்ளது, இது இரத்த சிவப்பணுக்களின் முக்கிய
அங்கமான ஹீமோகுளோபினின் முக்கிய பகுதியாகும்.
வைட்டமின்கள் பி5, பி6, ரிபோஃபிளேவின், தயாமின் உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது.
புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாப்பைத் தந்து விரைவில் முதுமை தோற்றம்
அடைவதை தடுக்கிறது.
முந்திரியில் புரோஆந்தோசையனிடின் என்னும் ப்ளேவோனால் மற்றும் ஆன்டி–
ஆக்ஸிடன்ட்டுகளான செலினியம் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இவை
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும் மற்றும்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முந்திரியில் காப்பர் என்னும் தாதுப்பொருள், முடியின் கருமை நிறத்தைப்
பாதுகாக்கும்.
அன்றாடம் முந்திரியை சிறிது உட்கொண்டு வந்தால், செரிமான பிரச்சனை
ஏற்படுவதைத் தடுக்கலாம்.
பற்களின் ஆரோக்கியத்தையும், ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
தினமும் சிறிது முந்திரி சாப்பிட்டு வந்தால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
அதிலும் பெண்கள் இதனை உட்கொண்டு வந்தால், இறுதி மாதவிடாய்க்கு பின்,
நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.
முந்திரி பருப்பில் குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளது. இது கண்ணில் உள்ள
கருவிழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது. கையளவு முந்திரிப் பருப்புக்களை
உட்கொள்வதால் பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்படுத்த முடியும். முந்திரி பருப்பில்
இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான
ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
முந்திரி பருப்பில் அதிகமாக உள்ள செலினியம் ஊட்டச்சத்தானது உடலுக்கு நோய்
எதிர்ப்பு திறனை தரவல்ல நொதிகளான குளுடாதயோன் பெராக்ஸிடேஸ் நொதிக்கு
சிக்கல்கள்:
சிலருக்கு முந்திரிப் பருப்புகளுக்கு ஒவ்வாமை இருக்கிறது, ஆனால் இந்த ஒவ்வாமை
அரிதானது. முந்திரிப்பழம் மிக மெல்லிய தோலுடையதாகவும், சதைப்பகுதி மிகவும் சாறு
நிறைந்ததாகவும் இருப்பதனால், இதனை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு
எடுத்துச் செல்லல் கடினமாகும். அதனால் சர்வதேச அளவில் வர்த்தகம் செய்ய முடியாது.
அறுவடை முடிந்த உடனேயே இது எனவே அறுவடை முடிந்த உடனேயே விற்பனை
செய்ய படுகின்றது. அல்லது பதப்படுத்தப்படுகின்றது.
இந்த முந்திர்க்கொட்டையைச் சூழவுள்ள கடினமான இரட்டை ஓட்டில் ஒவ்வாமையை
உருவாக்கக் கூடிய, தோலில் நமைச்சலைத் தரக்கூடிய சில பதார்த்தங்களைக்
கொண்டுள்ளது. சரியான முறையில் வறுத்து பதப்படுத்தப்படும்போது, இந்தப் பதார்த்தங்கள்
சில அழிவடைந்துவிடும். ஆனாலும் பதப்படுத்தலின்போது மூடிய அறைக்குள் அதன்
புகை வெளியேறுமாயின் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே
அவதானத்துடன் செய்யப்பட வேண்டும்.
சந்தைப்படுத்தல் வாய்ப்புகள்:
2018 ஆம் ஆண்டில், உணவு மற்றும் வேளாண் அமைப்பான FAO இன் படி, உலகளவில்
5,932,507 டன் முந்திரி கொட்டைகள் (ஷெல்லுடன்) அறுவடை செய்யப்பட்டன.
மிகப்பெரிய உற்பத்தியாளர் வியட்நாம் மட்டும் 45% அறுவடையை உற்பத்திசெய்தது .
உலகின் அறுவடையில் கிட்டத்தட்ட 66% முழு ஆசிய கண்டத்திலும், 31%
ஆப்பிரிக்காவிலும் உற்பத்தி செய்யப்பட்டது.
இரகங்கள் (Variety):-
VRI 1, VRI 2, VRI 3 ஆகிய இரகங்கள் பயிரிடப்படுகின்றன.
தட்பவெப்பநிலை (Climate) :
கடலோரப்பகுதிகளில் முந்திரி அதிக அளவில் பயிராகிறது. இப்பயிர் அதிக குளிர் மற்றும்
அதிக வறட்சியைத் தாங்கும் தன்மையற்றது. கடல் மட்டத்தில் இருந்து 300 மீ வரை
உற்பத்தி செய்யப்படுகிறது.
மண்:
முந்திரிச் பயிர்செய்கைக்கு நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண், சரளை கலந்த
செம்மண், மணல் பாங்கான நிலத்தில் நன்கு வளரும் தன்மை கொண்டது. இது வறட்சியைத்
தாங்கி வளரக்கூடியது. மழை அளவு 50 முதல் 250 செ.மீ வரை உள்ள இடங்களிலும்
நன்கு வளரும்.
நிலம் தயாரித்தல்:
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் பண்படுத்த
வேண்டும். பின் 45 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு குழிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி 7 மீட்டர் இருக்குமாறு அமைத்துக்
கொள்ளவேண்டும். ஒவ்வொரு குழியிலும் மேல் மண்ணுடன் 2 கிலோ தொழு உரம், ஒரு
கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். பிறகு பத்து நாள்களுக்கு ஒருமுறை குழிகளில்
கொட்டிய தொழுவுரத்தையும் மண்ணையும் கிளறிவிட வேண்டும். இப்படி மூன்று முறை
கிளறிவிட்ட பிறகு ஒவ்வொரு குழியிலும் 100 கிராம் ஆமணக்குப்பிண்ணாக்கு, 100 கிராம்
வேப்பம்பிண்ணாக்கு, 50 கிராம் கடலைப்பிண்ணாக்கு ஆகியவற்றைப் போட்டு, குழிக்கு
ஒரு கன்று வீதம் நடவு செய்ய வேண்டும். பிறகு காற்றுப் புகாதவாறு காலால் மண்ணை
மிதித்து ஒவ்வொரு கன்றின் தூரிலும் 250 மில்லி பெருங்காயக் கரைசலை ஊற்ற
வேண்டும். இது செடியின் தளிர்களைப் பூச்சிகள் தாக்காதவாறு காக்கும்.
விதை, நாற்று உற்பத்தி இளம் தண்டு ஒட்டு, பக்க ஒட்டு, விண் பதியம் ஆகிய முறைகளில்
இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. பாலீத்தீன் பைகளில் செம்மண்ணை நிரப்பி, ஒரு
பைக்கு ஒரு விதை வீதம் கொட்டையின் வளைவுப்பகுதி மண்ணுக்குள் அரை அங்குல
ஆழம் புதைந்திருக்கும்படி ஊன்றித் தண்ணீர் விட வேண்டும். மறுநாள் 10 கிலோ மணலில்
நாற்றுக்குப் பாதுகாப்பு:
நாற்றுக்களை மழைக்காலத்தில் நடவு செய்தவுடன், பிளாஸ்டிக் வலை மூலம் 4 அடி
உயரத்துக்குக் கூண்டு அமைத்து ஆடு, மாடுகளிடமிருந்து காப்பாற்ற வேண்டியது
அவசியம். கன்று காற்றில் நன்கு அசைந்து ஆடினால்தான் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
அதனால், நாற்று அசைந்தாடும் அளவுக்கு 2 அடி விட்டம் இருக்குமாறு கூண்டுகளை
அமைக்க வேண்டும்.
இறவைப்பாசனம் என்றால், கன்று நடவு செய்து ஒரு மாதம் வரை, வாரம் ஒருமுறை
தண்ணீர் விட வேண்டும். அதன்பிறகு மாதம் இருமுறை தண்ணீர்விட்டால் போதுமானது.
உர மேலாண்மை:
உரமிடும் காலம்
சத்துக்கள் (கிலோ/மரம்)
முதல்வருடம்
10 தொழு உரம்
0.070 தழைச்சத்து
0.040 மணிச்சத்து
0.060 சாம்பல்ச்சத்து
வருடாவருட அதிகரிப்பு (5 வருடங்கள்)
5 வருடங்களுக்குப் பின்
50 தொழு உரம்
0.500 தழைச்சத்து
0.200 மணிச்சத்து
0.300 சாம்பல்ச்சத்து
பாதுகாப்பு முறைகள்:
களை நிர்வாகம்:
செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். பின் வருடம் ஒருமுறை
களை எடுக்க வேண்டும். தரையிலிருந்து 1 மீ உயரம் வரை உள்ள பக்கக் கிளைகளை
வெட்டி விடவேண்டும்; ஒட்டுக் கட்டிய பகுதிகளுக்கு கீழே வளரும் கிளைகளை நீக்க
வேண்டும். ஒவ்வொரு வருடமும் காய்ந்த, குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்த கிளைகளை
வெட்டி சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் கிடைக்க வசதி செய்ய வேண்டும். மேலும்
ஒட்டுக்கட்டிய பகுதிக்குக் கீழ் வரும் தளிரை அவ்வப்போது கிள்ளிவிடவேண்டும். ஒட்டுச்
செடியில் தோன்றும் பூக்களை நீக்கி விட வேண்டும்.
ஊடுபயிர்:
கன்றுகள் நட்ட, மூன்று ஆண்டுகளுக்கு பின்பே, முந்திரியை அறுவடை செய்ய முடியும்.
எனவே, இடைப்பட்ட காலத்தில், பப்பாளி, சர்க்கரை வள்ளி, உளுந்து, பச்சை பயறு,
நிலக்கடலை, எள் போன்றவற்றை, ஊடுபயிர் செய்து, கூடுதல் லாபம் பெறலாம். சணப்பு,
கொளிஞ்சி, பசுந்தாள் உரப் பயிர்களை மரங்களுக்கிடையே பயிரிடலாம். பசுந்தாள்
உரப்பயிர்கள் பூக்கும் முன் மடக்கி உழவு செய்யலாம்.
தேயிலைக்கொசு:
தேயிலைக் கொசுவைக் கட்டுப்படுத்த தழைப் பருவத்தில் 2 மிலி போசலான் 35 EC,
மொட்டு விடும் பருவத்தில் 2 கிராம் கார்பரில் 50 WP மற்றும் கொட்டை உருவாகும்
பருவத்தில் 2 மிலி மேனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து
தெளிக்க வேண்டும்.
இலைத் துளைக்கும் புழு:
இதனை கட்டுப்படுத்த 5% வேப்பங்கொட்டை சாறினை துளிர்விடும் பருவத்திலும், பூக்கும்
பருவத்திலும் தெளிக்க வேண்டும்.
வேர்த் துளைப்பான்:
ஒரு மரத்திற்கு மோனோகுரோட்டோபாஸ் 5 மில்லி மருந்துடன் 5 மில்லி தண்ணீர் கலந்த
கலவையை புழு தாக்கிய துளைகளில் ஊற்றவேண்டும். இதை குறிப்பிட்ட இடைவெளியில்
இரண்டு முறை செய்ய வேண்டும்.
ஆந்தராக்னோஸ்:
இதனை கட்டுப்படுத்த துளிர்விடும் பருவத்தில் 1% போர்டாக்ஸ் கலவையுடன் பெரஸ்
சல்பேட்டை கலந்து தெளிக்க வேண்டும்.
நுனிக்கருகல்:
நோய் தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி நீக்க வேண்டும். பிறகு அந்த இடத்தில் 1 சதவீதம்
போர்டோக்கலவை மருந்தினை தடவி விடவேண்டும்.
அறுவடை:
கன்றுகள் நட்ட மூன்றாவது வருடத்தில் காய்ப்புக்கு வந்து விடும். மார்ச் – மே மாதங்களில்
அறுவடை செய்யலாம்.
முந்திரி அறுவடை:
நான்காம் ஆண்டிலிருந்து காய்க்கத் தொடங்கும். தொடக்கத்தில் எக்டருக்கு (21/2) 1-
1.5 டன் பருப்பு அறுவடை கிடைத்தாலும், மரங்களைப் பாதுகாக்கும் தன்மையைப்
பொறுத்து 8-10 ஆண்டுகளில் முழுமையான உற்பத்தி பெற முடியும்.
நாட்டு ரகமா இருந்தா ஒருமுறை நடவு செஞ்சுட்டா குறைந்தபட்சம் 50 வருஷம் வரைகூட
அறுவடை எடுக்கலாம். வீரிய ரகமா இருந்தா 15 வருஷம் வரைக்கும் அறுவடை
எடுக்கலாம். முந்திரி மரத்தின் தென்பகுதி, முதலில் காய்ப்புக்கு வரும். மரத்தின் மேல் பகுதி,
பொருள் விபரம்
முந்திரி வருமானம்:
ஏக்கருக்கு 170 மரமும் காய்க்க ஆரம்பித்த முதல் வருடம் சற்று குறைவாக
இருக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் வரை உற்பத்தி 3000 கிலோ வரை இருக்கும்.
கவனிக்க வேண்டியவை:
தொழில் வாய்ப்புக்கள்:
விளைவிக்கப் படும் முந்திரியானது அறுவடை செய்யப்பட்டு, அதிலுள்ள நீரை உலரவிட்டு
வறுத்து தயாரிக்கப் படுகிறது. இப்படி வறுக்கப்படுவதில் வெண்மை நிறம் பழுப்பு நிறம்
என இரண்டு வண்ணங்களில் முந்திரி ஏற்றுமதியாகிறது.
இப்படி வறுக்கப்படும்போது பழுப்பு நிறம் அதிகமாகி கறுப்பு நிறத்தில் முந்திரி
மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால் அதை
வெளிநாட்டவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி
முன்மொழிவு – 16
தோட்டமும்-ஊடுபயிர்களும்
முந்திரி ஏற்றுமதியின்போது, கொள்முதல், மற்றும் பேக்கிங்கை அவசியம் கவனிக்க
வேண்டும். முந்திரி ஆர்டர் கிடைத்தவுடன் எந்த வகையான முந்திரிகள் வேண்டும்
என்பதை இறக்குமதி யாளர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு
இறக்குமதி யாளர் இரண்டாக உடைக்கப் பட்ட முந்திரி வேண்டும் என்று கேட்கிறார்
எனில், நீங்கள் அதை அனுப்பாமல் வேறு முந்திரியை அனுப்பினால், அவர் அதை
ஏற்றுக்கொள்ள மாட்டார். எனவே, கொள்முதல் செய்யும் முன்பு எந்த வகை முந்திரி
என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
பேக்கிங்கில் கவனம்:
முந்திரி ஏற்றுமதியைப் பொறுத்தவரை, சர்வதேச அளவு 11.34 கிலோகிராம்தான். இந்த
அளவுகளில்தான் பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் கேட்பார்கள். டின்களில் கார்பன்-டை-
ஆக்ஸைடு வாயுவை அடைத்து பின்னர் அதில் முந்திரிகளை சரியான அளவில் அடைத்து
காற்று புகாதபடி பேக்கிங் செய்ய வேண்டும்.
1.
3.
4.
5.
3. மின்சாரத்தின் தேவை:
5. நீர்ப்பாசனம்:
6. உபகரணங்கள்:
இலக்கு:
ஒருவர் தன் வாழ்வாதார தேவைக்கு தானும் தன குடும்பமும், சமூகமும் தற்சார்பு
பொருளாதார வாழ்க்கையில் நிறைவு பெறுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும்
அபிவிருத்தி அடைகின்றது. வாழ்வாதார தேவைகளுக்கான இறக்குமதி குறைகின்றது.
அதன் மூலம் அந்நிய செலாவணி சேமிக்கப்படுகின்றது.
இலங்கை போன்ற நிலம், நீர் வளம் கொண்ட நாட்டில் வாழும் நாங்கள் எங்கள்
வளங்களை பயன் படுத்தி முன்னேற முடியும்.